கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…
-
- 0 replies
- 997 views
-
-
இறைவா எம்மை ஏன் படைத்தாய் இறைவா எம்மை ஏன் படைத்தாய் இழிய வாழ்கை வாழ்வதற்கா ஈழத்தில் எம்மை ஏன் படைத்தாய் ஈன வாழ்கை வாழ்வதற்கா வன்னியில் எம்மை ஏன் படைத்தாய் வனத்தில் விலங்குகளாய் வாழ்வதற்கா யாழ்ப்பாணத்தில் எம்மை ஏன் படைத்தாய் யாருமற்ற அனாதைகளாய் வாழ்வதற்கா கிழக்கில் எம்மை ஏன் படைத்தாய் காணாமற்போனோர் கணக்கில் சேர்வதற்கா இந்துக்களாய் எம்மை ஏன் படைத்தாய் இன்னல்கள் சூழ வாழ்வதற்கா கிறிஸ்தவராய் எம்மை ஏன் படைத்தாய் கிலிகொண்ட வாழ்கை வாழ்வதற்கா முஸ்லிம்களாய் எம்மை ஏன் படைத்தாய் முடங்கி அடங்கி வாழ்வதற்கா தமிழராய் எம்மை ஏன் படைத்தாய் தலை குனிந்த வாழ்கை வாழ்வதற்கா பௌத்த சிங்கள வெறியர் பக்கம் பாவிகளாய் எம்மை…
-
- 0 replies
- 997 views
-
-
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! ஒரு வழிப் போக்குவரத்து ----------------------------------------------- நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு. உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில் ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். சிவப்பு விளக்கு கண்டல்ல, சீருடைக் காவலர் சீறுவாரென்றே விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம். அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும், கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும். …
-
- 2 replies
- 996 views
-
-
நான் பட்டைகளை அணிந்துள்ளேன், எனது நெஞ்சின் மேல், வெடி குண்டைக் காவியுள்ளேன், எனது மனதின் வெண்மையில் குளிர் காய்கிறேன், பெரு நெருப்பின் தணலாய் முகிழப் போகிறேன். மேலுள்ள வரிகள் fஉன்டமென்டல் என்னும் இசைக் குழுவின் உறுப்பினரான அகி நவாஸின் , எல்லமே யுத்தமே என்னும் புதிய இசை அல்பத்தில் வரும் ,கூக் புக் டிஐவய் , சுய சமையற் குறிப்புக்கள் என்னும் பாடலின் வரிகள். இந்தப் பாடல் தற்கொடைப் போராளிகளின் எண்ணங்களைக் காவி வருகிறது.இந்த இசைக் குழு பிரித்தானியா ஏசியர்களின் அரசியல் எண்ணக் கிடைக்கைகளை, உலகளாவிய ஆசிய மக்களின் ஏகாதிபத்திய எதிர் அரசியலின் வரிகளைக் காவி வருகிறது. இனி வெளியிடப் பட உள்ள இந்த இசைத் தட்டு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.இந்தப் பாட…
-
- 1 reply
- 996 views
-
-
கூனி குறுகி நிற்கிறேன் மாமா என் ரத்தத்தில் நானே குளிக்கிறேன் மாமா ஒரு சில நிமிடங்களில் என் உயிர் போய்விடுமே அந்த பாவத்திற்கு நீங்கள் தான் காரணம் மாமா நான் சின்னஞ்சிறு சிறுமி என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா மாமா நாளை நான் கல்வியில் சிறந்து நிற்பேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா மாமா உங்கள் சுகயீனங்களை கவனிக்கும் வைத்தியர் நானாக இருப்பேன் என்று ஒருவேளை தெரிந்தால் இன்று என்னை வதைக்காமல் விட்டிருப்பீர்களா மாமா உங்களுடன் சின்னவயதில் விளையாடிய தங்கை நான் தானே மாமா உங்களுடன் ஆதரவாக என்றும் காத்த அக்காளும் நான் தானே மாமா சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த அம்மாவும் நான் தான் மாமா…
-
- 2 replies
- 996 views
-
-
பாரதிதாசன் சிந்திய பாடல் ஆலய உரிமை கண்ணிகள். எவ்வுயிரும் பரன் சந்ததி யாமென் றிசைந்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம் அழகிய நேத்திரங்கள்? திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று சேர்த்திடலாகும் அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும் ஒன்றே? ஏக பரம்பொருள் என்பதை நோக்க எல்லாரும்உடன் பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி லேஉள்ளதோ சிறப்பே? "தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை" என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம், மதி போயிற்று நீசத்திலே. என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி தன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர் சமூக…
-
- 0 replies
- 996 views
-
-
மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 996 views
-
-
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் [ சு. பிரசாத் ] வியாழன், 26 மார்ச் 2009 19:10 மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே, எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார் …
-
- 1 reply
- 995 views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 995 views
-
-
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன் வரைந்து முடிந்ததும் அது பறந்து விட்டது மீண்டும் ஒரு பறவையை வரைந்தேன் அதுவும் பறந்து விட்டது நான் வரைந்துகொண்டே இருந்தேன் அவைகள் பறந்து கொண்டே இருந்தன இறுதியாக மரம் ஒன்றை வரைந்து முடித்தேன் பறந்து போன அத்தனை பறவைகளும் வந்து அமர்ந்து கொண்டன........... நன்றி: தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html
-
- 9 replies
- 994 views
-
-
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…
-
- 2 replies
- 994 views
-
-
மாசி மாத விடுதலைப்புலிகள் 2007ல் வெளிவந்த வியாசன் எழுதிய கவிதை பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள் நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள் சுற்றிச் சுழன்றேறி வருகின்றன நரமாமிச உண்ணிகள். சம்பூரைத் தின்று சமித்து, வாகரையை வளைத்து முடித்து, குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன உண்ணிகள். வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால் விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர். கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர். விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு பட்டினியையும் பயன்படுத்திய சிலர் முன்னர் வெற்றியும் …
-
- 2 replies
- 993 views
-
-
*என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…
-
- 1 reply
- 993 views
-
-
குடு முஸ்தபாவின் குடு அடி...(சிறையிருந்து [i] சிறகடித்து பறந்த என்னை சிறகொடித்து சிறயடைத்தீர்..... இந்தோ சீறியே வருகின்றேன் சிறு காலம் பொறுத்திடுவீர்... உறுமியே உலவிடுவேன் ஊடகத்தில் ஏறிடுவேன்.... வன்னி புலி புலியென்று வசையதை பொழிந்திடுவேன்.... எண்ணில்ல இடர்களை எண்ணி உமக்கு தந்திடுவேன்.... அறிவாழி என்னையா நீர் அடைத்து வைத்தீர்....??? என்ன யான் செய்தேன் என்று என்னை நீர் இழித்தீர்.... வங்கியில் ஒரு கொள்ளை சின்னதாய் ஒரு சின்ன கொலை.... கள்ள மட்டையில் காசு கறந்தேன் தாலி கொடிகள் தனை அறுத்தேன்.... கன்னியவளை கற்பழித்தேன் இதை விட வேறென் செய்தேன் இது தப்பா..…
-
- 0 replies
- 992 views
-
-
ஏன்டா என்னை கொண்டீங்க....??????? பத்தவைச்சா பத்தவைச்சா என்னை ஏண்டா பத்த வைச்சா...??? பாவி புள்ள என்னில் ஏண்டா தீயை வந்து பத்த வைச்சா...??? மூணு புள்ள பெத்த என்னை முளுசாய் ஏண்டா எரிச்சுப் புட்டா...??? உயிர் வதங்கி உடல் கருகி இறக்கும் படி ஏண்டா வைச்சா...?? என்ன பாவம் செய்தேன் என்று என்னை வந்து கொளுத்தி புட்ட....?? கூட்டத்தோடு கூட்டமாக கூடியங்கு நானும் வந்தேன்.... ஜயோ பாவி ஏனோ வந்து என்னை அங்கு கொளுத்தி புட்ட....??? தீக்குளித்து மடிந்தான் என்று ஏண்டா வந்து அறிக்கை விட்ட....??? ஓலம் இட்டு கத்தையிலே ஓடி வந்து அணைக்க வில்லை... கூட எண்ணை ஊற்றி நீயும் ஏண்ட…
-
- 1 reply
- 992 views
-
-
இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…
-
- 4 replies
- 992 views
-
-
புரட்சி -----------இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... ................................................................உலக விடுதலைக்காய் போராடிய......................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ...................…
-
- 2 replies
- 992 views
-
-
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி துடிக்க துடிக்க .... …
-
- 0 replies
- 991 views
-
-
அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 991 views
-
-
நீ தடம் பதித்துப் போகும் பாதவெளியில் பட்ட பனித்தூறல் அதன் சூட்டில் உருகிப் பின் என்னைப்போல் உறைகிறது காண் ஒயாமல் மோதி விழும் பனிச் சாரலது உரைந்த பனியதன்மேல் உள்ளக்கற்பனைபோல் கோபுரம் கட்டி எழ ஒரு கோடி மேளங்கள் ஒன்றாய் இசைப்பதுபோல் ஓடி வரும் வான்துளியின் ஒட்டலுடன் ஒளி கீற்றும் சேரந்து வந்து கற்பனையின் ஒப்பனையை கலைக்குது பார் இயற்கைக்கு இயல் இதுவோ? உண்டாக்கி உருப்பெருக்கி உருக்குலைத்து பின் உண்டாக்கும் பெரு இயலோ இவ்வுலகில் யார் அறிந்தும் யார் உணர்ந்தும் முடியாத கற்பனைபோல் கோலமிடும் உள்மனது வான் பரப்பின் மேகமதாய் வாழ்கை எனும் வாழ்வுக்கு
-
- 8 replies
- 990 views
-
-
கண்ணிமைக் கதவுகளில் கண்ணீர்த்துளிகள்.... இளங்கவி - மாவிரர் நினைவுக்காய்... உணர்வுகள் முகைவெடித்து கண்ணீராய் உருவெடுத்து கண்ணிமைக் கதவுகளில் காத்திருக்கும் கார்த்திகை இருபத்தியேழுக்காய்...... இது ஒரு நாளில் உருவெடுத்த உணர்வுப் பிரவாகமல்ல...... ஒவ்வொரு வருடமும் சேர்த்துவைத்துக் கத்தும் எங்கள் உயிர்மூச்சின் சத்தம்..... எங்கள் மண்ணுடன் கலந்து நிலமாகிப் போனீர்..... எங்கள் கடலுடன் கலந்து நீராகிப் போனீர்..... எங்கள் வானிலே கலந்து வான்வெளியாகியும் போனீர்.... ஆதலால் தமிழர் மனங்களில் கலந்து அவர் நினைவாகிப் போனீர்..... உங்கள் சரித்திரம் சொல்லா எங்கள் சரித்திரத்தில் பக்கமில்லை.... உங்கள் சாவுகளை எண்ணா எங்கள் போரிலும் வ…
-
- 2 replies
- 990 views
-
-
கெட்ட கனவு. ஆழ் மனத்தின் வடு.... ஆமி சுற்றி வளைத்தான் ஆட்காட்டியும் கூட நின்றான் அடையாள அட்டையைக் காணவில்லை திடுக்கிட்டு எழுந்தேன் சிறிது நேரத்தின் பின் புரிந்தது அது கெட்ட கனவு என்று. சுடுகாட்டின் மத்தியில் படுத்திருந்தபடி கண்விழித்தேன் சுற்றும் முற்றும் பார்த்தேன், என் சுற்றம் எல்லாம் பிணக்குவியலாக.. அலறியடித்து எழுந்த்தேன் அப்புறம் தான் புரிந்தது அது கெட்ட கனவு என்று.
-
- 2 replies
- 990 views
-
-
''கண்ணீர் துடை கலங்காதே.. வைகோ..."" அண்ணனே வைகோ நீ அழுவதா...??? உன் விழியில் நீர் வீழ்வதா...??? நீ சீறும் புலி உன் நெஞ்சில் என்ன வலி....??? உன் கோட்டைக்குள் உளவாழி உனக்கே இன்று வெடி குண்டா...??? ""மூக்கு கண்ணாடிக்கு"" முதுகு சொறிபவன் உன் கட்சிற்குள் ஏன் சவாரி செய்கின்றான்...??? துரத்தவனை தூக்கி எறி முடிந்தால் தூக்கில் மாட்டு.... லஞ்சம் அங்கு லட்சியம் மறக்கிறது வஞ்சம் உனக்கு வம்புக்கு வருகிறது.... துரோக சன்னங்கள் உனை துளையிட பார்கின்றது விடாதே நீ எழு வீழ்த்தவனை.... களம் கண்ட புலி நீ கண்ணீர் வடிப்பதா...??? சீறு சிறுத்தையாய் எழு... நீ மலை உனை என்ன ச…
-
- 0 replies
- 990 views
-
-
தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…
-
- 4 replies
- 989 views
-
-
ஆனந்தபுரம்: நஞ்சுண்ட வீரம் ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றில் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாக நிலத்தில் ஊன்றி தடுத்து நின்றனர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின் கருணையான முகத்தை அன்புறைந்த வார்த்தைகளை சனங்களுக்காய் களமாடும் வீரத்தை கடக்க முடியா நஞ்சு தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின் கனவுகளால் பச்சை நிறமானது நிலம். பொறிக்குள் வைக்கப்பட்டிருந்த எல்லா வகையான தந்திரங்களையும் முறியடிக்க நெடுநேரம் போராடினார் சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட நஞ்சு வலயத்தில் காற்றுக்குத் தவித்தனர் குழந்…
-
- 0 replies
- 989 views
-