ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
சிறிலங்காவில் இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகுமா? என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது. அல்-ஜசீராவால் ஏற்பாடான இந்த விவாதத்தில் சிங்களத்தின் பிரதிநிதி சனல் நாலின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் சிங்கள நாட்டுக்குள்ளேயே விசாரணை நடக்கும் எனவும் வெளிநாட்டு ஆலோசனைகளோ உதவிகளோ தேவை இல்லை என்றார். Can Sri Lanka achieve reconciliation? "I think you're talking absolute rubbish. I have to rebut charges that are false. We do have inquiries that are going on internally. I don't know why you think external inquiries are independent." - - Rajiva Wijesinha, a Sri Lankan MP http://www.aljazeera...8395841956.html
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் ரீ.எம்.வீ.பீயின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (யூலை4) மாலை 6.30 அளவில் சித்தாண்டி முகாமில் தமது உறுப்பினர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு ஏறாவூரில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் ஏறாவூர் மஹமதியா வீதியில் உரையாடிக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையின…
-
- 5 replies
- 773 views
-
-
பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் October 7, 2025 0 நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் நிலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நில மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அத்தகைய ஒரு வழக்கறிஞரை கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை(05), நுழைந்து, வீட்டிற்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின்…
-
-
- 5 replies
- 330 views
- 1 follower
-
-
சுன்னாகம் ஐயனார் கோவிலால் வறுமைக்குட்பட்ட மக்களுக்கான ரூபா 2 லட்சம் பெறுமதியில் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டன. j/198,J/199,J/212 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு. ஒரு கிழமைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் அம்மக்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் உடுவில் பொதுச்சுகாதார உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் அவர்கள் மூலமாகவும் பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அடியவர்கள் நிதிப்பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 649 views
-
-
வீரகேசரி நாளேடு - மன்னாரிலும் கொழும்பிலும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்திய ராடர் கருவிகள் மீதும் அதனை இயக்கும் இந்திய படையினர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜே.வி.பி.யினர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வெளியிட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தகவல் தருகையில், புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கொழும்பிலும் தாக்குதல்களை நடத்தி திரும்பிச் சென்றுள்ளன. ஏழாவது தடவையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அவர்களது விமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியான ஆழ ஊடுருவும் படையணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் எட்டுப் பேர் கொண்ட அணி ஊடுருவிய போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அதன் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார். ஜெயசிங்க தலைமையிலான அணியினர் பல தடவைகள் விட…
-
- 5 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் உதவியுடனேயே யாழ். தீவு காற்றாலை திட்டம்: 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க இந்தியா இணக்கம் சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதற்கான முழு செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அந்த வகையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்ப…
-
- 5 replies
- 1.1k views
- 2 followers
-
-
நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது ‐ மாவோயிஸ்ட் தலைவர் ‐ பிரசண்டா: நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தலைவரும் பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமருமான பிரசண்டா கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவை சாடியுள்ள பிரசண்டா, நேபாள எம்.பி.க்களை வாங்கியும் விற்றும் நேபாளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் தலைமைத்துவம் வகிப்பதற்கு ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
டெல்லி: இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நவம்பர் 7ந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ந் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை இலங்கை போர்க்குற்றங்களை வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது சேனல் 4 தொலைக்காட்சி. தற்போது அதன் இயக்குநரான கல்லம் மேக்ரே…
-
- 5 replies
- 1.1k views
-
-
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா adminOctober 22, 2023 மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இவ்விடையம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாட…
-
- 5 replies
- 525 views
- 1 follower
-
-
அளவெட்டி மண்ணிண் மைந்தர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் யாழ்.மாவட்ட அரசஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிதர் க.நாகலிங்கத்தின் மூத்த மகனான இவர் முன்னர் தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலராகவும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசஅதிபராகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிகவும் நேர்மையான அதிகாரியாக மதிக்கப்படும் இவர் யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பல்வேறு தரப்புக்களும் வரவேற்றுள்ளன. அவரது பணிசிறக்கவும் அவர் வல்லமைகளின் வழி யாழ்.மக்களின் வாழ்வு செழிக்கவும் எமது இணையத்தின் வாழ்த்துக்கள்.. http://www.alaveddy.ch/?p=22276
-
- 5 replies
- 920 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இப்பதற்றத்தில் இதுவரை 5 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
இன்று பிறக்கும் இப்புத்தாண்டில் எமது தாய் நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களை காணும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த ஒரு நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். அதே போன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இந்த புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். எனவே, இன்று பிறக்கும் இப்புத்தா…
-
- 5 replies
- 437 views
-
-
வணங்காமண் உணவு கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் அழிக்கும் உரிமை எமக்குள்ளது - கடற்படை வன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் "வணங்காமண்" உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரி வித்ததாவது: எங்கள் மக்கள் சார்பான தீர்வுத் திட்டத்தை நாங்கள் இந்த அரசிடம் முன் வைத்தோம். இந்த அரசு பேச்சு என்ற பெயரில் காலம் கடத்தியதே தவிர எங்களுக்குப் பதில் தரவில்லை. இதன் பின்னர் அவர்கள் உருவாக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நாம் பங்கெடுக்கவில்லை. இதற்காக எம்மை யாரு…
-
- 5 replies
- 706 views
-
-
யாழ். நல்லூர் திருவிழாவில் சீரழியும் சிறுவர்களும், பெண்களும்! உண்மையான காரணம் என்ன? வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 25ஆம் நாள் மஹோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த காட்சியைக் காண்பதற்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளார்கள். திருவிழா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இறுதி நாள் வரை யாழ்ப்பாணம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அதேபோல் வியாபாரிகளுக்கும் இது சிறந்த சந்…
-
- 5 replies
- 897 views
-
-
மே.18 நினைவு கூர்ந்தவர்களின் விபரங்களை கோரியது ரி.ஐ.டி க. அகரன் வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் கடந்த மே. 18 இல் அவருடைய வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்ற முன்னாள் அரசியல் கைதியிடமே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் விபரம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் அவருக்கு வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சம்ம…
-
- 5 replies
- 445 views
-
-
அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார். இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனி…
-
- 5 replies
- 671 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியான பெஸ்கோ இலங்கைக்கு வந்திறங்கி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வடபகுதிக்கும் விஜயம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து நெஞ்சை நிமர்தியவராக "நாம் அடுத்தவாரம் இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்றை நியமிக்கப் போகிறோம்|| எனக் கூறியபோது, ஒரு ஊடகவியலாளர், மற்றுமொரு ஊடகவியலாளரின் காதுக்கருகில் சென்று அருமையான கேள்வியொன்றை எழுப்பினார். "எங்க நண்பா.. தாய் நாட்டின் பஞ்சாயுதக் காரர்கள்? நித்திரையோ??|| எனக் கேட்டார். உண்மையில் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன், தான் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து கண்டறிவதற்காக ஆலோசனை வழங்கும் …
-
- 5 replies
- 1.8k views
-
-
பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர் மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர். மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார். அப்ப…
-
- 5 replies
- 425 views
-
-
சிறிலங்கா திரும்பமாட்டார் சந்திரிகா [திங்கட்கிழமை, 3 யூலை 2006, 15:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்டகாலத்திற்கு சிறிலங்கா திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் நீண்டகாலத்திற்கு அவர் நாடு திரும்ப மாட்டார் என்றும் சந்திரிகாவின் தற்போதைய செயலாளர் பியதாச திசநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் கட்சிக்கு தெரிவித்துள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் அவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளோம், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தரப்பினர் கோரிவருவதைப் போன்று வடக்கிலுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட மாட்டாது. மேலும் படையினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்குமாறும் சில தரப்பினர் கோரி வருகின்றனர். எனவே அவ்வாறான செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். - See more a…
-
- 5 replies
- 591 views
-
-
Tuesday, June 21, 2011, 0:45சிறீலங்கா மணலாறை அண்மித்த பிரதேசமொன்றில் இராணுவச் சிப்பாயொருவர் மர்மமான முறையில் சூடுபட்டு மரணித்துள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தின் நாயாறு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே அவரது பங்கருக்குள் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மரணித்த சிப்பாய் அனுராதபுரம் பிரதேசத்தின் நொச்சியாகம பகுதியைச் சோ்ந்தவர் என்றும் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் சிப்பாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரது துப்பாக்கி பயன்படுத்தப்படாத நிலையில் துப்பாக்கிச்சூடு பட்டு அவர் மரணித்திருப்பது இராணுவத்தினரிடையேயும் பலத்த அச்சம…
-
- 5 replies
- 828 views
-