ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
செய்தி மூலம் TAMIL CNN புதன், 29 டிசம்பர் 2010 14:38 மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது. அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது. தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இ…
-
- 25 replies
- 4.3k views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா. கூட்டத்துக்கு மகிந்தவுடன் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான செயலாளர் கொண்டலீசா றைசை நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, நோர்வே அனுசரணையுடனான அமைதிப் பேச்சுக்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மங்களவிடம் கொண்டலீசா றைஸ் அறிவுறுத்தியுள்ளார். மூதூரில் பி…
-
- 0 replies
- 879 views
-
-
நாட்டின் சனத் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்க திட்டம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:13 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அநுர குமார குறிப்பிட்டார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொ…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார். இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்…
-
- 0 replies
- 766 views
-
-
வீரமுனைப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தசாப்தத்தில் ஏற்படாத பாரிய வெள்ளப்பெருக்கு இம்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாகவும் நேற்றிரவு முழுவதும் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவும் வீரமுனையின் அநேகமான பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் மிகவும் மோசமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் உட்புகுந்ததன் காரணமாக அநேகமான மக்கள் வீரமுனை சது இராமக்கிருஷண மகா வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீரமுனை கிராம உத்தியோகத்தர்கள் , சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் லியாகத் அலி , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா மற்றும் அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி இணைப்பாளர் நௌஷாட் ஆகியோர் வந்து நேரில…
-
- 0 replies
- 2.8k views
-
-
புலிகள் பற்றிய தவறான மதிப்பீட்டால் படையினர் எதிர்கொண்ட அனர்த்தம் - விதுரன் இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசுக்கு, இராணுவ ரீதியில் பாரிய வெற்றியொன்று தேவைப்படுகிறது. வடபோர்முனையில் படையினர் சந்தித்த பாரிய இழப்பானது முழு உலகுக்கும் களநிலைமையையும் படைவலுச் சமநிலையையும் நிரூபித்துள்ளதால், சமாதானப் பேச்சில் அரசின் பேரம் பேசும் ஆற்றல் அடிபட்டுப் போய்விட்டது. சமாதானப் பேச்சுகளுக்கான நாள் குறித்த நிலையில், தங்களது இராணுவ பலம் குறித்தும் புலிகளின் பலவீனம் குறித்தும் தாங்கள் மேற்கொண்டிருந்த கணிப்பு மிகவும் தவறானதென்பதை அரசும் படைத்தரப்பும் இன்று உணர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் அண்மைக்காலமாக தாங்கள் பல வெற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட் ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெரு…
-
- 10 replies
- 1.6k views
-
-
மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை ! By VISHNU 12 DEC, 2022 | 08:00 PM (எம்.மனோசித்ரா) மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தள செய்திகள் போன்றவற்றின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு கோரி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றனர…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
There would be a demonstration organized by the National Council of Canadian Tamils (NCCT) calling for the arrest of war criminal Mahinda Rajapakse who is on a private visit to the United States of America. We call upon our members to attend this emergency rally. Date: Friday January 21st Venue: US Consulate 360 University Ave Time: 2 pm to 7 pm Regards Raj Suthan "Lets voice for Tamil Freedom" <suthan777@yahoo.com> ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Rajapaks…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட கடும் பின்னடைவைத் தொடர்ந்து, உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுத்த வெற்றியை காரணம் காட்டி மேற்கொண்ட பிரசாரங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் அரசாங்கம் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. எனினும் தற்போது அரசாங்கத்துக்கான ஆதரவு சரிந்துவண்ணம் இருக்கின்றன. கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் கண்ட பின்னடைவை விட, தற்போது இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. தனி சிங்களவர்கள் மட்டும் வாழ்கின்ற மொனராகலை மாவட்டத்தில் பணத்தை வழங்கி பெற்ற ஆசனங்களாலேயே இந்த தேர்தலில் அரசாங்கத்தினால் வெற்றி பெற முடிந்தது. அத்துடன் அரசாங்கத்தில் இருந…
-
- 0 replies
- 264 views
-
-
27ம் தேதி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அமிதாபுக்கு நன்றி தெரிவித்து தந்தி கொடுக்கின்றனர் சென்ற ஆண்டு கொழும்பு நகரில் சிங்கள இனவெறி அரசின் தயவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கலந்து கொள்ள மறுத்தார் இந்தியாவின் மூத்த நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். அவரது துணிச்சலான முடிவை ஒட்டுமொத்தத் தமிழினமும் பாராட்டியது. அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, மன சாட்சியே இல்லாமல், அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதுவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஆயிரக்கணக்கான நன்றி கூறும் தந்திகளை ந…
-
- 0 replies
- 761 views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலுள்ள நாவற்காடு என்ற இடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் அவரது சகோதரர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞருடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதிலேயே மேற்படி விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த இராஜதுரை ரஜீவன் (வயது-21) என்பவர் அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டார். இவருடன் கூட இருந்து பயணித்த சகோதரர் இராஜதுரை பஜிந்தன் (வயது-20) என்பவர் இச்சம்பவத்தின்போது படுகாயமடைந்துள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக யா…
-
- 0 replies
- 570 views
-
-
அழிவை எதிர்நோக்கியுள்ள குடாநாட்டின் கடல்வளம்! யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்பரப்பில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழில் மேற்கொள்ளப்படுவதால் கடல் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வளம் அழியும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்றொழில் குடும்பங்கள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுநலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண மக்களின் போசணையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடலுணவுகள் மூலம் கிடைக்கும் போசணை மட்டம் இழக்கப்பட்டால் தற்போதைய சூழல் மாற்றத்திற்கேற்ப வேகமாகப் பரவி வருகின்ற நோய்களின் தாக்கத்திற்கும் யாழ்ப்பாண மக்கள் உள்ளாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக கடல்ச…
-
- 1 reply
- 588 views
-
-
உண்மையை மக்கள் அறிவதால் -கூட்டமைப்பு எம்.பிக்கள் சீற்றம்!! உண்மையை மக்கள் அறிவதால் -கூட்டமைப்பு எம்.பிக்கள் சீற்றம்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடக்கும் விடயங்களை மக்களுக்குப் பத்திரிகைகள் ஊடாகத் தெரியவருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரோ தகவல் தெரிவிக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவரது கருத்தை நாடாளும…
-
- 2 replies
- 720 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்…
-
- 0 replies
- 826 views
-
-
வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட பல கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் ( கோப்புப் படம்) இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. மனு அழைக்கப்பட்டபோது ஆட்சேபனைகளை முன்வைத்த அரசதரப்பு வழக்குரைஞர், சிறைச்சாலை கலவரத்தை முறியடிப்பதற்கு ம…
-
- 0 replies
- 403 views
-
-
நாளை மறுநாள் சிறிலங்கா அதிபருக்கு மற்றொரு ‘சோதனை’ கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும், 17ஆம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே, கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் எனக் கோரும் முன்மொழிவு ஒன்றை கட்சியின் மூத்த துணைத் தலைவரான ஜோன் செனிவிரத்ன சமர்ப்பிக்கவுள்ளார். இதன் அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்த…
-
- 0 replies
- 270 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 03:56 PM (இராஜதுரை ஹஷான்) 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…
-
- 2 replies
- 288 views
- 1 follower
-
-
பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டாம் - அனுரா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக சிறி லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர…
-
- 9 replies
- 2.4k views
-
-
மேலும் பல போர்க்குற்றம் புரிந்த சிங்கள இராணுவத்தினரையும் பெண்களையும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைக்க அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதாம். ஐ. நா படையில் இலங்கையின் இமேஜை உயர்த்த இந்த திட்டம் உதவும் என சிங்கள அமைச்சரவை கூறுகின்றது. ஆனால் இராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்க முடியாமையே அடிப்படை பிரச்சினையாக இருப்பதாக கூறபப்டுகின்றது. எனினும் குற்ற செயல்கள், போர்க்குற்ற மீறல்கள் புரிந்த இராணுவத்தினரை ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இணைக்க கூடாது எனவும் தமிழர்கள் ஐக்கிய நாடுகளுக்கு கூறவேண்டும். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%…
-
- 2 replies
- 750 views
-
-
‘எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்’ – சரணடைந்தால் விடுவிப்போம் என்ற சதியால் கொல்லப்பட்டவர்களை எப்படி நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? வாரத்துக்கொரு கேள்வி – 20.05.2018 முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. அவருக்குக் கொடுத்த பதில் சற்று விரிவுபடுத்தி தரப்படுகிறது. கேள்வி:புலிகளைத் தொடர்ந்து இந் நாட்டில் ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்க நீங்கள் இவ்வாறான நினைவேந்தல் கூட்டங்கள் மூலம் வழி அமைக்கின்றீர்கள் அல்லவா? இவை தேவையா? பதில்: தேவை. மரணித்தவர்களின் நினைவை …
-
- 1 reply
- 775 views
-
-
ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு! ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் த.பிரபாகரன் தெரிவித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈழவர் ஜனநாயக முன்னணியின் மத்திய குழு கூட்டம் இன்று கல்லடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தினை தொடர்ந்து ஈழவர் ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பு நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் த.பிரபாகரன் கருத்து தெரிவித்தார். இன்று தமிழ் மக்கள் ஏமாந்த சரித்திரமே உள்ளது ஒழிய மக்களுக்கு எதரனையும் பெற்றுக்கொடுத்தில்லை. இன்று தமிழ் மக்களும் நாங்களும் மாற்றத்தினை எதிர்பார்த்த…
-
- 0 replies
- 282 views
-
-
அநுராதபுரத்தில் மர்ம நோய்: மூன்று தினங்களில் நால்வர் பலி... வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 15:46 இலங்கையில் வாழும் சிங்கள மக்களால் புனித பூமி எனப் போற்றப்படும் அநுராதபுரத்தில் மர்ம நோயொன்று திடீரெனப் பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மர்ம நோய் காரணமாகக் கடந்த மூன்று தினங்களுக்குள் நால்வர் உயிரிழந்தனர் என வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதுடன் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் sankamam.com
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியா செல்லவுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற போது இந்திய- இலங்கை பாதுகாப்புத் துறை செயலர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த பயணமானது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இந்திய பயணமென்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=648233554317663961
-
- 0 replies
- 282 views
-
-
தமிழ் இராணுவத்தை உருவாக்குங்கள்! – யாழ். கட்டளைத் தளபதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், இராணுவத்தில் இணைந்து தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டுமென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் காணப்படும் இராணுவம் சாராத வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கும் பணி, நெல்லியடியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளைஞர்களை இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எதிர்வரும் மூன்று வார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படும். இராணுவம் சாரா…
-
- 3 replies
- 875 views
-