கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
[size=3][size=4]அன்பு மகனுக்கு,[/size][/size] [size=3][size=4]உன் தந்தை எழுதுவது, இது நீண்ட கடிதம்தான் ஆனால்,[/size][/size] [size=3][size=4]இதுவே இறுதியாகலாம்.[/size][/size] [size=3][size=4]ஏனெனில் உன் நினைவுகள் நெஞ்சடைக்க இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.[/size][/size] [size=3][size=4]உனக்கு நேரமில்லை எனக்குத் தெரியும். முடியும்போது முடிந்தால் படி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலவினைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம்தான்.[/size][/size] [size=3][size=4]மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும், கயிற்றுக் கட்டிலும், நான் சொன்ன நட்சத்திரக் கதைகளும், உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...[/size][/size] [size=3]…
-
- 9 replies
- 982 views
-
-
நெஞ்சிலே ஈரம் கொஞ்சம் இருக்கா ? நம் தாயகத்தில் ,பாலுக்கு அழும் பாலகனை எண்ணிப பார் ,நீ சாப்பிடும் கேக்கு வேண்டாம் ஒரு நேர கஞ்சி யாவது ,கிடைக்கிறதா ? இங்கு அலங்கார கோவில்களுக்கு ,தினந்தோறும் அபிஷகம் , விசேட தினத்தில் விசேடமாக , அங்கு குடியிருக்க குடிசை இல்லை இங்கு பசி வர மாத்திரைகள் அங்கு பட்டினியால் யாத்திரைகள் நீ எதோ தப்பி வந்து விட்டாய் என்று எண்ணாதே , கோழை நீ ? , என்ன செய்வாய் ? போராடி பெறும் தாயகத்தில் என்ன உரிமையிருக்கிறது உனக்கு ? ஒவொரு துளி வியர்வையும் அவன் சிந்தும் ரத்தம் அல்லவா ? அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளியாவது கொடுத்தாயா? ,ஒரு நாள் என் அக்காவின் பேரன் ,என் தாயக திரை படத்தை பார்த்து ,கேள்விகளை கேட்டுவிடு , தன் உண்டியலை (piggy …
-
- 0 replies
- 750 views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே மண்டியிடுகின்றோம் உங்கள் முன் மரணத்தை மகிழ்வாய் ஏற்று மார்பில் குண்டேந்தி மாவீரரானீர் தேசம் என்னும் தேனடைக்காய் தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர் பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும் பட்டினி கிடந்து பதமாய் ஆனீர் பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து பாரினில் எம்மக்கோர் பாதையானீர் பள்ளிசெல்லும் பருவத்தில் பட்டு மெத்தை சுகம் துறந்து பெண்ணும் ஆணும் சரிநிகராய் பெருமை கொள்ளச் செய்திட்டீர் பெற்றவள் முகம் மறந்து உற்றவர் தனைத் துறந்து உம் தேசம் காப்பதற்காய் உயிர் தந்த உத்தமரே உம்மை நாம் எப்படி வணங்கிடுவோம் பேதைமை கொண்டவர்கள் பேர் வாங்கப் பணம் கொடுப்பார் பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார் …
-
- 14 replies
- 962 views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உனக்கு எதிரி இருக்க வே…
-
- 2 replies
- 1.2k views
-
-
தென்னகம் தந்த காலப்பிழம்பு. மண் தவப்பேறே! மானுடத் திருவே! விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே! தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே! தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே! என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில் உன்னடி நோக்கி என்தலை வணங்கும். உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய், கண்டு கொண்டோம். கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய். எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே! தொப்புள் கொடியின் தாய்மைப் போரில் உத்தம தத்துவம் சொன்னவனே! நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து நியாயம் கேட்ட நீதிமானே! நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும். ஈழவர் வாழ்விற்கு இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா! எத்தனை ஆயிரம் தோழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
காடுகளில் வாழத்தொடங்கும் வரை காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை வீடும் சுற்றமும் அற்பமாய் போயிற்று காடுகளில் வாழும்வரை இன்று கலைந்த கூட்டில் தாயை தேடும் குஞ்சுகளாய் காடற்று வாழும் வாழ்வு காடுகளில் தவழும் இசையை கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும் பாலுக்கு அழும் குழந்தையைப்போல காடுகள் அபாயமானவை பழகாதவனுக்கு காடுகள் அதிசயம் நேசிப்பவனுக்கு ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை காட்டுவாழ்க்கை தேன் காட்டினுள் மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு வேட்டையால் சிதறும் கொடுமை அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன் குண்டு வீசுவது போல கொடும் வெயிலிலும் குளிர்மையை பரிசளிக்கும் காடு (யுத்த) காட்டுத்தீயால் வெந்தது கூடி வாழ்ந்த உறவுகளுடன் க…
-
- 8 replies
- 5.1k views
-
-
நெருப்பு தமிழனின் வாழ்வை கருக்க வந்த பிறப்பு..... முள்ளிவாய்க்காலில் பரிசளித்தாய் வகை தொகையின்றி இறப்பு.... தமிழரின் அடிவயிற்றில் நின்றெரியும் வெறுப்பு.... தமிழன் பட்டினியாம் நீயோ சிங்களனின் அடுக்களையில் நின்றெரிவாய் சிரித்து.... எங்கள் எதிரிக்கு அமைந்துவிட்டாய் அவன் சொல்கேட்கும் செருப்பு.... மறுபடியும் ஓர் நாள் எதிரிகளின் படையெரிக்க அக்கினிக்குஞ்சாய் பிறந்திடுவாய்.... அதைப் பார்த்து எதிரி ஓடிடுவான் உன்னை வெறுத்து.... காவியனின் சிந்தனைகளில் இருந்து.... அன்புடன் காவியன்
-
- 0 replies
- 554 views
-
-
பட்டினியில் ஓர் உலகம் பகட்டினில் இன்னோர் உலகம். இரண்டிலும்.. மனிதர்களே ஆட்சி. இப்பிரபஞ்சத்தில் இப் பஞ்சத்தை வேறு எங்கினும் காண முடியுமோ..??! தெரியவில்லை..!! சட்டங்களில் எழுத்துக்களில் கோட்டு சூட்டுப் போட்ட மனிதர்கள் எழுதி வைச்ச மனித உரிமைகள் பத்திரமாக... மனித உயிர்களோ.. இப்படிக் கேவலமாக..!
-
- 3 replies
- 903 views
-
-
நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …
-
- 6 replies
- 1.7k views
-
-
கவிதை :P நீ கடல் நான் கரை நீ வானம் நான் முகில் நீ வீதி நான் கார் நீ பெற்றோல் நான் எஞ்சின் நீ சந்திரிக்கா நான் லக்ஸ்மன் கதிர்காமர் நீ அசின் நான் விஜய் நீ அமேரிக்கா நான் இஸ்ரேல் நீ ஜ நா சபை நான் கோவி அன்னன் நீ பின்லேடன் நான் அவர் தாடி நீ கீட்லர் நான் நாஸி நீ யாழ்ப்பாணம் நான் கொழும்பு நீ திருநல்வேலி நான் அல்வ நீ கரவெட்டி நான் டங்ளஸ் தேவனந்தா நீ ஆனந்தசங்கரி நான் குழந்தபிள்ளைகள் நீ முதலாளி நான் கடன்காரன் நீ யாழ்கவிதை பகுதி வடகைக்கு எடுத்தவள் நான் யாழ்கவிதை பகுதியைசொந்தமாக வாங்கியவன்
-
- 10 replies
- 1.9k views
-
-
ஜூலை மாதம் வந்தால் . . . . . ஆடிமாதம் எம்தமிழர் ஆடிப்போன மாதம் கூடிவாழ்ந்த வீட்டைவிட்டு ஓடிப்போன மாதம் மாடிவீடும் குடிசைவீடும் வீதிவந்த மாதம் கோடிகோடி யாகச்சொத்தை தாரைவார்த்த மாதம் இறையும்கூடத் தேரிலேறி தெருவில்நின்ற மாதம் சிறையில்கூடச் சிங்களவன் பலியெடுத்த மாதம் மறையின்வழி நின்றவர்கள் பதைபதைத்த மாதம் குறைவிலாமல் தமிழன்நிலை உலகறிந்த மாதம் ஆண்டுபல போனபோதும் மறந்திடாத மாதம் மாண்டுபோன உறவினைநாம் நினைத்துநிற்கும் மாதம் கூண்டுவிட்டு அகதியாகப் பெயரவைத்த மாதம் சீண்டிவிட்ட சிங்களத்தின் அமைதிசெத்த மாதம் புத்தன்சொல்லே வேதமென்றோர் புலையரான மாதம் சித்தம்தன்னில் ஈரமிலார் கொடுமைசெய்த மாதம் சொத்துசுகம் பேணநாட்டின் தேவைகண்ட மாதம் சத்தமின்றித் …
-
- 19 replies
- 3k views
-
-
பேய்களுக்குண்டு மனிதாபிமானம் அடிக்கும் கொல்லாது நாய்களுக்குண்டு மனிதாபிமானம் கடிக்கும் கொல்லாது :?: மனிதர்களாம் இவர்கள் :?: மனிதர்களுக்கு உதவ சென்றீர் மணி பொழுதில் உருகி போனீர் பூக்கள்,மொட்டுகள்,காய்,கனி புலிகளெனின், புலிசேனை இவர்களுக்கு :?: பூக்கள் அறுபத்தொன்றும் கருகின புலிகளேன முத்திரை இட்டனர் புண்ணகைத்து சர்வதேசம் அறிக்கையும் விட்டனர் :cry: அரச பயங்கரவாதம் அங்கீகரித்த பயங்கரவாதம் என்றனர் தலைநகரம் விடயம் பெரிதானது முல்லைநகர் விடயம் சிறிதானது :shock: களத்தில் இருக்க பயந்து புலத்திற்கு ஒடி வந்து உங்களுக்காக கண்ணீர் விட என் மணம் கூசுகிறது. :x நாலுபேர் கதைப்பார் நாற்பது பேர் கூடுவோம் சில கண்ணீர் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல்லவும் ஆசை முதல் நாள் …
-
- 27 replies
- 3.7k views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். இப்படி அமைந்ததே நிலையென்று ஏக்கமாய் பார்த்தேன் வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற எங்களுக்கு காலம் கைகொடுக்கும் வரை காத்திருக்கிறோம்; என்றார்கள் செண்பகன் 23.10.13
-
- 4 replies
- 827 views
-
-
இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் 1985 மே மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்தப் பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கன…
-
- 4 replies
- 1.1k views
-
-
சதுரங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை. அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய் தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும் யானைபோல உண்மையில் என் காதலும் பெரியதடி. காமத்தில் சூரியன் பொன்சிந்த இறங்கி வர. நாணிப் புவிமகள் முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்.. ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற உனது நாடகம் அல்லவா இது. ஆண் பெண்ணுக்கிடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை எப்போதும் விரிகிறது. என்னோடு இன்னும் சிலரை பந்துகளாய் எறிந்து ஏந்தி …
-
- 17 replies
- 3k views
-
-
-
"ஒரு தந்தையின் புலம்பல்" "முதுமையின் வாசலில் காத்து நிற்கிறேன் முதலடி வைத்து உள்ளே போக முறுக்கு மீசை கொஞ்சம் தளருது முழங்கால் மூட்டு வலிக்கத் தொடங்குது!" "தள்ளாட்டம் என்னில் வெள்ளோட்டம் பார்க்குது தனிமை என்னைத் தேடி வருகுது தத்துவம் போதிக்கும் பக்குவம் வருகுது …
-
- 0 replies
- 539 views
-
-
கனவுகளைச் சுமந்தபடி தென்னங்கீற்றில் முகம் துடைத்து திங்கள் விழும் நிலாமுற்றம் கன்னல் தமிழ் பயின்றிட்ட கவின் கொஞ்சும் கலைக்கூடம் முன்னும் பின்னும் எல்லையிட்டு முப்புறமும் கடலேரி வான் நோக்கி உயர்ந்து வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு வைகறை மேகத்தைக் கிழித்து வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன் அந்த ஈரக் காற்றின் இதமான வருடல் முற்றத்து வேலிகளில் எட்டி நிற்கும் செம்பருத்தி இரட்டை வடக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம் கொத்தும் மீன்குஞ்சு குதித்து விளையாடும் குளக்கரைகள் இடையில் குடமசைய நடைபயிலும் இளமங்கையர் சிரிப்பொலிகள் மாதமொருமுறை எம்மை மகிழ்வூட்டும் திருவிழாக்கள் இன்றும் எம் இதயங்களில் இனிமையான நினைவலைகள் கனக்கும் இதயங்களி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பரம பிதாவே இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள் கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம் எம் சாவை பற்றி அவர்கள் அறிந்து கொண்டுதான் இருந்தார்கள் நீர் அறிவீர் அதை பிதாவே அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில் எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை வலியுறுத்தி கட்டளையிட்டன நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட மந்தைகள் என்றனர் எம் சாவின் மூலம் உலகின் முதலாம் தர நியாயம் வலியுறுத்தப்படும் என்றனர் எம் குழந்தைகளின் இரத்தத்தினால் மட்டுமே தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர் பரம பிதாவே நீரே ஒத்துக் கொள்வீர் அந்த வார்த்தைகளில் அந்த எழுத்துகளில் அந்த எத்தனிப்புகளில் வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று ஆ…
-
- 9 replies
- 1.5k views
-
-
உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!!+உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!!@கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு
-
- 6 replies
- 5.3k views
-
-
-
- 3 replies
- 14.5k views
-
-
பிரசவ வலி இருட்டு உலகத்திலிருந்து விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம் கருவறையின் சுகமான வேதனை - தாய்க்கு பிரசவம் உயிரின் வரவிற்காய் உயிரைப் பணயம் வைத்து உயிர்கள் நடத்தும் போராட்டம் குழந்தை இருட்டுச் சிறையிலிருந்து வெளிச்சச் சிறைக்கு இடம்மாறும் கைதி சிறுவயது வண்ணாத்துப் பூச்சியைப்போல வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்கான கற்றலின் ஆரம்பம் வாலிபம் ஆலோசனைகளை அலட்டல்களாக்கி அசட்டுத்துணிச்சலில் தனித்து எதையும் எதிர்கொள்ளத் துணியும் பருவம் காதல் ஓமோன்களின் காட்சிமாற்றம் எதிர்ப்பாலினரில் ஏற்படும் ஒ…
-
- 14 replies
- 1.2k views
-
-
கனவில் வரும் தேவதை ... எனக்கு அந்த தேவதை தேவைப்படாதவள் அவளுக்கும் அப்படித் தான் இருக்கும் வரம் கொடுப்பதற்காய் அவள் வரமாட்டாள் என்பதும் தெரிந்ததே அப்படி இருந்தும் எப்படி அனுமதித்தேன்.. இளங்குவளை இதழ்களில் சொரிந்திருக்கும் பனிரசமருந்தியே - கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல உறைதலும் உய்குவதுமாய் கார அமிலக் கலப்பின் களைப்பு முடிந்து கண்ணயர்ந்தாலும் கனவில் வந்து விடுகிறாள்.. அனுமதியின்றி வந்து தட்சணை தராமலே சென்றுவிடுகிறாள் தேவதை கனவு முறிந்து எழுந்ததும் கல்லெறிகள் கலாச்சாரக் காவலர்களால் ... ........................ ஜீவா 25.08.2013 22.35pm (எத்தனை நாளுக்குத் தான் சீரியஸாவே எழுதிறது? ஒரு சேஞ்சுக்கு தான்) :lol: திருத்தம…
-
- 10 replies
- 1.4k views
-
-
எங்கோ பார்த்தேன் அங்கே தொலைந்தேன் என்பேனே அது இவளைத்தான் என்றோ பார்த்தேன் அன்றே தொடர்ந்தேன் என்பேனே அது இவள் காலடித்தடம் தான் நான் மெல்லிசை ரசித்த முதல் பொழுதொன்று சொல்வேனே அது பிறந்தது இவள் கொலுசில் இருந்துதான் நான் தினம் தினம் இசைத்திடும் பல்லவி இருக்கிறதே அது பிறந்தது இவள் மொனத்தில் இருந்துதான் சூரிய தேவன் ஏவிய கதிராய் எனைச் சுட்டெரித்த கதை சொல்வேனே அது இந்தக் கண்கள் தான் வண்டுக்கு மலர்ந்த வாசமலரையெல்லாம் சூடிக்கொள்ளும் வசியக்காரி என்பேனே அவள் இவள்தான் உன் புன்னகை என்பது என்ன விலை என எனைப் பிறர் கேட்பதெல்லாம் இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான் அப்பாவிய் நான் அன்று அழுது புரண்ட கதை…
-
- 0 replies
- 695 views
-