Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by ஆதிவாசி,

    காதல் எந்தன்..... உந்தன்...... தனித்துவம் அழித்து 'நம்"மை உணர்த்தும் தத்துவம்.... காதல். தனித்துவம் அழிந்த ஆதிவாசி

  2. Started by slgirl,

    போலி முகங்கள் பொய் என்று தெரிந்தும் சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து அகமொன்று வைத்துப் புறமொன்று பேசி வேசத்தில் வாழும் மனிதர்கள் பலர் இன்று... உள்ளத்தில் வஞ்சகம் மறைந்திருக்கும் முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும் மானிடர்க்கு பல வேடங்கள்... போலி முகங்களே இன்று பல...

  3. விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் ம…

  4. Started by வர்ணன்,

    வருகிறதாம் - பொங்கல்! மனசும் எம்மிடமில்லை அதில் தூங்கும் மகிழ்வும்.. உன்னிடம் பகிர இல்லை! பானை வட்ட விளிம்பு நுரை மூட பட்டாசு கொளுத்தி.. மகிழ்ந்த காலமெலாம்......... பறந்தே போச்சு! வாழ்வை...... நடு வீட்டில் ......... உயிர்கொண்ட கற்றாளை போலவாக்கிச்சுதாம் -காலம்! எதிரிகளெல்லாம் இருந்த காலம் போய் - கூட இருப்பவரே குரல் வளை உடைக்கும் காலம் ஆனபின்னே... நீ காலமாகிடு பொங்கலே... நமக்காய் ஒரு காலம் வந்தபின் திரும்பிடு!

    • 4 replies
    • 1.2k views
  5. Started by Anisha,

    உன்னை போல் ஒரு ஆணின் அருகிலே மௌனம் கொள்வது கடினம் தான்... பேசிக் கொள்ளாத எல்லா நிமிடமும் நஷ்டம் தான்... எனை விட இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்... உன்னை பார்த்தவுடன் எனை தொட்டுவிட்ட வெட்கத்தில் தலை குனிந்தேன்... அன்பே...உன்னை ஒரு நிமிடம் மறந்திருக்க என்னால் முடியவில்லை... இன்று இந்த நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்க வில்லை... உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்து விட்டேன்... விழுந்த இடம் உந்தன் நெஞ்சம் என்று புன்னகைத்தேன்...!!!! அன்பே... உன்னை நான் மறக்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொல்வியிலேயே முடிகின்றன... ஏனெனில்... நான் மறப்பதற்கு உன்னை தானே நினைக்கிறேன்...!!!! நான் சிந்தும் புன்னகை கூட உன்னை …

  6. தோழன் சிவராமுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் எழுந்துவரும் சூரியன் எடுத்துக் கால் வைக்கின்ற கீழைக்கரை மட்டுநகர் ஈழக்கரை விடிய வென்று ஈன்று தந்த தாரகையே பாடுமீன் வாவியழ பனந்தோப்பின் காற்றும் அழ மன்னாரின் கரை நெடுக முத்தெடுத்தோர் பேரர் அழ வன்னிக் காடெல்லாம் மார்புதட்டிச் சூழுரைக்க வெண்பனியின் துருவத்தும் விம்மித் தமிழர் அழ விடிவெள்ளி தனை அழித்தால் வானம் இருளுமென்றா மூடர்களே சிவராமன் மூளைதனைச் சிதறடித்தீர் – அவன் எண்ணமோ வண்ணமயில் எழுதுகோல் வடிவேலாம் மண்ணில்விழ விடுவோமோ – அந்த மாதவனின் வடிவேலை -வ.ஐ.ச.ஜெயபாலன் (ஏப்பிரல் 2005)

    • 5 replies
    • 760 views
  7. தாய்மை என்னும் உறவுக்குள் இதம் தரும் உணர்வுகளுடன் அனுதினம் கலண்டர் கிழிக்கையில் அச்செய்தி கிடைத்திடுமோ – என ஏங்கத்துடன் இருந்த அவள், ஆண்டு பல கடந்தும் – அவள் புரிந்திட்ட நன்மையின் விளைவால் ஆண்டவனின் அருளால் அவள்தன் தங்க வயிற்றில் குட்டி நிலா துயில் கொள்ள தனியான இடம் அமைத்து பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை என்னும் உறவுக்குள் நகர தொடங்கி விட்டாள் இன்று முதல்… வெறுமையாய் இருந்த அவள் முழுமையாயாய் ஆனாதினால் ஆனந்தத்தில் மூழ்கியே சரணடைகின்றாள் தன் கணவன் மடியில்…. பிரிவால் துவண்டு இருந்த உறவினர் முகங்களிலே ஆயிரம் மின்னல் அடித்திடும் புன்னகையின் பிரதிபலிப்புக்கள்.. குட்டி நிலவின் வரவை எண்ணி கலண்டரின் அருகில் காத்திருப்பத…

  8. Started by சண்டமாருதன்,

    இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…

  9. குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …

    • 6 replies
    • 2.5k views
  10. Started by வீணா,

    புதிய பதவிகள் எனக்கான வாழ்க்கைப் பயணத்தில் - ஓர் துணையாய் உனைத் தேர்ந்தெடுத்தாயிற்று! என் குடும்பமும் உன் உறவுகளும் புடைசூழ இணைந்தாயிற்று புதுப் பந்தத்தில்! ஆனால்... எனக்கான போராட்டங்களை இனி நான் தனியனாய் ..... பெண்ணாய் ..... - குடும்பத் தலைவியாய்..... மனைவியாய்...... மருமகளாய்.... உற்ற தாயாய்.... நானே நானாய் சந்தித்துக்கொள்ள வேண்டும்! சகித்துக்கொள்ள வேண்டும்!! எத்தனை கதா பாத்திரங்களை என்னுள் திணித்தாயிற்று?! இத்தனை காலமும் எனை வளர்த்து தம் செல்ல மகளாய் கொஞ்சிக் குலாவிய அம்மாவும் அப்பாவும் அந்நியமாய்.... இத்தனை பாரங்களையும் எனை தனியே சுமக்க வைத்து தம் பொறுப்பு முடிந்ததென்…

    • 9 replies
    • 1.2k views
  11. கல்வாரித் தென்றல் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கருணை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கும் நதியும் இவர் பிறரன்பு புரிய வைத்த பெருமை இவர் பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலரவைத்த மாண்பும் இவர் மனித நேயத்தை தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போன்று இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் தன்னையே அர்ப்பணித்த தியாகம்; இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் இடர்களைந்த சுடரும் இவர் அமைதிப் பூக…

  12. பனிக்குளிரில் இதம் சேர்க்க ஓர் இழுத்தணைப்பு..! மெல்லத் தொட்டு மேனி தடவி இதழோடு இதழ் வைத்து வெப்பமூட்டி அவள் மூச்சில்.. என் சுகம்..! சுவாசம் எங்கும் அவள் வாசனை தரிக்க உடலோடு ஐக்கியமாகி சொர்க்கத்தின் வாசல் திறந்தாள் எனக்காய் மட்டும்..! நான் தொட்டுத் சுகித்து இன்புற்று பின்.. தூக்கி எறிந்தேன் அடுத்தவன் உறவானாலும் எனக்கென்ன என்ற நினைவில்..! பார்த்திருக்க வீதியால் சென்றவன் எடுத்தணைத்தான் அவளும் ஒட்டி உரசி அவனோடும்.. சீ சீ.. என்ன அசிங்கம் இதுவும் ஒரு வாழ்வா..??! விபச்சாரி.. பட்டம் வழங்கி நான் புனிதனானேன்..! கண்டவன் போனவன் சிரித்தவன் எடுத்தவன் அடுத்தவன் எல்லாம் சுகித்த பின் தூக்கி எ…

  13. அழகிய வன்னிக்காடு அழிந்து விடவில்லை அதன் விதைகளை சுமந்து திசை எங்கும் பறக்கின்றன பறவைகள் முள்ளிவாய்க்கால் வற்றி விடவில்லை மேகமாய் வானத்தில் நிறைந்திருக்கின்றன முல்லை பூக்கும் உட்சி தளைக்கும் யாழின் இசை உலகம் கேட்கும் காந்தள் வாசம் காற்று மணக்கு புலிக்கொடி ஏந்தி திசைகள் நடக்கும் !!! (முகநூல்)

  14. நான் புல்லாங்குழலில் இருந்து கசியும் ஒரு மெல்லிய இசையாக உன்னை ரசிக்கிறேன் நீ புல்லாங்குழலுள் அடைபட்டு துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி என்னை வதைக்கிறாய் நான் பூவிலிருந்து ஒழுகும் பரவச வாசனையாக உன்னை நுகர்கிறேன் நீ பூக்களை தாங்கி நிற்கும் ஊமைக் காம்புகளாக்கி என்னை மறந்துபோகிறாய் நான் புத்தகங்களுக்கு நடுவே பொத்திவைத்த மயிலிறகாக உன்னை சேகரிக்கிறேன்.... நீ புத்தகங்களுக்கு உள்ளே கிழிந்துபோன பக்கங்களாக்கி என்னை புரட்டிப்போகிறாய்... நான் எல்லாவற்றிலும் உன்னை அழகாக ரசித்துக்கொள்கிறேன் நீ அனைத்திலும் என்னை அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்.. நான் ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே கொடுக்க நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் நீ பேசாது உன் வனமங்களுடன் எடுக்க ஒரு புன்னகையைகூடதர நேர…

  15. உரையாட இது நேரமா-தமிழ் உணர்வாலே உளமார கொடுக்கின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) கணநேரப் பொழுதோடு கடல் வந்து கரையேறி இன்பத்தை இரை கொண்டு இதயத்தில் சுமை ஏற்றிய நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) யார் செய்த சதியோ? விதி போட்ட புதிரோ ? மதி கெட்ட அலை வந்து பதில் தருமோ? விடிவொன்று வருமென்று விழியோரம் ஒளி தோன்ற கனவாகி சிதைகின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) புலத்தோடு வாழ்கின்ற உறவெல்லாம் ஒன்றாகி பலத்தோடு நிலம் பற்றுவோம். நலத்தோடு அவர் வாழ நிறைவோடு தினம் நல்கி இனம் காக்கும் நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட)

    • 0 replies
    • 555 views
  16. படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை.... அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது--உன்னை நோகடிக்க அல்ல,,, எட்டு மாதமாய் சுமக்கும்--உன் முகம் பார்க்கவே. பிஞ்சு வயதில் நான் அழுதது,, பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில்--உன் இதயத்தை முத்தமிட.. பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது பயத்தினால் அல்ல,, உன் பாசத்தை பிரிகிறேனோ,, என்ற பயத்தினால். இளமையில் நான் அழுதது காதலில் கலங்கி அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை பிரிக்குமோ என்ற பயத்தினால்.. நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,, நான் உழைத்து உன்னை பார்க்கப்போகிறேன்--என்ற ஆனந்தத்தில்.. இங்கு தனிமையில் அழுகிறேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல உன் தாய்…

  17. மறைந்துவிட்ட கரும்புலிகளுக்காய் மலராகக் கண்ணீர்த்துளிகள்..... கவிதை..... இரவின் நிசப்தத்தை குழப்பிவிடும் சத்தம்..... இனத்தின் விடுதலைக்காய் தம்முயிரை ஈந்துவிடும் வீரம்...... கரும்புலிப் படகொன்றில் லெப்.கேணல் '' நிதி''யுடன் சேர்ந்து கப்டன் ' வினோதன்'' உம் கரும்புலிகளாய் கடல்பயணம்.... இது விடுமுறைப்பயணமல்ல வீடு திரும்புதற்கு.... இது விடுதலைப் பயணம் வேரோடு தம்முயிரையும் மாய்த்து... பல எதிரியையும் வேரோடு சாய்த்து.... இறுதியிலே களம் மீண்டும் திரும்பா காவியப் பயணம்... இதுவே நம் கரும்புலிகளின் பயணம்...... கரும் நீலக்கடலினிலே காவிச் சென்ற வெடிமருந்தை எதிரியின் கலத்துடனே மோதி தணலாக எரிந்திடுவர்..... எ…

  18. தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…

  19. நண்பர்களே நாமும் ஒரு சிலநிமிடம் கற்காளாகுவோம்… கற்களின் வேதனை எம் மனதின் வேதனை ஒத்துப் போகின்றது…. தார்வீதி… தறிகெட்டோடும் வாகனங்கள்… என்மீது ஏன் இத்தனை அழுத்தமோ? என்றெண்ணிக் கண்ணீர் வடித்தேன் கீழே பார்த்தால் என்சுமையும் சேர்த்துச் சுமக்கும் என் காதலி… அடடா என்னதான் என்மீது பாசமோ? பாரவூர்தி வந்தாலும் என்னை அணைப்பாள் முத்தமாய் கொடுப்பாள் பாழ்பட்ட வீதி செப்பனிடும் மானிடன் வந்து எம்மைப் பிரித்துவிட்டான் அதனாற்தான் மானிட வர்க்கத்தில் விவாகரத்துக்களே நடக்கின்றன… என்னவள் எங்கே இருக்கின்றாளோ? எப்பாரம் சுமக்கின்றாளோ? என்றெண்ணும் நாம் பாதுகாப்பாக அடியில் இருந்தேன் இன்று மழையிலும் வெயிலிலும் வேர…

  20. சண்டை களத்தில் சமருக்குப் பயந்து சாவுகளைச் சாட்டி சமுத்திரங்கள் தாண்டி சந்துபொந்தெங்கும் சரணடைந்திட்ட சாமிகளே... "சமரு"க்கு மட்டும் சாலை வரும் சங்கதி கண்டு சந்தி சிரிக்குது..! சனங்களின் பயபக்தியில் சன்னதமாடும் சாமியார்கள் சட்டுப்புட்டென்று சதுரம் வளர்க்க சந்தர்ப்பம் வழங்கியது போதும்..! சரித்திரம் படைக்க சண்டைக்குப் போன தேசம் சரிந்து கிடக்குது சார்ந்திருக்குது சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..! சாவில் தான் சந்தர்ப்பம் கண்டும் கரங்கொடுக்க மறந்தீர்..! சரிந்தது போதும் அவ்வினம்.. சரணடைந்தொரு அடிமை வாழ்வில் சண்டித்தனம் இயற்றியதும் போதும்..! சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும் சில்லறைகள் நிறையும் உண்டியல்கள் ஊருக்குப் போகட்டும் சாலை வரும் சாமிகளே…

  21. கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்

    • 6 replies
    • 1.4k views
  22. Started by Vaasha,

    மரணத்தை வென்ற மனித வித்துக்களின் மா வீரம் பாடும் நேரம்-இது மணி விளக்கேற்றும் நேரம். மனிதத்துவத்தின் மேலான பண்புடன் மற்றவருக்காய் உடம்பதனில் மணிக்கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி மறத் தமிழனாய் வாழ்ந்த காவியச்செம்மல்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும் -கண்டு வீறுடன் துடித்தெழுந்தவர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய் தம் வாழ்வைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.

    • 0 replies
    • 1k views
  23. மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …

  24. ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …

  25. பிஞ்சு நிலவு கவிதை - இளங்கவி.... பருவ ஏக்கத்தில் படுக்கைகள் நனைய...... என் கனவு பேரழகித் தேர்வுக்காய் பாதச் சுவடுகள் நடந்தன.... நிலவை மட்டும் தேடும் நேசக் கண்களுக்கு... என் மனதைக் குளிரவைக்க ஓர் நிலவு இன்னமும் கிடைக்கவில்லை.... சிறு தூரம் நடக்கிறேன்.... நடு நிசியின் நட்சத்திரக் கூட்டம் போல் வீதியோ ஜொலி ஜொலிக்க என் வேதனைக்கு விருந்தாக ஓர் வெண்ணிலவு... ஆம்.. அவள் ஓர் வெள்ளை நிலவு.... இவள் வேண்டாம்.... எனக்கு என் சொந்த மண்ணீன் காந்த நிலவு வேண்டும்... என் நடை தொடர சின்னச் சிரிப்பொலியொன்று என்னைச் சிறிதாய் கவர்ந்திழுக்க திசை நோக்கிப் பார்க்கிறேன் நம் தேசத்தது நிலவு அவள்.... அவள் கண்களோ பேசியது பல கதைகள்.... …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.