Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சொந்த மண்ணில் அகதியாய் அவர்கள் வந்த மண்ணில் அகதியாய் நாங்கள் நாங்களும் அவர்களும் ஒன்றுதான் அங்கே தமிழன் அகதி இங்கே அகதித்தமிழன் இப்படிக்கு அகதித் தமிழன் அனலைதீவன்

  2. கணவன் இந்திய இராணுவத்தால் அல்லது கூட இருந்தவரால் காணாமல் போனவர் தம்பி கடற்தொழிலில் கடற்பீரங்கி சத்ததிற்கு பின் காணாமல் போனவன் மூத்தவன் செம்மனிக்காலத்தில் காணாமல் போனவன் இளையவன் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சரணடைந்து காணாமல் போனவன் மருமகளும்,பேரக்குஞ்சுகளும் அவுஸ்ரேலியாவிற்கான கடற்பயணத்தில் காணாமல் போனவர் இவள் வானத்தையும் கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்

  3. ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1) எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப

  4. மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…

    • 2 replies
    • 994 views
  5. இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…

  6. Started by சந்தியா,

    பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!

  7. றோஜாவே உன்னை பறிக்க எண்ணியபோது புரியவில்லை...... இத்தணை முட்கள் என்னை தீண்டும் என்று!!! தலைப்பு திருத்தப்பட்டுள்ளது-யாழ்பாடி.

  8. எது ஈடு இதற்கு...? மனதைத் தாலாட்டும் மாலைத் தென்றல் சுள்ளென எரிக்கா மெல்லிய வெயில் சில்லெனப் பரவும் இரவுக் குளிர் கதகதப்பாக்கும் போர்வைத் துணி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? இரவில் நிலவு இரையும் மழை பருகத்தேநீர் பாயில் தூக்கம் கனவில் சுகம் கவலையற்ற மனம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? கலையும் இருள் காலை நிசப்தம் கண்ணைக் குத்தா கதிரவன் ஒளி விழித்தபடி தூங்கும் சுகம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? குளையல் சோறு குளிக்க வெந்நீர் துவட்ட முந்தானை தூங்க உன் மடி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? ஒழுகும் மழை ஒற்றைக் குடை புழுதி வீசும் பூமி வாசம்…

  9. பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க, இலைகள் கழற்றிய கிளைகள் காற்றோடு குலவுகின்றன, மதில்களில் பூனைகள் இல்லை. வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை. அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள் கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன. குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது. இனியிருள் சூழ்ந்து அமைதி வளர்ந்துவிடும். மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க, உள்ளங்கைகளில் குளிர் குத்தும். இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம். மனதும், கிடுகுவேலிப் புலுனிக்குருவி நான் இந்தப்பனிக் குளிக்கும் மரங்களில் எனக்கேது மறைவு. செயின் நதியும் ஈபிள் கோபுரமும் மோனோலிசாவின் முகமும் உலகின் அழகான ராஜபாட்டையும் டயானாவின் கார் மோதிய தூணும் கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக…

  10. Started by kavi_ruban,

    கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! …

    • 2 replies
    • 1.7k views
  11. Started by கவிதை,

    சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் ! இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !! மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை, இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!! கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...! நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!! சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...! வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!! எங்கே நீ சென்றாலும்... என் நினைவும் பின்னால் அலையுமடி..! அங்கே வானவில் வீடு கட்டி... உனக்காய் வாசல் வரையுமடி... !! உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ? பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ?? என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்…

  12. மதமதை மதமதை நீயிழிப்பாய் மடமையில் இன்றதை நீ செய்வாய் ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய் உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்... அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய் ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்... இரும்பது மீதிலே ரயிலோடும் இல்லென இல்லென நீயுரைத்தால் உன்னிலை உன்னிலை என்னவென்போம் ஊழ்வினையதுவே மேலே என்போம்... பார்வையிழந்தவர் குருடராவார்- நீ பார்வையுள்ள குருடனானாய் எத்திசை எத்திசை பார்த்திடினும் எல்லாம் உனக்கு இருளதுவே... மெய்யது பொருளது என்னதுவோ மெய்யென நீயானால் சொல்லிடுவாய் வேரது இல்லா மரமேயென்றால்- நீ வேறு கண்டத்து பிறவியாவாய்...

  13. நீ எனக்கு வேண்டாமடி சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப் பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக்கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்! அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான் அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை! அவளை விட்ட…

    • 5 replies
    • 1.2k views
  14. மவுனித்துப் போன குரலில், மனிதம் புன்னகைக்கின்றது! மண்ணுள் புதைந்த மனிதத்தின், கீறல்கள் விழுந்த உடலில், கோரப் பற்கள் கீறிய கோடுகள்! சீரற்ற மூச்சுக் காற்றுச், சேடமாய் இழுக்கையில். கோரைப் புற்கள் அசைகின்றன! பேரழிவின் பெரும் பசியில். ஆவிகள் கரைந்து போய். ஆயிரம் நாட்களாகி விட்டன! பறக்கும் பருந்துகள் மட்டுமா, பக்கத்திலிருந்த புறாக்கள் கூட. பங்கு கேட்கின்றன! பாவமென்ற வார்த்தைகளால் மட்டும், பசியாறிக் கொண்டிருக்கிறது மனிதம்! கோவில்கள் நிமிர்கையில், , கோபுரங்கள் வளர்கையில், காவியுடை தரித்தவர் கண்களில், கனலாய் எரிகிறது நெருப்பு! கழிந்து போகும் நாட்களில், அழிந்து போகின்றன தடயங்கள்! ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது. ஆழ்ந்த இருட்டின் …

  15. நான் காத்திருந்தது எத்தனை காலம் - இப்போ வாய்த்திருப்பதே நல்ல காலம். உடைமையை காக்க உரியவன் இல்லை - எந்த தடைகளும் இல்லை காரியம் தடுக்க மதில் சுவர் தாண்டி மறுபுறம் குதித்தேன் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தேன். முற்றம் நடுவே பெற்ற பிள்ளை சற்று தள்ளி எந்தன் கொள்ளை. பெரிய விழியும் கரிய முழியும் தடித்த உதட்டை தடவும் நாக்கும் பருத்த மார்பும் கொழுத்த பின்புறம் கிறங்கி போனது எனது உள்மனம் கதறிய சேயை கட்டி போட்டு பதறிய தாயை பற்றி கொண்டு கொள்ளை பக்கம் கொண்டு சென்றேன் வெள்ளை பெண்ணை கொள்ளை கொள்ள அழகி அவளை நெருங்கிய வேளை புதியவன் என்னை புதிராய் பார்த்தாள் மிரட்சி காட்டி மறுத்து பார்த்தாள் - உடல் திரட்சி காட்டி மிரட்டி பார்த்தாள். …

    • 11 replies
    • 6.9k views
  16. அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…

  17. வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!

  18. விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன் கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான் வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ? ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல் மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்! ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப் பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி மடிந்தார் இருபத்தையாயிரம் மாவீரர்! விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்? ஒரு பாவம் அறியா ஒருலட்சம் தமிழ் மக்கள் மரணித்து காத்த அறம் மண்கவ்வ நேர்ந்திடுமோ? பரம்பரை தமிழர்மண் பறிபோகாமற் காக்கும் பெரும் தர்ம போராட்டம் பெற்றிடுமோ தோல்விதனை? மற்றவரின் மண்ணை வன்பறிப்புச் செய…

  19. எப்படிச் சொல்ல கரும்புலிகள் வீரத்தை..? தரைமீது மலைபோல பகை நின்ற போதும் தளராத துணிவோடு களமாடி வென்று தரைக் கரும்புலியானீர்.. கடல்மீது படை கொண்டு நிலம் விழுங்க வந்த... பகை முடித்து முடிசூடி கடற்கரும்புலியானீர்... வானத்தின் மீதேறி வண்டு போலச் சுற்றி வந்து வானதிரும் சாகசம் செய்து வான் கரும்புலியானீர்... விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நிற்கும்.. கரும்புலிகள் வீரத்தைச் சொல எந்த இலக்கணத்தில் சொல்லெடுக்க.. அம்மாவின் அன்பைச் சொல்ல வார்த்தையுண்டோ? அப்பாவின் அரவணைப்புக்கு நிகருண்டோ...? அகிலத்தின் அதிசயத்திற்கு குறைவுண்டோ? அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு அர்த்தமுண்டோ...? காற்றுக்கும் வேலியுண்டோ? கரும்புலிகள் வீ…

    • 9 replies
    • 1.8k views
  20. கந்தகப் புகையிலும் கருவொன்று.... கவிதை - இளங்கவி அவலத்தின் ஓட்டத்திலும் அவர் எனக்கு தந்த சொந்தம்.... நாட்டுக்காய் உயிர் போக்குமுன்னர் அவரால் என் அடிவயிற்றில் வந்த சொந்தம்..... முற்றுப் புள்ளிபோல நீ தோன்றினாய் என் கருவினிலே...... வளர்ந்துவிட்டாய் வண்ணத்திபோல் சிறகடிப்பாய் என் வயிற்றினிலே..... கருவிலே உன் நிறம் வெளுக்க பாலில் நான் குங்குமப்பூ சேர்க்கவில்லை...... நீ சுவாசித்த காற்றினிலே கந்தகப் புகையல்லா சேர்த்திருந்தேன்.... காலை முதல் மாலை வரை உணவின்றி என் வாழ்க்கை செல்ல.... இரவு முதல் காலை வரை பதுங்கு குழியினிலே என் இரவு செல்ல.... என் உயிரோ தேய்ந்து செல்ல உன் உயிரோ வளர்ந்ததடா.... ஏன் என்று யோசித்தேன் எனக்கு அது இப்போ ப…

  21. தேநீர் கவிதை: ஓவியங்கள்! பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள், அழகான சட்டமிடப்பட்டு கண்காட்சிக்கென எடுத்து வைக்கப்பட, ஓவியக் கூடத்தில் வரையும்போது கீழே சிந்தப்பட்ட வண்ணப் பிசிறுகள் பார்வையை ஈர்க்கின்றன... சட்டமிடப்பட்ட ஓவியங்களை விடவும் கூடுதல் அழகோடு. ***** வரைந்து முடித்த ஓவியத்தில் ஏதோவொன்று குறைவதான நிறைவின்மையில் ஆழ்ந்திருந்தான் ஓவியன். உள்ளே ஓடி வந்த …

  22. நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…

  23. புதை குழிகளுக்குள் அவர்கள் அண்ணாந்து பார்க்க உறவுகள் அவர்களை தலை கவிழ்ந்து பார்க்க கண்ணுக்கு புலப்படாத உருவங்கள் உணர்வுகளில் முழுமையாக நிரம்பியிருக தேற்றுவராரற்ற கணங்களில் நாங்கள் இருக்கின்றோம்…. நாடு இருக்கின்றது…… மீழுவோம் ஒரு நாள் ஆழுவோம் ஒருநாள்… நம்பி உயிர்கொடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கு தவறும் போதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு துரோகம் முக மூடியை கிழித்து எட்டிப்பார்க்கின்றது அதற்கும் அப்பால்.. நினைக்க நினைவு கூர நேரமில்லை.. நேரமிருந்தாலும் ஒன்றுபட முடியவில்லை மிஞ்சியது எதுவும் இல்லை ஆகவே உங்களை தோண்டி எடுத்து எதாவது தேறுமா என்றும் பாரக்கின்றார்கள்… உங்கள் தியாகமே எம்மினத்த…

  24. என்னவளே என்னவளே என் கண்ணின் கருவிழியே! கருவுக்கு உயிர்கொடுக்கும் உன்னதப் பெண் இவளே! என்னவளே என்னவளே என் குருதியும் நீதான் என்னவளே! உன் குருதியை பாலாக்கி சேய்க்கு ஊட்டும் உமையும் நீதான் என்னவளே! என்னவளே என்னவளே உன் கூந்தல்தலின் கருமைதான் என்னவளே! மதிபோன்றமுகத்தின் கருமுகில்தான் உன் கூந்தலா மன்னவளே! என்னவளே என்னவளே உன் குரலின் இனிமைதான் என்னவளே! நான் கேட்கும் இசைதானா உன் குரல் என்னவளே! என்னவளே என்னவளே என் இதயத்துடிப்பும் நீதான் என்னவளே! நீ இல்லை எனின் என் இதயத்துடிப்பு நின்றுவிடும் மன்னவளே! என்னவள…

  25. புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது, நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் வீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.