Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது. ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் நாய்க் கவிதை அது ஒரு அழகிய கிராமம் அங்கே மனிதர்களோடு ஒரு நாயும் இருந்தது நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள் தன்னையும் அடைத்துக்கொண்ட அந்த நாய் ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது அந்த நாய் வருவோரையும் கடித்தது போவோரையும் கடித்தது - உணவு தருவோரையும் கடித்தது ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள் பொறுப…

  2. தோழனே....!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க நான் ஏது தவம் செய்தேனோ? கலகலவென நகைக்கும் வயதில் சலனமில்லாமல் இவ்வளவு சோகமா? உனக்குள் இருக்கும் சோகத்தை எனக்குள் இன்றே புதைத்துவிட்டு கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச வானில் பறந்திடு உன் இலட்சியங்களை நிறைவேற்ற என்றும் உனக்கு துணையாவேன் இன்றே விரைந்து புறப்படு நன்றே நடக்கும் உன்வாழ்வில் பழையனவற்றை மறந்திடு புதியதை தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி எறிந்திடு தோழி என் தோளில் தலை சாய்த்திடு ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே

    • 98 replies
    • 15.9k views
  3. கவிபேரரசின் ""வைகறை மேகங்கள்"" கவிதை தொகுப்புக்கள்-"(தொடராய் வருகிறது....படியுங்கள்) ஒளிப்புக்கள்.... பூந்துகில் உடுத்த புதுமதி யழகி நீந்தியே திரியும் நீலப் பட்டில் வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித் தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்... சற்றேதெறித்த சரச்சிரிப்பாக உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள் திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்... சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள் நித்தில வீதியில் நிலவுக் கன்னி அறுத்துப் போட்ட ஆரச் சிதறல் வறுமை வானம் வடித்த கண்ணீர்... உறைந்து தங்கிய ஒளியின் துளிகள் விரந்து முறிந்த மின்னல் துண்டுகள் இன்ப இரவில் இருட்டின் விழிகள் விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்... …

  4. என்ன உலகமிது..ஐயா என்ன உலகமிது... பசியினில் மனிதன் பரிதவித்தே.. தூக்கிலிட்டு..வாழ்விழந்து போகிறதே... பார்க்க.. கேட்க மனிதத்தின் உதவியின்றி.. ஒரு சமுதாயம்.. உணவின்றி சாகிறதே.. உணவின் மேலே.. உருளுது ஒரு உலகம்.. உணவிற்காக உயிரைக் கரைத்து அலையுது ஒரு உலகம்.. பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை.. ஏற்றமும் இறக்கமும்.. ஏனிந்த உலகில்-நல் மாற்றங்கள் வருமோ மனிதனின் வாழ்வில் உனக்கான உணவை.. அளவாக அருந்து.. பிறர்க்காக உனது.. உணவினைப்பகிர்ந்து ஏழைக்கு உதவ நாளைக்கு என்றேன்.. இ…

  5. உடைந்த நிலாக்கள் பாகம் 3 - பா. விஜய் எழுதிய கவிதை தொகுப்பை தொடராய் தருகின்றேன் படித்து மகிழுங்கள்) ரோமா புரியின் காதல் தேவதை....தொடர் 1 இந்த புமியின் வரலாற்றில் இருக்கும் நெருப்பும். முதுகில் இருக்கும் நிலச்சரிவுகளும் தோளில் இருக்கும் மலைகளும்... கைய்யில் இருக்கும் மலர்களும்... யாருடைய வாழ்க்கையாவது கதையாய் - பாடலாய்க் காற்றிடம் சொல்லி கொண்டேதான் இருக்கும். ஓர் இலையின் நுனியில் பனி சருக்கி விழும் நேரத்திற்க்குள் முடிந்து போன சரித்திரங்களும் உண்டு. விண்கற்களின் வயதை போலக் காலம் கடந்து வாழும் வாழ்விலும் உண்டு ! ஓர் உலக பேரழகியின் உயிரோட்டமான உணர்சி குவியல் இது ! ""கிளியோ பாட்ரா "" சொன்னால் உதடுகளை …

  6. தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…

  7. மனுஷ்ய புத்திரன் இரங்கல் கூட்டம் இரங்கல் கூட்டத்தில் விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருந்தன சொல்வதற்கு ஏராளம் இருந்தன உண்மைகள் ஏராளம் இருந்தன பொய்கள் இரண்டுக்கும் இடையிலும் கொஞ்சம் இருந்தன இறந்தவனை எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று ஒருவருக்குமே தெரியவில்லை ஒவ்வொருவராக முன் வந்தார்கள் ஒருவர் அவனை தண்ணீராக மாற்றிக்காட்டினார் இன்னொருவர் அவனை ஒரு புகையாக மாற்றினார் வேறொருவர் ஒரு காலித் தொப்பியிலிருந்து அவனை ஒரு புறாவாக பறக்கச் செய்தார் யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரில் எரியும் கணநேர ஜுவாலையாக மாற்றினார் அவனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வந்தார் மரணம் ஒரு மலரை காகித மலராக்கி அமரத்துவம் அடையச் செய்துவிட்டது என…

  8. கடதாசிப் பூ முத்தம்

    • 34 replies
    • 14.7k views
  9. கண்ணீரால் முடியும் என் கவிதைகள்... --------------------- காதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்றன ஒளிர்கின்ற இரவை.. அறையெங்கும் நிரம்பிக்கிடக்கும் விளக்கொளியின் நடுவே கண்களுக்கு தெரியாமல் குறுக்கும் மறுக்குமாய் அலைகின்றன நினைவுகள்... பாறையெனக் கிடந்த உன் பொழுதுகளின் மீது பக்குவமாய் நான் வரைந்த காதல் ஓவியத்தை நீ கிழித்தெறிந்த போது சிதறியவைகளாக இருக்கலாம்.. புன்னகை எழுதிய முகத்தை கண்ணீர் மூடிமுடிக்கும் முன் நினைவுச்சிதறல்கள் சுழன்றெழும் வீச்சில் சிறைப்பிடிக்க வேண்டும் கவிதைகளில்... பாதைகள் எங்கும் காதலுடன் பரவிக்கிடந்த பூக்களை வாரி அணைக்க சேர்த்துவைத்த அன்ப…

  10. Started by nedukkalapoovan,

    காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே இல்லாமல்..! விதியது இயற்கை வழி விதவையாய் நீயும் இல்லை விதுசனாய் நானும் இல்லை விரைந்தே போகிறோம் கால வெளியைக் கடந்து..! அடுத்த வசந்தத்துக்குள் இன்னொரு சந்ததிக்காய் ஆயுளும் முடிக்கிறோம். பூமியை புதிய உயிர்களால் அழகும் செய்கி…

  11. கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…

    • 0 replies
    • 14.5k views
  12. மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …

    • 4 replies
    • 14.4k views
  13. அள்ளித் தெளிக்கும் அழகு அளவாய் கொண்டு ஆடம்பரமில்லா அலங்காரமிட்டு ஆரவாரமில்லா பேச்சொடு இரவலற்ற புன்னகை தந்து இரங்கும் பார்வை கொட்டி ஈயும் இதயம் காட்டி ஈர்ந்தாள் என்னை உருளும் கரு விழி கொண்டு. உள்ளத்தில் உவகை பொங்க ஊரின் சாயலில் பேசி ஊடலற்ற பொழுதுகள் தந்து எழிமை நடை பயில எழில் கொண்டு வந்தாள் ஏடு தூக்கும் கரத்தால் ஏக்கம் தீர ஐயுறவின்றித் தழுவி ஐக்கியமாகும் எண்ணத்தில்..! ஒரு தரம் என் கரம் பற்றினாள் ஒரு பெரும் பொறி பிறந்தது ஓராயிரம் உணர்வுகள் பொங்க ஓரமாய் உடலெங்கும் பற்றியெரிந்தது ஒளடதம் தேட ஒளவையின் அடுக்குமொழி தந்தாள். அடுத்து என்ன.. அகேனம் விதி வழி சேர அடுக்கிய கனவுகள் அனைத்தும் ஒடிந்தன விழிகள் விழிக்கையில்..…

  14. உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வ‌லி நான் உண‌ர‌வில்லை… தாவ‌ணிப்ப‌ருவ‌த்தில் தோழி வீடுசென்று தாம‌த‌மாக‌ திரும்பும் நாட்க‌ளில் உன் அவ‌ஸ்தையின் வ‌லி நான் உண‌ரவில்லை… க‌ல்லூரிப்ப‌ருவ‌த்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… ம‌ண‌ப்ப‌ந்த‌லில் உன் காலில் விழுந்தெழுந்த‌ போது என் உச்சி முக‌ர்ந்த‌ உன‌து முத்த‌த்தில்தான‌ம்மா உண‌ர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…

  15. இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சா…

    • 47 replies
    • 14.1k views
  16. முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந…

  17. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள். http://www.kaasi.info/pages/kavithai.htm

  18. லண்டனுக்குள் என் வீடு... என் வீட்டுக்கு முன்பாக...ஒரு பேரூந்து தரிப்பிடம்.. நான் வேலைக்கு செல்லும் நேரங்களில்.. அந்த சோதரி.. அங்கே.. பேரூந்துக்காக காத்திருப்பாள்.. ஒழுக்கமான.. உடை.. நீறிட்ட நெற்றி.. மண்வாசனையோடிருப்பாள்... ஒரு காத்திருப்பின் போது சில காலிப்பையன்கள்.. சுற்றிக் கலாட்டா.. கலங்கிக்கொண்டிருந்தாள்.. நானும்..என் நண்பனும்..அவர்களை... விரட்டியதும்.. நன்றி அண்ணாவென்றாள்.. தினசரி சிரிப்பாள்.. வணக்கம் சொல்லுவாள்... காலம் போய்க்கொண்டிருந்தது.. ஆடை மாறிக்கொண்டிருந்தது.. அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது... நவநாகரீக நங்கையானாள்.. ஒருபோது..வைபத்தில்.. மது அருந்திக்கொண்டிருந்தாள்.... அருவருப்பையும்... முகம் சுளிப்பையும்.…

  19. தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, தழுவும் சேலை முகட்டில் விம்மி விழட்டும் அதுவரை தயங்கு. பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி உணர்வினைக் கிளறி இயங்கு. குறி நகம் பதித்து குவித்து அணைத்து கொஞ்சிக் கெஞ்சி முயங்கு. உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும் இணையின் அணைவில் மயங்கு.

    • 72 replies
    • 13.6k views
  20. நன்றி: facebook. நன்றி: facebook. (மிகுதி தொடரும்..! நீங்களும் இணைக்கலாம் நீங்க ரசித்தவை.. ஆக்கியவை என்று.)

    • 47 replies
    • 13.4k views
  21. தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்

  22. Started by இளைஞன்,

    கிழட்டு இளைஞன் பகுத்தறிவுக் காதலில் தாடி வளர்த்தவன் * இன்று "பெரியார்" பிறந்த நாள். பெரியார் 1879 ம் ஆண்டு செப்ரெம்பர் 17ம் நாள் அன்று பிறந்தார். "உராய்வு" கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற எனது கவிதையை, பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று இங்கு இணைக்கிறேன்.

    • 17 replies
    • 13.2k views
  23. எனது தேசம் -------------- நீல விசும்பின் ஓரத்தில் உறைந்திருக்கும் நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள் ஒற்றைக் குருவியின் ஓலமாய் மனது விம்மித் தணிகிறது நேற்றைகளைத் தீயில் கருக்கி நாளைகளின் தடத்தினை தொலைத்து விட்ட தேசம் இன்னுமொரு பொழுதில் பசி சுமந்து துயர் சுமந்து வாழ்வதற்கான முகாந்திரமின்றி வாழ்கின்றது என்றோ வரப்போகும் ஒளிக்கீற்றுக்காய் இன்றும் நாளையும் நாட்களை எண்ணியபடி... -எல்லாள மஹாராஜா-

  24. பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.