Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மானவாழ்வு ஒன்று பயணம் முடித்ததோ? தமிழ்வீரம் தந்த உயிர்ப்பூவின் வாழ்வை சதிகாரக் கொலை தின்றதோ? தமிழன் துன்பங்களுக்கு கரங்கொடுக்கும் ஜனனாயகக் கரங்களுக்கே மரணம் பரிசுகொடுக்கும் சீர்கெட்ட ஜனனாயகமே! மரணத்தின் பொறியில் உன்வாழ்வை வைத்து, இன-கண்ணீரின்நீதிக்கு சேவை செய்த உன்வான்னாட்களின் துணிச்சல்கள்தான் எதிரிக்கு வயித்தெரிச்சல்களோ? உன்பிரிவைத் சுமந்த செய்தி எம் நெஞ்சங்களுக்கு இடியைத்தந்தது. தேசத்தின் விடியலுக்காய் விலையான உன்வாழ்வை எம்கண்ணீர் சுமக்கின்றது கனவுகளோடு. இரவிராஜ் அண்ணாவின் பிரிவுத்துயரில் வருந்தும் யாழ்கள உறவு வாயயும், கையையும் கட்டிபோட்ட ஒரு இனத்தை மரணம் சூறையாடும்போது. மௌனம் கலையாமல் உன் மனிதாபிமானம் நோன்பிருக்கின்றது. சிங்க…

  2. காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது... தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை. எரியும் வீட்டில் பற்றியெரிந…

  3. [size=5]"பாவம் அந்தக் காதல்"[/size] http://static-p2.photoxpress.com/jpg/00/15/42/73/400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg எதேச்சையான சந்திப்புக்கள்! தன்னிச்சையான எண்ணங்கள்! தவிர்க்க இயலாமற்போன பார்வைகள்! சொல்லத் தயங்கிய வார்த்தைகள்! தூக்கம் மறந்த இரவுகள்! தலையணை துணையான பொழுதுகள்! நூலிழை இடைவெளிக்குள்... சிக்கித்தவித்த இருமனங்கள்! பிரியப்போகும் தருணத்தில்... வெடித்துவந்த அழுகையோடு, சொல்லிக்கொண்ட காதல்! பின் சுற்றிச் சுழன்ற நினைவுகள்! ஆழமாய் அழகாய் உணர்ந்த காதல், இப்பொழுது..........பிரிகிறது! காரணங்கள் தெரியாமல், காரியமும் புரியாமல், சொல்லாமல் கொள்ளாமல் மறைகிறது! காதல் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை…

  4. மகிழ்ச்சியாய் வாழ அழகாய் வழிகாட்டுகிறது அன்பு சரவிபி ரோசிசந்திரா

  5. Started by nochchi,

    கிளிநொச்சி --------------- 01. *பி*ரகாசிற்கு இப்பொழுது பியரில் நாட்டமில்லை முன்பு நாம் பியர் குடிப்பதில்லை சமாதான காலத்தில்தான் இங்கு பியர்கள் கொண்டுவரப்பட்டன. அப்போதுதான் நானும் பிரகாசும் பியர் குடிக்கப்பழகினோம். இப்பொழுது இங்கு பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை முன்பு கொண்டுவரப்பட்ட பியர் போத்தல்களின் சுட்டுத்துண்டு நிறங்கள் வெளுறிக்கிடக்கின்றன. 02. நாங்கள் பயணம் செய்த பேருந்துகள் ஓய்ந்தோ முடங்கியோ கிடக்கின்றன நாங்கள் பேருந்துகளையோ பயணங்களையோ விரும்புவதில்லை இப்பொழுது சைக்கிளை மெதுவாக ஓட்டியபடி போகிறோம் எங்கள் மோட்டார் சைக்கிள் வீட்டில் நிற்கிறது. இனி நடந்தும் …

    • 0 replies
    • 939 views
  6. செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச…

  7. நம் பசி தீர்க்க தன் பசிக்கு உணவு நாடிச் சென்றவள சென்றும் பல நாழியாச்சு நலமோடு வரும் வரையில் நாம இருப்போம் ஒற்றுமையாய் நகர்ந்து சென்று ஓடாதே நன்றும் தீதும் காத்திருக்கும் நிறத்தில் வேறு கண்டாலும் நிஜத்தில் நாம் உறவுகள் பத்திரமாய் நாம் இருப்போம் சென்ற வழி பார்த்திருப்போம் பதறாதே சோதரி பகல் பொழுது சாய முன் பசி தீர்க்கும் தாயவள் பாயந்து ஓடி வந்திடுவாள்

  8. துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வ…

  9. இனி எம் கல்லறைகளுடன் பேசுக"

  10. கல்லையும் கடவுளென்பர் - தாவும் குரங்கையும் கும்பிடுவார் மாட்டையும் மாதாவென்பர் - அதன் மலத்தையும் மதித்திடுவர் பாவிகளையும் பகவானென்பர் -பகைப் பாம்புக்கும் பால்விடுவர் சனியையும் சாமியென்பர் - சுடும் சூரியனையும் சிறப்பிப்பர் தர்மத்தைத் தொலைத்திடுவர் - தவிக்கும் தமிழரைத் தவிர்த்திடுவர் http://gkanthan.wordpress.com/index/pakthar/

  11. என் கண்களே எனக்குப் பிடித்த ஒளிப்பதிவுக் கருவி காரணம் அதற்கு உன்னை மட்டுமே பிடிக்கத் தெரியும் * என் பல முத்தங்களுக்கு சில முத்தங்களையே திருப்பித் தந்திருக்கிறாய் நீ உன்னை என்னிடம் இழப்பதற்காகவா முத்தக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் * கவிதை என்று யார் கேட்டாலும் உன் பெயர் சொல்வேன் உன் பெயர் என்னவென்று எவர் கேட்டாலும் நான் எழுதாத காவியம் என்பேன் * என்னை எழுத வைத்தவள் நீ என்றாலும் நான் கவிஞனானது உன்னை அழைத்து அழைத்துத்தான் * உன்னைப் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுதிக் கொண்டேயிருந்தேன் உன்னை விட எழுத நினைத்தேன் எழுதுவதையே மறந்துவிட்…

  12. '' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -

  13. ____________________$$$$___$$$ $ __________________$$$$$$$_$$$$ $$ _________$$$$$$$$$$$$$$$$$__$$ $$ _____$$$$$$$$$$$$$$$$$$$$$$__$ $$$ ____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$ ___$$$_$$_$$$$$$$$$$$$$$$$_$$$ $$ __$$$$$_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$___________$$ $$ _$$$$$_$$$$$$$$$$$___________$ $$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$$ $_$$$$$$__$$$$$$$$$ $_$$$$$$___$$$$$$$$ _$$$$$$$$$__$$$$$$$ $_$$$$$$$$___$$$$$$ $$_$$$$$$$$___$$$$$ $$$_$$$$$$$$__$$$$$$ _$$$_$$$$$$$$$_$$$$$ $$$$$ __$$$$$$$$_$$$$ $$$$$$$ __$$$$$$$$$__$ $_$_$$$$$__$$$$$$$$$_$$$$ $$$__$$$$$__$$_$$$$$$$_$$$…

    • 2 replies
    • 936 views
  14. பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு …

  15. இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் இதை பிடித்து விட்டான் என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல் ஆகவேண்டியதை பார்ப்போமா? இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள் அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல் நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே நன்றி www.tamiloosai.com Source Li…

  16. காதலின் மறுபக்கம் பாழடைந்த காவலரணில் கைவிடப்பட்ட வெடிகுண்டாக காத்துக் கிடக்கிறது உன்னை குதறிக் கடித்;து உமிழ்ந்து துப்ப ஒரு கூட்டம் மன்மத பாணங்களை ஏவமுடியாமல் மனதுக்குள் பூட்டி மகிழ்ந்தவர்கள் இன்று உனக்கு கிடைத்த மண மாலையும் மலர்ப் பஞ்சணையும் கண்டு புழுங்கித் தவிக்கிறார்கள் சொல்லம்புகளால் வேள்வித்தீ செய்தவர்கள் இருந்தும் சவமாக உலவுகிறார் பூமியிலே பாவம் அவர்கள் பயித்தியக்காரர்கள் என்று அசதியாக இருந்து விடாதே கைக்கெட்டாப் பொருள் என்று தெரிந்து கொண்டதால் வெடிகுண்டையும் ஏவத் தயங்க மாட்டார்கள் கவனமாயிரு.

    • 0 replies
    • 936 views
  17. இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும் எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

  18. கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…

  19. Started by yaal_ahaththiyan,

    நான் - உறக்கம் நீ - கனவு உன் வரவுக்காகவே விடிய விடியத் தூங்குவேன் * என்னைத் தொலைக்காமல் உன்னைத் தேடினேன் என்பதில் பெருமை எனக்கு என்னை நான் தேடவே நீ கிடைத்தாய் என்பதில் பெருமை உனக்கு * என் சொந்தங்களில் நான்தான் முதல் கவிவாசகன் என்பதில் சிறியகவலை எனக்கு இதுவரை யாருமே உன்னை பார்த்து யார் எழுதியது என்று விசாரித்ததில்லையே * உன் தாயைப்போல் என் நேரமும் உன்னைக் கவனிக்க என்னால் முடியாமல் போனாலும் உன்னைக் காணத நேரங்களில் தாயாக நான் ஏங்கித் தவிப்பதுண்டு * உனக்காக காத்திருந்தால் என் கால்கள் வலிப்பதில்லை என் மனசு ஏறி நிற்பதால் என் தலைதான் வலிக்கும் -யாழ்_அகத்தியன்

  20. Started by கோமகன்,

    ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு! விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க , ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க , சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ; சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல , அது கண்டு என் மனம் உவகை பொங்கும் . மெலிதாகவே என் மனம் வருடும் மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு ! அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் , சந்தோசத்துடன் என் இதயம் சத்தத்தை அடக்கத் தயார் .

  21. Started by ilankathir,

    எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட நடத்திக்கொள்ளலாம் அல்லது பிறரைத் தூண்டி நடத்திக்கொள்ளலாம் பாராட்டு விழாக்கள் பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை ! நன்றி : ஆனந்த விகடன…

    • 8 replies
    • 935 views
  22. புத்துணர்ச்சியூட்டிப் புதுவாழ்வைக் காட்டுத்காய் பொங்கல் நன்னாள் எம்முன் புன்னகைத்து வருகிறது. வாருங்கள் நண்பர்களே வரவேற்போம் புத்தாண்டை நீர்மேல் எழுத்தாகி நிலைகுலைந்து எம் வாழ்வு போரால் அழிந்ததனைப் புதுப்பிக்க, எங்களது இன்னல்கள் நீங்கி இனியதொரு பொற்காலம் மின்னி ஒளிர விளக்கேற்றி வாருங்கள். போனதெல்லாம் போகட்டும் புது வாழ்வு இனிவேண்டும் காய்ந்து நிலம்பிழந்து கட்டாந்தரையாகி ஓய்ந்ததனால் எல்லா உயிர்ப்பும், எம் தாயகத்தில் சாய்ந்தவைகள் மீண்டும் சாம்பரிலே நின்றெழும்ப பாடிடுவோம் தோழர்களே பண்ணெடுத்துப் பாடிடுவோம் வேதமுதல்வன் விழிதிறந்து நெற்றியிலே ஊதிப் பொறிசிதற உள்ளங்கள் ஒன்றிணையச் சந்தமெடுத்துத் தமிழினிக்கப் பாடிடுவோம். ஆதிசிவன் பெற…

    • 0 replies
    • 934 views
  23. புழுதியப்பிய தெருக்களின் முனைகளில் அழுதபடி குழந்தைகளும் அனாதைகளான அவர்களுமாக தெருக்கள் இப்போது துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அழித்துச் சென்றவர்களின் முகங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம். நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின் முகங்களில் பயமும் வறுமையும் பதியமிடப்பட்டிருக்கிறது….. ஆணிவேருடன் ஒரு சந்ததியும் அதன் குருத்துக்களும் கனவுகளும் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட அடையாளங்களை அழிக்க யார்யாரோ வருகிறார்கள் அறிக்கைகள் எழுதுகிறார்கள் எல்லாம் வளமைபோல் அவர்கள் போய்விடுகிறார்கள்…. இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில் ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும…

  24. தேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று... ஒரு தீபத் திரியிலிருந்து இன்னொரு திரியை சுடர்விக்கும் நெருப்பென்பது வளர்கின்றதா... தேய்தலடைகிறதா? தீயைப் பயிரிட்டு வெளிச்ச அறுவடை. முதல் சுடரின் பிள்ளைகளெனலாமா மற்றவற்றை இல்லை நகல்களா... ஒற்றைச் நெருப்பில் ஏற்றிய ஆயிரம் சுடர்களின் தீ ஒன்றா பலவா இன்னொரு விளக்கை உயிர்வித்த சுடரின் நெருப்பு அடையும் மரணமென்பதும் மரணமாயிருப்பதில்லை... ஒதுங்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.