கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஆகாசவாணி... டெல்லியின் குரலாய் தமிழ் ஈழ மண்ணில் ஒளிவு மறைவு வாழ்வில் சந்துபொந்தில் நடந்த அந்த ஓரிரு நிகழ்வுகள் கூட ஒளிப்பு மறைப்பின்றிச் சொன்னது ஓர் காலம்..! காலை மதியம் மாலை என்று முறுக்கிவிட்ட வானொலிகள் மத்திய மாநிலச் செய்திகள் காவி வர களத்தில் நின்ற வீரனும் நிகழ்வின் விளைவறிவது அங்கு தான்..! அமைதிப் படை என்று அரக்கர் படை ஒன்று வந்து சேர ஆகாசவாணியும் அண்டப்புளுகிற்கு அடிபணிந்து கொண்டது. லங்காபுவத்தோடு காதலொடு கூடலும் கண்டு கொண்டது..! அன்று தொற்றிய வியாதி இன்றும் ஆறவில்லை. இத்தனை ஆயிரம்.. தமிழர் சாவுகள் கண்டும் இரங்கவில்லை... அண்டப்புளுகொடுதான் அதன் அந்தியக்காலம் என்று அடம்பிடிக்குது..! இந்தியாவின் இந்துக்கள் கட்சியாம் ஈழ ம…
-
- 4 replies
- 1k views
-
-
*** இலை ஓன்று கிளையில் இருந்து பெயர்ந்து விழுகிறது அதன் ஓலம் கேட்டு திரும்புகிறேன் மிகுந்த வலியோடு மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது இனி ஒரு போதும் கிளைக்கு திரும்ப முடியா மரண வேதனையோடு மட்கி போக துணிகிறது மண்ணோடு . http://www.saraladevi.com/2013/06/blog-post.html
-
- 6 replies
- 778 views
-
-
எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.
-
- 6 replies
- 1.2k views
-
-
நான் போட்ட உடுப்பு இடுப்பைத் தொடும் தலைமயிருடனும் அதில் , சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும் மிடியுடனும் புறொக்குடனும் இல்லாவிட்டால் , ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் வளைய வந்த எனது பெண்களில் , நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!! நான் அணிந்த உடைகள் நான் விரும்பி அணிந்த உடைகள் !!!! இந்த உடைகள் என்னைப் போன்ற பல பெண்களின் அடிமை வாழ்வை உடைத்தெறியும் ....... அதில் , எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும் எனது சொந்த மண்ணும் ஒருநாள் விடுதலை பெறும் ... அதுவரை , நித்திரை என் அகராதியில் இல்லை .... மைத்திரேயி 13 கார்த்திகை 2013
-
- 2 replies
- 719 views
-
-
என் ராஜியத்தின் இளவரசியானவளே.....! என் ஆளுகைக்குட்பட்ட அனைத்தையும் புன்சிரிப்பால் வளைத்தவளே....! மார்கழியில் மலர்ந்த செங்காந்தள் பூவே....! தேவதைகளை வெண்சாமரம் வீசப் பணித்த தேவதைகளின் தேவதையே....! எல்லாமுமாய் என் வாழ்வின் வசந்தமாய் திகழ்பவளே....! என் வானவில்லை வண்ணமிழக்கச் செய்துவிட்டுப் பறந்த வண்ணத்துப் பூச்சியே....! இழையோடிய சோகம் நிறைந்த வாழ்வுதனில் இமைப்பொழுதில் இன்பமூட்டிக் கொன்றவளே....! பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நடுவே வாழ்தலை மட்டும் விட்டுச் சென்றவளே....! இன்றுபோல் என்றும் என் மனதில் பூப்பாயாக.... # பாப்பா rip 06/01/11 - 21/01/11
-
- 2 replies
- 1.6k views
-
-
சொல்லு தலைவா ! எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா நில்லு தமிழா! நீ பக்கம் நிற்க அண்ணன் படை வெல்லும் அல்லவா! (சொல்லு) கண்ணில் தெரியுதெங்கள் தேசம் - நாளை கையில் வந்து சேருமல்லவா! வையம் போற்றுமொரு நாடு - நாளை எங்களது ஈழம் அல்லவா! (சொல்லு) பாவம் கொஞ்சம் பாரு! ஓடச் சொல்லிக் கேளு!! ஓடாப்பகை நாமழித்து வீடனுப்பலாம் ஈழமண்ணை மீட்டெடுத்து நாடமைக்கலாம். வன்னி மண்ணைப் பாரு - மண்ணை தொட்டு நெற்றி பூசு வீரம் வாழும் மண்ணு என்று வாழ்த்துப்பாடலாம் வீழ்ந்த வீரர் காலடியில் பூக்கள் தூவலாம். அணைகட்ட உழைத்திட்ட அணிலாய் - நம் அண்ணனின் அணியிலே செல்வோம். பகையென்று வருகின்ற எவர்க்கும் - நம் மண்ணிலே புதைகுழி அமைப்போம் ப…
-
- 11 replies
- 2.3k views
-
-
மின்சார ரயில் மெல்ல மெல்ல .. வேகம் கொள்ளும் நிலை போல் .. உன் மின்சார பார்வை என்னையும் .. லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ... உடைந்து விழும் கண்ணாடி போல் .. மனதில் ஒரு சிதறல் கோடு .. நீ பாடல் கேட்டு தலை அசைப்பது .. எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் .. உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை .. என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் .. நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் .. நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் .. ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது .. நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது .. நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் .. நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் .. என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் .. சேர்த்து பயணிப்பேன் என் காத…
-
- 9 replies
- 1.6k views
-
-
இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும் வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது. 'தர்மச்சக்கரம்' கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன.. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து …
-
- 2 replies
- 752 views
-
-
போயகலும் பொல்லாப் பொழுது விடுதலைப் போரில் விழுந்த உறவுகளே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன? எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை விட்டு விடலாமோ! வீணே எமையழித்த துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ! தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று ம…
-
- 0 replies
- 660 views
-
-
மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…
-
- 2 replies
- 864 views
-
-
கேள்வி ? நீ எந்த ஊர் என்று கேட்டனர் ஊரைச் சொன்னாள் ஊரில் எத்தனையாம் வட்டாரம் என்று கேட்டனர் இடத்தைச் சொன்னாள் எந்த வீதி என்று கேட்டனர் வழியைச் சொன்னாள் யார் மகள் என்று கேட்டனர் பெற்றவர் பெயர் சொன்னாள் அதன் பின் 'ஓ' 'நீ அந்த வாத்தியார் மகளா' என்று வாய் நிறையச் சிரித்தனர் அவளோ மனதுக்குள் அழுதாள் இத்தனை கேள்வி கேட்டது அவள் குலப் பெருமை அறிவதற்கு என்று புரிந்து கொண்டபோது அவளோடு அவர்களும் புலம் பெயர்க்கப் பட்டனர்.
-
- 5 replies
- 1.4k views
-
-
கனிவான கன்னி என்று உன்னை நினைக்க நீ, என்னை கண் கலங்க வைத்தாயடி. உதிரம் எல்லாமே உனக்காக என்றிருந்த என்னை, உயிரோடு வதம் செய்தாயடி . ஒரு முறையேனும் உன் இன்முகம் காட்டி கனிமொழி கேட்க நான் , ஏங்கியிருந்து , வாடியிருந்து , இளமைதனை இழந்து ஏமாந்து போனனடி. என்னுயிர் நீ என்று தன்னுயிர் பாராது கண்ணீருடன் இருந்த என் தாயன்பினை நான் உணர்ந்து , பாசம் உள்ள அன்னையவள் அன்பு மட்டும் எனக்கு இப்போ ஈசன் தந்த சொர்க்கமடி. உன் நினைப்பு எனக்கு தந்தது வெறும் வெட்கமடி . சிந்தை கலங்குதடி எந்தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி …..கலை http://www.siruppiddy.net/?p=7317
-
- 0 replies
- 604 views
-
-
கண்ணயரும் நேரங்களில் காணுகின்ற கனவுகளும் கண்விழிக்கும் போதுகளில் மோதுகின்ற நினைவுகளும் அந்த நாள் நினைவுகளே அன்பான பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததுவும் பள்ளிப் பருவத்தில் பாடித்திருந்ததுவும் துள்ளித்திரிந்து துள்ளாட்டம் போட்டதுவும் அடம்பிடித்து அம்மாவிடம் அடிவாங்கி அழுததுவும் இந்த வயதினிலும் இனிக்கும் நினைவுகளே . கல்யாணம் கட்டி கணவனுடன் வாழ்ந்ததுவும் குழந்தை பல பெற்று குதூகலமாய் இருந்ததுவும் வாழ்க்கையில் போராடி நொந்ததுவும் வென்றதுவும் நெஞ்சில் இருந்தாலும் நிழல்களாய் தெரிவனவே பிள்ளைகள் வளர்ந்து கரைசேர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்தபின்னர் குடும்பமாய் புலம்பெயர்ந்து குடிபுகுந்தோம் குளிர்நாட்டில் குளிர்நாட்டில் இருந்தாலும் குறையேது…
-
- 2 replies
- 3k views
-
-
சரஸ்வதி துதி வெள்ளைத் தாமரையில் வெண்ணிற உடை உடுத்து வீணை தனை மீட்டிடும் வாணியே... கலை மகளே..! வெள்ளை உள்ளத்துடன் எளிய தமிழ் கவிதைகளை எழுதிட நீ உதவிடம்மா... ******** நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே... நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே இனிய தமிழ் கவிகள், கதைகள் புதுமைக் கருத்துக்கள், செய்திகள் மனம் மகிழவைக்கும் நகைச்சுவை கண்ணுக்கினிய காணொளிகள் இவை வழங்கும் யாழ் களம் நான் பயிலும் பல்கலைக்கழகம். நாளும் நாம் எழுதும் படைப்புகள் நவதானியமாய் விதைக்கப்பட, இவை வழங்கும் படைப்பாளிகள் தாமே அழகிய கொலுக்களாக, வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில் அழியாது என்றும் இவரிருக்க. உள்ளத்தில் உள்ள ஆணவத்தை அழிப…
-
- 13 replies
- 2.5k views
-
-
இன்று நினை நன்றே நினை ............. பிறந்து விட்டது புது வருடம் , தை பிறந்தால் வழி பிறக்கும் . வலிகளை மறந்து ஒரு புறம் தள்ளி விட்டு இறை யுணர்வுடன் வழி பிறக்க வேண்டுவோம் கோபம் கொள்வதாலோ விரக்தியடைவதாலோ கணணி வேகத்துக்கு ஈடு கொடுத்து , வெற்றி சேதிகளை பெறவேண்டும் என்று , அவா படுவதை விட்டு ,வலிகள் மூலம் தான் வழி பிறக்கும் என்று சிந்தித்து நமது கடமைகளை உணர்ந்து மற்றவர்களும் உணர வைத்து,எமது பணியை முன்னெடுப்போம் .தாயக வலிகள் மூலம் நாமும் பங்கெடுப்போம் எமக்கு முன் நீண்ட பணி காத்து இருக்கிறது சிந்திப்ப்போம் சிந்திக்க் வைப்போம். இதுவே என் கள உறவுகளுக்கு என் பொங்கல் புதுவருட வாழ்த்து .(சங்கல்பம் ). நட்புடன் நிலாமதி அக்கா.
-
- 2 replies
- 1.3k views
-
-
-
வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…
-
- 16 replies
- 1.7k views
-
-
வீரம் வெல்லும் வேளையிது ஈழம் பெறும் காலமிது சுற்றப் பகை நாமழித்து முடிசூடும் நேரமிது (வீரம்) வெற்றிதரப் பிறந்து வரும் புத்தாண்டடா வெல்லும் வழி சொல்லுகின்ற தமிழ் ஆண்டடா (வேறு) அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம் வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம் வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை போரென்றால் இது போருமில்லை வாழ்வும் சாவும் எமக்கொன்றே மானம் தானெங்கள் வரலாறே வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே போரென்றால் புலிவீரம் பேசும் பேச்சென்றால் தமிழ் மானம் பேசும் ஏய்த்து மாய்த்த காலம் போச்சே எங்கள் தலைவரின் காலம் ஆச்சே அண்ணன் இடுவான் ஆணையொன்றே ஆணை முடிப்போம் பகையை வென்றே சுவ…
-
- 7 replies
- 17.9k views
-
-
எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்? இன்னும் நீ எழவில்லை. சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை. கன்னங்கள் சிவக்கவும், காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும், நீண்ட மயக்கத்திலும், உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும் கட்டுண்டே கிடக்கிறாய். நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து தேவிட்டாத மொழியில் பேசியபோது காதினிக்கக் கேட்டாய், கண் விரித்து இரசித்தாய். இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள். இன்றும் பார்த்தாய் பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால் உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது. யார் அவள்? உன் தாய் உன் சேய் உன் தோழி உன் மண்ணின் மானம் காத்தவள். …
-
- 23 replies
- 3k views
-
-
"சாக்காட்டின் சரிதை" அவர்கள் தமது உரிமைக்காக உடமைகளை மட்டுமல்ல உடலுறுப்புக்களையும் ஒப்பற்ற "உயிரையும்" ஒப்புக்கொடுத்திருந்தனர். அவர்களது தியாக வேள்வி நியாயத்தின் அடிப்படையில் நம்பிக்கையை முதலீடாக்கி நடத்தப்படுவதாக அவர்கள் மட்டுமல்ல உலகமும் நம்புகிறது. ஆனாலும் அவர்களது வேகத்தை நம்பிக்கையை மழுங்கடிக்க, ஒரு வர்க்கக் கூட்டம் பல இடங்களில் ஒளிந்திருந்து ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுயமாக நாட்டி வளர்த்த மரங்களும், கட்டி வாழ்ந்த வீடும், வாழ்வாதாரங்களும், அடிக்கடி கொடிய விலங்குகளால் சுடுகாடாக்கப்பட்டபோது, ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் ஒருமுகமாக ஒப்பற்ற தலைமையுடன் எதிர்கொண்டு எழுந…
-
- 0 replies
- 823 views
-
-
வானம் வசப்பட்ட கதையிது தொடரும் வானத்தை அண்ணாந்து பார்த்து நடுங்கிய நாட்கள் பனை நெஞ்சின் பின்னும் பதுங்குழிகளிலும் பதுங்கிக் கிடந்தோம் இன்று குனிந்த முகங்கள் நிமிர்த்தி கொஞ்சம் சிரிக்கிறோம்! தலைவன் புண்ணியத்தில் தலைநகரில் பெரும் தீயெழ உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி எத்தனை ஆண்டுகள்தான் இனவெறி எச்சங்களை எங்கள் தலைகளில் கொண்டு வந்து கொட்டுவீர்கள்? எங்கள் உயிர் வலியின் உச்சங்களை உணரத் தவறியவர்களே உணர்ந்து கொள்ளுங்கள்! வான் ஏறிவந்து இனி உங்கள் தலையிலும் குண்டுகள் கொட்டுவோம்! எங்கள் புலிகளுக்கு பாய்வதற்கு மட்டுமல்ல பறக்கவும் தெரியும் பார்த்ததும் பதைத்தீர்கள்;! இனி என்ன செய்வதாய் உத்தேசம்? வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
பூ விழுந்த மனசு கவிதைத்தொகுப்பிலிருந்து......... - காலையில் நான் காணும் வாசல் கோலம் நீயே ! காரிருளில் துணையாகும் ஓளி தீபமும் நீயே ! கண் திரைக்குள் தினம் தோன்றும் கனாவும் நீயே ! என் வாழ்விற்கு வாசம் தரும் பூ வனமும் நீயே ! - உறவெனும் பந்தத்தில் உயிராய் இணைந்தவளே வாழ்க்கை என்னும் கணக்கில் வரவாய் வந்தவளே கானல் நீராய் தோன்றி மறைந்து போகாமல் - என் தாகம் தீர்த்தவளே ! - பனித்துளி தொட்டு சிலிர்க்கும் புல்நுனிபோல் - உன் பார்வையால் தவிக்கின்Nறுன் பாலைவன ஓட்டகம்போல் உன் காதல் தேக்கி வாழ்கின்றேன் மழைமேகமாய் வருவாயா ? என் மனத்தோப்பினுள் சிறு தூறல் வீசிப்போவாயா ? என்.பரணீதரன்
-
- 6 replies
- 1.6k views
-
-
ஒருமுறை ஆய்வு செய்ய......... வட்டி முதலாய் படர்ந்து விட்ட கடன் கட்டி முடிக்க வேண்டும் தவணையோடு பட்டு விட்ட கடனை சேர்ந்தே அடைக்க மனதினில் தட்டிவிட்டதோர் சட்டென்ற ஒர் யோசனை வெட்டியாய் வீட்டிலிருந்தே வெறுமனே மெட்டி ஒலி பார்த்து மென்னுடலை பொட்டலமாய் உருத்தெரியாமல் மாறிடாமலே கட்டு மேனியை கட்டோடு வைத்திருக்க எட்டு மணி நேர வேலைதனை எட்டியே போய் செய்யலாமே கட்டியதனால் கணவனார் உரைத்தலாலே எட்டு மணி நேர வேலை இயல்பாய் எட்டிரண்டாகி இயந்திரமாகிப் போனதில் எட்டிப் பார்த்ததோ நோயும் நொடியும்தான் கட்டியவனுக்கு நோய் என்றால் கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம் கட்டியவளுக்கு நோய் என்றால் கட்டியவன் காப்பானா பத்தியம் அடுப்படி விசயம் …
-
- 13 replies
- 2k views
-
-
கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள் கரையில் நின்று நீந்திக் கொண்டிருந்த மீன் குஞ்சுகள் சந்தோசத்தில் துள்ளி விழுந்து தரைக்கு வந்தன கடற்கரை மணலில் புரண்டு ஆசையை அள்ளிப் பூசின குழந்தைகளோடு பட்டம் விட்டு விளையாடி நாளை வருவதாகக் கூறி நடந்து சென்றன வெய்யிலில் நெடுஞ்சாலையில் நின்று வியர்த்து ஐஸ் குச்சியொன்றை வாங்கிச் சூப்பி கடல் நீரெல்லாம் உப்பென சொல்லித் துப்பின கோபுரக் கலசத்தின் விளிம்பு வரை ஏறி வியந்து, விசில் அடித்து மகிழ்ந்தன இலைகளின் மறைவில் அழகியை வீழ்த்தி இதழைக் கவ்விச் சப்பிய மனிதனையே பார்த்து வாய்பிளந்து முனகின கடலுக்கு அன்று திரும்ப மனமே இல்லை இருளில் பழுத்த இலைகளில் ஏறி கொட்டக் கொட்ட விழித்தே இர…
-
- 14 replies
- 3k views
-