ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமெரிக்காவிடம் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது தவறாம்! அரசியல் நாகரிகம் குறித்து பேசுகிறார் வாசுதேவ! [Tuesday 2015-05-05 20:00] தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள்ளே தீர்வைக் காண வேண்டுமே தவிர அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது அரசியல் நாகரிகம் அல்ல முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.தே. கட்சி ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க ஆட்சி இலங்கையில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென்பதை ஆராயவும் அதற்கான உதவிகள…
-
- 6 replies
- 588 views
-
-
அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் ராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கப்படும் அபாயம் அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவிடம் இரகசியமாகக் கையளிக்கப்பட்ட- நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயற்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கோர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஐதேக கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடந்த மே 18ம் நாள் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியை சந்தித்தபோது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சமர்ப்பித்த செயற்திட்ட அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கோ பொதுமக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர…
-
- 1 reply
- 409 views
-
-
கொலையான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் மகள், கலிபோர்னியாவில், கோத்தாவுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்ட கீழ் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட முடிவினை எதிர்த்து மேல்நீதிமன்றில் லசந்த மகள் தொடர்ந்த வழக்கினை விசாரித்து, தள்ளுபடி செய்யப்பட்டதனை தள்ளுபடி செய்து விட்டனர். ஆக, இந்த வழக்கானது மீண்டும் விசாரிக்கப்படக் கூடியதான ஒரு நிலைமையில் உள்ளது. இது குறித்து கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த செய்திக்கு 5 பின்னூடடம் வந்து இருந்தது. கோத்தா அமெரிக்க குடிமகன் இல்லாத படியால் அமெரிக்கா ஒன்றுமே பண்ண முடியாது என்றும் ஒன்றும், அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை வழக்கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 01:33 GMT ] [ கார்வண்ணன் ] போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், ´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது …
-
- 2 replies
- 1.4k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 02:32 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், இதுவரை சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்: அதிரடி தகவல் . .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சரத் பொன்சேகா தனது அமெரிக்க பிரஜா உரிமைக்கான பத்திரத்தை காலநீடிப்பு செய்வதற்காக அங்கு சென்றிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டி…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூறிய கருத்து பொய்யானது என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரீஸ், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போதே இதை தெரிவித்துள்ளார். நாட்டின் மற்ற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் அளவுக்கு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் வளர்ச்சி 22.9 சதவீதம் வளர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி கிளிண்டனுடான கூட்டத்தின் போது, நாட்…
-
- 0 replies
- 696 views
-
-
அமெரிக்காவின் தடையை அடுத்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா, ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெயை சுத்திகரிப்பதற்காக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையைப் புதுப்பிக்க 210 பில்லியின் ரூபாவை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் துணையுடன் நிறுவப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தற்போது சிறிலங்கா தனது எண்ணெய் தேவையில் 95 வீதத்தை ஈரானிடம் இருந்தே பெற்று வருகிறது. ஆனால் அமெரிக்காவின் தடைகளை அடுத்து ஈரானிடம் இருந்த எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 385 views
-
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் புலம்பெயர் இலங்கை பிரஜைகள் ஜெனிவாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் http://tamil.dailymirror.lk/--main/104404-2014-03-24-17-29-49.html கூலிக்கு நல்ல மாரடிக்கின்றார்கள் .... இந்த ஏற்பாட்டுக்காக சிறிலங்கா அரசாங்கம் பெரும் தொகை பணத்தை செலவு செய்திருக்கின்றார்கள் இதனுடைய பலாபலன்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில், இலங்கை புறக்கணிக்கப்பட்டமை ஆச்சரியமில்லை – UNP ஐக்கிய அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும் குற்றம் சாட்டியது. இந்த தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்களோ பொறுப்பென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு …
-
- 0 replies
- 229 views
-
-
அமெரிக்காவினால்... பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட, நாடுகளின் பட்டியலில்... இலங்கை!! அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து …
-
- 2 replies
- 308 views
-
-
அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை தவிர அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தினையும் தான் ஆதரிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மேலும் ‘சோபா’ உடன்பாடு குறித்து முதன் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அத்தோடு அன்று அமெரிக்காவுடன் பேச்சுவார…
-
- 1 reply
- 422 views
-
-
அமெரிக்காவின் "துணிச்சல் நிறைந்த பெண்களுக்கான' விருதை வென்றெடுத்தார் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் [27 - March - 2009] பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியதற்காக இலங்கைத் தமிழ் நீதிபதி ஒருவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடமிருந்து "துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் (ஹிலாரி கிளின்டன்) துணிச்சலான பெண்களுக்கான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிவயுள்ளார். உலகின் பலநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரக…
-
- 2 replies
- 1.4k views
-
-
28 JUN, 2024 | 06:06 PM கோல் ஃபேஸ் ஹொட்டேலில் ஜூன் 27ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் ஏற்பாடு செய்த ஒரு கொண்டாட்ட வைபவத்துடன் அமெரிக்க சுதந்திரத்தின் 248ஆவது ஆண்டு நிறைவை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. புகழ்பெற்ற இலங்கை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக, சிவில் சமூக மற்றும் ஊடகத்துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன், இவ்வைபவத்தின் பிரதம விருந்தினரான சுற்றுலா, காணிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அமெரிக்கத் தூதுவர் வரவேற்றார். நீண்டகாலம் நிலைத்திருக்கும் ஜனநாயக உணர்வையும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வலுவான பங்காண்மையினையும் இவ்வருட அமெரிக்க சுத…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் 4 சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை வருகின்றனர் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுபாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் தந்திரோபாய கற்கை நிலையத்தின் அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லரோக்கோ ஜனவரி 15 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தக திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ஹொலி வினியார்ட் ஜனவரி 17 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் ஜனவரி 18 முதல் 24 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்…
-
- 1 reply
- 620 views
-
-
அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா? சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது. சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது. இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் 51ஆவது மாநிலமான இலங்கையை பார்வையிடுவதற்கு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் வருகிறார். இவரது வருகைக்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் புலி ஆதரவாளர்களைச் சந்திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்களத் தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஐ…
-
- 2 replies
- 760 views
-
-
அமெரிக்காவின் Massachusetts State Houseசில் 'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் திரையிடப்படுகின்றது ! [Wednesday, 2011-09-14 10:43:59] சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனக்கருவறுப்பின் சாட்சியமாக விளங்கியுள்ள, சிறிலங்காவின் கொலைக்களம் எனும் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படும் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சியாளர் மாளிகையில் திரையிடப்படுகின்றது. Amnesty International ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கெடுப்புடன் செப்ரெம்பர் 14 புதன்கிழமை திரையிடப்படவுள்ள இவ்ஆவணப்படம் குறித்தான முன்னறிவிப்பாக மாநிலத்தின் முக்கிய ஊடகங்களில் விவரம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 614 views
-
-
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா: சம்பிக்க ரணவக்க காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது செல்வாக்கை நிலைநாட்டும் நோக்கத்தின் ஒரு முயற்சியாகவே இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதாக மேற்குலக சதிகள்; அவற்றை நாடு எதிர்கொள்வது எப்படி…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - அமெரிக்கத் தூதுவர் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 10:08 GMT ] [ கார்வண்ணன் ] [கொழும்பில் நேற்று அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தில் நிகழ்த்திய உரையின் முதல் பகுதி இது.] சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து உரையாற்றும்படி கேட்கப்பட்டுள்ளேன். முதலில் நாங்கள் சிறிலங்காவுடனான, சிறிலங்கா மக்களுடனான எமது உறவை வெகுவாக மதிக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது குறித்தும், சில வாரங்களுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இரண்டாவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்தது ஏன் என்பது க…
-
- 2 replies
- 594 views
-
-
அமெரிக்காவின் அடுத்த தடை U.S. imposes sanctions on Tamil Foundation 11 Feb 2009 17:52:08 GMT Source: Reuters WASHINGTON, Feb 11 (Reuters) - The U.S. Treasury imposed sanctions on Wednesday on a Maryland foundation it accused of being part of a support network for the Tamil Tiger rebel group battling the Sri Lankan government. The sanctions against the Tamil Foundation, which Treasury said was a front for the Sri Lanka-based Liberation Tigers of Tamil Eelam, allows the U.S. government to freeze assets the foundation may have in the United States and prohibits U.S. banks and consumers from conducting business deals with it. "The LTTE, like other terrori…
-
- 13 replies
- 2.9k views
-