கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஆண்மகன் ........என்றாகிய போது . அவன் தாய் பெற்ற போது .........மகன் ஆகினான் என் கூட பிறந்த தங்கைக்கு .......தம்பி ஆகினான் எனக்கு முன் பிறந்து .................அண்ணா ஆகினான் என் தாயை கண்ட போது .........காதலன் ஆகினான் என் தாயை கட்டிய போது ...... கணவன் ஆகினான் என்னை பெற்ற போது ........... தந்தை ஆகினான் என் கணவனுக்கு ....................மாமன் ஆகினான் என்பிள்ளை பிறந்த போது ......தாத்தா ஆகினான் என் பேரனுக்கு ........................அப்பப்பா ஆகினான் ..ஒரு முழு மனிதன் ஆகினான் . ஆண் மக்கள் வாழ்க
-
- 11 replies
- 4.2k views
-
-
மும்மனி தந்தான் புத்தன் முப்பால் தந்தான் வள்ளுவன் மும்பழம் தந்தாள் ஒளவை முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
-
- 29 replies
- 4.2k views
-
-
ஐம்பதாயிரம் கோடி ஆன்மீக காசு பார்த்தவருக்கு கேக்கு வெட்டினம், ஐம்பது இலட்சம் மக்களுக்காக காடு பார்த்தவருக்கு திவசம் கேக்கினம். பெறாமகனுக்காக கோடி சொத்து சேர்த்தவருக்கு கேக்கு வெட்டினம், தனது மகனை எதிரியை வீழ்த்த அனுப்பியவருக்கு திவசம் கேக்கினம். ஸ்ரீ லங்கா தலைமைக்கு தங்க சங்கிலி இட்டவருக்கு கேக்கு வெட்டினம், சிங்கள அடிமை சங்கிலியை உலகிற்கு உடைத்தவருக்கு திவசம் கேக்கினம். நாமவரி அணிந்து மக்களிடம் தியானவரி கறந்தவருக்கு கேக்கு வெட்டினம், புலிவரி அணிந்து மக்களின் மயானவிதியை தடுத்தவருக்கு திவசம் கேக்கினம். இறைவனை காட்டுகிறேன் என்ற வழிபோக்கருக்கு கேக்கு வெட்டினம், நாற்பதாயிரம் தமிழ் சாமிகளுக்கு வழிகாட்டியவனுக்கு திவசம் கேக்கினம். வெறும் கை…
-
- 33 replies
- 4.2k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.2k views
-
-
என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
-
- 10 replies
- 4.2k views
-
-
காதலுக்குள்ளும் மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம் பணத்திற்குள்ளும் பகட்டுக்குள்ளும் பனித்துளியாகி விட்ட பாசங்கள் உறவுகளை தேடி உரைத்திட மொழியின்றி படித்திட வரியின்றி கண்களில் கண்ணீர் கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம் வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள் நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள் வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள் ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல் ஆயிரம் முறை ஆப்பு வைக்க …
-
- 25 replies
- 4.2k views
-
-
எது சுகம்? ---------------------- பட்டப்படிப்பு சுகமா? அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா? கட்டிக்காத்த சொத்து சுகமா? இல்லை கட்டிலறை என்னும் மனித இச்சை தான் சுகமா? அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா? அதனால் வரும் பகட்டு சுகமா? உண்மை சொல்லுங்க அம்மா இல்ல ராசா இல்ல சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே அதை விடவா இத்தனையும் சுகம்????
-
- 34 replies
- 4.1k views
-
-
கெந்தி விழையாடிக்கொண்டிருந்த அந்திமாலைப் பொழுதொன்றில் அடிவயிற்றில் வலி கோடு கீறப்பட்டு குந்தவைக்கப்பட்டேன் ஆளாயிட்டாள் அம்மம்மாவின் குரல் அக்கம் பக்கத்து பெடியளோடை அடிச்சுப் பிடிச்சு விழையாடுறதையும் விளக்கு வைச்சா பிறகு வெளியாலை போறதையும் நிப்பாட்டு அம்மாவின் குரல் இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவளும் குந்திட்டாளா ஒருத்தனிட்டை ஒப்படைக்கிறவரை ஒரே செலவுதான் அப்பாவின் குரல் என் தனிமையை போக்க எவராவது வருவாரா என வாசற்படிவரை வந்தேன் வயசுக்கு வந்த பெட்டைக்கு வாசல்லை என்னடிவேவை அண்ணனின் குரல் அன்று அடிவயிற்றில் தொடங்கிய வலி இதயத்திலேறி இன்று மூளையில் பைத்தியமாக்கி…
-
- 26 replies
- 4.1k views
-
-
இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…
-
- 24 replies
- 4.1k views
-
-
குழந்தைகளுக்கான பாடல்களை தொகுத்த பதிவு யாழிலிருக்கோ? யாழில் தேடிப்பாத்தன் ஒன்றும் அம்பிடவில்லா. நான் எதிர்பாக்கிறது, நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா மாதிரி .....
-
- 5 replies
- 4.1k views
-
-
எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். 1. இடப்பெயர்வு அவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும் உலையில் புட்டு வரும்போது அரையவியல் எரிந்துபோயிருக்கும் இப்போது யார் சோறுவைக்கப்போகிறார்கள் பூனைக்கும் , நாய்க்கும் வெட்டி அடுக்கியமாதிரி வேலிக்கான கதிகால்கள் வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள் வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல் பாழாய்ப்போன யுத்தம் வீடுகூடப் பூட்டவில்லை வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட மிஞ்சி இருப…
-
- 21 replies
- 4.1k views
-
-
-
- 32 replies
- 4.1k views
-
-
இன்று உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதேவேளையில் உதைபந்தாட்டம் பற்றிய எனது கவிதையொன்றை இணைப்பதில் மகிழ்கிறேன். பாடசாலை நாட்களின் நினைவுகளோடு மற்றவைகளையும் சேர்த்து சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையினை கள உறவுகளுக்காக இணைக்கின்றேன். உதைபந்தாட்டம் பசும்புற்றரை செய்து பக்குவமாய் அதைவெட்டி கசங்காத கம்பளமாய் ஆக்கிடுவார் - அதனிடையே நெடுவெண் கோடுகளும் நீள்சதுரம் வட்டமும் நடுவினிலும் இடுவார் பொட்டு. உருண்டையான ஒருபந்தை ஓடிஓடிப் பதினொருவர் உருட்டி இருபுறமும் அடித்திடுவார் - இருதடிக்குள் வைத்த இடத்திருந்தும் விளையாட்டின் திறன்கொண்டும் புகுத்திவிட்டால் பெறுவார் புகழ். கூச்சலிடுவார் கூத்துமிடுவார்…
-
- 20 replies
- 4.1k views
-
-
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............ எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது , முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில் தமிழன் விழ விழ எழுவான் என்று கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் , நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள் ,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம் "என்றும் நாம் வீழ மாடோமேன்று " உரத்து சொல்லுங்கள். அது காலத்தின் தேவை என்று ". ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து தான் வாரிக்கொண்டு போனது , ஏன் இது நம் தலைவனின் உள்நோக்கிய இழுப்பாக இருக்க கூடாது ? பிடிப்பார் பிடிப்பார் எப்படி? மக்கள் இல்லாமல் தக்க வைப்பார். இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று கருக்கொள்ளும் பின் மழையாக பொழ…
-
- 16 replies
- 4.1k views
-
-
-
- 8 replies
- 4.1k views
-
-
வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே
-
- 16 replies
- 4.1k views
-
-
புதுமனைப் புகுவிழா. என் செய்தி உனக்கானதென்பதை நீ மட்டும்தான் அறியமுடியும் யாரிடமும் இதுபற்றி எதையும் கூறிவிடாதே நான் மூடிப்போய்விட்ட என் கதவுகளின் முன்னால் நீ சினமுற்றிருக்கக் கூடும் நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் நான் குடிபெயர்ந்துகொண்ட செய்தி உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன் புரியாமை உனக்குள் பிறப்பித்த சூறாவழிக்குக் காரணமானவன் நான் மட்டுமேயென நீ பிரலாபம் செய்துகொண்டிருக்கக்கூடும் என்னை நீ திட்டித்தீர்த்திருக்கவும் கூடும் என்சார்ந்து ஒரு பகையுணர்வை நீயுன்னுள் வளர்த்திருக்கவும் கூடும் இவையெல்லாம் நடைபெறட்டும் என்பதுதான் என்னை மீறிய எனது விருப்பமாகவுமிருந்தது நீ எனக்குப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை …
-
- 8 replies
- 4.1k views
-
-
:P :wink: பிற்குறிப்பு:- சத்தியமா அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை
-
- 26 replies
- 4.1k views
-
-
நீ ஒருமுறை கண் சிமிட்டினால் ஓராயிரம் கவிதை எழுதும் நான் - ஒரு நொடி பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....!!! உயிரே மௌனத்தால் கொல்லாதே ...!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** உன் வீட்டு முககண்ணாடியாய் இருந்திருக்க வேண்டும் உன் அத்தனை அழகையும் ரசிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பேன் ...!!! உன் உதடு பூசும் மையாக இருந்திருந்தால் ஒயாத முத்தம் தந்திருப்பேன் .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** காற்றுக்கு வாசனை இல்லை ஆனால் நீ வரும் போது உணர்கிறேன் காற்றில் வாசனையை ....!!! நீருக்கு நிறம் இல்லை நீ நீராடும் போது பார்கிறேன் அதன் நிறத்தை .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் ************************…
-
- 0 replies
- 4.1k views
-
-
நான் பிறந்த மண்ணைப் பற்றி கவிபாட என் கண்ணிரையே மையாக்கீனேன் இங்கே முததுமாரி அம்மனை மனதில் நினைக்க என் இதயத்தில் புதிய உற்சாகம் வருகுது இங்கே ஊரை,உறவை விட்டு வந்து அகதியாகி சிதறி விட்டோம் இங்கே சொந்தம் எல்லாம் மறந்து போச்சு யார் சொந்தம் என்று தெரியவில்லை எனக்கு இங்கே ஊரை உறவை விட்டு வந்தும் இன்னும் திருந்தவில்லையாம் கொஞ்சம் இங்கே குரும்பசிட்டியின் இணையத் தளத்தை பார்த்து புத்துணர்ச்சி வந்தது எனக்கு இங்கே என் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்த அழுது கொண்டு கவிதை எழுதுகின்றேன் இங்கே என் நண்…
-
- 28 replies
- 4.1k views
-
-
காகங்களே! மேகங்களே!... காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்
-
- 25 replies
- 4k views
-
-
இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்.... இப்படியே ! உன்னை மறந்து நெடுநாளாயிற்று. என் நினைவுகளிலிருந்து - நீ இன்னமும் விடுபடாமல்.....! உன் பெயரைக்க கேட்டால் அல்லது யாராவது உன் பெயரில் இருந்தால் நான் நானாயில்லை..... உன்னை உடன் பார்க்க வேண்டும் போல்.... பேசவேண்டும் போல்....., ஆயிரம் அதிர…
-
- 10 replies
- 4k views
-
-
[size=5] [/size] [size=5]சிற்றலை ஓடிவர சிறுநண்டு குழிபுக சிதறுண்டு கிடந்த சோகி சிறுகை கொண்டு சேர்த்தேன். பொறுக்கிய சோகி சேர்த்து பொதுவில வைத்து விட்டு பொத்தலானவென் பையிலிருந்த பொரி முறுக்கை விற்று வந்தேன். கடற்கரை ஓரத்தில் காலாற நடந்துவந்த கனவான்களிடம் தான் காசாக்கினேன் என் பொரி முறுக்கை. சிக்கடித்த தலையுமாய் சீரற்ற உடையுமாய் சில்லறைக்கு முறுக்குவிற்கும் சிறுபையன் தான் நான். இருக்கின்ற முறுக்கு விற்று இனிதாய் திரும்பும் வேளை இருக்குது சில்லறை இவளவும் உனக்கென்றான். எனக்கேன்றதாலோ என்னவோ ஏழைமனம் விரும்பியது எதையும் பார்க்காது ஏங்கியபடி போனதவன்பின்னே. போனவன் சேர்ந்தான் பொ…
-
- 11 replies
- 4k views
-
-
மாலை வேளை மூளை ஓய்வுக்காய்.. முகம் கழுவிக் குந்துகிறேன் முகநூலின் முன் பக்கம்..! முக்கி எழுகிறது முகநூல் "சாட்" யன்னல்... Hi ASL pls... முகமறியா ஒன்று கதை கேட்க.. நானும் ஏதோ பதில் போட தொடர்கிறது... Foto pls... பதிலுக்கு நான்.. L8R podi vesai.... திட்டிக் கொண்டே மறுமுனை யன்னல் மூடுகிறது..! யோசிச்சுப் பார்க்கிறேன்.. புரோபைலில் நடிகையின் முகம் காட்டும்.. என் முகவரிக்கே இக் கதி என்றால் உண்மையில்.. அவள் கணக்கிற்கு...???!
-
- 43 replies
- 4k views
-
-
எங்கே இவர்கள் எங்கே....? இரண்டாயிரத்து நான்கில் இனிய யாழ்களத்தில் இணைந்த என்னோடு இன்புடன் பழகிய உறவுகள் பலரை சோக உணர்வோடு தேடுகின்றேன் எங்கே இவர்கள் எங்கே ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள் குதூகலமாக பறக்கும் குருவி எங்கே தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே கவிவடிக்கும் கவிதன் எங்கே மழலை பேசும் மழலை எங்கே இளங்கவிஞன் இளைஞன் எங்கே இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே வியக்க வைக்கும் விகடகவி எங்கே மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே வீரமுள்ள வினீத் எங்கே விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே பறந்து திரியும் பறவைகள் எங்கே பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே கலகத்தோடு வரும்…
-
- 29 replies
- 4k views
-