ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதில்லையென மிரட்டிவந்த ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியைப் பெறுப்பேற்கத் தற்பொழுது இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாவை அலரிமாளிகையில் சந்தித்து, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கவு…
-
- 2 replies
- 2.1k views
-
-
திருமலை மொரவேவாவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் : 3 விமானப்படை அதிகாரிகளும் 4 பொது மக்களும் பலி- அறுவர் காயம் வீரகேசரி இணையம் 1/9/2009 10:56:47 AM - திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 8 replies
- 2.1k views
-
-
http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/11/8ca6b0df_profileofmaithripalasirisena_141121_maithripala_profile_au_bb.mp3 பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். 1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள…
-
- 25 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொல…
-
- 1 reply
- 2.1k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக அதிகாரபூர்வமாக இரத்துச்செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை பேசியதாவது: பிரபாகரன் தனது உரையில் தனிநாட்டை உருவாக்கித் தருமாறு அனைத்துலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசத்துரோக செயல் ஆகக்கருதப்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமான நோர்வே என்ற போலி சமாதான செயற்பாட்டு நாட்டிடமும் இணைத்தலைமை என்று தன்னை அடைய…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படாதிருக்க உறுதிப்படுத்த வேண்டிய வலுவான தேவை எழுந்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க மற்றும் இந்திய நாட்டு இராணுவ பிரதிநிதிகளிடம் கோத்தபாய இதனை தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் பாதுகாப்பு மட்டுமல்ல, பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் நாம் கூடுதலாக அக்கறை செலுத்திவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா பொதுவுடமை நாடுகள் அமைப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பிபிசிக்கு வாக்களியுங்கள் Should Sri Lanka be suspended from the Commonwealth? Should Sri Lanka be suspended from the Commonwealth? PLEASE VOTE "YES" and pass it on...!!!
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவு தாய்வானின் சுதந்திரத்தை ஏற்கமுடியாது அரசாங்கம் உறுதியாக தெரிவிப்பு வீரகேசரி இணையம் - ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்] மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசா…
-
- 6 replies
- 2.1k views
-
-
மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது. அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக…
-
- 11 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி்ன் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த ஓராண்டு நினைவினை முன்னிட்டு புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம். 01. மே18, அதிர்ச்சி, பேரவலம், வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மனித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மை தான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மீதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம். இந்த நம்பிக்கையின் மூலமாக இருந்தது தான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண…
-
- 3 replies
- 2.1k views
-
-
மைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.! இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வர வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- "அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன் இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா - இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தமையானது இரா…
-
- 14 replies
- 2.1k views
-
-
கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ் கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்.அல்லது இனம் இருந்த அடையாளமும் இல்லது போய்விடும் The real culprits behind Sri Lankan war; more than 50,000 killed In Sri Lanka, no access to carnage until victory speech, UN lowers expectations
-
- 1 reply
- 2.1k views
-
-
வன்னியில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.. அங்கு மனிதாபிமான அவலம் என்ற ஒன்றே இல்லை.. ஐ சி ஆர் சியும் ஐநாவும் மிகைப்படுத்திய தகவல்களை வழங்குகின்றன என்று சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் பேச்சாளர்களும் சர்வதேச சமூகத்துக்கு தொடர்ச்சியாக கூறி வந்துள்ள நிலையில்.. இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும்.. ஐநாவும் இணைந்து பல காயப்பட்ட பொதுமக்களை மீட்டு வவுனியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு விடுதலைப்புலிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். காயப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 50 சிறுவர்களும் அடக்கம் என்று ஐநா அதிகாரி கூறி இருக்கிறார். அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசின் கூற்றுக்களை அவர் மறுதலித்திருப்பதோடு.. உண்மையில் வன்னியில் பெரும் மனிதப் பேரவலம் த…
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும் நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள்…
-
- 21 replies
- 2.1k views
-
-
http://youtu.be/mLfD6AZcels நியானி: காணொளி சீராக்கப்பட்டுள்ளதுடன் தலைப்பும் திருத்தப்பட்டுள்ளது.
-
- 24 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம் 18 Jan, 2025 | 12:44 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற…
-
-
- 27 replies
- 2.1k views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/100928_nanthans_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 2.1k views
-
-
காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது. இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன் இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும்…
-
- 24 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் "சர்ச்சை"கள்! கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - "வைகோ"வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் - கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் - புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்க…
-
- 35 replies
- 2.1k views
-
-
Provisional Transnational Government of Tamil Eelam is a Dangerous Exercise by Dr. Rajan Hoole On 15th June S. Pathmanathan, the most prominent of surviving members of the LTTE announced the establishment of a Provisional Transnational Government of Tamil Eelam (PTG), pointing to the danger to the ‘very physical survival of Tamils’ and the absence of ‘political space to articulate their legitimate political aspirations’ in Lanka. This was followed the next day by V. Rudrakumaran, heading the committee of 13 leading advocates of the LTTE for the formation of the PTG. There was a note of irony in his saying that the committee would function within democratic principl…
-
- 13 replies
- 2.1k views
-
-
காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல் -கலைஞன்- இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது …
-
- 4 replies
- 2.1k views
-