கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும் மாலைநேரத்து வெயிலில் காய்ந்து வழியும் இலுப்படி நிழல் உனது அமைதியின் இருப்பிடம் அங்கே தான் நீ அதிக நேரத்தைச் செலவிடுவாய் அங்கே தான் நாங்களிருவரும் அறிமுகமாகினோம். சோளகம் உருவிப்போகும் இலுப்பம் இலைகளின் உதிர்வில் வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக் கதைகள் சொல்வாய் உதிர்ந்து காயும் இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து துளிர்க்கும் குருத்துகளின் உயிர்ப்பைக் காட்டித் தைரியம் தந்தாய் தலைநிமிரச் செய்தாய். விடியலைக் காணவிடாத சமூகச்சாவியை உடைத்துவரும் வீரத்தையூட்டினாய் விழியுடைந்துருகிக் கன்னம் தொடும் நீர் துடைக்கும் தோழமை விரலாய் வெற்றியைக் காட்டினாய்....! அந்தக் குழந்தைக் காலத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
உறவு உணர்வுகளை புரிந்துகொள்ளும் உன்னதமான மொழி இது பிறப்பு முதலாக நட்பு முடிவாக பல பரிமாணம் கொண்ட பன்முகக் கண்ணாடி இது தாயுடன் சேய் கொண்ட உறவும் உள்ளத்துடன் நீ கொண்ட உறவும் உயிருடன் உடல் கொண்ட உறவும் இயற்கையின் படைப்பினில் இமயமாய் நிற்பவை ஆனால் இன்று இயற்கையுடனான உறவு இயந்திரமானது இயந்திரதுடன் உறவு இயல்பானது மனிதனுடனான உறவு மறந்து போனது மனிதம் இங்கே மரத்துப்போனது உலகம் சுருங்கலாம் ஆனால் உறவுகள்??? உழைப்பின் உதவியை நாடினால் வாழ்வின் வாசல் வசப்படும் உறவுப் பூவை முகர்ந்தால் வாழ்வின் வாசம் புலப்படும் மானிடா..... உறவுகள் வாழ்வின் வேர்கள் உலகுடன் நீ கொண்ட உறவு முதல் மண்ணுடன் நீ கொண்ட உறவ…
-
- 3 replies
- 6.8k views
-
-
உறவுகட்காய் சிலதுளிகள் மண்மீட்புப் பணியினிலே மாவீரர் ஆகிவிட்ட மாண்புகளை எமக்களித்த மகத்தான பெரியவர்க்காய் எம் மண்ணின் நினைவுடனே எங்கெங்கோ வாழ்ந்திருக்கும் எம்களத்து உறவிடத்தில் என்னுடைய விண்ணப்பம் http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806
-
- 1 reply
- 1.1k views
-
-
இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி இழந்து விட்டோம் பிஞ்சுகளை சீதையிட்ட கண்ணீர் அங்கே இன்னுமா ஆறாய் ஓயவில்லை யார் இட்ட சாபம் அங்கே ஏன் இந்த அவலக்கோலம் வெந்தபுண்ணின் காயங்கள் இன்னும் அங்கே மாறவில்லை சொந்த மண்ணில் தமிழன் வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை? இறைவன் படைத்த மண்ணில் தமிழனுக்கு ஏன் இறமையில்லை புத்தனின் பெயரினாலே கொடுமைகள் நடக்குது அங்கே புத்தனும் உயிர்த்து எழுந்து வந்தால் தமிழனுக்காக விம்மி அழுதிடுவான் தொப்பிள் கொடி உறவுகளும் தூங்கிப் போய் இருந்தனவே செஞ்சோலை படுகொலையால் உயிர் பெற்று எழுந்தனவே பிஞ்சுகளின் இழப்புத்தான் அங்கே மீண்டும் உறவுப்பாலம் அமைத்தனவோ இழப்புக்கள் இனி எமக்கு வேண்டாம் உறவுகளே இ…
-
- 26 replies
- 4k views
-
-
இனி என்ன வாழ்க்கை என்ற சோகம் ராகம் வேண்டாமே விடுதலை தீயினை அணைத்திடும் துரோக எண்ணங்கள் வேண்டாமே உணர்வுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே உறவினை இழந்ததால் உறவுகள் முடியாதே நம்பிக்கை ஒன்றே வாழ்வை வெல்லும் நாணயம் ஆகிறதே கண்ணீரைத் துடை மனமே புதுக் காலம் இசை மனமே வெல்லும் நெஞ்சை உருவாக்கு வெற்றி வாழ்வை அரங்கேற்று !!!! (நன்றி முகநூல்)
-
- 0 replies
- 388 views
-
-
உறுதி இது தமிழீழம் உருவாகும் வரலாற்றில். கல்லூரி செல்லும் கன்னிப் பெண் சட்டையில் கைக்குண்டு தேடுது காவாலி இராணுவம் சந்தியில் சென்ரியில் சவப்பெட்டிப் பயணம் ஜ.டி யில் தானே-எங்கள் ஆத்மா வாழுது அண்றைக்கு சென்ரியில் நிண்றவன் கண்ணுக்கு தம்பியின் தோற்றத்தில் ஏதோ தவறாம் இன்றைக்கும் அவன் இருப்பிடம் தெரியாமல் ஈழத்தில் தவிக்கிறாள் ஈரஞ்சு மாதங்கள் கருவிலே சுமந்தவள் எட்டப்பன் கூட்டம் எல்லாளன் தேசத்தில் கொட்டம் விடுகிறது கொடுமை பல புரிகிறது வெட்டிச்சரிக்கிறது-இனத்தை வேருடன் அழிக்கிறது காவலர்கள் காடேக கடிநாய்கள் புகுந்ததனால் வாடி வதங்கி வலி மிகக்கொண்டு கூடு திரும்பும் குஞ்சிழந்த பறவைபோல் காக்க ஏதுமின்றி கவனிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உறுதி குலையாமல் உயிர; ஈந்த உத்தமன் திலீபன் நினைவு சுமந்து திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்னவயதில் அது தேவையா இன்னும் எங்கள் காதுகளுக்குள் ஒலிக்கும் உயிரின் உணர;வு வலிகள் இனியும் தொடர;ந்துவரும் துயர;தோய்ந்த நினைவு வரிகள் 26ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன இன்று போல் உள்ளது நல்லைநகர; கோவில் முன்றலில் எங்கள் தேசப்புதல்வன் தீரன் திலீபன் நீதி கோரி உயிர; ஊற்றி யாகம் புரிந்ததும் நெஞ்சு பொறுக்காமல் நாங்கள் விம்மி அழுததும் இன்று போல் உள்ளது நல்லுhர; கோவில் வீதியெங்கும் கண்ணீர; சுமந்த மக்கள் வௌ;ளமாய் நிறைந்திருந்ததும் தியாகி தீலீபன் உயிரைக் காத்திட தமிழீழப்பரப்பெங்கும் பொங்கி எழுந்து மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடத்தியதும் இன்று போலுள்ளது இதயம் கனக்கின்றது முன்வைத்த கோரிக்கை…
-
- 5 replies
- 838 views
-
-
உறுதியுடன் நடத்திச் செல்ல எவர; வருவார;? நெருங்குகிறது தேர;தல் திருவிழா நெருக்கியடித்து உள்ளே நுழையவும் அடித்துப் பிடித்து இருக்கையை கைப்பற்றவும் ஆள்படை அம்புகளுடன் அணிகள் தயார; வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கவும் வாய்ஜால இலவசமழையில் மக்களை மயக்கவும் கூட்டங்கள் போட்டும் கூத்துக்கள் ஆடியும் ஆட்களை பிடிக்கும் வேட்டைகள் ஆரம்பம் சாமியைக் கும்பிட செல்லும் சாகசக்காரருக்கு சாட்சிக் கையெழுத்திட்டு அனுப்ப மட்டும் வேண்டுமா நாங்கள் என யாரும் கேட்டால் உத்தரவாதம் எவர; உயிருக்கும் இல்லை வெந்து நொந்து வேதனையில் வாடுவார; வாழ்வினை பந்தாடி விளையாடி வதைக்க போட்டிகள் ஆரம்பம் எத்தனை உயிர;போனாலும் எவர;க்கும் கவலையில்லை வெற்றி கிடைத்தால் போதும் என்பதே …
-
- 0 replies
- 514 views
-
-
-
மீண்டு வராத காலத்தின் நினைவுகளை துவட்டத் தொடங்குகிறான் சாம இரவில் விழிப்படைந்த வேடன். அன்றொருநாள், குறிதவறியிருக்கலாம். அன்றில், நரகத்தின் வாசலில் நிறுத்தி நழுவிச்சென்ற விரல்களில் இருந்து ஒழுகிய, பூப்படைந்த வாசம், இன்றில் அறையெங்கும் நிறைந்து யன்னல்களால் வெளியேறத்தொடங்குகிறது உவர்த்த இதழ்களும் நெகிழ்ந்த முதல்களும் வசீகர தழுவல்களும் இரைகொள்ளும் பேரலையாய் கவிழ்ந்துவிழ, பெரும் தீ ஆற்றொனாப் பெரும் தீ.
-
- 3 replies
- 918 views
-
-
[size=4]வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் [/size] ஓரங்களை தின்னத்தொடங்கும். [size=4]இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் …
-
- 5 replies
- 761 views
-
-
"நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்?" கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன். மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன். உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்! நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்? ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன். உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன். மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன். நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்? காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூலோகம் அழிவதில்லை. ஆயிரம் மின்னல் பிரிக்கின்றபோதும் வ…
-
- 6 replies
- 2.6k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.9k views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 952 views
-
-
உலகத்தமிழா உணர்வுகொண்டு எழுடா.. ] எத்தனை காலம் செவிகள் கேட்டு கொண்டிருப்பது கண்கள் பார்த்து கொண்டிருப்பது அறியாமை மறந்து போன சிங்கள மனிதனின் யுத்தம் தன்நிலை மறந்து போன முட்டாள்களின் வெடிகுண்டு பெருக்கம்.. புவி அறிய பிறக்கும் பிறப்புகள் கூட பிறக்கமலே கருவறைக்குள் இறக்கும் அவலம்.. தப்பி தவறி பிறந்தாலும் வான்படை குண்டுகளின் குறிக்கு குதறப்படும் பரிதாபம்.. இன அழிப்பு அருவடைஎன்று ... எம்தமிழீழ கன்னிப்பெண்களின் கன்னித்திரை கிழித்தெறியும் சிங்கள காமுகனின் வெறிசெயல்.. போதுமடா உப்பிட்டு தின்பவனே காம உறுப்புகளை அறுத்தெறிய உணர்வுகொண்டு எழுடா.. சம உரிமை கேட்டதன் சன்மானம்தான் .. என் தமிழனின் உயிர் சிதைகப்படுகின்றது .. இதயமில்லா…
-
- 0 replies
- 818 views
-
-
-
- 0 replies
- 702 views
-
-
உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 945 views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
-
- 4 replies
- 1k views
-
-
உங்கள் வீரம்...... இனத்தின்நெஞ்சை நிமிர்த்தியது உலகின் புருவங்களையும் உயர்த்தியது சொந்த ஆசைகளைத் துறப்பது ஒன்றுதான் உங்கள் ஆசையா? வித்(து)தகரே சிந்தனைக்குள் விடுதலை வெப்பம் செறிந்த மின்சாரம் பாய்ச்சிய தலைவனை மட்டுமல்ல உலக தமிழனையும் தலைநிமிர்த்திய உங்கள் செயல்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தலைவணங்குகின்றோம் உயரிய இலட்சியத்திற்காக உயிரை உருக்கிய உன்னத்த்தினை, உலகம் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் பொருள் கொடுத்ததுதான் பாரிய பயங்கரவாதம் உயரிய தீவிரவாதம் கனவுகள் அழிந்திடுமோ என்று அழும் உங்கள் ஆன்மாக்களின் குரலால் அதிருகின்றது எங்கள் உணர்வு பத்ருகின்றது உள் மனது கவலை விட்டு உறங்கிடுங்கள் கண்மணிகள…
-
- 3 replies
- 1.2k views
-
-
உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது …
-
- 4 replies
- 3k views
-
-
அம்மா....!!!நடை பழகும்போது ...கை கொடுத்தாயம்மா .....இடறி விழும்போது ...இடுப்பில் சுமந்தாயம்மா ....பள்ளி செல்லும் போது ....கால் வலிக்க நடந்தாயம்மா ....புத்தகப்பையுடன் என்னையும் ...தோள் சுமந்தாயம்மா ....!!!அம்மா ....!!!கருவறை சுமைமட்டும் ....நீ சுமக்கவில்லை ....உன் உடலின் அத்தனை ....உறுப்புகளிலும் என்னை ....சுமந்தாய் ...........!!!அம்மா .....!!!மடியில் வைத்து பாடம் ....தந்தாய் இப்போ நான்....பலபடிகள் தாண்டி பலநாடு ....சென்றேன் - புரிந்தேன் ...அன்னையின் மடியைவிட ....எந்த ஒரு பல்கலை கழகமும் ...இல்லவே இல்லை ......!!!அம்மா ....!!!கவிதை எழுத முனைவேன் ....வார்த்தைகள் வந்து தடுக்கும் ....அம்மா என்றவுடன் அத்துணை ...சிந்தனையும் வெற்றிடமாய் ....மாறிவிடும் - தாயே உம்மை ...எதனோடு ஒப்பிட…
-
- 0 replies
- 922 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்61-ம் ஆண்டு பிறந்தநாள்:26.11.2015வாழ்த்து-----------இயற்கை எனது நண்பன்...!வாழ்க்கை எனது தத்துவாசிரியன்...!வரலாறு எனது வழிகாட்டி...!மொழிந்தாய் முன்னாளில் தெளிந்தேதறிகெட்ட தமிழர் தமக்கோஅனைத்து மானாய் நீயே!வாழ்க நின்தவம் பல்லாண்டு!!அறம் அறிவு வீரம்சேர்ந் ததோர் வடிவாய்...ஈனம்சார் உலகில் மானம்சார்தலைவன்! தம்பியு மானாய்!!தமிழ்வீர மரபின் விளைவாய்போருலகில் புதுமை கண்டுஉலகில் தமிழர் முகமானாய்!வாழ்க நின்வீரம் பல்லாண்டு!!பெளத்த நெறிவிடுத்து மகாவம்சகதைப்படித்த மொக்குச் சிங்களன்பகைமுடித்து ஈழம் வென்றெடுத்துஆளவா தமிழி னத்தைபுவி போற்றவா நம்குலத்தை!வாழ்க நின்புகழ் பல்லாண்டு!!-----------------------------------இவண்: வன்னிவேலன்
-
- 0 replies
- 986 views
-
-
உலகெங்கும் வாழும் சொந்தங்களே உயிர்காக்க நீங்கள் வாருங்களே ஒருவேளை உணவு தாருங்களே எங்களில் இறைவனைப் பாருங்களே இரவோடு இரவாக இடம் பெயர்ந்தோம் சொந்த ஊரில் நாங்கள் அகதியானோம் உடுத்த உடையோடு மட்டுமே நாங்கள் ஊரை விட்டு ஓடி வந்தோம் மரநிழலில் மதவடியில்...எங்கள் வாழ்க்கை(2) வான் கூரையின் கீழே உறங்குகின்றோம் எங்கள் உயிரள்ளிப் போகும் பகைவீட்டின் செல் மழையே எங்கள் உடல்கள் எரியும் சுடுகாட்டில் தானே வாழ்வே சமைப்பதற்கோ ஏதுமில்லை சரிந்திடவோ பாயுமில்லை குளிப்பதற்கு கிணறுமில்லை குடியிருக்க குடிசையில்லையே... விழி திறந்தால் காடாய் தெரிகிறதே ஆலமரம் நிழலாய் நிற்கிறதே- ஓடி ஓடி களைத்த எங்களுக்கு கானல் நீர்தான் தாகம் தீர்க்கிறதே பசி…
-
- 2 replies
- 1k views
-
-
உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி. Posted on December 29, 2024 by சமர்வீரன் 33 0 அன்பின் மொழியில் பேசுங்கள் ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள் என்று கூறிடும் மேற்கும் கிழக்கும் உன் வசதிக்கேற்ப நியாயங்களை நினைத்தவாறு வளைத்தபடி நீள்வளமாகக் கிடப்பதுமேன்? காஸா மனித வேட்டையை வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை மாற்றிடும் போக்கைக் காண்பாயா மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA) குளிரில் வாடியே இறந்ததை அறியாது மருத்துவமனைக்கு கொண்டு போனதும் மரணம் பற்றி அறிந்து கொண்டதும் தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும் விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா? உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை ஆயுதங்களுக்…
-
- 0 replies
- 331 views
-