ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
கருத்துருவாக்கப் பரப்புரையில் தமிழின ஒழிப்பு வேலையைச் சிங்களம் இரகசியமாக ஆனால் மிகச் சாதுரியமாக உலக அளவில் சாதித்து வருகிறது. அறுபது நாடுகளில் அமைப்பு ரீதியாகச் செயற் பட்டும் ஈழத் தமிழினம் ஏமாந்து நிற்கிறது. ஈழத் தமிழருக்கு தனியான தேசியமோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உலகம் ஏற்கச் செய்யவும் இலங்கையில் இருப்பது இனப் பிரச்சனை அல்ல புலிப் பயங்கரவாதமே என்பதையும் நிரூபிக்கும் வகையிலும் நிரந்தரமான பரப்புரையை சிங்களம் உறுதிப் படுத்தி விட்டது. விபரம்: http://swissmurasam.info/content/view/6942/31/
-
- 0 replies
- 1.3k views
-
-
எங்களிடம் வாக்கு இல்லை;வாக்கரிசிதான் இருக்கிறது:சீமான் ஆவேசப்பேச்சு புதுச்சேரி மாநிலத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் இன்று மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டம் ஆரம்பித்தது. மாலை 5 மணி வரை இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா இக்கூட்டத்திற்கு தலைமையேற்பதாக இருந்தார். ஆனால் அவர் நேற்று சென்னை வந்த சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி,கவுதமன்; கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உட்பட திரையுலகினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி [saturday 2014-07-12 09:00] உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தைக் காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார். இந்நிலையில், நேற்று) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதா…
-
- 15 replies
- 1.3k views
-
-
யாழ்.குடாநாட்டிலும் மீண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி பாணியில் நடிகர் விஜய் இற்கும் ரசிகர் மன்றம் முளைத்துள்ளது. தற்போது விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் யாழ்.நகரின் குருநகர் பகுதியில் விஜய்க்கு ரசிகர் மன்றம் முளைத்துள்ளது.கை விடப்பட்ட தூபியொன்றை வர்ணம் பூசி அலங்கரித்துள்ள ரசிகபட்டாளங்கள் அப்பகுதிகளில் விஜயினை வாழ்த்தும் வகையிலான பேனர்களையும் தொங்கவிட்டுள்ளனர். முன்னதாக நேற்று தீபாவளிக்கு யாழ்ப்பாணத்திலும் விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளியாகியிருந்தது.சுமார் ஏழு மில்லியனிற்கு அப்படம் வாங்கப்பட்ட போதும் முதல் நாளிலிலேயே கணிசமான வருவாயினை அப்படம் ஈட்டிக்கொடுத்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.முதல் நாள் காட்சிக்கான நுழைவு சீட்டுக்கள் கறுப்பு சந…
-
- 12 replies
- 1.3k views
-
-
நவனீதம்பிள்ளையை மணக்க விரும்புகின்றேன் - மேர்வின் சில்வா 27 ஆகஸ்ட் 2013 நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். நாட்டின் வரலாற்றை நவனீதம்பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். இராவண மன்னன் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விஜய குமாரனுக்கு இளவரசி குவேனியை மணம் முடித்துக் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.. அதேபோன்று, நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத…
-
- 13 replies
- 1.3k views
-
-
ம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து அடைந்திருக்கும் ஈழத் தமிழர்கள் 490 பேரில் இருவர் ஊடகவியலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களை அவர்களுடைய ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்திருக்கின்றார்கள். யுத்தக் குற்றச் சாட்சிகள் என்கிற காரணத்தினால் உயிருக்குப் பயந்தே பேராபத்தான இக்கடற்பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரையும் கனேடிய தமிழ் பேரவையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8477:2010-08-16-14-28-11&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! - நாடாளுமன்றில் மாவை எச்சரிக்கை .. "மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்'' என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் காணி மீட்டுப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என எச்சரித்த அவர…
-
- 19 replies
- 1.3k views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாடு திட்டமிட்டவாறு நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. எந்த தடைகள் வரினும் திட்டமிட்டவாறு நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பில் கனடா மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பை மாத்தரமே வெளியிட்டுள்ளன. எனினும் சர்வதேச நாடுகள் கூறுவது போல பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கும் வெளிநாட்டு முதலிட்டா…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆட்கள் பலவந்தமாக காணமல் போதல் நடவடிக்கைகளில் உலகிலேயே மோசமாக குற்றமிழைத்தவர்களில் இலங்கை அரசாங்கமும் ஒன்றென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் கொழும்பு, இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெருப்பித்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவுக்குக் குறைந்து விட்டதாகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய நடவடிக்கைகளினால் இவை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வெளிவிவாகாரச் செயலாளர் பாலித ஹோகண தெரிவித்தாக பி.பி.சி. நேற்று குறிப்பட்டுள்ளது. 'துரதிஷ்டவசமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உண்மையகான நிலைவரத்தை அளவுக்கு அதிகமாக பெருப்பித்துக் காட்டியிருப்பதாக கோஹணெ கூறி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 8/27/2008 10:54:21 AM - ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் கைசாத்திட்டுள்ளார். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெல் சாகாஷ்விலி, கிளர்சியாளர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து தனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று ரஷ்ய ஜனாதிபதி பி பி சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்ததை மேற்குலம் கோசோவோவை தனி நாடாக அங்கீகரித்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி ஒப்பிட்டார். ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையேயான உறவு வேகமாக சீர்கெடுகிறது என்றும் புதியதொரு பன…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று முன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து, சிறிலங்கா குறித்து உரத்த குரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்து வெளியே வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், “ சிறிலங்காவின…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜே வி பியின் பிளவுக்கு இந்தியாவே பின்புலமாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் ஜே வி பி கொண்டுள்ள கொள்கை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்............................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2787.html
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திய அமைதிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள் யாழில் அனுஸ்டிப்பு இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேர் உயிரிழந்தனர். அதில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்…
-
- 16 replies
- 1.3k views
-
-
60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்கு…
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கின்றது இலங்கை! இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.3k views
-
-
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு; படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் உதயனுக்குப் பொன்சேகா பரபரப்புப் பேட்டி வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். "உதயனு"க்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றின்போது இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு: சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் …
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 1 reply
- 1.3k views
-
-
காணாமல் போனோர் விவகாரத்தில் களமிறங்கும் பிரதான எதிர்க்கட்சி- (அஜாதசத்ரு) [15 - April - 2007] ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், கப்பம் பெறுதல், படுகொலை போன்ற சம்பவங்கள் நாடுபூராவும் மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பான எந்தவொரு உண்மை நிலைவரத்தையும் எவராவது வெளியிட முன்வந்தால் அல்லது தட்டிக்கேட்க முற்பட்டால் `சவப்பெட்டிகளை' தயாராக வைத்திருங்கள் என்ற கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிரான சுயாதீன மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாத போக்கொன்றையே காணக்கூடியதாகவுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களின் முதலா…
-
- 7 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 29 SEP, 2024 | 06:00 AM 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…
-
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தல மோசடி-(காணொளித் தொகுப்பு,புகைப்படத்தொகுப்பு) தொடர கீளே சொடுக்கவும்....................... http://esoorya.blogspot.com/2008/05/more-p...rigging-by.html
-
- 0 replies
- 1.3k views
-
-
Investigation needed into human rights violations in Sri Lanka Two years after the civil war in Sri Lanka ended with the surrender of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Parliament urges the Sri Lankan government to take active measures to protect the Tamil people so that they can look forward to "a bright and prosperous future, on equal terms with their Sinhalese fellow citizens". Following a recently published UN report which finds credible the allegations that both government forces and the LTTE conducted military operations with "flagrant" violations of human rights, MEPs call for a full, impartial and transparent investigation. The EP urges the …
-
- 2 replies
- 1.3k views
-
-
புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! -- பழ. நெடுமாறன் "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங் கள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப் பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளை யும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ் வப்போது இத்தகைய புனை கதைகளை அவர்கள் யாருக்காகக் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்! போர் முடிவுக்கு வந்து விட்டது. மக்களுக்கும் புலிகளுக்கும் சேர்த்து இராணுவத் தீர்வைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள். மூன்று லட்சம் மக்களை கால்நடைகளைப் போல நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் இடது வலது வல்லரசுகள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே முடமாக்கிய பெருமையில் திளைக்கின்றன. மேற்குலகமோ இலங்கையில் பெரும் நாடகத்தனமான பாவனைகளை நடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் சிறைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் பேரினவாதிகளின் பரிகாசப் பொருளாகியிருக்கிறார்கள். நாம் புலத்தில் அழுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கில் அடுத்த மோதலுக்கான வழியை ஏற்படுத்தல் 02 ஏப்ரல் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைக் கொண்டாடுவதற்கான அரச விழாவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும், வடபகுதி தகவல்களை ஆராய்ந்து பார்த்த சுயாதீனமான விமர்சகர்கள் வெற்றி விழாவைவிட கவலைக்குரிய விடயங்களும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடபகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. இதன் மூலமும் வேறொரு அரசியல் தோற்றத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும் UN Security Council to meet on Sri Lanka The UN Security Council is to hold its first formal session on the plight of civilians in Sri Lanka, a move diplomats said could increase pressure on government forces to stop shelling a zone where tens of thousands of people are trapped. The council, which has held several informal meetings on Sri Lanka without taking any action, was due to start its session at 3pm. Source Link: UN Security Council to meet on Sri Lanka
-
- 3 replies
- 1.3k views
-