ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன் நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை …
-
- 5 replies
- 2k views
-
-
12 AUG, 2024 | 08:59 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எ…
-
-
- 5 replies
- 581 views
- 1 follower
-
-
திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 5 replies
- 1.2k views
-
-
வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச போரூந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்தார். தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/131273
-
- 5 replies
- 688 views
-
-
புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு செய்திகள் மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளத…
-
-
- 5 replies
- 304 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார். "பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். "அவர் ஒரு மருத்துவராக …
-
- 5 replies
- 534 views
- 1 follower
-
-
நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான தீர்ப்பை இன்று வெளியி…
-
- 5 replies
- 1.2k views
-
-
In இலங்கை May 2, 2020 10:35 am GMT 0 Comments 1491 by : Benitlas மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், நீண்டகால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 பேர்…
-
- 5 replies
- 899 views
-
-
மதத் தலங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக கலைஞர் கூறியது பொய் - குடாநாட்டில் இராணுவ அச்சுறுத்தல் இல்லை – டக்ளஸ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போதில்லை ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி அதனை முன்னெடுக்க பாடுபடுகின்ற பலருள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று கச்சதீவில் அவரைச் சந்தித்த இந்திய பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் பிரபாகரனது இருப்பு பற்றி தொடர்ந்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காது தவிர்க்க முற்;பட்ட அமைச்சர் ஒரு கட்டத்தில் இவ்வாறு பதிலளித்தார். அத்துடன் யாழ்.குடாநாட்டின் தற்போதைய மேம்பாடு தொடர்பில் உண்மை நிலவரங்களை அறிய இந்திய ஊடகவியலாளர்களை நேரில் வருகைதருமாறு அவர்; அழைப்பும் விடுத்தார். கச்சதீவு புனித அந்தோனிய…
-
- 5 replies
- 1.1k views
-
-
2020ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகித முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்ததுடன், 3வது காலண்டில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.9% குறைந்தது! – NewUthayan
-
- 5 replies
- 551 views
-
-
யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கடந்த…
-
- 5 replies
- 565 views
-
-
கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினரிடம் …
-
- 5 replies
- 1k views
-
-
அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று குமார…
-
- 5 replies
- 490 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இர…
-
- 5 replies
- 754 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…
-
- 5 replies
- 465 views
-
-
தேரர்களை சிலர் தவறாக வழி நடத்தல் மகாநாயக்க தேரர்களையும்- பௌத்த பீடங்களையும் ஒரு குழு தவறாக வழிநடத்துகின்றது, புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று நேற்றுத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டுக்கு அமைய பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அரச தலை…
-
- 5 replies
- 592 views
-
-
புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போதுஇ ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றுஇ தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்துஇ ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் குழுவில் அங்கம் பெறும்…
-
- 5 replies
- 1.9k views
-
-
-ராய்ட்டர் செய்திச் சேவை- இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மே…
-
- 5 replies
- 2.1k views
-
-
எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த நாள் "கரும்புலிகள் நாள்": சு.ப.தமிழ்ச்செல்வன் [வியாழக்கிழமை, 5 யூலை 2007, 15:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த மிக முக்கியமான ஒருநாள் "கரும்புலிகள் நாள்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் சந்திரன் நினைவு சிறுவர் பூங்கா திறப்பு நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய சிறப்புரை: எமது குழந்தைகள் சிரித்து வாழவேண்டும். மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை கொடுத்த அந்த உன்னதமானவர்களின் இந்த நாளில் நாம் இந்தப் பூங்காவை திறந்து…
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள் ஜ02 - ழுஉவழடிநச - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கே…
-
- 5 replies
- 1.9k views
-
-
யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம் யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும். இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந…
-
- 5 replies
- 894 views
-
-
சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள் Posted by: Sudha Published: Tuesday, January 22, 2013, 12:27 [iST] கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு. ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்…
-
- 5 replies
- 1.2k views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் இலங்கையை ஊக்கப்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இன்றி மெய்யான நல்லிணக்கத்தையோ அல்லது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தலையோ அமுல்பட…
-
- 5 replies
- 829 views
-