ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ஒதுக்கிய நிதியை நாம் தீட்டிய திட்டங்களுக்கு செலவு செய்யவில்லை : வடக்கு முதலமைச்சர் ஒப்புதல் வடக்குக்கு ஒதுக்கிய நிதியைச் செலவு செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக, தீட்டிய திட் டங்களை விடுத்து வேறு திட்டங்களுக்குச் செலவிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இவ்வாறு இடம்பெறாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஒன்றுகூடல் கிறீன்கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது. மாகாண சபைக்குட்பட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ…
-
- 0 replies
- 347 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து த…
-
- 33 replies
- 4k views
- 1 follower
-
-
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு; படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் உதயனுக்குப் பொன்சேகா பரபரப்புப் பேட்டி வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். "உதயனு"க்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றின்போது இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு: சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் …
-
- 3 replies
- 1.3k views
-
-
03 FEB, 2025 | 05:28 PM சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது. இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்க…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
தாய்லாந்தின் பாங்கொங்க் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 வயதுச் சிறுமியான தாரகா ஜெயபாலனும் அவரது தயாரும் அங்கு தாங்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விபரித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 661 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத வெளிநாட்டு தூதரங்களில் நடக்கும் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என அரச பிரதானிகளை மறித்தள்ளதாக சில தினங்களுக்கு முன்னர், நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தூதரங்களின் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்பதை ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு எதிரான தூதரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தூதரங்களுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் தகவல்களையும் பரிமாறி வ…
-
- 0 replies
- 550 views
-
-
இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலிப் பகுதியிலும் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஜே 252, ஜே 253, ஜே 254 ஆகிய கிராம சேவர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பகுதி மக்களுடைய விவசாய நிலங்களாகவே காணப்படுகின்றது. இருந்த போதும் சிறிதளவு மக்களுடைய குடியிருப்பு காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் …
-
- 1 reply
- 357 views
-
-
இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்! நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் . இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து …
-
- 5 replies
- 421 views
-
-
ஈரான் - சிறிலங்கா இடையே அணுசக்தி தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை உயரதிகாரியான உதயசிறி காரியவசம் மறைமுக உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
(நா.தனுஜா) ஜனநாயகத்தை நான்விரும்புகின்றேன். அதற்கு மதிப்பளிக்கின்றேன். ஜனநாயக முறைப்படியே செயற்படுவேன். எனவே புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளித்து, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இதுகுறித்து நாளைய தினம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். அதேபோன்று அவர் பிரதமராக இருந்த காலத்தில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலம் சாட்சியம் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்து இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையில…
-
- 0 replies
- 495 views
-
-
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் …
-
-
- 4 replies
- 612 views
- 1 follower
-
-
சிங்கள அரசின் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் என்று இன்றைய மே நாளில் உறுதியேற்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 510 views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது. இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது. முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஒன்…
-
- 1 reply
- 746 views
-
-
புதிய அரசியலமைப்பு 13ஐத் தாண்டக் கூடாது - முட்டுக்கட்டை போடுகிறார் மஹிந்த! [Monday 2016-01-18 07:00] புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாரேஹன்பிட்டி அபேராம விஹாரையில் நேற்றுமுன்தினம் நட…
-
- 0 replies
- 297 views
-
-
புதன் 07-05-2008 10:37 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது. - மனோ கணேசன் நாட்டில் சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது தமிழர்கள் பிரதேசத்தை சிங்கள மயமாக…
-
- 0 replies
- 818 views
-
-
''கடவுளின் பெயரால் போய்த்தொலை''! ஒரு லட்சம் தேங்காய் உடைக்க திட்டம்! கடவுளின் சாபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்துமாறு கோரும் வகையில் ஒரு லட்சம் தேங்காய்களை தேவாலயத்தில் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ''கடவுளின் பெயரால் போய்த் தொலை'' எனும் தலைப்பில் இந்த தேங்காய் உடைப்பு சாபம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தென்னிலங்கையின் புகழ்பெற்ற பௌத்த தேவாலயமான சீனிகம தேவாலயத்தில் இந்த தேங்காய் உடைப்பு நிகழ்வு எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் தேவாலயங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன் இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணெய் வடித்து அதனையும் தேவாலயங்களுக்கு…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை வரும் இந்திய குழுவினர்! இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தினத்தந்தி செய்தியின்படி, ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 2 மணிக்கு விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டுள்ளது. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை …
-
- 0 replies
- 189 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் யாழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 994 views
-
-
ஞானசார தேரருக்கு பிணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை ஹோமாகம நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலதிக வழக்கு விசாரனையை மாதம் 23ம்; திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/2939
-
- 1 reply
- 649 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம். எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
புனர்வாழ்வின் பின்னர்விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைதுசெய்யுமாறு கோருவோம் 14 பெப்ரவரி 2016 யுத்தகுற்ற விசாரணைகள் இடம்பெறும்பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர்விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் மீண்டும் கைதுசெய்யுமாறு அரசாங்கத்தை கோருவோம் என புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள சிறிசேன அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க இலங்கையின் யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேபங்களிப்பினை தீவிரமாக எதிர்ப்போம் என மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வடக்கில் மத சுதந்திரமில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தினையும் முன்வைத்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும்ஆங்கில வாரபத்திரிகையொன்றிற்கு இதனை அவர் தெரிவித்து…
-
- 2 replies
- 386 views
-
-
12 APR, 2025 | 08:51 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர். ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழ…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஈழ அகதிகள் கேரள பொலிஸாரிடம் பிடிபட்டார்கள். ‘அகதி முகாமில் பெண் தற்கொலை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம். மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது. ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோ…
-
- 0 replies
- 461 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: 3 இலங்கையர்களுக்கு டுபாயில் சிறைத்தண்டனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 இலங்கையர்களிற்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியின் வழியாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த குணதாஸ் டிரான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ, விஸ்வா டி சில்வா ஆகியோரே தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ஹோட்டலொன்றின் பாதுகாப்பு அதிகாரியா…
-
- 3 replies
- 635 views
-
-
நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு : எச்சரிக்கை விடுக்கும் நாமல் நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட ஐவருக்கு 2 ஆவது முறையாகவும் பிணை வழங்க மறுத்த கடுவலை நீதிவான் தம்மிக ஹேமபால, அனைவரையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நேற்று உத்தரவு பிறப்பித்தார். இ…
-
- 2 replies
- 328 views
-