ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
கடந்த 25 வருடத்திற்கு மேலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாம் யாவரும் அறிந்து கொண்ட, உணர்ந்து கொண்ட, கண்டறிந்த உண்மை என்னவெனில் - புலம்பெயர் நாடுகளிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் உண்மைச் சம்பவங்கள், புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கைகளுடன் தமது வேலைத் திட்டங்களை தமிழீழ மக்களை அடக்கி ஆளும் சிறிலங்கா அரசு மீது மேற்கொள்ளுகின்றனர். ஆனால், தொடர்ந்து தமிழீழ மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகள் அடங்கிய சுயநிர்ணய உரிமையை நசுக்கி வரும் சிறிலங்கா அரசுகள், அரசு என்ற அடிப்படையில் தமது பொய்யான, நீதி நேர்மையற்ற சர்வதேச பிரச்சாரங்களை மிக இலகுவாக தமது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கு ஆகியவற்றுடன் பல கோடி பணத்தைச் செலவழித்து உண்மைகளை…
-
- 6 replies
- 2k views
-
-
எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர! உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை 2010-01-11 07:22:25 யாழ்.பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு தமிழ் மக்களுக்கு கௌரவமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் தமிழில் பேசுகையில் மேலும் கூறியதாவது: வன்னியில் இருந்து மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். தற்போது அவர்களை நாம் மீளக்குடியமர்த்த ஆரம்பித்து அந்தப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அகதிகள் யுகம் இனிம…
-
- 6 replies
- 934 views
-
-
“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” June 26, 2022 வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, “பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக…
-
- 6 replies
- 524 views
- 1 follower
-
-
தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம். கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த டக்கு கூறியுள்ளார். இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மீனவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 30 படகுகளில் சென்ற 120 இந்திய மீனவர்களை சுற்றிவளைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்திய மீனவர்களை தமது படகுகளில் ஏற்றியே தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து இறால், மற்றும் வலைகளை பறித்துக் கொண்டு துரத்தி விட்டதாகவும் பிரிஐ தெரிவித்துள்ளது. அதேவேளை இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது. அப்படியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும் இது சிற…
-
- 6 replies
- 1k views
-
-
வடக்கு வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான பணம் சேமிப்பில் உள்ளதாக ஸ்ரீ லங்கா பிரதமர் தெரிவித்து உள்ளார். அதே நேரம் இங்கே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வருமானம் இல்லாமல் நுண்கடன் போன்ற வழிகளை நாடி பின்னர் தற்கொலை செய்யும் நிலைக்கும் போகிறார்கள். இந்த வங்கியில் உள்ள பணத்தை எப்படி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்? பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டில் இடும் சாத்தியம் இருந்தாலே சேமிப்பில் வைத்தவர்கள் பணத்தை எடுத்து தருவார்கள். ஆகவே இவ்வாறாக, பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை என்று அடையாளம் காண யாழ் களம் உதவுமா?
-
- 6 replies
- 1.3k views
-
-
வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…
-
- 6 replies
- 1.6k views
-
-
குருணாகலில் வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – கடைகள் அடைப்பு குருணாகல் வைத்தியருக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவருக்கெதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில், பௌத்த குருமார், பாதிரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குருநாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது, வைத்தியர் ஷாபி மீதான விசாரணைகளை முன்னெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்க போர் விமானங்களை இயக்கும் இஸ்ரேல் விமானிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "புயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் எப்-16ஐ ரக அமெரிக்க விமானங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ரக விமானங்களை ஓட்டும்போது விமானிகள் அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் விமானிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க.. http://www.ajeevan.ch/content/view/1320/1/
-
- 6 replies
- 2.3k views
-
-
இராணுவமே வெளியேறு! எங்கள் நிலத்தை நாங்கள் ஆளவேண்டும்: கிளிநொச்சி மேதினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த மக்களுடைய நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்து கொண்டு, மீள்குடியேற விடாமல் அடாவடி புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நாங்கள் இந்த மே தினத்தில் ஒரு அறைகூவலை விடுக்கின்றோம். இராணுவமே வெளியேறு, யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாங்கள் எங்கள் நிலத்தை ஆழ வேண…
-
- 6 replies
- 939 views
-
-
அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 09 ஜனவரி 2016 தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான சபையாக புதிய அரசியலமைப்புச் சபை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நியாயமான தீர்வொன்றை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சம்பந்தன் அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் கூட்டமைப்பு ஏற்கும் என எவரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பு சபையாக மாறுவது தமிழ் ம…
-
- 6 replies
- 797 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஷாத் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்றைய தினம் திங்கட்கிழமை(2) காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 'கொரோனா' தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ,சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னால் அமைச்சர் ரிஷாத் …
-
- 6 replies
- 708 views
-
-
ஒரு போராட்டம் நேரடியாக பெறும் வெற்றிகளையே பலர் வெற்றி என்று பேசுவதுண்டு, ஆனால் உண்மையானதும் காத்திரமானதுமான வெற்றி மறைமுகமாகவே தன்னை அடையாளம் காட்டும். அந்தவகையில் ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஓர் எலும்புக்கூடு என்று சொல்லப்பட்டாலும் அந்தத் தீர்மானம் வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் பல. 01. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்டம் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாதளவுக்கு தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. 02. என்ன விலை கொடுத்தாலும் ஏற்படுத்த முடியாத இந்த உணர்வலையை ஏற்படுத்திய பெருமை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இருக்கிறது. 03. சிறீலங்கா என்ற நாடே ஆடி கெதி கலங்கி நிற்கிறது, தமிழகத்தில் புத்தபிக்குகளுக்கு விழத்தொடங்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
அரசிலிருந்து சில தவளைகள் பாய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை. எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன், அவள்களும் உயிர் அச்சுறுத்தல் என்றே சொல்கிறார்கள். நன்றாக சொல்லிக் கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒருகாலத்தில் என்னை ஹிருனிகா தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி, உயிர் அச்சுறுத்தல் என கூறிவருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூறமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறியவர்கள் பற்றி தாம் பேச போவ…
-
- 6 replies
- 3.7k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்] சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது. ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
திருமலை கடற்படைத் தளத்தில் இன்று விடுதலைப்புலிகளின், மூன்று ஆயுதம் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இழுவைப்படகுகளை அழித்த கடற்படையினரை கெளரவிக்கும் முகமாக சிரிலங்கா ஜனாதிபதியின் தலைமையில் வைபங்கள் வெகு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர் மட்ட இராணுவ,கடற்படை அதிகாரிகள் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஜானா
-
- 6 replies
- 3.1k views
-
-
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது. பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலை…
-
- 6 replies
- 924 views
-
-
வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார். விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அற…
-
- 6 replies
- 3.5k views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கான யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பு # மதிப்பிற்குரிய தேசிய தலைவர் தலைமையில் தனி நாட்டை நோக்கிய ஆயுதப்போராட்டம் ஆனது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.இந்த ஆயுதப்போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். பல இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கொன்று அழிக்கப்பட்டனர். பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த விட்டன. பன்னாட்டு சமூகத்தின் உயர் நிறுவனம் ஜ.நா…
-
- 6 replies
- 760 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும் பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த போது இதனை நான் தெரிவித்திருந்தேன். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இ;ந்திய படைகளுக்கு பயிற்சியளிக்கும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் நான் கூறினேன். நாம் இந்த துறையில் பயிற்சி மட்டுமன்றி நெறியாள்கை ஒன்றினையும் வரைந்துள்ளோம். இவற்றை பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாம் முன்வந்த…
-
- 6 replies
- 773 views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6956569.ece
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசால் இசைப்பிரியா மற்றும் இதர தமிழீழப்பெண்கள், குழந்தைகள், ஈழக்குடிமக்க்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்தரவதை, பாலியல்வன்முறைக்கு எதிராகவும், தமிழீழ விடுதலையை அறிவிக்கக் கோரியும் மதுரை-மீனாட்சி பஜாரில் தற்பொழுது மே 17 இயக்கம் சார்பாக போராட்டம் ஆரம்பித்துள்ளது. http://www.pathivu.com/news/31941/57//d,article_full.aspx
-
- 6 replies
- 861 views
-