ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/94876
-
- 52 replies
- 6.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
தமிழக மாணவர்களின் ஈழ ஆதரவு குரலுக்கு நன்றி தெரிவித்தும் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளார்கள். எதிர்வரும் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/28332/64//d,fullart.aspx
-
- 0 replies
- 365 views
-
-
மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு, இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம். கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது. பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத…
-
- 6 replies
- 2.2k views
-
-
http://img162.imageshack.us/img162/7651/ayanboycotth.pdf இது தொடர்பான பதிவும் கருத்தாடலும் வாழும் புலம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினரால், இன்று கோரிக்கைககள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த மகஜர்களை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரிடமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினர் இன்று வழங்கி வைத்தனர். முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் ஆதரவு | Virakesari.lk
-
- 2 replies
- 472 views
-
-
இலங்கை சீனாவிடமும், இந்தியாவிடமும் கடன் பெற்றுக் கொள்ளத் திட்டம் ‐ மைத்திரிபால சிறிசேன : இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் கடன் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை கிடைக்கப்பெற சில காலம் எடுக்கலாம் எனவும், இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நட்புறவு நாடுகளிடம் கடன் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியாவிடம் கடன் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே அரசாங்கப் பிரதிநிதி…
-
- 1 reply
- 791 views
-
-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்…
-
- 18 replies
- 2.6k views
- 1 follower
-
-
காணாமலாக்கப்பட்டோர் அலுவலக தலைவர் நியமனத்தில் தலையிடுங்கள் – ஐ.நா.விடம் சந்தியா 12 Views இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளதாவது; 2010ஜனவரி 24 ம் திகதி பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட அரசியல் கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி நான். 2010 முதல் நான் எனது கணவர் காணாமல்போனமை…
-
- 1 reply
- 375 views
-
-
சுவிஸ் நாட்டின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தமிழர்கள் நடத்திவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு - தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்…
-
- 0 replies
- 315 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 741 views
-
-
அரசியல் நடத்துவதற்காக இராணுவப் பிரதேசங்களுக்குள் அரசியல்வாதிகளை அனுமதிக்க முடியாது என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துரசிங்க தெரிவித்துள்ளார். இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களையும், கூட்டமைப்பு எம்.பிக்களையும் சில இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களுக்கு காணிகள் சுவீகரிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் பிரசுரங்கள் கடந்த வாரம் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளிலும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. யாழ் விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்…
-
- 1 reply
- 737 views
-
-
தனித் தமிழீழத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்:தென்னாபிரிக்க எம்.பி on 22-04-2009 07:02 தனித் தமிழீழத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தென் ஆபிரிக்க ஆளும் கட்சியான ஏ.என்.சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா நெஜிகெல்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:- தனித் தமிழீழத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். மேலும், இலங்கையில் நிரந்தர யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதன் மூலம் தமிழர் உரிமைகளை மறுக்க முடியும் என இலங்கை அரசு கருதுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் இலங்கை ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன…
-
- 1 reply
- 522 views
-
-
இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்திய நால்வர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜிவ்ரி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யவென கடல்வழியாக எடுத்து வரப்பட்ட 101 கிலோ 850 கிராம் கஞ்சாவுடன் 6 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதில் துண்டுக்காய் பாம்பண் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேரும் வேலணை கிழக்கைச் சேர்ந்த 2 பேருமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இது கேரளக் கஞ்சாவினை விட அதிவிசேடமானது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பகுப்பாய்வு செய்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து காஞ்சாவினை கடத்தியவர்கள் அனைவரும் 30 வயத…
-
- 0 replies
- 260 views
-
-
(நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 46 ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நில…
-
- 2 replies
- 529 views
-
-
போர் நடக்கும் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு 3ம் தரப்பொன்றிடம் சரணடையக் கேட்டுள்ளது. யார் அந்த 3ம் தரப்பு.. அமெரிக்காவோ.. இந்தியாவோ...???! நோர்வேயா..??! சரணடையும் எல்லாருக்கும் அமெரிக்கா அல்லது கனடா அல்லது பிரிட்டன் குடி உரிமை வழங்கவும் முன் வரணும்..! முடியுமா..??! எல்லாரும் தமிழரைச் சரணடையச் சொல்லினமே தவிர.. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முன் வருகினம் இல்ல...! Surrender to a third party- US tells LTTE The United States has called on the LTTE to lay down their arms and surrender to a third pa…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதி அமைச்சராக ரவி தெரிவு ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதனிலை நிதி சஞ்சிகைகளில் ஒன்றான தி பாங்கர் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை ஒர் புதிய பொருளாதாரப் பரிமாணம் நோக்கி ரவி கருணாநாயக்க நகர்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1.5 பில்லியன் டொலர்கள் நிதியையும் சர்வதேச நாணய நிதியத்திடம் ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/13201
-
- 0 replies
- 294 views
-
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்…
-
- 5 replies
- 939 views
-
-
போர்ப் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆபத்தான நிலைமையில் இருப்பதால், விடுதலைப் புலிகளுடனான போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தம்முடைய உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் அரசாங்கம் கோரவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்திடம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென அரசாங்கம் கோரினால் அது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 270 views
-
-
செங்கலடி பிரதேச செயலகத்தின் சவுக்கடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தனியார் காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் முயற்சியில் அங்கு வாழும் மற்றும் ஒரு இனத்தவர்கள் முற்பட்ட நிலையில் இன்றைய தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கிராம சேவகர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அந்த பகுதியில் வாழும் வேறு இனத்தவர்கள் போலியான காணி உறுதிப் பத்திரங்களை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தங்களின் காணிகளை பார்க்கச் சென்றால் துப்பாக்கியால் சுடுவேன் என அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், பல தடவைகள் குறித்த காணி விடயம் தொடர்பாக பல்வேறு…
-
- 1 reply
- 424 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற…
-
- 6 replies
- 760 views
-
-
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் 2012ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை பௌத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுவதாகவும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய செயற்பாடானது அங்கு ஒருவிதமான சமூக பதற்றத்துக்கு வழி செய்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் சில பௌத்தர்கள் மத்தியில் சகிப்பின்மையும், பக்கசார்பும் வளர்ந்துவருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்திய நில…
-
- 0 replies
- 499 views
-
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர் 4 Views ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனா…
-
- 2 replies
- 660 views
-