Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார. மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அர…

  2. செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம் வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள். பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள் இவர்கள…

  3. தமிழ் மக்களின் பிரச்சினை நியாயமானது: விக்கிலீக்ஸ் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய, பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது. அதில் மே மாதம் 21 ஆம் திகதி 2009 இல் அனுப்பபட்ட செய்திகளின் படி, போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷ சமாதானத்தை கொண்டுவருவவார் என்பது இன்னமும் தொலைவிலேயே உள்ளது. விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றாலும் தமிழ் மக்களுடைய பிரச்சி…

    • 2 replies
    • 1.8k views
  4. வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும் வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்…

    • 11 replies
    • 1.8k views
  5. வடக்கு முன்னாள் முதலமைச்சரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டது மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு , கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்று 24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையில் தற்போது திடீ…

  6. சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…

  7. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் - ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதிகளின் எந்தப் பிரதேசத்தில் பிரபாகரன் மறைந்திருக்கின்றார் என்பது குறித்து தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியதென ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்…

  8. பதினான்கு வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையாகிய இரத்தினசிங்கம் சிவநாதன் என்பவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அவரது மகளாகிய சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குவதுடன், தண்டப் பணமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேசிய சிறுவர் பாதுகா…

  9. மகிந்தரின் புதல்வர் நாமல் இராஜபக்‌ஷவின் சுவிஸ் வங்கி கணக்கில் 2000 மில்லியன் டொலர்கள் Thursday, September 1, 2011, 19:03 போர்க்குற்றவாழி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளை நடத்தி வருபவருமான நாமல் ராஜபக்ஷவின் சுவிஸ் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் மில்லியன் டாலர்கள் அளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரச சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணமும் மற்றும் கப்பம்;அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணமுமாகவே இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=25660

  10. March 9th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்றுமில்லாத எதிர்பார்ப்பை சிறீலங்கா தொடர்பாக இம்முறை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்கத் தவறிய நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் முன்னால் தன்னையே தீயாக எரித்து முருகதாசன் அதன் கண்களைத் திறக்க முயன்றான். ஆனாலும், பாராமுகமாகவே இருந்த ஐ.நா. மனித உரிமைகள் அவை, அதன் பின்னர் டப்ளின் தீர்ப்பாயமும், ஐ.நா. நிபுணர் குழுவும் ஆதாரபூர்வமாக சிறீலங்காவின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நிரூபித்துவிட்ட நிலையிலும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவ…

  11. யாழ். கடல்நீரேரியில் மோதல் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது. யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். படையினரின் எறிகணை வீச்சு…

    • 2 replies
    • 1.8k views
  12. இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ராஜபக்சேவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்ரிபால சிறிசேன போட்டியிடுகிறார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே அரசின் மூத்த அமைச்சராகவும் இருந்தவர். தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவுடன் பொதுவேட்பளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்படி ராஜபக்சேவுக்கு எதிராக ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது அதிபர் தேர்தலை பரபரப்பாக்கி இருக்கிற…

  13. சிறீலங்கா அரசு கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது அதுபற்றி அக்கறை கொள்ளாது அதற்கு பணமும், ஆயுதங்களும் வழங்கிய நாடுகள் பல. ஆனால் இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன் சகல நாடுகளும் சிறீலங்காவை தனியே விட்டுவிட்டுவிட்டு பெட்டிப் பாம்பாக ஒழிந்துள்ளன. இந்தியா, சீனா, பர்மா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் உறைநிலை மௌனம் காக்கின்றன. சனல் 4 தொலைக்காட்சியில் 40.000 அப்பாவிப் பொதுமக்களை ஓர் அரசு கொன்று குவித்த இலட்சணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவை வெளிப்படையாக ஆதரித்து தமது முகத்தில் கரிபூச நாடுகள் முன்வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வினை விதைத்தான் வினை அறுப்பான் தினை விதைத்தான் தினை அறுப்பான் என்ற நிலைக்கு சிங்…

  14. கீழே மொட்டைகள் எதோ தெமிழு எழுதிப்போட்டு (கீல வடக் நாய்) குந்தியிருக்கிறார்கள்!! விளங்கியவர்கள் கூறுங்கள்!! ;)

    • 6 replies
    • 1.8k views
  15. "வாகரையைப்போல் வன்னியைக் கையாள முடியுமா?" மனோகரன் மீண்டும் ஒரு வாகரையைப்போல வன்னியையும் ஆக்குவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக நிலைமைகளை அவதானித்துவரும் ஒரு நண்பர் சொன்னார். அண்மையில் வன்னி மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன. வன்னியைச் சுற்றியும் வன்னிக்கு உள்ளேயும் தாக்குதல்களை அது தீவிரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு வகையில் வன்னி மீதான பெரும் படையெடுப்பை இலகுவாக்குவதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கிறது. அதேவேளை ஒரு தொடரான நீண்டகால அடிப்படையிலான போர் நடவடிக்கையாகவும் இது கொள்ளத்தக்கது. ஏனென்றால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வன்னி மீதான போரை நடத்தாமலிருக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களிருக்கின்றன. ஒன்று வன்னி…

  16. மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடி மோதல்கள் படையினரின் தாக்குதலிற்கு பதிலடி. மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடிமோதல்கள் நடைபெற்றுள்ளன.நேற்று மாலை ஆணைமுனையில் இருந்து பனிச்சம்கேணியை நோக்கி சென்ற இருபடகுகளை நோக்கி மாங்கேணி சிறீலங்கா படைமுகாமிலிருந்து எறிகணைத்தாக்குதலும் கனரக துப்பாக்கி தாக்குதலும் நடைபெற்று உள்ளது. இதற்கு பதிலடியாக படகில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மேலதிக 6 படகுகள் மாங்கேணி படைமுகாமை நோக்கி பாரிய தாக்குதலை தொடுத்தது. இதனை அடுத்து படகுகள் அணைத்தும் பாதுகாப்பாக பனிச்சம்கேணியை சென்றடைந்தது. படகில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் படையினர் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக…

  17. யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) சபையில் பிர­தமர் ரணில் அழைப்பு யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய சகல இலங்­கை­யர்­களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அர­சாங்­க­மாக நாம் அனைத்து மக்­க­ளுக்கும் இந்த அழைப்பை விடுக்­கின்றோம். நாட்­டுக்கு திரும்பி வரும் மக்­க­ளுக்கு சகல உத­வி­க­ளையும் வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­க­ளையும் செய்­து­ கொ­டுக்க தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், யுத்­…

  18. முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ…

  19. இறுக்கமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் களமுனை மாற்றங்களும் இலங்கையின் பொருளாதாரம் பாரியதொரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. அதன் பொருளாதார கட்டமைப்பை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு தற்காலிக நிலையே தவிர முற்றான மீட்சி அல்ல என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. ஏனெனில் இலங்கை அரசின் தற்போதைய நிதி நெருக்கடிகளை தணிப்பதற்கு 25 பில்லியன் டொலர்கள் தேவை. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. தனது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் அது சமர்ப்பித்திருந்தது…

    • 2 replies
    • 1.8k views
  20. தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…

  21. ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே கல்லில் எத்தனை காய்களை விழும்? தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் யாழ்ப்ப…

  22. ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம் [Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk] சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. …

  23. இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழர்கள் நாள்தோறும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். சிங்கள ராணுவத்தின் முப்படைகளும் தமிழர்களை வாழ விடாமல் குண்டு வீசி படுகொலை செய்து வருகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் / அமைப்புகள் சிங்கள இனவெறி போரை எதிர்த்துப் போராடி வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இராணுவ தளபதி பொன் செகா தமிழர்களை 'அரசியல் கோமாளி' என்று திமிராக இழிவு படுத்தியுள்ளான். இந்த அவமானத்தை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே…

    • 2 replies
    • 1.8k views
  24. திங்கள் 13-08-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பி…

  25. சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பென்சேகாவின் உலங்குவானூர்தி பலாலியில் தரையிறங்கும் நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சரத் பொன்சேகாவின் பயணம் தாமதமாகியதுடன் தாக்குதலின் பின்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தனது பயணத்தை கைவிட்டுள்ளதாகவும் படைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.