கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
-
- 14 replies
- 3.5k views
-
-
கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…
-
- 8 replies
- 1.3k views
-
-
மனிதனாய் வாழ பழகு.....!!! சொல் கொண்டு பிழைகளை நீ பிடிக்கிறாய்....?? சொந்தமாக நீ படைக்க ஏன் மறுக்கிறாய்...??? வேதனையால் எம் தமிழர் அங்கு தவிக்கிறார்... அட.. வேற்று மண்ணில் இருந்து கொண்டு என்ன அளக்கிறாய்...??? கண்ணீரின் கடலிலே அவர் தவிக்கிறார்..... அவர் இன்னல் காண ஏன்டா நீயும் இன்று மறக்கிறாய்...??? சொந்த மண்ணை மறந்து நீயும் இங்கு வாழ்கிறாய்... அதற்குள் சொறி கதைகள் வேறு இன்று நீயும் விடுகிறாய்... எங்கள் மண்ணில் குந்தி நின்று ஏற்றம் உரையடா... உந்தன் ஏற்ற மொழி வார்த்தகைளிற்கு தலை வணங்கி போவேண்டா... திட்டமிட்டு பிழைகளை நானும் விடுவதில்…
-
- 11 replies
- 2k views
-
-
ஒரு நாளும் மழையில் நனையாத நான் நேற்று மட்டும் ஏன் நனைந்தேன்.....? மழைத்துளியில் குளித்தாவது உடல் வெப்பதை போக்கி கொள் என உள்மனம் சொல்லிச் சென்றது. ஒரு சிறு பொழுது மனிதர்களால் செய்ய முடியாத ஒன்று அந்த மழை கூட எனக்காக அழுதது போலும்.. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்களாய் வண்ண வண்ணப் பூக்களாய் பூத்து நின்ற கனவுகள் காரணமின்றியே உலர்ந்து கொட்டி விட்டன.... என் ஒரு கனவாவது பலித்திடனும் என பகல் இரவாய் விரதம் இருந்தென்ன பயன்..... கண்ட கனவுகள் எல்லாம் பகல் கனவாகி போக என் கனவுகளும் காணாமல் போனோர் பட்டியலில் உரிமை கோர வழியின்றி விழி பிதிங்கி நிற்க ஒருவர் மட்டுமே நிழலாய் தோன்றினார். தூங்கும் போது காண்பது கனவு அல்ல தூங்க விடாமல் காண்பத…
-
- 11 replies
- 1.1k views
-
-
உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது …
-
- 4 replies
- 3k views
-
-
உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று …
-
- 14 replies
- 2.1k views
-
-
"இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி" "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !" "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !" "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !" "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்ட…
-
- 0 replies
- 176 views
-
-
முள்ளிவாய்க்கால் பாடல் – தீபச்செல்வன்… May 18, 2019 நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் பட்டன தடித்துறைந்த இறுதிச் சொற்கள் சொற்களை அடுக்கினாள் மலைபோல் கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும் படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல் பறவைகளின் சிறகுகள் அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான் இன்னமும் புரண்டு கிடக்கிறாள் இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து, கடல் வெளியில் போட்டான் கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கீழே செல்ல வாயிற்குளிரு…
-
- 0 replies
- 1k views
-
-
போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …
-
- 1 reply
- 763 views
-
-
கவிதை அந்தப் பொழுது..... ஒவ்வொரு முறையும் எனது இருளக்குள்ளேயே நான் தொலைந்து போகிறேன் ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு ஓர் ஒளியிடையேனும் விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு மூலையில் கிடக்கிறது இருள். எல்லா நியாயங்களுக்குமான கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன். எனது சுமைகள் எதனையும் பொருட்படுத்த முடியாமல் பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன். உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம். மரணம் பற்றிய ஒவ்வொரு நினைவினூடாகவும் கழிந்து போகின்றன நொடிகள். இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு ஒரு இயலாக் கருவியாய் எறியப்பட்டுப் போனேன் மூலையில் ஒரு புரட…
-
- 2 replies
- 1.1k views
-
-
கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!
-
- 0 replies
- 876 views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் …
-
- 11 replies
- 2.3k views
-
-
கவிதையின் கவிதைகள் http://eluthu.com/ka...image/51704.gif எண்ணங்களும் நினைவுகளும் அதிகமாகப் பயணிக்கும் இரவுவெளிகளின் இறுதியில் கண்களின் ஈரங்களோடு... உறங்கிப்போகின்றது "நேற்று" ! நாளைய அதிகாலையின் இறுதிகள் மீண்டும் மீண்டும்... இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன! விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என... ஏங்குகின்றது மனம் இப்போது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105253
-
- 16 replies
- 1.3k views
-
-
முதல் கோணல் முற்றும் கோணல் பழமொழியாம்... முதல் கோணல் முன்னேறும் அறிகுறி என்பேன் நான்.. முதல் முறை உயர்தரம்.. தோற்றபோது கவலையுற்றேன் இரண்டாவது முறையில் உயர்வான பேறு கொண்ட போது உவகையுற்றேன் முதல் காதல் கண்டதும் காதல் வழமைபோல் தோற்றது வேதனை கொண்டேன் என் சகியைக் கண்டதன்பின் அத்தோல்விதான் விதிக்கெதிராக நான் செய்த சாதனை என்பேன் உலகத்தில் ஒரு விஞ்ஞானியும் முதல் முயற்சியில் வெற்றிகொண்டதாக சரித்திரம் இல்லை.. பின்பு ஏன் நீ நினைக்கிறாய் தரித்திரம் என்று.. நண்பா என்னனுபவத்தில் சொல்கிறேன் முதல் தோல்விதான் முன்னேறும் முதல் படி மறந்துவிடாதே.. ஆகவே நண்பா தோல்வியைக்கண்டு துவளாதே,முயற்சிசெய் முடியாதது எதுவும் இல்லை
-
- 9 replies
- 2.2k views
-
-
சூதிலும் சூழ்ச்சியிலும் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள் தெரிகின்றதா எங்களை ?? மகசீன் சிறை என்றும் காலி சிறை என்றும் வருடங்கள் காறித் துப்பியதே எங்களை!! தெரிகின்றதா எங்களை ?? சிறையில் இருக்கும் நாங்கள் வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் , வாழவேண்டும் என்று இன்னுமொருகூட்டம் !! தெரிகின்கிறதா எங்களை ?? சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை உங்கள் அடியின் வலி......... குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!! கொட்டும் மழையும் பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும் ஒருநாள் இனித்தது எங்களுக்கு, எங்களைப் போல் பலர் களத்தில் பகைவருடன் பொருதி நின்றபொழுது அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்....... எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று, …
-
- 98 replies
- 5.6k views
-
-
-
- 0 replies
- 746 views
-
-
நண்பா றெக்ஸ் இல்லம் தேடி நான் சென்றபோது இன்முகம்காட்டி எமை வரவேற்றான் எப்போ ஒருநாள் பழகிய பழக்கம் இன்றுவரை அதனை நினைவில் கொண்டான். உள்ளம் தளர்ந்து உவகையில் மிதக்க துள்ளிக் குதித்து தன் மகிழ்சியைச் சொன்னான் அன்பாய் என்னிடம் அருகே வந்து அணைத்து முத்தம் தந்து சென்றவன். தங்கிய நாட்கள் தன் கடமையை உணர்த்தி நட்பின் தன்மையை எனக்குக் காட்டி புறப்பட்ட நாளில் என்முகம் பார்த்து பிரிவுத்துயரைத் தன் கண்ணால் சொன்னான். ஏக்கப் பார்வை கண்ணில் தெரிந்தது ஏன்தான் இவன் இப்படிப் பார்க்கிறான் என்று எண்ண்ணியே நானும் அப்போ என்னைப் பிரியும் ஏக்கத்தினாலோ இப்படிப் பார்க்கிறான் என்றெண்ணி வந்தேன் வந்த சில நாட்களில் செய்தி வந்தது அதிர்ச்சியுடன் நானும் அவன் செயல்களை நினைத்தேன். பா…
-
- 3 replies
- 824 views
-
-
சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. குமுதத்தில் வெளிவந்தபோது ஜெயமோகன் கருத்து எழுதியிருந்தார். இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் …
-
- 2 replies
- 1.5k views
-
-
மடிசாய வரம் தா... ஆண்டைந்து சென்றாலும் அகலாத நினைவோடு கண்ணுக்குள் கலையாத கனவானாய் நிலையாக எம் அன்புத் தாய் நீயே எமக்கெல்லாம் வரம் நீயே உயிரோடு உறவாடும் உலகெல்லாம் நீதானே மனசெல்லாம் நிறைந்திட்ட பிரியாத வரம் நீயே உடலாலே பிரிந்தாலும் உணர்வோடு இணைந்தாயே இணைகின்ற உறவெல்லாம் இருந்தாலும் தாயே உன் இதயத்திற் கிணையான உணர்வாக முடியாதே நிழலாக நீ நின்றாய் சிறகின்றித் தவிக்கின்றோம் பரிவோடு வருடும் உன் பாசத்தை நினைக்கின்றோம் இல்லாமை இருந்தாலும் இயல்பாக எமைத்தாங்கி சுகமாக அணைக்கின்ற சுமைதாங்கி நீ அம்மா எமதன்புத் தாய் இன்றி இதயத்துள் அழுகின்றோம் விழிநீரைத் துடைக்கின்ற விரலின்றித் தவிக்கின்றோம் அழுதாலும் தொழுதாலும்…
-
- 7 replies
- 1.1k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் (NYjumper) லண்டன் ஸ்ரைலில் (style) அரைப் பென்ரர் (pender) தெரிய டெலிம் (denim) போட்டு.. பி.எஸ் 3 (ps3) வாங்க பிளாசா (plaza) போனேன்..! அங்கே.. பிற்சா கட் (pizza hut) பிற்சாவோடு (pizza) ஸ்ரைலா நிற்கையில் லப் ரொப் (laptop) அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் (3D vision) உன்னைக் காண ஐ.ஆர் (IR) கொண்டு ஸ்கான் (scan) செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல திறில்லாய் (thrill) இருந்தாய்..! உடனே.. புளூருத் (bluetooth) சிக்னலாய் என்னைத் தந்தேன் பதிலுக்கு.. மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera) நீ என்னைப் பார்த்தாய். அதுதான் சாட்டென்று.. ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி…
-
- 23 replies
- 3.5k views
-
-
கோபம்கொண்டு குமைந்தபோதும் துரோகம்கண்டு துவண்டபோதும் வறுமைகொண்டு வாடியபோதும் வெறுமைகொண்டு ஓடியபோதும் நறவுண்டு களித்தபோதும் உறவுகண்டு புளித்தபோதும் வாடைதழுவி உறைந்தபோதும் பேடைதழுவி கறைந்தபோதும் புலவிநீண்டு தீய்ந்தபோதும் கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில் இருப்பை உணர்த்திய நிழலே மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !! இரத்தம்கெட்டு சத்தம்கெட்டு எயிறுகெட்டு வயிறுகெட்டு வாசம்கெட்டு சுவாசம்கெட்டு இதயம்கெட்டு இதழ்கெட்டு ஊன்கெட்டு உறக்கம்கெட்டு உருவம்கெட்டு பருவம்கெட்டு அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?
-
- 8 replies
- 1.4k views
-
-
புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? * நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? * முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது …
-
- 5 replies
- 967 views
-
-
அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது
-
- 8 replies
- 1.7k views
-
-
-
ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…
-
- 8 replies
- 1.7k views
-