கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நேற்றுத்தான் மொட்டானேன்.. ஆயிரம் கனவுகள் தாங்கி விடிகாலை சூரியத் தழுவலில்.. பூவானேன்..! பனிக் குளியலில் மலர்ந்த என் தளிருடல்.. கூவி வரும் சிங்களத்தான் வீசும் செல்லுக்குக் கருகிய ஈழத்தமிழ் பிஞ்சாய்.. பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும். மனித விதி சமைத்த வேளை வரும் பரிசுப் பொருளாக பறித்துப் பரிமாற பாடையேறும் என் உடல்..! சோடி சோடியாய் அலையும் மனிதப் பதர்களின் கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..! மனசெல்லாம் கள்ளம் வைத்து நடக்கும் காதல்.. குத்தாட்டம் என் இறுதி யாத்திரையில்…! அது தான் வலண்டைன்ஸ் டே என் சாவுக்கு குறித்த நாள்..!! எங்கோ ஒரு மூலையில…
-
- 40 replies
- 6.6k views
-
-
வெண்ணிற பனி படலம் போர்த்தியஆடையுடனும், தலையில் மல்லிகை பூ வைத்து அலங்காரத்துடன் பவனி வரும் எங்களை தத்தெடுத்த இங்கிலாந்து தாய் கன மழை என்னும் கண்ணீரால் நனைவதேன். இயற்கை தனது பாதையில் சீராக நடக்கிறது நாம் மனிதர்கள் தான் சீரற்ற நடவடிக்கைகளால் இந்த பூமியை அழித்து கொண்டு இருக்கின்றோம் மனிதர்களே சிந்தியுங்கள் இந்த பூமி தாயை காப்போம்
-
- 4 replies
- 705 views
-
-
கடவுள் ஓர் நாள்.. பார்ட்டிக்குப் போய் ஓவரா தண்ணி அடிச்சிட்டு கட்டிலில் வீழ்ந்தவர்.. காலையில் எழுந்து கண் விழிக்க சிந்தனை கொஞ்சம் சிக்கல்பட்டது. சரி போனாப் போகுது இப்படியே விட்டால் மூளை குழம்பிடும்.. பொழுதும் போகுதில்லை.. ஒரு மானிடப் பெண்ணைப் படைக்க சித்தம் கொண்டார்..! சித்தம் கொண்டவர் டிகிரி போல்டரை தூக்கினார். பெண்ணைப் படைக்க.. எனக்கு என்னென்ன தகுதி வேணும் செக் பண்ணத் தொடங்கினார்.. முதலில் நல்ல ஸ்கெச் போட ஒரு வரைகலை டிகிரி வேணும்.. சா.. அதுக்கு முன்னம் நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்.. நோ நோ.... அதுக்கும் முன்னம் நல்ல சமூகவியல் டிகிரி வேணும்.. ம்ம்ம்... இல்லையே இவை மட்டும் இருந்தால் வெறும் காட்டூன் தான் வரையலாம்.. உயிரை ஆக்க.. நல்ல…
-
- 13 replies
- 1.7k views
-
-
இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …
-
- 12 replies
- 2.5k views
-
-
என்ன நியாயம்??? கட்டிக்கரும்பே மரகத மணியே பவழம் பவழம் எம் இதழ்கள் என்று சொன்னவர்களும் நீங்கள்தான் ....... கயல் விழி என்றும் , எம் விழி அம்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கினோம் என்று , சொன்னதும் நீங்கள் தான் ........ எங்கள் கொடியிடை அசைவில் , உங்கள் மதி தறி கேட்டுப் போனதாய் சொன்னதும் நீங்கள்தான் ........ பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்வில் கோடைத் தென்றலாய் நாங்கள் வந்தோம் என்று சொன்னவர்களும் நீங்கள் தான் ...... இப்பிடி, சும்மா இருந்த எங்களை உங்கள் கற்பனை குதிரைகளால் மேய்ந்து விட்டு !!!!!!!! இப்பொழுது மட்டும் மோகம் கலைந்தவுடன் " இல்லாள் " என்று சொல்வது என்ன நியாயம் ??? பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி …
-
- 12 replies
- 1.3k views
-
-
கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)
-
- 21 replies
- 1.7k views
-
-
இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…
-
- 4 replies
- 980 views
-
-
ஏய் மனிதா நில்லு உலகம் படைச்சது எதற்காக நீ... உலோகம் கொண்டு எல்லையிடவா..??! ஏய் மனிதா சொல்லு இவள் பிறந்தது எதற்காக நீ.. கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும் பதறுவது எதற்காக.. நீ இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா...??! ஏய் மனிதா சொல்லு உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக நீ இவள் போல் எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு யுனிசெப் என்ற ஒன்று எதற்காக.. நீ உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??! ஏய் மனிதா சொல்லு மனித உரிமைகள் யாருக்காக.. நீ வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??! ஏய் மனிதா சொல்லு.. இந்த வேசங்கள் எதற்காக நீ அழிவைத் தேடிச் செல்வதால…
-
- 8 replies
- 1.1k views
-
-
மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…
-
- 5 replies
- 911 views
-
-
எங்கோ ஒளிந்திருக்கிறாய் உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ? மரங்களின் மௌனத்தால் பறவைகள் அழுகின்றன யாருக்கு யார் மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி என்ன நிகழ்ந்திருக்கும்.. ஒரு பகிரமுடியாத மரணம் ஒரு விபத்து காமம் தீராத ஒரு கலவி குறைந்த பட்சம் இன்னொரு காதல் தோல்வி.. மெல்ல காற்று குளிர்கிறது வானம் அழக் காத்திருகிறது நனையக் காத்திருக்கிறேன் மழையில் கண்ணீரில்
-
- 3 replies
- 795 views
-
-
அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்
-
- 4 replies
- 801 views
-
-
வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…
-
- 18 replies
- 3.4k views
-
-
வானம் வஞ்சகமின்றி வெள்ளைப் பூக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது! நானும் இந்த கடுங்குளிர் தேசத்தில் என் மவுனச் சாளரங்களினூடே அந்த அழகியை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்! அவளும் மெல்ல என்னை நோக்கித் தன் காதல் தேசத்தின் பாரிய படையெடுப்பொன்றை தன் மலர்விழிகளால் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கின்றாள்! என் இதயக் கோட்டையின் மதில்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன! இன்னும் சில நொடிகளுக்குள் அவை முற்றாகவே தகர்ந்து விழுந்துவிடப் போகின்றன! நான் தோற்றுவிடுவேனோவென்று மெல்லக்கூறி பட்சி நகைத்துக் கொண்டிருக்கின்றது! இல்லை நடுங்கிக்கொண்டிருக்கின்றது! தோற்றேதான் போய்விட்டேன்!!! இப்போது என் இதயப் பேரரசின் முடிசூடா ராணி அவள்!!!!!! என் மனைவியின் …
-
- 9 replies
- 902 views
-
-
குழந்தைகளுக்கான பாடல்களை தொகுத்த பதிவு யாழிலிருக்கோ? யாழில் தேடிப்பாத்தன் ஒன்றும் அம்பிடவில்லா. நான் எதிர்பாக்கிறது, நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா மாதிரி .....
-
- 5 replies
- 4.1k views
-
-
எங்கள் தேசத்தில் கறுப்புக்கொடி! உங்கள் விடுதலைக்கும் உழைத்தோம் எங்களை அடிமையாக்கினீர்கள் எங்களை பல்லக்குகளில் சுமந்தபோது ஒன்றாய் வாழ்தல் இனிது என்று கனவு கண்டோம். எங்கள் மெழியை புறகண்ணித்தீர்கள் எங்கள் அடையாளங்களை அழித்தீர்கள் எங்கள் உரிமையை பறித்தீர்கள் துரத்தினீர்கள் உங்கள் நிலத்திலிருந்து வேட்டையாடீனீர்கள் உங்கள் நகரங்களில் வைத்து ஒடுக்கி உரிமை மறுத்தபோது நாங்களொரு கனவு வளர்த்தோம். எங்களை நீங்கள் அடிமை செய்தபோதும் உங்களை நாங்கள் ஏதும் செய்யவில்லை எங்களை நாங்கள் ஆழ்கிறோம் எங்கள் மண்ணில் கண்ணீர் வேண்டாம் எங்கள் மண்ணில் துயரம் வேண்டாம் எங்கள் மண்ணில் இரத்தம் வேண்டாம் எங்களை நீங்கள் கொல்ல வேண்டாம் சிங்கள தேசத்தில் சிங்கக்கொடி தமிழர் தேசத்தில் கறுப்பு…
-
- 2 replies
- 668 views
-
-
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…
-
- 2 replies
- 987 views
-
-
பச்சை மண்ணாய் பால் குடியாய் யாழ் வந்த போது தமிழோ வா வா என்ற தமிழர்கள் சிலர்.. இது தமிழா இவன் எல்லாம் உருப்படுவானா என்று மொழிய.. தத்தெடுப்பின் அடையாளமாகி அவை அமைய.. இணையத் தமிழ் கொண்டு அரவணைத்த யாழ் இணைய சொந்தங்களே.. பச்சை பச்சையாய் திட்டினும் யதார்த்தமாய் ஏசினும் வாயாரப் புகழினும் வாஞ்சையோடு வருடினும் வஞ்சகமில்லா எம் மொழியை கண்டறிந்திட்டு சொந்தம் கொண்ட... உறவுகளே. காலத்தால் தனித்துவிட்ட போதும் கலங்கரை விளக்கமாக கூட நின்ற சொந்தங்களே.. அன்னை இன்றி தந்தை இன்றி உற்ற சகோதரங்கள் கூட இன்றி அரவணைக்க உறவுகள் இன்றி அந்நிய தேசத்தில் கண்கண்ட நேரத்துக்கு மட்டும்.. கூடி மகிழும் நண்பரைக் காட்டிலும் கூட வந்த உறவுகளாய் அன்னையாய் தந்தையாய் சகோதரனாய்…
-
- 35 replies
- 2.4k views
-
-
யாழ் இணையத்துக்கு எஸ் ஹமீத் இனால் எழுதி பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பப்பட்ட கவிதை இது. -நிழலி ---------------------------------------------------------------------------- விடாது கொத்தும் பாம்பிலிருந்து விடுதலை பெற ஒரு வேண்டுகோள்...! -எஸ். ஹமீத். ஓர் ஊழின் உக்கிரத்தில்... நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும் செங்கங்குகளில்... சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம் எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்... ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை; எடுத்தொரு நிழலில் கிடத்திட.... யாருமில்லை...! ***** சுற்றி நின்று பேய்கள் அலறும் க…
-
- 4 replies
- 789 views
-
-
வேணாம் மச்சான் வேண்டாம்.....!!! ----------------------------------------------- ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!! உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான் கோதாரி விழுந்த காசுதான் எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு சேகர் அனுப்பும் காசில்.. "மாபிள்" பதிச்சு வீடு எழும்புது "ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!! "ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என உன் மனம் அலைக்கழியுது கொப்பர் அடிக்கடி புறு…
-
- 3 replies
- 1.2k views
-
-
நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்த…
-
- 10 replies
- 699 views
-
-
இரணைமடுத்தாயே ஏனம்மா? ------------------------------------------------- ஏனம்மா தாயே நீரோடு ஏனின்று நிலம் பிரிந்து நிற்கிறது யாரோடு யாருக்குப் புரிதலற்ற புதிதான புயலொன்றை உருவாக்கி யாழென்றும் வன்னியென்றும் ஏனையா கதைக்கின்றீர் போதாதா பெற்ற வலி தீராத துயரமுடன் மாறாத எங்கள் நிலை மாற்றிடத்தான் வேண்டாமோ! தேசியமாய் ஒன்றிணைந்து தாயகமாய் வாழ்ந்தோரை நீர்கொண்டு பிரிக்கின்ற நிலைமைதனை உணராமல் வாதங்கள் புரிந்திங்கு வளர்க்கின்றார் வேற்றுமையை யாரையா அது யாரையா! தமிழினத்தின் குருதியாற்றில் குளிர்காய நினைப்போரை சரியாக இனங்கண்டு எம் சந்ததிகள் தழைத்தோங்கச் சிந்திக்க வேண்டமோ! மோடையன் என்று சொல்லி விண்ணனர்கள் அடிபட்டு பலகூறாய் நின்பதொன்றே சிங்களத்தின் பெருவெற்றி சிரிப்பினிலே தெரிகிறது வேண்டா…
-
- 2 replies
- 695 views
-
-
சொந்த நாட்டு வீட்டுக்கு... எப்பத்தான் நான் போவேன்? என் சொந்தக்காரர் நாலுபேரை... அப்பத்தான் நான் பாப்பேன்! வந்த நாட்டை எண்டைக்கும்... எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்! சொந்த நாட்டை மீட்குமட்டும் நிம்மதியா தூங்கமாட்டேன்...!??? வல்லைவெளிக் காற்றாக.... மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது! நெல்லுவயல் கதிர் பார்க்க.... தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது! முல்லை நில கடலோரம்.... அலை ஓயாமல் அடிக்கிறது! ஓயாத அலை ஞாபகங்கள்.... மீண்டும் நெஞ்சில் வந்து துளிர்க்கிறது! ஓடக்கரை அப்பம் தோசை... வாங்கி நல்லா தின்ன ஆசை! பருத்தித்துறை வடையோட... பங்குனிக் கள் அடிக்க ஆசை! வல்வெட்டிதுறை எள்ளுப்பா... வாய் இனிக்க கடிக்க ஆசை! தப்பி ஓடி வந்த பாவியாகி... தஞ்சம் தேடி வந்த அகதியாகி... செல…
-
- 5 replies
- 1.2k views
-
-
நீயா அவள் ???? நித்தம் நித்தம் வந்து முத்தம் கொடுத்த என்னை சித்தம் கலங்கிய பித்தா என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ?? எந்தன் பிழைதான் என்னவோ?? பள்ளியறையில் பங்காக சிந்து பாட வந்த பொழுது என்னை நீ , முட்டித் தள்ளியதும் ஏனோ ?? கொத்துக் கொத்தாக நீயாக , வந்து முத்தம் கொடுத்ததும் , முன்பு நீ , அத்தான் !! அத்தான் !! என்று நொடிக்கொரு தடவை அழைத்த நினைவு , என் நினைவில் முட்டித் தள்ளியதே........ அடி கள்ளி..... நீயா அவள் ???? கோமகன் 11 மார்கழி 2013
-
- 19 replies
- 3.3k views
-
-
சுதந்திரம் என்றால் என்ன? நிஜத்தைப் புரிந்த கவிதைக் குரல் சுதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி எங்களுக்கு பல பிம்பங்கள் உண்டு. சிதறிய கண்ணாடித் துண்டுகள் என அவை சிதைந்து கிடக்கின்றன. உள்ளத்தில் ஓல ஒலி எழுப்புகின்றன எமது உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக ஒலிக்கிறது ஒரு குரல் ஆனால் அது தமிழ்க் குரல் அல்ல. சிங்களக் கவிஞனின் குரல். பிரச்சனையின் அடிநாதத்தைப் புரிந்த குரல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பிரவாகினி செய்தி மடலில் வெளியான கவிதை இது எழுதியது :- அலோகா ரணசிங்க மொழிபெயர்ப்பு :- மாக்ஸ் பிரபாஹர் சுதந்திரம் கிடைத்தது சோதரா, சுதந்திரம் கிடைத்தது அத்தனை நிலத்தையும் அபகரித்தணைத்திட சுதந்திரம் கிடைத்தது சோதரா சுதந்திரம் கி…
-
- 0 replies
- 570 views
-
-
யார் வீட்டுப் பிள்ளை இவள்? அடி பெருத்து... இடை சிறுத்து... வளர்ந்து நிற்பவளின்.... அழகு மேனியில் தெரிகிறது, பருவ வளர்ச்சியின் படிமங்கள்! அவளின் பருவக் குலையைப் பார்க்கப் பார்க்க... தாகம் எடுக்கிறது தானாக...! தேகச்சூடு அடங்கும்வரை பருகவேண்டும் அவளின் இள நீரை! வீசுகின்ற காற்றிலே அழகாய் மெல்ல மெல்ல அசைகிறது அவள் பச்சைக் கூந்தல்..! இளங்குருத்தின் வாசம் வந்து வெட்கத்தோடு அழைக்கிறது ஏறி வா என்று...! அவள் இடை அணைத்து... அவளுடல் மீதேறி... யாரோ கட்டியதை திருட்டுத்தனமாய்... மெல்ல அவிழ்த்திறக்கி சத்தமின்றி மொத்தத்தையும் ரசித்து...குடித்து...வெறித்து.... திகட்டும் போதையில் திளைத்து, பின் களைத்துப் போக..... அவள் தோப்பில் அவளோடு, கொஞ்ச நேரம் தூங்கினாலும்…
-
- 18 replies
- 2.3k views
-