Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிட்டன் கண்டனம் http://www.srilankaguardian.org/2009/04/br...assacre-in.html சமீபத்தில் தெற்கில் நடந்த மிக மிக கொடூர சம்பவமான 7 சிங்களவர்கள், ''புலிகளினால்'' கொல்லபட்டதை கடுமையாக கண்டித்து, அடுத்த பிரிடிஷ் பிரதமர் எண்று வர்னிக்கபடும் பிரிடிஷ் வெளியுறவு செயளாளர் டெவிட் மில்லிபாண்ட் கண்டணத்தை தெரிவித்துள்ளார்... (உத ஒரு நல்ல மனுசனாக்கும் எண்டு நினைச்சன்........ )

  2. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு தலைநகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது. 'புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமைகோரியுள்ளது. இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை (16), ஐரோப்பிய ஒன…

  3. உலக புகைப்பட போட்டியில் மட்டக்களப்பு மாணவனது புகைப்படம் தெரிவு: [Friday, 2013-02-08 09:20:54] உலக வங்கியினால் நடத்தப்பட்ட உலக புகைப்பட போட்டியில் தென்னாசிய பிரிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனுப்பி வைத்த புகைப்படம் தென்னாசிய பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு படங்களில் ஒன்றாகும். உலக அளவில் 6பிரிவுகளா இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தென்னாசிய பிரிவிலேயே இம்மாணவன் அனுப்பி வைத்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் தேங்காய் விற்கும் சிறுவன் ஒருவனை படம் பிடித்து அனுப்பிவைக்கப்பட்டபோது அப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. http://seithy.com/bre…

  4. Sea Tiger Special Commander of the LTTE, Col. Soosai Sunday noon said that around 25,000 civilians injured in the artillery attack of Sri Lanka Army are dead and dying now without receiving medical attention. The LTTE has repeatedly requested the ICRC through Mr. Pathmanathan to evacuate the injured through Vadduvaakal or Iraddaivaaikkaal, but there was no IC response. Within a 2 square kilometre area, there are dead bodies everywhere while the remaining thousands are in bunkers amidst the use of every kind of weapon by Colombo's forces. The SLA is not even allowing the people to flee but prefers to fire at them, Soosai said. Get Flash to see this player.

  5. குருநாகலில் வாகன குண்டு வெடிப்பில் 13 மாணவர்கள் காயம் குருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை வான் ஒன்றில் இருந்து குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.meenagam.org/?p=12210

  6. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் காரணங்கள் நியாயமானது என்ற போதிலும், மாகாணசபை விடயங்களில் தான்ன் தலையிட விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமது ப…

  7. தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர புலம் பெயர தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புலம் பெயர்த் தமிழரகள் …

  8. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் கொண்டு வருவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கா, மற்றொரு மூத்த அதிகாரியை விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த அமெரிக்க அதிகாரி கொழும்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த ஆறு வாரங்களுக்குள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப், மற்றும், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தவாரம், கொழு…

  9. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி நிலக்கோட்டை அருகே ரவி என்பவர் இன்று காலை தீக்குளித்து மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்றிரவு தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி நக்கீரன்

    • 18 replies
    • 2.5k views
  10. சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல – கோத்தா ஆவேசம் [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனியோ, அமெரிக்கத் தூதுவர் சிசன், அதிபர் ஒபாமாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுனரோ அல்ல என்று ஆவேசமாக கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் நிகழ்த்திய உரை குறித்து சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஇதழ் எழுப்பிய கேள்விக்கே அவர், இவ்வாறு கோபமாகப் பதிலளித்துள்ளார். “சிறிலங்காவில் இன்னொரு போர் வரும் என்று வெளிநாட்டு இராஜதந்திரி எதிர்வு கூறுவது சரியானதா? ஒரு தூதுவரின் கடமை இருநாடுகளுக்கு இடையிலான…

  11. யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்…

  12. கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

  13. தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30ம் திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  14. லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கக் கிடைத்த அனுபவத்தை அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த 'வோட்டர்லூ" என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் வெற்றிகளையே சந்தித்துவந்த மகிந்த ராஜபக்க்ஷவின் இறுமாப்புக்கக் கிடைத்த பலத்த அடியாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்துள்ள நிலையிலேயே இவ்வாறான கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். லண்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் வியாழக்கிழமை மகிந்த நிகழ்த்தவிருந்த விஷேட உரை இறுதி வேளையில் இரத்துச் செய்யப்பட்டபோது மிகவும் சங்கடமான ஒரு நிலை மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் எதிரணியினர் மீது ஆளும் தரப்பினர் பாய்ந்துவிழுந்துள்ளார்கள்…

  15. ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது : விக்கினேஸ்வரன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். …

    • 18 replies
    • 979 views
  16. சிறிலங்காவில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். . இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதுஷிகா, தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். . அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். . மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்…

  17. “ஜனநாயகவாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தன்னுடைய கட்சி சார்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தால், அது அவர் கட்சியின் பிரச்சினை என்று எனது கருத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர் என்னையும் சுமந்திரனையும் ஒப்பிட்டு என்னை விட ஒரு மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளதாக தெரிவித்துள்…

  18. அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக…

  19. நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது முன்வைத்த திட்டத்தை அடுத்தே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு கைமாறவுள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக சீனாவிடம் பெறப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் உரிமையை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டத்தை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தி…

  20. ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை! கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும். SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும். மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 …

  21. இதுவரை காலமும் அமைதியாகவிருந்த யாழ் தேர்தல்களம் இறுதிநாளான இன்று சூடுபிடித்துள்ளது. இன்று இரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகமும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இரவு 9 மணியளவில் 2 வான்களில் வந்த சிலரே இத்தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. கற்களால் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதால் ஓடுகள் மற்றும் கண்ணாடி என்பன உடைந்து சிதறியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை அச்சுவேலி , வடமராட்சி, ஆவரங்கால் பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்களது சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

    • 18 replies
    • 2.6k views
  22. உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள். தொடர்புகளுக்கு நேசக்கரம் முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 Sri France – 0033 611149470 Vereinsregister: AZ- VR 20302 Amtsgericht 55543 Bad Kreuznach Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com வங்கியூடாக உதவ விரும்புவோர் - NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein Account Number : 0404446706, Bank code 60…

    • 18 replies
    • 3k views
  23. தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். வல்வை மக்களின் உணர்வு அஞ்சலி அமரர் திரு. இராசேந்திரம் தமிழீழ மாதா பெற்றெடுத்த ஈடு இணையில்லாத் தவப்புதல்வன் தன்மானமொன்றே தகுதியெனக் கொண்டு தலை நிமிர்ந்தோன்.. எத்தனை சோகம் வாழ்வில் வந்தாலும் தளராத தமிழன்.. தலைவர் வழியில் நடந்த தமிழர்கண்டு தன் மனம் மகிழ்ந்தவன் தலைவரைப் போல தன்னரும் மாமனாம் மாத்தந்தை வேலுப்பிள்ளை போல நேர்வழி சென்ற புனித வாழ்க்கை.. பட்டம் பதவி, பகட்டு என எத்தனையோ அருகில் கிடந்தும் எதையும் தொடாது எளிமை வாழ்வு வாழ்ந்த ஏற்றம்.. கற்பொழுக்கத்…

  24. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, காலி முகத்திடலில் வைத்து 19பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததுடன் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. http://www.tamilmirror.lk/141571

  25. ஈராக்கின் அரசை நிர்மூலமாக்க பயன்படுத்திய shock & awe திட்டத்தை நகல் செய்து சிறீலங்காவினாலும் (அவர்களிற்கு மறைமுக ஆலோசனை வழங்குபவர்களாலும்) புலிகளின் நடை முறை அரசை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரு திட்டத்தை பெயரிட்டு சிறீலங்கா விவகாரங்களில் ஆர்வமுள்ள நாடுகளிற்கு (இணைத்தலமை நாடுகள் மற்றும் இந்தியா) பிரேரித்திருந்தது சில ஆண்டுகளிற்கு முன்னர். இந்த திட்டம் எந்தளவிற்கு அந்த நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது பங்களிக்க ஓத்துழைக்க முன்வந்தார்கள் என்பது தெரியாது. shock & awe என்பது 2ஆம் உலகமாயுத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட strategic bombing உம் blitz ஒன்றிணைத்த தற்கால தொழிநுட்பத்தை மய்யப்படுத்திய பேரியல் வசதிகளிற்கு ஏற்ற அணுகு முறையாகப் பார்க்கப்படுகிறது. strat…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.