வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கொரோனா: மருத்துவமனையில் தமன்னா மின்னம்பலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டத…
-
- 8 replies
- 894 views
-
-
தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது! மின்னம்பலம் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை தமிழில் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாகிறது. 1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. பல்வேறு படங்களில், தனிப் பாடல்களில் நடனத்தாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்போதும் சில்க் ஸ்மிதாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் மிகவும் சிரமப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘தி டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கினார்க…
-
- 0 replies
- 404 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்பவர்களின் துயரங்களைச் சொல்லும் படங்கள் தமிழில் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ஆனால், க/பெ ரணசிங்கம் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகக் கொடூரமான ஒரு சிக்கலை விவரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ரணசிங்கம் (விஜய் சேதுபதி), அரியநாச்சியை (ஐஸ்வர்யா ராஜேஷ்) கல்யாணம் செய்த பிறகு வேலை பார்ப்பதற்காக வளைகுடா நாடு ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் இறந்துவிட, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அரியநாச்சி நடத்தும் போராட்டம்தான் படம். சிறையில் இருக்கும் கணவனை மீட்க, கடத்தப்பட்ட கணவனை மீட்க, கு…
-
- 3 replies
- 887 views
-
-
காம வெறியர்களை தூக்குலபோடுங்க ! கோபத்தில் கொந்தளித்த Madhubala
-
- 1 reply
- 559 views
-
-
பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் செப்டம்பர் 27, 2020 மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற ஆண்டுகள் தங்கள் கலையின் வடிவில் வாழ்வதால் காலனை புறந்தள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆவர். எஸ்.பி.பி என்னும் குரலும் அதை வார்த்த அவர் ஜீவனும் அத்தகையதே. யோசித்துப் பார்க்கிறேன்…காலத்தின் தூசு படிந்த நினைவின் நொடிகளை ஆங்காங்கே துடைத்து பளபளப்பாக்கிப் பார்க்கிறேன்…பெற்றோரு…
-
- 7 replies
- 1.4k views
-
-
எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம் September 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை இசை ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர். ‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பா…
-
- 4 replies
- 1.6k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை." தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான். அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
31 விருதுகளைப் பெற்ற ‘கயிறு’ திரைப்படம் வவுனியா திரையரங்கில் வெளியீடு! ஈழத்தமிழர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி 31 விருதுகளை வெற்றிக்கொண்ட கயிறு முழு நீளத் திரைப்படம் வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படம் நாடாளாவிய ரீதியிலுள்ள 17 திரையரங்குகளில் வெளியிட்டு, மக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வரும்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வவுனியாவிலுள்ள கயிறு திரைப்பட ரசிகர்கள் மன்ற இளைஞர்கள், “ஈழத்துக்கலைஞரான குணா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டாவது திரைப்படமான கயிறு தென்னிந…
-
- 1 reply
- 407 views
-
-
நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி! தே.மு.தி.கவின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.கவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 15ம் திகதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நடிகர்-விஜயகாந்திற்கு-க…
-
- 6 replies
- 714 views
-
-
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று.! தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனரும் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற…
-
- 0 replies
- 417 views
-
-
சூர்யாவை வச்சு செய்த பேட்டி ? ஏன்டா இப்படி இருக்க - இயக்குனர் ஆகாஷ் !
-
- 2 replies
- 628 views
-
-
இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமாகியுள்ளார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன .https://www.virakesari.lk/article/89960
-
- 2 replies
- 741 views
-
-
வடிவேலு ஏன் தேவைப்படுகிறார்? மின்னம்பலம் விவேக் கணநாதன் 'வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அ…
-
- 6 replies
- 2.6k views
-
-
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!…
-
- 0 replies
- 400 views
-
-
வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்! கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான வடிவேலு ப…
-
- 8 replies
- 777 views
- 1 follower
-
-
0 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Metro Shirish/Twitter படக்குறிப்பு, yuvan and shirish இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நடிகர் சிரீஷும் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் டீ-ஷர்ட் அணிந்து புகைப்படங்களை வெளிட்டது பரபரப்பான நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தி தொடர்பான தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் (சிஐஎஸ்எஃப் - CISF) ஒருவர், தனக்கு இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியர்தானா என கேள்வி எழுப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் எம்.பி கனிமொழி குறிப்பிட்டிருந்தார். அ…
-
- 1 reply
- 573 views
-
-
க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல-சி.சரவண கார்த்திகேயன் – Uyirmmai - சி.சரவணகார்த்திகேயன் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr 58 mins | Christopher Nolan உலகெங்கிலும் காவல் துறை என்பது அத்துமீறல்களின் ராஜாங்கம் தான். எவ்வளவு மோசம் என்பதிலும், எண்ணிக்கையிலும், மாறுபாடு இருக்கலாம். ஆனால் அத்துமீறல் இருக்கவே செய்யும். காரணம் அதிகாரம் கைக்கு வரும் போது எல்லா மனிதர்களும் கொஞ்சமேனும் தம் மிருகஇயல்பை வெளிக்காட்டவே முனைகிறார்கள். அது மரணம் வரையிலும் கூடப் போவதைப் பார்க்கிறோம். அது மின்னபோலிஸில் போலீஸாரால் தெருவிலேயெ கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டோ அல்லது சாத்தான்குளம் காவல் ந…
-
- 0 replies
- 456 views
-
-
பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..! தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் …
-
- 2 replies
- 552 views
-
-
பிரபாகரன் பெயரை வைத்து.!? "மேதகு" திரைப்படம் கதை.!? உண்மையை உடைக்கும் "கிட்டு நையப்புடை" Exclusive...
-
- 7 replies
- 1.3k views
-
-
Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வே…
-
- 8 replies
- 976 views
-
-
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா…
-
- 1 reply
- 786 views
-
-
'பிளாக் பாந்தர்' கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் புற்று நோயால் இறந்தார் Reuters 'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார் 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 43 வயதான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழத்தகாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் பொதுவெளியில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந…
-
- 4 replies
- 976 views
-
-
-
சொன்னதை செய்த சூர்யா.... சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று …
-
- 0 replies
- 362 views
-
-
இணைய சூதாட்டம்: விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யுமாறு வழக்கு! இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்…
-
- 0 replies
- 321 views
-