Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார். தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவும் தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியிருந்த நிலையில், கடைசியில் தனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். ‘போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, முன்னாள் பாதுகாப்ப…

    • 5 replies
    • 1k views
  2. த. தே கூ வினுள் இடம்பெறும் பனிப்போரில் நாம் நடுநிலை வகிப்போம். சித்தார்த்தன். புளொட்டினுள் சில்லறைகள் கிடையாது என்றும் கூறுகின்றார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைமைப் பதவிக்காக முன்னாள் ஆயுததாரிகட்கும், ஆயுதம் தாங்காதோருக்குமிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலைமைகள் தொடர்பாக அக்கூட்டமைப்பின் பங்காளியாக தம்மை அண்மையில் இணைத்துக்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன்அவர்களிடம் இலங்கைநெற் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. கேள்வி - நீங்கள் இப்போது முற்றுமுழுதாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து விட்டீர்களா? பதில் - எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றோம். கே…

    • 5 replies
    • 1.4k views
  3. ஞாயிறு 04-05-2008 21:47 மணி தமிழீழம் [மயூரன்] இளவரசர் ரிட்சாட் கொழும்பை வந்தடைந்துள்ளார் இங்கிலாந்து அரச பரப்பரையைச் சேர்ந்த இளவரசர் ரிட்சாட் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று கொழும்பை வந்தடைந்துள்ள இவர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ரிட்சாட் இரண்டாம் எலிசப் மாகாராணியின் உடன்பிறவா சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. சி.வி.க்கும் சி.வி.கே.வுக்கும் கொழுவல் எம்.றொசாந்த் 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கொழுவல் இருப்பது உண்மை' என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் ஏற்பட்டு, அதனால் கொழுவல் ஏற்பட்டது உண்மை. அதனை நான் மறைக்க விரும்பவில்லை. அதனை இந்த உயரிய சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/180504/ச-வ-க-க-ம-ச-வ-க-வ-க-க-ம-க-ழ-வல-#…

  5. "ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உரியவர்களை உடன்படச் செய்யாவிட்டால் நாட்டாமை பேசும் நாடுகள் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'ஆனந்த விகடன்' வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, 'மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்' என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்த…

  6. ஜூலை 12 ஆம் திகதி ஞானசார தேரர் மஹியங்கனை விகாரையில் பேச்சுவார்த்தை - பின்னர் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பன்றி இறைச்சி வீச்சு ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாகவும் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் மகாவலி மகா விகாரையின் விகாரதிபதியுமான வட்டரெக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். மலையக முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஞானசார தே…

  7. உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய என அங்கஜன் கேட்கிறார்??? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. உரிமையை காகிதத்தில் மாத்திரம் வைத்து என்ன செய்ய முடியும். எமது மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே தற்போது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில்.உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடு வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலு…

    • 5 replies
    • 717 views
  8. தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி By VISHNU 25 SEP, 2022 | 11:25 AM நேர்காணல்: ஆர்.ராம் “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” “ரஜீவ்-மேனன் பாடசாலையின் இராஜதந்திர அணுகுமுறை பின்னடைவுகளைச் சந்தித்துவிட்ட நிலையில் தொப்புள்கொடி உறவு என்ற விடயத்தினை இந்தியா தனது வெளிவிவகார மூலோபாயத்தினுள் உள்ளீர்க்க வேண்டும்” “தமிழ் பேசும் மக்கள் என்ற மாலையில் மூன்று மணிகளான தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்…

  9. யாழ். குடாவிலுள்ள இராணுவ முனைகளில், கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவந்த சண்டையின்போது,விடுதலைப்புலி

    • 5 replies
    • 1.3k views
  10. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்னால் இன்று பகல் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடை பெற்றது. பிரித்தானியா சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்த விருந்த உரை ரத்துச்செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான வேல் முருகு தங்கராசாவினால் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோசங்களையும் எழுதிய பதாகைகளையும் உண்ணவிரதப்பந்தலில் கட்டியிருந்தாhகள். 1.நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்த ஜனாதிபதியை துற்றுவதா? 2. ஐக்கியதேசியக் கட்சி ஜெயலத்த…

  11. இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்! இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது. இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர்…

  12. போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல. போர்நிறுத்த ஒப்பந்தம், மாற்றம் எதுவும் இன்றித் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை அரசாங்கம் முறித்துக்கொள்ளவும் மாட்டாது, அதில் திருத்தம் எதனையும் செய்துகொள்ளவும் மாட்டாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முறித்துக்கொள்ளப் போவத…

    • 5 replies
    • 1.3k views
  13. தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. முள்ளி வாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. இராசஇராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில…

  14. வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டு எதிரணியின் தேவை மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் தெளிவான கொள்கை வேறுபாடுகள் உள்ளன. இதனால், இன அடிப்படையில் நாடு பிளவுபடும் ஆபத்து உள்ளது. இது சிறிலங்காவில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். http://www.pathivu.com/news/36554/57//d,article_full.aspx

  15. புனித பாப்பரசரே எளிய சனங்களின் குரல் உங்கள் தேவ செவிகளுக்குக் கேட்டிகிறதா? சிங்கக் கொடிகளும் வத்திக்கான் கொடிகளுமாய் தங்களுக்காய் விரிந்திருக்கும் சோடனை செய்யப்பட்ட வீதிகளில் மக்களுக்கு கைகளை காட்டி ஆசீர்வதித்துக் கொண்ட புனித பாப்பரசரே ஒடுக்கப்பட்ட தாய் நிலத்திலிருந்துகொண்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் இருத வாசகங்களுடன் நிற்கும் எங்கள் சனங்களின் குரல்கள் தங்கள் தேவ செவிகளுக்கு கேட்கிறதா? சிங்களப் பேரினவாதத்தின் கொடிய ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கிறது எங்கள் தாய்நிலம். இராணுவ ஆட்சிக்குள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது நாங்கள் வாழும் மண். எதுவும் எப்போதும் நடக்க முடியும் என்ற நிலையில் வாழும் நாங்கள் நம்பிக்கையற்ற பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். …

  16. யாழில் நடைபெற்ற பேரணிக்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்! [Tuesday 2015-02-24 19:00] இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி பேரணி நடத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும…

  17. Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திண…

    • 5 replies
    • 1.8k views
  18. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கிடையில் மூன்று உயர்மட்டத் தூதுவர்களைக் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் மேரி ஒரேரோ, மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் தலைவர்களுக்கு ஜெனிவா தீர்மானத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விக்கமளிக்கவுள்ளனர். ஆனால் இத்தகைய நகர்வை எந்தவொரு அரசாங்கமும் தடுக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன…

    • 5 replies
    • 791 views
  19. யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், வெறும் 360 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடாத்தி சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. என கூற முடியுமா? யாழ்.மாவ ட்டம் பாதுகாப்பாக உள்ளதென கூற முடியுமா? மேற்கண்டவாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அபாய நிலைமை நீ…

    • 5 replies
    • 539 views
  20. முன்னாள் போராளியின் பணப்பரிசில் பாதியை பொலிஸ் அதிகாரி பெற்றார் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்ட சாட்சியம் கிடைக்கப்பெற்றுதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலி போராளியிடம் இருந்து இவ்வாறே பரிசுத் தொகையில் பாதி தொகையை பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளார். குறித்த நபர் 2016ம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊ…

    • 5 replies
    • 1.2k views
  21. வலிவடக்கில் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய பிரதேசத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று பார்வையிட்டு ள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் இன்று யாழ். குடாநாட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், வட மாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடியிருந்தார். அதன்பின் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வல…

    • 5 replies
    • 583 views
  22. இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை வெளியிட்டது அமெரிக்கா! – உறுப்பு நாடுகளின் கருத்தறிய முயற்சி!! ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அத்துடன், பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் அமெரிக்கா கையளித்துள்ளது. குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இவ்வாறு அனுப்பி வருகின்றது. இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவிக…

    • 5 replies
    • 1.2k views
  23. தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் சற்று முன்னர் விடுதலை செய்துள்ளனர். அசாத் சாலி தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த மூன்றாம் திகதி அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்திருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைவாகவே அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலியை, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணை செய்…

  24. -எஸ்.கே.பிரசாத் இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம்இசாவகச்சேரிஇசுன்னாகம்இ நெல்லியடி போன்ற பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி பனல் ஊடாகவே இத்திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. முன்னர் அரசாங்கத்தினாலும் இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான காணொளிகள் எல்.சி.டி பனல் ஊடாகவே ஒளிபரப்பாகியது. அதிலேயே 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/83388-…

  25. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக விடுத்த அறிவித்தல் களமுனைக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்டது: அரசாங்க அறிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-06-30 04:45:44 AM GMT ] விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் களமுனைக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்படக் காரணமாக அமைந்து விட்டதாக அரசாங்கத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தாருஸ்மான் அறிக்கை மற்றும் சனல்4 காணொளி என்பவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தயாரிக்கும் இரண்டு அறிக்கைகளில் ஒன்றிலேயே பிரஸ்தாப விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் …

    • 5 replies
    • 828 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.