Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!" "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!" "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னைக் கண்டதால…

  2. இயல்பினைக் கடந்த திடத்துடன், இயற்கையை வென்றவர்கள்...! எப்பொழுதும் இறப்பதில்லை!!! அறத்தினை மீறிய உலகிற்கு, வீரமறவர் எனத் தமைக் காட்டியோர்...! தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்!!! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள், புலத்தினில் புதிதாய் கதைகள்...! உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்??? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும், எம் பரம்பரை உம்மைத் தொடரும்...! உம் இலட்சியம்............. அடையும் வரை!!! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்! on Saturday, 27 November 2010 at 02:57 [ 2010 இல் எழுதியது ]

  3. நான் என்றுமே நேரம் தவறுவதில்லை எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் பிந்திச் செல்வதால் நீங்கள் படும் அவஸ்தையை பக்கத்தில் இருந்து அடிக்கடி பார்ப்பவன் நான் ..... நீங்கள் தள்ளாடி நடந்ததாய் எந்த பதிவும் இல்லை என்னிடம் எத்தனை மணிக்கு வந்தாலும் ''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று கேட்பதில் நீங்கள் தனிரகம்.... அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான் அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து ''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!! ''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது உங்கள் கை வந்த கலை அது தெரிந்த போதிலும் உங்களிடம…

  4. Started by ilankathir,

    நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை ஒரு நியாயத்தின் மறுபக்கம் நமது நியாயங்களை மறுதலித்துவிடும் ஒரு கண்ணீரின் மறுபக்கம் நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும் ஒரு மனிதனின் மறுபக்கம் அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன நமது இதயம் கனத்து விடுகிறது நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன் நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன் நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்ற…

    • 0 replies
    • 1.1k views
  5. கல்லினில் இரு துளைவைத்து கண்ணென்று சொல்லி உலகையும் காப்பான் இவன், தன் கண் கொண்டு என கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ கல் என்றே சொல்வேன் உனை.. கைலையில் உள்ளாயா - இல்லை போதியின் கிளையில் கீழுள்ளாயா? காமுகன் கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர் கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ? களத்தினில் எம்மக்காள் கருணையின்றி கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ?? கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த கயல்விழிகளெல்லாம் அசுரர்கள் கலவிப்பசி தீர்க்க கையிழுத்து கழுத்தறுத்த வேளை - நீ கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ கல்லில் புதைந்த கடவுளே. கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம் கல்லானவன் பொய்யுரைக்க காலடியில் காலன் இன்று எ…

  6. மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…

    • 42 replies
    • 6.5k views
  7. காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு காலையில்லை சாப்பி…

  8. அனார் கவிதைகள் 1 கருமை முற்று முழுதாய் இருட்டி கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில் உன் உயரங்களுக்கு ஏறிவருகின்றன என் கால்கள் இருட்டிய மழைக் காற்று தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும் ஆகாயத்தை நிரப்புகிறது கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ் காகங்கள் மாத்திரமே பறவைகள் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள் ஒரு ஜன்னல் என என் கண்கள் திறந்துகிடக்கின்றன முதலும் முடிவுமற்ற உன் உச்சரிப்புகள் இடத்தைப் பாழ்படியவைத்து வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன என் உதடுகளை விரல்களைச் சுழலும் காற்றில் உதிர்த்…

    • 2 replies
    • 1.6k views
  9. உட்காரப் புல்வெளி. எதிரே நீர்வெளி. நீர்மேல் எண்ணெயாய் சூரியன் . பால் சொட்டுகளாய் பறவைகள் . முட்டாமல் மோதாமல் இணக்கமாய் காற்று . தூரத் தூர ரயிலோசைக்கும் செவிக் கூசும் நிசப்தம் . ....................................... .......................... எல்லாம் தவிர்த்து கவனமாய் காத்திருக்கிறான் கரையில் ஒருவன் . தொண்டையை கிழித்து கண்ணைத் துளைத்த தூண்டில் முள்ளுடன் துடிக்கும் ஒரு மீனைக் காணும் ஆவலுடன் .

  10. உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம் உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம் செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம் சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம் ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர் இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர் அந்த விடுதலைத் தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று; ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர் பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா சிங்கத் தமிழினத்தின் ஒற்றுமை…

    • 8 replies
    • 2.7k views
  11. இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபமாக இருக்கட்டும் இதை இயன்ற அளவில் பரப்புரை செய்வதே நாம் நம் இனத்திற்கு செய்யும் களப்பணி. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! …

  12. Started by Thulasi_ca,

  13. ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!

    • 4 replies
    • 1.6k views
  14. Started by இலக்கியன்,

    சீதனம் வாங்கும் ஆண்களே நில்லுங்கள்!!! உங்களுக்கு என்ன ஊனம் நீங்கள் சொல்லுங்கள்!!! சீதனம் தமிழனுக்கு ஒரு புற்றுநோய்!!! இது ஆண்களுக்கு ஒரு தொற்று நோய்!!! விரும்பி தானாக கொடுத்தால் அது அன்பளிப்பு அதை கேட்டு வாங்கினால் அது சீதனம் நூறு பவுனில தாலிதான் உனக்கு வேலியா பெண்ணே? ஆணும் எங்கு போவான் நீயும் சொல்லு பெண்ணே? உடம்பு முழுக்க உனக்குப்பவுந்தான் வேணுமா பெண்ணே? ஆண்களுக்கு இதனால் மொட்டை வராமல் போகுமா பெண்ணே? பட்டம் உள்ள ஆண்கள்தான் உங்களுக்கு தெரிவார்கள் பெண்ணே!!! நல்ல உள்ளம் கொண்ட ஆண்களை தெரிவது …

  15. Started by slgirl,

    இதயதின் வலிக்கு ஆறுதல் தருவது இணையத்தளம் சரிதானே??? நாம் சந்தித்ததும் அங்கு தானே என்றும் போல நீயும் உலவாவந்திருப்பாய் நானும் அதே வளமை போலவே வந்தேன் நினைத்திருப்போமா நீயும் நானும் இணையத்தினாலே இணைவோம் என்று எத்தனை சண்டைகள் சச்சரவுகள் வந்தாலும் இறக்கவில்லியேடா நம் உறவு வியக்கின்றேன் நீ பலமுறை எழுதி இருக்கின்றாயேயடா பிரிவு என்பது உறவுக்காகா தானே என்று சந்தித்தபோது சாதாரணமாய் தோன்றினாய் பத்தும் பலதும் பேசி மகிழ்ந்தோம் நண்பர்களாய் இன்று நீ இன்றி வேறில்லை என்று நினைக்கும் அளவுக்கு என்னில் நீ ஊறிவிட்டாயடா இதனால் நீ என்னவனும் ஆனாயடா... இன்று நமக்குள் இருக்கும் உறவுக்கு பெயர் என்ன என்று நீ சொல்லுவாயா சொல் என்னவனே காலம் தன் வேகத…

    • 14 replies
    • 1.7k views
  16. இந்திய தேசமே! ஒதுங்கி விடு!! விந்திய மலைத்தொடரில் அந்த அகத்தியமுனிவன் அடிபதித்த நாள் முதலாய், இந்திய தேசம் எங்கள் தேசத்தைத் தங்கள் தேசத்துடன் இணைத்துக் கொண்டது! சோழ வள நாட்டின் சோறுடைத்த வயல்களும், சேரநாட்டு யானைகளின் செழிப்பான தந்தங்களும், பாண்டிய நாட்டின் பசுமை மிக்க இலக்கியமும், இந்திய தேசத்தின் சொத்துக்களாகின. அரை குறையாய் வளர்ந்த ஆரியமொழி, எங்கள் தமிழிடம் கடன் வாங்கித் தன்னை வளர்த்துக் கொள்ள, விலை போகாத வேதங்களும் வேள்விகளும்,சாதிகளும் எங்கள் சொந்தங்களாகின. புறமுதுகு காட்டாத புறநானுற்றுத் தமிழன் இராமாயணத்தின் குரங்காக, கடாரம் வரை கப்பலோட்டியவன் பிடாரிக்குக் கோவில் கட்டிக் கும்பிடுகி…

  17. நான் உன்னை நினைப்பதை மறந்துவிடப் போவதில்லை அது என்னை மறக்கப் பார்க்கிறது * என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் * நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய் என் காதல் முட்டையை உடைத்துவிடாதே நானாக உடைத்து வெளிவரும் வரை * அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து தொலைத்த பாதையில்_ நான் என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன் அவளை நினைத்து வாழ * என்னை மறப்பதற்காய் நான் இறந்து விட்டதாக நினைத்து விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து கொண்டிருப்பது யுத்த பூமியில் -யாழ்_அகத்தியன்

  18. சுவரோரம் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பதினெட்டாவது தென்னங்கன்றை நடுகிறார் தலையாரி சுப்ரமணி சிதிலமடைந்த மடப்பள்ளிக்குள் பசித்த எறும்புகளும் கொழுத்த எலிகளும் குடியிருக்கின்றன குதிரை வாகனத்தின் குறியை அசைத்து சிரிக்கும் சிறுவர்கள் செவ்வரளிச் செடிகளின் நிழல் மறைவில் திருட்டுப் புகையூதும் இளவட்டங்கள் பாத்திரங்களில் விழுந்த துளை அடைக்கும் பொருட்டு சிலைகளின் எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட அபூர்வமாய் வரும் பெண்கள் எதிர்க்கடையிலிருந்து தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து நந்திக்குப் பின்புறம் வட்டமிட்டு சீட்டாடும் ஆண்கள் என எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள எங்கள் ஊர் சிவன் கோயிலில் …

  19. உமிழ்ந்தது தப்பு... குடு குடுப்பை காறனவன் குழிக்காதே எண்கிறான் பர பரப்பில் வந்துயவன் பகுத்தறிவு என்கிறான்... மூடர்கள் நீர் போலும் முளையில் ஏதுமில்லை ஏனென்று கேளாது ஏற்றீரோ நீரும்..? ஆலயங்கள் தோறும் ஏறி ஆண்டவனை வணயங்கியவன் இன்று வந்தேனோ இல்லை சாமி என்றானோ...?? காலயிலே நீராடி காசிக்கு மாலையிட்டு ஊச்சி மலையேறி உண்ணா நோன்பிருந்தான்.. பின்னாளில் வந்தேனொ பிதற்றல்கள் செய்தான்..? இன'னாளு வரைக்கும் இதையென் சொல்லலயோ...?? தாசி மகளுக்கு தரணியிலே விலை வைத்தான் இத்தனை இழியாரையோ இன்று பெரியார் என்பீர்...?? கட்டி தளுவி கலவியதை நீயாடு பிள்ளையதை வேண்டாமென்று பிதற்றிய செம்மலிவர்... இன்னாரின் இலட்சியத்தை ஏ…

    • 2 replies
    • 976 views
  20. கண்ணிமைக் கதவுகளில் கண்ணீர்த்துளிகள்.... இளங்கவி - மாவிரர் நினைவுக்காய்... உணர்வுகள் முகைவெடித்து கண்ணீராய் உருவெடுத்து கண்ணிமைக் கதவுகளில் காத்திருக்கும் கார்த்திகை இருபத்தியேழுக்காய்...... இது ஒரு நாளில் உருவெடுத்த உணர்வுப் பிரவாகமல்ல...... ஒவ்வொரு வருடமும் சேர்த்துவைத்துக் கத்தும் எங்கள் உயிர்மூச்சின் சத்தம்..... எங்கள் மண்ணுடன் கலந்து நிலமாகிப் போனீர்..... எங்கள் கடலுடன் கலந்து நீராகிப் போனீர்..... எங்கள் வானிலே கலந்து வான்வெளியாகியும் போனீர்.... ஆதலால் தமிழர் மனங்களில் கலந்து அவர் நினைவாகிப் போனீர்..... உங்கள் சரித்திரம் சொல்லா எங்கள் சரித்திரத்தில் பக்கமில்லை.... உங்கள் சாவுகளை எண்ணா எங்கள் போரிலும் வ…

  21. யாழில் செய்தி பார்த்தேன் பியர் உடலுக்கு நல்லது பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 தற்பால்சேர்க்கை சாத்திரியின் கொலைவெறி அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம் காணாமல் போகின்றோம் 2012 இல் காணாமல்தான் போவோம்.

    • 5 replies
    • 1.4k views
  22. உன் நெஞ்சக் கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol:

    • 17 replies
    • 1.3k views
  23. லிமரைக்கூ ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. அரச துறையில் தனியார் தொழ…

  24. இவர்களுக்கானதே! ----------------------------- நேற்று எம் முன்னோர் இன்று நாம் நாளை இவர்களும் ...... மாற்றத்தைத் தேடும் மாந்த நேயனே தியாக தீபத்தின் பொன் மொழியறிந்தாய் மக்கள் போராட்டமொன்றே மண்ணை மீட்குமென்ற மகத்துவம் புரிந்து நோன்பினில் இருந்தே தேசியம் காக்கும் கடைமையில் இருந்தாய் மெல்லென எழுகின்ற கதிரொளியாக எங்களின் இளையோர் உலகை ஒருநாள் வென்றெழும் போது இவர்களுக்கான தாயகம் விடியும் புலியினைத் தாங்கிய எம்கொடி பறக்கும்!

  25. Started by nirubhaa,

    வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.