கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏 மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை …
-
- 4 replies
- 794 views
-
-
மார்கழிப் பொழுதினில் பூக்குதோர் வாழ்வு மரியாளின் மடியிலே தவழ்கிறான் ஜேசு அடிமையின் விலங்கினை அறுத்திட பாலகன் அவதாரம் எடுத்து இங்கு வருவானே தூதன் தேவனின் வருகையால் தெருவெங்கும் பாட்டு தெரியுதோர் விளக்கு ஒன்று வானதில் பாரீர் கவிதையாய் எங்குமே பூக்களாய் பூக்குதே காலை புலர்கையில் தெரியுதோர் வெளிச்சம் பூக்களே பூக்களே புனிதனை பாடு புனித மரியாளின் மடியிலே பூக்களை தூவு குருவியும் குயில்களும் கூடியே பாடுது குறை ஒன்றும் இல்லை இனி மனிதர்க்கு என்றே வானத்து நிலவிலே பூக்களாய் சொரியுதே தேவன் வருகிறான் என்று வெளிச்சத்தை கொளுத்துதே கடலினுள் அலைகளும் கவிதைகள் எழுதுதே கர்த்தரின் வரவினை கரையிலே வரையுதே எங்குமே சமத்துவம் எல்லோர்க்கும…
-
- 2 replies
- 379 views
-
-
மார்கழிப்பனி மழையில் யேசு பிறந்து வந்தார் மானிலம் பூச்சூட புது அழகினைப் படைக்க வந்தார்
-
- 3 replies
- 1.1k views
-
-
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய் நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!! மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின் சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய் என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின் முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன் கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன் ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து பேசவழியறியாது அடக்கமது தான்மருவி இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன் …
-
- 2 replies
- 798 views
-
-
மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …
-
- 7 replies
- 1.7k views
-
-
வானவில்லின் நிறங்களாய் உன்னில் பல வர்ணம் நேரத்துக்கொன்றாய் நாளுக்கொன்றாய் நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ உன்மீது கொண்ட நம்பிக்கைகள் இன்னும் வெள்ளை நிறமாகவே என்னுள் இருக்கின்றன காற்றடிக்கும் போதும் கடும் மலையின்போதும் கூட அவை நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன ஆனாலும் மனம் என்னும் மாயக்கண்ணாடி சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து சுழல் காற்றில் சிக்கித் தவித்து இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது மீட்க முடிந்தவன் நீ மட்டுமே எனினும் பிடிப்பு எதுவுமற்று பேரன்பு சிறிதுமற்று பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ என்ன சொல்லி என்ன இயல்பே அற்ற உனக்கு ஏற்புரை எது சொல்லினும் எள்விளையா நிலமாய் உன்மனம்…
-
- 4 replies
- 872 views
-
-
நான் காத்திருந்தது எத்தனை காலம் - இப்போ வாய்த்திருப்பதே நல்ல காலம். உடைமையை காக்க உரியவன் இல்லை - எந்த தடைகளும் இல்லை காரியம் தடுக்க மதில் சுவர் தாண்டி மறுபுறம் குதித்தேன் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தேன். முற்றம் நடுவே பெற்ற பிள்ளை சற்று தள்ளி எந்தன் கொள்ளை. பெரிய விழியும் கரிய முழியும் தடித்த உதட்டை தடவும் நாக்கும் பருத்த மார்பும் கொழுத்த பின்புறம் கிறங்கி போனது எனது உள்மனம் கதறிய சேயை கட்டி போட்டு பதறிய தாயை பற்றி கொண்டு கொள்ளை பக்கம் கொண்டு சென்றேன் வெள்ளை பெண்ணை கொள்ளை கொள்ள அழகி அவளை நெருங்கிய வேளை புதியவன் என்னை புதிராய் பார்த்தாள் மிரட்சி காட்டி மறுத்து பார்த்தாள் - உடல் திரட்சி காட்டி மிரட்டி பார்த்தாள். …
-
- 11 replies
- 6.9k views
-
-
மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …
-
- 17 replies
- 3k views
-
-
முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று... ------------------------------------------------------------------------------------------------------------------------ நாசித்துவாரங்களை நனைத்த மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை... காவுகொடுத்த குட்டித்தீவு காய்ந்து கிடக்கிறது குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு... வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு நட்பின் வாசத்தை தம் வேரிலும் துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்.. நண்பர்கள் கேள்விகள் அற்று பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்... 31/10/2013
-
- 55 replies
- 5.6k views
-
-
மாவீரர் புகழ் பாடுவோம்! மண்ணோடு மண்ணாக மாதங்கள் பல வருடங்கள் புழு பூச்சிகளுடன் புனிதர்கள் எமக்காய் தவம் செய்தார்களே பதுங்குகுழிகளினுள்! படுத்திருந்தோம்நாம் மாளிகைகளில்! மறப்போமா? வீடுகளில் வயிறுமுட்ட விழுங்கிவிட்டு நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் லயித்திருந்த நேரம் நேராகக் கொடியவன் குகைநோக்கிச் சென்று ஈழவேள்வியில் ஆகுதியானாரே! அவரை மறப்போமா? ரியூசனுக்கு போகவேணும்! 4ஏ எடுத்துப்பின் அவுஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஸ்கொலர்சிப் கிடைக்கவேணும்! நாங்கள் கண்டவண்ணக் கனவுகள்தான் எத்தனை! ஆனால் இவர்கள்? இயக்கத்தில் சேரவேண்டும்! பெரியாலாய் வந்தங்கு ஆமிக்காம்பொன்றை தான்நடத்திப் பிடிக்கவேண்டும்! அதில்வீர…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ் தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன் சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சாருவோம் தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம் வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம் வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள் பாக விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம். வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம் வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ் மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால் முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம் கந்தக காற்றினி தேசத்தில் வீசாது, பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது. மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி பூந்தளிர் பாலகர் …
-
- 0 replies
- 719 views
-
-
மாவீரன் திலீபன் பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த 30 ஆவது ஆண்டு நினைவு அனுட்டிக்கப்படுகிறது. மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் …
-
- 0 replies
- 751 views
-
-
இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கெனப் புகுந்து விடுகிறது வீரம்! பிரபாகரன் என்ற இப்பெயருக்குத்தானே பீரங்கிகளும் பின்வாங்கின! பிரபாகரன் என்ற இப்பெயர் கேட்டால்தானே இப்பிரபஞ்சமே பிரமித்து நிற்கிறது! வேங்கை உன் வேகம் கண்டு சிறுநீர் கழித்தபடியல்லவா சிதறி ஓடின சிங்களத்து சிறு நரிகள்! புரட்சி என்ற சொல்லுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய நீ புலித்தலைவன் மட்டுமல்ல! எமைப் பொறுத்தவரை இப்புவித் தலைவனும்கூட! கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை நீ கட்டியெழுப்பிய படைகளிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்! உன் ஆயுதம் சினுங்கியவரையில் தன ஆணவம் அடங்கியல்லவா கிடந்தது சிங…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன், மாவீரன் மேஜர் சிட்டு! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றாறுகளின் சிரிப்பொலியில், சங்கீதம் படித்தவன்! ஓயாத அலைகளின் காலத்தில், வெற்றி நடை பயின்ற, வேங்கைகளின் படை நடையில், ‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்! கலைப் பண்பாட்டுக் கழகத்தின். காவலனாய் வாழ்ந்தவன்! கறையாக நிலைத்து விட்ட கண்ணீரால் காவியங்களும், சிதறிப் போன சொந்தங்களின், செந்நீரால் ஓவியங்…
-
- 4 replies
- 816 views
-
-
என்றோ ஒரு நாள், எனது அபிமானத்துக்குரிய கள உறவு, சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவீரன் சிட்டுவின் நினைவாக,அவரது வலைத்தளத்துக்காக அடியேன் எழுதிய கவிதையொன்றை, இன்று தேசக்காற்று இணையதளத்தில் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில், இங்கு பதிகின்றேன்! மேஜர் சிட்டுவுக்கு எனது வீர வணக்கங்களுடன்...... மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன்! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றா…
-
- 5 replies
- 1.1k views
-
-
மாவீரம் குறள்: 1 மண்ணின் கண் மகிமை கொண்டோர் மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார். (தொடர்ந்து நீங்களும் ஆக்குங்கள். ஆளுக்கு ஓர் குறள் மட்டுமே ஆக்கலாம்.) இக்குறள் மாவீரர்களின் வீரம்.. ஈகை.. கொடை.. தன்னலமற்ற பண்பு.. இலட்சிய வேட்கை.. வாழ்க்கை.. சாதனைகள்.. இனப் பற்று.. மண் பற்று.. அவர் தம் மக்கள் பற்று.. சக போராளிகள் மீதான பற்று.. மக்கள்.. மாவீரர் மீது கொண்ட மகிமை.. என்ற கருத்துக்கள் பட அமைவது நன்று. இந்த தன்னமலற்ற தியாகிகள் மீதான அவதூறுகள் வரவேற்கப்பட மாட்டாது. கள நிர்வாகம் அப்படியான ஆக்கல்களை அகற்றி உதவுதல் வேண்டும். திருத்தம்: ஆளுக்கு ஒரு குறள் மட்டுமே ஆக்கலாம் என்பது கீழ் வருமாறு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
-
- 42 replies
- 2.8k views
-
-
அன்னை மண் மீட்க அவதரித்த புத்திரரே! தாயைப் பிரிந்து தந்தையையும் விட்டகன்று பாசப் பிறப்புகளையும் பகலிரவாய் பாராது தேசத்தின் கடமைதனை சிந்தைமேற் கொண்டீரே! எம் மண் மீட்பதற்கு எதிரியுடன் போரிட்டு புண்பட்டு வந்தாலும் புலிப்படைக்கு பேர் சேர்த்த்Pர். இடிபோல் துன்பங்கள் எத்தனைதான் ஏற்படினும்; மலைபோல் நிமிர்ந்து நின்று தமிழர் மானம் காத்தீரே! உங்கள் வீரத்தால் - தமிழர் உலகெங்கும் புகழ் பெற்றார். தோளை நிமர்த்தி நின்று கோழை நாமும் தமிழரென்றோம். நீங்கள் இடியாய் மின்னலாய் கந்தகமாய் நெருப்பாய் எதிரியின் பாசறைக்குள் ஏவுகணையாய்; புகுந்தீர்கள். நிலத்திலே வீழ்ந்தாலும் இரத்தத்தால் ஈரமாக்கி சதையை உரமாக்கி எம் சந்ததிக்கே வளமானீர்! …
-
- 4 replies
- 1k views
-
-
மாவீரரே! உங்கள் நினைவாக கனத்த மனத்துடன் - என் கரங்களில் தீபம் ஏற்றி வந்தேன். இதனை எங்கே ஏற்றிடுவேன்! ஏற்றுமிடம் தெரிய வில்லை ஏங்கித் தவிக்கிறேன். மாவீரரே! உங்களுக்கு தீபம் எங்கே ஏற்றுவேன்? ஏற்றுமிடம் தெரிய வில்லலை ஏங்கித் தவிக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் யாரோ… கூவி அழைக்கும் சத்தம் கேட்கிறது. இங்கே வாருங்கோ நாங்கள் இருபது வருட அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்தான் மாவீரை நேசிப்பவர்கள் இங்கே வாங்கோ… மாவீரரே! இன்னும் கொஞ்சம் பொறுங்கள் மேலும் ஒரு திசையிலிருந்து சத்தம்… நாங்கள் புண்பட்ட காரணத்தால் புலம்பெயர்ந்து வந்தவர்கள். உண்மையின் வழி நின்;று உரிமைக்கு குரல் கொடுப்போம். தனிபட்டோர் நலம் பேணாத் தமிழீழ நலன் …
-
- 0 replies
- 588 views
-
-
இது நான் எழுதியதல்ல இந்த லிங்கையும் தொலைத்து விட்டேன் மன்னிக்கவும் வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன் எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன் மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன் உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது கற்களும் முட்களும் காலடி நெருட புற்களும் புழுதியும் பாதம் மறைக்க கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து-தன் விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக காகமும் கழுகும் உண்டிடவென்று எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் புமி …
-
- 1 reply
- 1k views
-
-
மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …
-
- 25 replies
- 4.4k views
-
-
மாவீரர் ஒருவரைக் கண்டேன். மாவீரர் ஒருவரைக் கண்டேன். மனது திக்… திக்…என்றது. வணக்கம் மாவீரரே! என்றேன். மௌனமாக நின்றார். கையிலே மாலையும் இல்லை. காத்திகைப் பூவும் இல்லை தோளில் போர்க்கத் துண்டும் இல்லை என் செய்வேன் என்று இரு கைகூப்பி வணங்கினேன். அப்போதும் அவர் மௌனமாக நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மாலைக்கோ மணி மகுடத்துக்கோ மற்றெந்;தச் சலுகைகளையோ விரும்பாத சரித்திர நாயகர்கள். கதிகலங்கி நிற்கும் தமிழருக்கு கலங்கரை விளக்கங்கள்;; இதைப் புரியாத நான் உங்களை…. ……………….. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் என்ன கோபம்? உங்கள் கனவைக் கலைத்தேனா? உங்கள் பெயரால் பணம் சேர்த்து என் மடியை நிறைத்தேனா? உதட்டளவில் விடுதலை என்…
-
- 1 reply
- 865 views
-
-
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை காலத்தால் தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை காலத்தால் குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டை உள் நுழையு முன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால் தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ள…
-
- 3 replies
- 3.3k views
-
-
-
மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…
-
- 5 replies
- 1.4k views
-