ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களால் உள்வாங்கப்படுகின்றார்களா, ஈழத் தமிழர்கள்? [Tuesday 2014-07-15 12:00] மாமனிதர் சிவராம் அவர்கள் ஒருமுறை கூறியிருந்தார் 'விடுதலைப் புலிகளை இந்தியா அழிக்க முயலுமானால், அது குளவிக் கூட்டிற்குக் கல் எறிந்த கதையாகிவிடும். போர் நிபுணத்துவமும், ஆயுதங்ளைக் கையாளும் ஆற்றலும் உள்ள அவர்களால் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்' என்று. இந்த யதார்த்தம் இந்திய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு முன்னால் எடுபடாமலேயே போய்விட்டது. இந்தியாவே, ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பேரழிவுகளுக்கும் மூல காரணம் என்பதை அத்தனை தமிழர்களும் தெரிந்தே வைத்திருந்தாலும், தமிழகத்தின் உறவினைத் தாண்டி அவர்களால் இந்தியாவுக்கு எதிராக எதனையும் ச…
-
- 0 replies
- 563 views
-
-
யாழ். கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் By Vishnu 14 Oct, 2022 | 11:59 AM யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் இன்று (14) வெள்ளி காலை 7.30 மணியளவில் ஆரம்பித்தது. இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 559 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடை பாரதூரமான தவறு: உல்ப் ஹென்றிக்சன் சாடல் [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 16:37 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சூழ்நிலைக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையே காரணம் என்று ஓய்வுபெற்றுச் செல்லும் யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரேத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: "விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மே மாதம் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக…
-
- 0 replies
- 757 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கை…
-
- 5 replies
- 2k views
-
-
கண்டி வன்முறை: மோதலும் இணக்கமும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான தாக்குதல்களில் இஸ்லாமியர்களின் வீடுகளும் சொத்துக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது, பல சிங்களர்கள் தங்கள் அண்டைவீட்டு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள். Image captionதையூப். அன்றைய தினத்தை மிகத் தெளிவாக நினைவு கூர…
-
- 0 replies
- 402 views
-
-
தங்கையை 13 வயது அக்கா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று மொனராகலை படல்குபுர பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் பதிலா பானு (வயது 6 ) என்ற சிறுமியே கத்திக்குத்துக்கு இலக்காகி படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அக்கா - தங்கை இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடே இக் கொலைக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மரத்தில் இருந்து விழுந்ததாக கூறியே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை சந்தேகநபரான 13 வயது சிறுமி கைதுசெய்யபட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=121343…
-
- 2 replies
- 624 views
-
-
அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான். வெதுப்பியை வேகவைக்கும் அந்தப்…
-
- 0 replies
- 979 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா சென்று திரும்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம்தான் தீர்வுகாண முடியும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது. புதுடெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் மீண்டும் தமிழகத்திற்கு செல்வதற்கு முன்னர் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார். இந்திய விஜயம் குறித்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வட மாகாண முதலமைச்சரை சந்திக்க விருப்புவதன் பின்னணி என்ன என்பது குறித்தும் எமது செய்தியாளர் கேட்டபோது, வலுவிழந்துள்ள மாகாண சபையை இந்தச் சந்திப்பின் மூலம் வலுப்பெற…
-
- 0 replies
- 892 views
-
-
''அரை மணி நேரம் கழித்து பேசாவிட்டால், நான் உயிரோடு இல்லை!'' 'புலி' நடேசனின் கடைசி நிமிடங்களைச் சொல்லும் மகன்! 'மனித குலத்தையே குலை நடுங்கவைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. ரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித் தனியாகத் தொங்கத் தொங்க... ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க... எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள ராணுவம்.’ - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு! முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில…
-
- 3 replies
- 948 views
-
-
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. http://malarum.co…
-
- 24 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருட்டு! 08 NOV, 2022 | 01:31 PM கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதா…
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இங்கு 35.9 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு கடந்த காலத்தில் இங்கு இடம்பெற்ற போரே காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின்படி நாட்டில் குழந்தைகளின் போசாக்கின்மை கடந்த தசாப்தத்தில் 17.3 வீதத்தில் இருந்து 21.1 வீதமாக அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18.4 வீதமாக போசாக்கின்மை குறைபாடு இருந்தது. இதேசமயம் நிறைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு இலங்கையில் 22.8 வீதமாக உள்ளது எனக் கூறிய அவர் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை திருப…
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை என இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து தொலை தூரத்தில் அமெரிக்கா இருப்பதாலும், இலங்கை குறித்த அதிக கவனத்தை அந்த நாட்டு மக்கள் செலுத்தாததாலும் தற்போதும் அவர்களது நிலைப்பாடு மாறவில்லை என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். பத்திரிகைகள் வாயிலாக அறியும் விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை குறித்த தமது வெளிப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளது. இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான காரணங்களாக, இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும், மக்கள் அந்த நாடு குறித்து அதி…
-
- 1 reply
- 641 views
-
-
சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக வாக்களித்த இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தேவையில்லை எனக் கூறப்பட்டாலும் இவர்களை நாட்டு மக்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக…
-
- 0 replies
- 169 views
-
-
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்! 2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவனான இவர், 8ஆம் தரம் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9 தரத்தில் க பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இதற்கமைய உயர்தர பிரிவில் இவ…
-
- 0 replies
- 396 views
-
-
வவுனியாவில் துணை இராணுவக்குழுவினரால் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 05:22 ஈழம்] [ம.சேரமான்] வவுனியாவில் மூன்று இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமலங்குளத்தில் முச்சக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்த ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நபர் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொல்லப்பட்டோர் வைத்திலிங்கம் மகேந்திரன், நடராசா நவராசா, நவநீதன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்…
-
- 0 replies
- 900 views
-
-
தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும். ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இத…
-
- 17 replies
- 1.7k views
-
-
நேற்று உலக ஜனநாயக தினம்.. இலங்கையில அந்த தினத்தக் கூட கொண்டாட ஜனநாயகம் இல்லை எண்டுறதயும் இலங்கைத் தீவில ஜனநாயகத்த திண்ணுறது ஆர் எண்டுறதயும் சம்பந்தப்பட்ட ஆக்கள் காட்டிச்சினம். பேய் ஆண்டால் சாஸ்திரங்கள் பிணம் தின்னும் எண்டுற நாட்டில ஜனநாயகம் மருந்துக்கும் இல்லைக் கண்டியளோ? நேற்று செப்டம்பர் 15... உந்த ஜனநாயக தினம் ஒன்றிலதான் பாருங்கோ திலீபன் உண்ணா விரதம் இருந்தவர். விடுதலைப் புலிகளில விமர்சனம் இருக்கிறவையள்கூட புலிகளின்ட தியாகத்த மதிக்கிறினம்... ஓ.. திலீபன்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு அகிம்சைப் போராட்ட வடிவம். அது ஒரு ஜனநாயக முறை. அதுக்கு சிங்கள அரசும் இந்திய அரசும் என்ன செய்ததது? எங்கட வராற்றில ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை எண்டுறதுக்கு உத மாதிரி ஆயிரம…
-
- 0 replies
- 430 views
-
-
லண்டனில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.! உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்தார். தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற…
-
- 1 reply
- 586 views
-
-
சீன அதிபருடன் கொழும்பு வந்த நீர்மூழ்கி, போர்க்கப்பல்! – மகிந்தவிடம் வினவுவார் மோடி. [sunday 2014-09-21 07:00] சீன ஜனாதிபதி இலங்கை வர முன்னதாக கொழும்பு துறைமுகத்திற்கு அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும், போர்க்கப்பலும் வந்தது, இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி- மகிந்த சந்திப்பின்போது இது குறித்தும் பேசப்படலாம் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவது உறுதியாகி விட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந…
-
- 4 replies
- 873 views
-
-
இன்று இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் தாக்கப்படுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனால் உள்ளூர்ப் பத்திரிகையிலேயே 10-ஆம் பக்கத்தில் வெளியிடுகிற அளவுக்கு இங்கு இது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. ஆனால் இதற்காக அந்த நாளேட்டின் மீது குறை கூற ஏதும் இல்லை. பங்குச் ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
16 பில்லியன் ரூபாய் சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க தீர்மானம்? னி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பந்துல குணவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் குறித்த தகவல்களை தயார் செய…
-
- 0 replies
- 118 views
-
-
லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – 31 ஜனவரி 2011 அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – கொழும்பு ராஜகிரியவிலுள்ள லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம் இன்று (31.01.2011) அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது. 'அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று தீ மூட்டியுள்ளனர். அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' என அது தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கான வலையமைப்பின் தகவல் வட்டாரங்கள் இச்செய…
-
- 5 replies
- 857 views
-
-
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் குழு மன்னார் கிராமங்களில் மக்களின் பிரச்சினைகள் குறித்து அராய்வு! [Wednesday 2014-10-01 08:00] வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்றுக்காலை யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், …
-
- 0 replies
- 442 views
-
-
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமான பாதுகாப்பு பேச்சுவார்த்தை இந்த மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிறிலங்காவின் சார்பில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், இந்தியாவின் சார்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர். கடந்த வருடமும் இந்த பேச்சுவார்த்தைகள் புதுடில்லியிலேயே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/34350/57/10/d,article_full.aspx
-
- 0 replies
- 242 views
-