கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கலி முத்திப் போச்சு இன்னும் மேலே மேலே எட்டாத உயரத்தைத் தொட்டுவிடும் துடிப்புடன் இறக்கைகளை அடித்து எழும்பிட முயல்கிறாய் ஆயினும் வாடையின் வேகம் உன் ஆடையை உரசி கட்டுக்குள் அடங்காத உன் கனத்த இறக்கைகளை முறித்திட முயல்கையில் ஏதிர்க் காற்றை முறியடித்து நீயோ எத்தனை தவிப்புடன் காற்றின் திசை நோக்கி வேகம் பிடிக்கிறாய் வேகம் அதைவிட வேகம் ஆனாலும் நீ பெட்டைக்குருவி பேதமை உன்னுடன் கூடப் பிறந்த புpறவிக் குணமா? ஏனோ தெரியவில்லை ஏகிறி எகிறி உன் சிதறிய கனவுகளுடன் கீழே கீழே இன்னும் கீழே மண்ணோக்கிய உன் மனச் சிதைவுகளுடன் வலியின் வேதனையை மிடறுக்குள் விழுங்கியபடி மனப் புதிருக்குள் மண்டிக் கிடக்கின்றாய் விதியின் கையிலோர் விளையாட்டு…
-
- 4 replies
- 1.7k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . . கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன். நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விர…
-
- 24 replies
- 4.5k views
-
-
கலைஞனுக்கு ஒரு மடல்.. அயல் நாடாம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே....'' தமிழ் நாட்டின் தறுதலையே..'' இத்தாலிக்காரியின் செருப்பே...'' தாய் நாடு - உன் தமிழ் நாடு கூட உன் மறைவிற்காய் கண்ணீர் வடிக்காது......'' கடல் நீரில் கூட - உன் சாம்பல் கரையாது...'' உன் இறப்பின் அன்று..... கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்... எவருக்கும் ஞாபகம் இருக்காது...'' அமைதிப்படை அன்றும்.... முகநூலில் இருந்து
-
- 2 replies
- 786 views
-
-
தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி. கலைஞருக்கு வாழ்த்து -வ.ஐ.ச.ஜெயபாலன் காலத்தில் சோழனுக்கு நீர் ஏந்திக் கல்லணை நிழலேந்திக் கோவில். சேரனுக்கோ சிலம்பேந்தி வந்த தமிழிச்சி. பாண்டடியற்கோ சங்கம். அடையா நெடுங்கதவும் ஆஞ்சல் எனும் சொல்லுமாய் எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு? கலைஞா உனக்கு காலச் சுவடாக விலங்கொடித்தால் ஈழம் இருக்கும் ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் visjayapalan@gmail.com
-
- 22 replies
- 7.8k views
-
-
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் [ சு. பிரசாத் ] வியாழன், 26 மார்ச் 2009 19:10 மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே, எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார் …
-
- 1 reply
- 993 views
-
-
கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் கண்களிலே அடக்கி வைத்த தமிழனின் கண்ணீர் கல்மடுக் குளமாய் உடைந்து ஓடுகிறது. குண்டு மழை கிழித்த உயிர்களின் நெடுநாள் சாபமாய் இதய நெருப்பு அங்கே எரிமலையாய் எரிகிறது எம் தேசத்தைப் போல அதிர்ந்து போய் உலகத் தெருக்களில் நமது வாழ்க்கையும் நடக்கிறது அடி வயிறு வெடிக்க ஐயோ என்று கத்தும் தாய் ஐந்து வயதுப் பிள்ளையை துண்டு துண்டாய் தேடுகிறாள் விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது முந்நூறு தமிழர் பலி பலநூறு பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தை பீரங்கி கேலி செய்கிறது. புதுக்குடியிருப்பின் புன்னகை சுதந்திரபுரச் சந்தியில் உடையார் கட்டாகி வல்லிபுன…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்! என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்! வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்! என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்! மீண்டுமொரு புயல் வருதா? உயிரோடு சாகடிக்க! இன்னுமொரு முறை வருதா? காதலித்துப் பேதலிக்க! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல நொந்த மனசுக்கு ஒரு காதல்! தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல, நல்ல அனுபவங்களையும்தான்!! காதலித்துத்தான் கட்டுறாங்கள்...! பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?! காதலித்தபோது இருந்ததெல்லாம், கல்யாணத்தோடு காணாமல் போச்சா?! அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது 'அவளே தேவையில்லை' என்கிறான்! இவளே என் வாழ்வென்றவன் - இனி வாழ வழியில்லையென பிரிகின்றான்! காதல் எங்கே போச்சுது? அதுக்கு என்ன ஆச்சுது? காத…
-
- 2 replies
- 1.7k views
-
-
உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்... ராத்திரியின் நீளம் குறையும்... அதிகாலையின் கொடூரம் புரியும்.. உனக்கும் சமைக்க வரும்... சமையலறை உனதாகும்.. ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்.. பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்.. ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர், மிக்சி கண்டுபிடித்தவன் தெய்வமாவான். கையிரண்டும் வலிகொள்ளும்... கண்ணிரண்டும் பீதி கொள்ளும்... கல்யாணம் பண்ணிப்பார்... தினமும் துணி துவைப்பாய்... மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. . காத்திருந்தால். ...'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்... வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்.... வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது - ஆனால் வீடே …
-
- 0 replies
- 557 views
-
-
கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…
-
- 0 replies
- 14.2k views
-
-
-
கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…
-
- 0 replies
- 927 views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
வேலிப் பொந்தினில் பிறந்த நேசத்தில் கருக்கொண்டவள் வைக்கறைப் பொழுதினில் வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள். அழகு பெயரும் சூட்டி அடுக்குச் சட்டை போட்டு கொண்டாடிய பிறந்த நாட்கள் பல களிப்புறக் கண்டவள்..! தங்கத் தட்டினில் பல்லுக் கொழுக்கட்டை அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்.. மங்கையாய் பருவமடைந்த வேளையதில் பல்லக்கில் பவனி வந்தவள்..! அந்நிய நாடுகளில் அதிசய வாழ்க்கை தந்திட கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில் அழகு கன்னியாக வீதி வலம் வந்தவள்..! தேசத் தாயவள் அவதி கண்டவள்.. நொடிப் பொழுதினில் உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில் வேங்கையாகி பாய்ந்து நின்றவள். தாய் நிலம் தின்ற சிங்களப் பாசறை நொருக்கி வீழ்ந்தவள்.. மாவீரர் வரிசையில் நிமிர்ந்து நின்…
-
- 0 replies
- 593 views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம். போராடித் தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கல்லறைத் தெரு என் தெருவின் பெயர் மரித்தவர் நடுவே நான் வசிக்கிறேன்... சோகமும் கண்ணீரும் என் கொடி இலச்சினைகள் இரவில் மட்டுமே என் உரையாடல்கள் அதுவும் அவர்களுடன் மட்டுமே ஒவ்வொரு நாளும் இறக்கிறேன் மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட அன்றிரவு மரிப்பதற்கே பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும் நான் அப்பால் ஏகுகிறேன் என்னுடன் உரையாடுபவர்களுடன் எருக்கம்பூக்களின் வாசம் மனத்துக்கு இதமாய் மரமல்லியை விடவும் இருளும் வெற்றிடமும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு நாளை நீங்கள் வருவீர்கள். * தி. பரமேசுவரி
-
- 3 replies
- 855 views
-
-
புதைத்த இடத்தினிலே புழுதி அடங்கவில்லை விதைத்த வித்துடலில் குருதி காயவில்லை அதற்குள் சிதைத்த கல்லறையில் சிலிர்த்து நிற்குமெங்கள் ஆவி ஈழம் மீட்டெடுத்து தமிழ் இனத்தின் மானம் காக்கவென மார்தட்டி வா தமிழா எம் கல்லறையில் சத்தியம் தா தமிழா.. http://www.tnrf.co.uk/2010/11/05/%E0%AE%95%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/
-
- 0 replies
- 546 views
-
-
கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.
-
- 2 replies
- 761 views
-
-
கண்ணெதிரே காண்பவை கானல் நீராய்த் தெரிகிறது மனிதமற்ற மனங்களின் ஆசைகளின் ஓலங்களில் அகப்படும் உயிர்கள் உன்னதம் இழந்து உயிர்வதை பட்டு உழல்வதே வாழ்வாகி உடைந்து நொறுங்கி ஓட்டமுடியாததான ஓர்மத்துடன் ........... நகர்வின் அபிநயங்களில் நல்லவராய் முகம் காட்டி புறத்தே புழுவாய் பேய் முகம் காட்டும் பேடியராய்ப் பலர் பித்தர்களாக்கி எமை பரிதவிக்க வைத்து பரவசம் கொண்டிடுவர் வடிவங்கள் பலவெடுத்து வக்கணையாய்ப் பேசி வஞ்சப் புகழ்ச்சியுடன் வாசனை அற்றவராய் வன்மம் புடைசூழ வஞ்சனையே அவராய் வலிந்த விதியினதாய் வடமிழுக்க முன்னிற்பர் வகை தெரியா மனமே வாழ்வைப் புரிந்திட வண்ணங்கள் அல்ல வாழ்வு ...... மேடுகள் காடுகள் பகை நிறைத்த மாந்தர் பகிர்தலற்ற பாள்மணம் மிகைப்பட அனைத்தும்…
-
- 4 replies
- 706 views
-
-
பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…
-
- 4 replies
- 1.1k views
-
-
கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...! மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...? எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...! யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!! உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று, இல்லாத காலத்தை நினைத்து!!! ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே! ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!! எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை? உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத... பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!! மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்... இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை! ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்... வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்! 'இயலாமை' என்றொன்று…
-
- 24 replies
- 3.4k views
-
-
கல்வாரித் தென்றல் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கருணை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கும் நதியும் இவர் பிறரன்பு புரிய வைத்த பெருமை இவர் பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலரவைத்த மாண்பும் இவர் மனித நேயத்தை தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போன்று இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் தன்னையே அர்ப்பணித்த தியாகம்; இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் இடர்களைந்த சுடரும் இவர் அமைதிப் பூக…
-
- 6 replies
- 1.8k views
-
-
கல்வாரிப்பூக்கள் உடைந்த மனங்களினை ஒட்ட வைப்போம் உறுதியுடன் அன்பைப் பற்ற வைப்போம் நிறைந்த துயரினையே நிறுத்தி வைப்போம் நெஞ்சில் துணிவுதனை நிலைக்க வைப்போம் சோகச் சுமைகளினை இறக்கி வைப்போம் சொல்லில் இனிமைகனை சுவைக்க வைப்போம் மனதின் காயங்கள் மறக்க வைப்போம் மண்ணின் மனிதத்தை மதிக்க வைப்போம் சிந்திக்கும் ஆற்றலினை வளர வைர்போம் சிரிப்பில் துயரங்கள் துரத்தி வைப்போம் ஞாபகத் திறன்களை குவித்து வைப்போம் ஞானிலம் மகிழ்ந்துமே களிக்க வைப்போம் தீய சிந்தனைகளை அகற்றி வைப்போம் தீமைகள் அணுகிடா விலக்கி வைப்போம் அனுபவப் பாடங்கள் படித்து வைப்போம் ஆசைப் பேய்களினை அடக்கி வைப்போம் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வைப்போம் வளமாய் வாழ்வுதனை வாழ வைப்போம் ஆன்மீக தேவைகளில் …
-
- 1 reply
- 963 views
-
-
......::::::: கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள். என்றும் அன்புடன் - இதயநிலா
-
- 25 replies
- 3.6k views
-
-
களத்தில் ஓர் காதல்..... கவிதை.... என் அன்புக் கண்ணனுக்கு உன் ஆசை மலர் எழுதும் மடலிது.... எனக்கான உந்தன் காதல் பரிசும் கிடைத்தது கார்த்திகை பூவும் கிடைத்தது..... கார்த்திகைப் பூவின் நிறங்களிலே எங்கள் ஈழத்தின் புலிக்கொடி பறக்கக் கண்டேன்..... எக்கணமும் அந்தப் பூ என் சொந்தம் ஆகலாமென்ற உன் உள்மனது சொல்லும் சேதியும் அறிந்தேன்.... நீ கொடுத்த; வெற்றுத் தோட்டா எண்ணிக்கையில் நீ வீழ்த்திய எதிரியின் என்ணிக்கையும் கண்டேன்... இதுதான்..! இந்த வீரத்தின் பாய்ச்சல்தானே எனை உன்பால் ஈர்ப்படைய வைத்தது காதலின் மரபு நீங்கி கார்திகைப் பூவில் காதலைச் சொன்னாய்.... எங்கள் காதல் மலர்ந்து சில நாளில் கதை…
-
- 23 replies
- 2.9k views
-