Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹெயிட்டியில் பணி புரியும் சிறிலங்கா துருப்பினர் நாட்டிற்கு நற்பெயரை தேடி தந்துள்ளதாக சிங்கள இராணுவ தலபதி கூறியுள்ளார். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் நூற்றிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஹெயிட்டியில் உள்ள சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். . தற்போது லெபனானில் இருகும் சிங்கள இராணுவத்தளபதி; ஐ.நா.அமைதிகாக்கும் படைக்காக ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கை இராணுவ வீரர்கள் நன்னடத்தையில் நாட்டுக்காக நற்பெயரை பெற்றுக்கொடுத்திருப்பதாக சுட்டிக்காட்டி லெபனானில் உள்ள இலங்கை வீரர்களும் அதேபோன்று ஒழுக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மூலம்

  2. 700 ரூபாவை தான் வாங்கிக் கொடுக்க முடிந்தது : தொண்டமான் கைவிரிப்பு – VIDEO 700 ரூபா தான் என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் இதற்கும் மேல் யாருக்காவது வாங்கிக் கொடுக்க முடியுமென்றால் அவர்களுக்கு உதவ தயார் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக சம்பள பேச்சுவார்த்தை இழுபரியில் போனது. ஆனால் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. 1000 ரூபா சம்பளத்தை கேட்ட போதும் 855 ரூபாவை பெற்றுள்ளோம். அடிப்படை சம்பளம் 200 ரூபால் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றைய கொடுப்பனவுகள் அடங்களாக 855 ரூபா கொடுக்கப்படவுள்ளது. நாங்கள் முடிந்தளவுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை விடவும் கூட வாங்கிக்கொடுக்க எவருக்கேனும் முடியுமென்றால் அவர்களுக்கு தான் பூரண ஒத்துழைப…

  3. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 08:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் வி. ஜெயராணி கூறுகையில், ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எரிபொருட்கள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குறைவான அளவே விநியோகிக்கப்படுகின்றன. சீமெந்தும் இரும்பும் இப்பிரதேசங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அரிசி பற்றாக்குறை இல்லை. மக்கள் ஏற்கெனவே விவசாய செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து நெற்பொதிகளை வெளியே எடுத்துச் செல்ல …

  4. வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும்! - ந.சிவசக்தி ஆனந்தன் [saturday 2015-05-23 20:00] மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வித்யாவிற்கு நேர்ந்தகதி இனி எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது. மானுடமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இந்த ஈனச்செயல் அமைந்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி, சட்டத்தின்முன் நி…

  5. இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்ட…

    • 2 replies
    • 1.2k views
  6. அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தரப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையை உணர முடிகின்றது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர்மாதம் 24ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்ததையடுத்து இந்த விழிப்புணர்வு உச்சம் பெற்றது எனலாம். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியயான்றை ஆரம்பிப்பார் என சில தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்பார்த் திருக்கவில்லை.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை முறியடிக்கும் வகையிலும் மாற்றுத் தலைமையின் அவசியத்தை அறிந்தும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.அவர் ஆரம்பித்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் விமர்சன…

  7. நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத…

  8. [ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 06:59 ஈழம்] யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் முலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசி…

  9. வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்: முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தகவல்! [Friday, 2011-10-14 10:46:54] மூன்றுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவருடன், அந்த நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் 60 வர்த்தகர்க பிரமுகர்களும் இலங்கை வந்தடைந்தனர். இதற்கிடையில் இன்றைய சந்திப்பின் போது பல முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல், பாதுகாப்பு, முதலீடுகள், நிதி, மற்றும் தொழிற்பயிற்சி வழங்கள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்…

  10. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு பட்டதாரிக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவா அபிவிருத்தி என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார். 2011 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அதில் 6,000 பட்டதாகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் 45 வயதினையும் தாண்டிய வயது முதிர்ந்த பட்டதாகளாவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி…

  11. நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன எனவும் அதனடிப்படையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அதனடிப்படையில் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொ…

  12. ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்து பயணம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் சென்னைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையில், ஒரே பயணச் சீட்டின் மூலம் தொடருந்துப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடருந்து சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும், இது சிறிலங்காவின் பௌத்த யாத்திரிகர்கள் குறைந்த கட்டணங்களில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா போக்குவரத்து அமைச்சு, நம்புவதாக பிரதமர் செயலக அறிக்கை கூறுகிறது. அதேவேளை, தென்னிந்தியாவுக்கும், கா…

  13. புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 00:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுரகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் பத்துப் பேரும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்கள் பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது. இரு நட்புநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேணல் சபீர் நிசார் தலைமையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பத்துப் பேரும்…

  14. ‘கம்பெரலிய திட்டத்தில், தமிழ்க் கிராமங்கள் புறக்கணிப்பு’ Editorial / 2019 பெப்ரவரி 25 திங்கட்கிழமை, பி.ப. 06:48 Comments - 0 பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி, முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (25) அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த அறிக்கையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெரலிய திட்டத்தில், பட்டிருப்புத் தொகுதி உட்பட பல தம…

  15. நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட "உறவுகளைக் காப்போம்" நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

  16. புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி JUN 16, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நேற்று நியமிக்கப்பட்ட, எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, 1980களில் இருந்தே, போர்க்களப் பகுதிகளில் உலங்குவானூர்தி விமானியாகப் பணியாற்றியிருந்தார். 1986ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ம் நாள், பிளையிங் ஒவ்விசராக இருந்த போது, புலத்சிங்கள செலுத்திய பெல் 412 உலங…

    • 0 replies
    • 379 views
  17. வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இ…

  18. 27 MAR, 2024 | 10:44 AM பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப் பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்பட்ட பல உணவுகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்கள் மருத்துவ பதிவுகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179798

  19. கொலன்னாவை அதிஉயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டோரில் 43 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று வெல்லம்பிட்டிய சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க

  20. நல்ல பேய்களுக்கு வாக்களிக்கச் சொல்கிறார் மாதுளுவாவே சோபித தேரர்! [Thursday 2015-06-25 19:00] பொதுத்தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை களமிறக்க கூடும். அந்தப் பேய்களில் சிறந்த பேய்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப்பொருள், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்கக் கூடாது. இதனை நான் கட்சித்தலைவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மக…

  21. ‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்று தெரியவந்ததை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “மன்னார் புதைகுழிக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று அனைத்துலக சமூகத்திடம் கூறுவதற்கு பலரும் தயங்கவில்லை. எல்லாவ…

  22. பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயமாக்குவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது. 57 ஆரம்ப பாடசாலைகளிலும் 113 இடைநிலைப் பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10-க்கான பாடத்திட்டமே நவீனமயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டம் நவீனமயமாக்கப்படவுள்ளது. பாரம்பரிய கற்பித்தல் முறையில் இருந்து விலகி மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே பாடத்திட்ட நவீனமயமாக்கலின் நோக்கம் ஆகும். புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பரீட்சைக்…

  23. தாராபுரம் வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் பதியுதீனே திறக்கவேண்டும் என்று கோரி, வடக்கு மாகாண சுதாராத அமைச்சரை வைத்தியசாலைக்குள் நுழையவிடாது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். 2013ஆம் ஆண்டு வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு பெற்றிருந்தாலும் அமைச்சார் ரிஷாத் பதீயுதீனால்தான் திறக்கப்படவேண்டும் என தெரிவித்து நீண்டகாலம் திறக்கப்படாமல் உள்ளது. இன்று மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, பண்டாரவெளி வைத்தியசாலை, எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலை, ஆகியவற்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்துவைத்தார். அத்துடன் நீண்டகாலம் திறக்கப்படாதுள்ள தாராபுரம் ஆர…

    • 3 replies
    • 1.1k views
  24. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழக முதல்வரின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை என தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படவேண்டுமானால் இருநாட்டு மத்திய அரசுகளும் பொதுவானதொரு உடன்படிக் கையை இந்த விடயத்தில் கையாளவேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோத உபகரணங்களைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது நாட்டு கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது நாட்டு மீனவர்களுக்கு…

  25. மகிந்தவுக்கு வேட்பு மனு வழங்குவது தன்கையில் இல்லையாம்! - மைத்திரி கைவிரிப்பு[Friday 2015-07-10 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பான இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றிக்காக பாடுபட்ட சிவில் குழுக்களை ஜனாதிபதி கடந்த புதன்கிழமை சந்தித்தார்.இதன்போது சிவில் குழுக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கலை எதிர்த்ததாக குறிப்பிட்டார். எனினும் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாக சிவில் குழுக்களின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.