கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல் ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும் அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும் இதயத்தின் துள்ளல் இணைவினைச் சொல்லும் விநாடிகள் வந்து உணர்வுகள் ஊறும் விளக்கமின்றி உதடுகள் விரியும் விடிவினைக் கண்கள் விரைவாய் அழைக்கும் காதலன் முகம் காண ஆசைகள் பறக்கும் விழித்துக் கொண்டே கனவுகள் மிதற்கும் காதல் உள்ளம் அத்தனையையும் வெல்லும் ஆழ்கடல் தொலைவில் ஆன்மாக்கள் உலாவும் அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்ட…
-
- 15 replies
- 3.4k views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்
-
- 32 replies
- 5.8k views
-
-
பகவான் தத்துவஞானி ஓஷோ காமத்தை துறந்தால் பரிபூரண நிலைய அடையலாம்னு சொல்லி , காமத்தில மனதை ஒடுக்கணும்னு சொல்லி தியான வகுப்புகள நடத்தி பெரிய சர்ச்சைய கிளப்பினாங்க . இப்போ இந்த லவ்வேர்ஸ் கடவுளை பாக்கிறாங்களாம் . உங்க கருத்துங்கள எழுதுங்க . அடிக்காதீங்க . ஓக்கேயா ? முதலில் அறிமுகம் கொஞ்சமாய் சினிமாவை அலசியபின் செக்ஸ் பற்றிய தடுமாற்றமான துவக்கம் மெல்ல பாதுகாப்பான உறவில் கைவசம் காண்டம் இல்லாமலும் முடியும் என்றேன் கண்களை ஊடுருவிய கண்கள் நிலைக்க ஆக்ரோஷமான காமத்தை விரும்புகிறவள் நீ என்றாய் ஒரு பறவையைப் போல் என் காமத்தை அவசரப்படுத்த முடியாது நான் பாம்பு உன்னையும் பாம்பாக பற்றிக்கொள்ளத்தான் முடியும் என்றேன் அவளின் புன…
-
- 5 replies
- 1.8k views
-
-
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா? [கீதன்][19 - 07 - 2016][சமூகம்] எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும் மின்னாமல் முழங்காமல் பம்மிக்கொண்டிருந்தா பாவப்பட்டு தருவாங்கள் வல்லரசையே வளைச்சுப்போட்ட எங்களுக்கு தமிழரசை மலரவைக்க தெரியாதோ? இப்பிடித்தானே அந்த எடுபட்டு போனவனும் சொல்லிவந்தான். கனநீளா அவனையும் காணலையே. அறுபது வருசமாக அரசியல் ச…
-
- 0 replies
- 880 views
-
-
மூதாட்டி: பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..! முதியவர்: வாடுவதும் ஏனோ என் கண்ணே... தேடுவதும் எதையோ என் பெண்ணே... உன் மணவாளன் நானிருக்கேன் மணியே.. உன் மகனை மறந்து வா தனியே.. மூதாட்டி: பெற்ற மனம் என்றுமே பித்தத்தான் பெற்ற வலி என்றுமே எனக்குத்தான் விட்டுவர கூவுதிங்கே இதழ்தான் விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் ! முதியவர்: மணமுடித்த நாளே முடிவெடுத்தேன் மரணம்வரை நான் உடனிருப்பேன்.. மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன் மார்போடு உன்னையே அணைத்திருப்பேன் மூதாட்டி: நரைத்த முடியும் நடுங்கும் உடலும் நடவா காலும் நகைப்பது தெரியலையோ? கிழடு தட்டியும் கிண்டலா …
-
- 1 reply
- 585 views
-
-
பெரியதொரு குங்குமச் சிமிழும் சிறியதொரு சாம்பல் பொட்டலமும் போதுமானது... எம் இனத்தை அழிக்க! புரியாத மந்திரமும், அறியாத சடங்குகளும் போதுமானது... எம் சனத்தை கவிழ்க்க!! பால், பழம், தேன், வெண்ணை, சக்கரையென சகலத்தையும் புனிதக் குளியலுக்கு விரையமாக்கும் இடத்தை திருத்தலம் என்கிறார்கள்... திருந்தாத சென்மங்கள்!! பால் வடியும் முகங்கள், பாசத்திற்காக ஏங்கும்போது... "பாவம்" என்று ஒதுங்கி நின்று, பத்து காசை மட்டும் பாத்திரத்தில் போட்டுவிட்டு பாவம் கழிந்ததென பாரினில் பிதற்றிக்கொள்ளும் பாழாய்ப்போன நெஞ்சங்கள்!! வேண்டுதல் எனும் பெயரில்.. வேண்டாத அணுகல்கள்! கூரான ஆயுதத்தால் குருதியின் குவியல்களங்கே.. தானம் செய்ய வேண்டும்போது வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்! தேவையில்லா இடத்தில் விர…
-
- 1 reply
- 561 views
-
-
வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …
-
- 0 replies
- 1k views
-
-
இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்... புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டு விடும் அப்பாவுமில்லை... கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக்குடிசையில் திண்டாடிய போது சிரித்தார்கள் எங்கள் தேசம், நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாண படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள்... உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள் அடித்தார்கள் , உதைத்தார்கள் தங்கி…
-
- 0 replies
- 597 views
-
-
கேட்டலும் படித்தாலும் அரைகுறை பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை விளக்கமும் தெளிவும் அரைகுறை கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை படமும் பாட்டும் அரைகுறை பேச்சும் செயலும் அரைகுறை வெட்டியும் பந்தாவும் அரைகுறை வரலாறும் வாழ்கையும் அரைகுறை நம்ம வாழ்க்கையும் அரைகுறை மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை என்னை நான் தேடினேன் அரைகுறை நான் முழுமை பெறும் நாள் எப்போ அப்போ நான் மனிதன் ஆகிறேன் .
-
- 7 replies
- 815 views
-
-
குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…
-
- 31 replies
- 1.9k views
-
-
மீண்டும்....எப்போ...? ****************************** அன்பே... தேடுகிறேன் உன்னை-இன்று நீ தந்த பொருழதனை திருப்பி நான் தருவதற்கு... என்னவென்று கேட்கிறியா...? அன்றொருனாள்.... நாமணைத்துக் கொள்கையிலே உன் தலையின் பேனொன்று... எந்தலையே தஞ்சமென்று.. என் தலையில் புகுந்ததுவே... அதை நீ அறியாயோ...? ஓ........ நீ அறிய நியாயமில்லை அன்றோ....... நாமறியும் நிலையிலில்லை.. இன்றதனை உணருகின்றேன்.. கடிக்கையிலே.. கதறுகின்றேன்... கொன்றிடவே எண்ணுகின்றேன் உன் தலையின் பேனதால் மனமேனோ வரவில்லை.... so அன்பே... நீ வந்திடுவாய்... அதை நீயே பெற்றிடுவாய்......
-
- 7 replies
- 1.5k views
-
-
கடுப்பில் இருக்கும் டி ராஜேந்தரிடமும் வாலியிடமும் டக்குவப்பற்றி கவிதை பாடச்சொன்னா எப்புடி இருக்கும்...ஒரு கற்பனை முதலில் டி ராஜேந்தர்... உன்முகத்தில் வளந்திருக்கு தாடி உங்கூட உள்ளதெல்லாம் கேடி மகிந்தயிடம் போயிடுவா ஓடி வாலாட்டி வாங்கிடுவா கோடி ஊரைச்சுத்தி உலையில் போடும் தாடி நீ மகிந்தைக்கு வாச்ச உலை மூடி சிங்களவன் கோடியினை தேடி பதுங்கிடும் நீ ஒரு பேடி பாடையில போகணும் உம் பாடி அதைப்பாக்கணும் நான் சந்தோசத்தில் ஆடி ஏய்..டண்டணக்கா..ஏய்..டணக்கணக்கா.... இப்ப வாலி.. சனியனே...சனியனே... சனிக்கே...சனியனே... எங்களைப்பிடிச்ச... ஏழரைச்சனியனே... மங்காச்சனியனே... மானங்கெட்ட சனியனே... எந்தக்கோயில் போய் எள்ளெண்ணெய் எரிச்சாலும் எங்களைத…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…
-
- 15 replies
- 2.3k views
-
-
நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்…
-
- 14 replies
- 5.7k views
-
-
எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன். ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெர…
-
- 2 replies
- 857 views
-
-
அடிக்கடி உன் முகத்தின் முகவரியை அசைபோட்டுப் பார்க்கிறேன்! பார்ப்போர் எல்லோர் மீதும் பாசம் வருவதில்லை! கண்ணில் காண்போர் எல்லோர் மீதும் காதல் வருவதில்லை! ஆனால் எப்படி உன்மீது மட்டும் இப்படி ஒரு காதல்! என் இதயக் கோயிலில் காதல் வேதங்கள் ஓதப்பட… தென்றல் தெம்மாங்கு பாடி ஊருக்கு அஞ்சல் செய்கிறது! உன் வாசனைகள் எனைக் கடந்து செல்கிறது! ம்…! இதயத்தின் ஒவ்வொரு அறைகளிலும் உன் முகம் பதிகிறது! தாலாட்டும் பூங்காற்றாய் தழுவிச் செல்லும் உன் நினைவால்… என் அனுமதிகள் எதுவுமின்றி கற்பனை நான்கு திசைகளிலும் எட்டிப் பார்க்க… மௌனமாய் கருத்தரித்து விரல் வழி பிறந்து வழியும் கவிதைகளை வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள்…
-
- 12 replies
- 2.1k views
-
-
இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
-
குண்டுமல்லி தோட்டத்திலே குவிந்திருக்கும் மல்லிகையே - உன் கூட்டாளி நானிருக்கேன் குவளைமலரே கண்ணுறங்கு!! கைகொட்டி சிரித்திருக்கும் பட்டுமேனி பெட்டகமே யார் கண்ணும் படுவதற்குள் காந்தள்மலரே கண்ணுறங்கு!! ஈசானி மூலையிலே உலையங்கே கொதிக்குதம்மா போயி நானும் பார்த்துவரேன் பூந்தளிரே கண்ணுறங்கு!! பசும்பால் வாங்கிடவே பணமிங்கே போதலியே உலைத்தண்ணி ஊத்திவாறேன் மாந்தளிரே கண்ணுறங்கு!! கட்டுமரக் கப்பலோட்டி கடலுக்கு போன அப்பா பொழுதடைய வந்திடுவார் பூச்சரமே கண்ணுறங்கு!! அயரை மீனும் ஆரமீனும் அள்ளிக்கொண்டு வருவாரடி அதுவரைக்கும் பொறுத்திருக்க ஆரவல்லி கண்ணுறங்கு!! வாளைமீனும் வழலை மீனும் வலைபோட்டு பிடித்தமீனும் வட்டியிலே போட்டுத்தாற…
-
- 0 replies
- 609 views
-
-
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது? தீபச்செல்வன் மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது? என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை வரலாற்றில் பரப்பிச் செல்லும் பாலியாறு என்ன தவறிழைத்தது? நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை யாருடைய கால்த்தடங்களுமில்லாத பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன. குருதியை நிலத…
-
- 5 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க - என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன் வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன் இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்க…
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்..... கவிதை...... சிதறிடும் சில்லறைபோல் சிரிக்குமெங்கள் மழலைகள்; இன்று மிக்’ குகளின் இரைச்சலிலே சிரிப்பெல்லாம் இழந்து; பிஞ்சுகளின் முகமெல்லாம் விறைத்து தாயின் முகம்பார்த்து விக்கி விக்கி அழுதிடுமே..... அதைப் பார்த்து;நம் மூச்செல்லாம் நின்றிடுமே..... இது நாம் இன்றுகாணும் உயிர் வாட்டும் துன்பம் எமது ஈழத்தின் விடியல்வரை நாமிழந்துவிட்ட இன்பம்....! வெள்ளை ஆடைகளுக்கு திருஸ்ரிப் பொட்டு வைச்சால் போல் தங்கள் கறுப்பு முகங்களிலே முத்துப்போல் பல் காட்டி வெக்கத்துடன் சிரித்திடும்; எங்கள் கருப்பு எலிசபத்துக்களின் கண்களெல்லாம் ஒளியிழந்து கருவாட்டுக் கண்களுடன் தங்கள் கற்பும் அழிந்துபோகும்.... மற…
-
- 7 replies
- 1.9k views
-