Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ தேசத்தின் விடிவிற்காக தங்கள் உயரிய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட மாவீரர்கள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் வைத்து வணங்கப்படவேண்டியவர்கள். இன்று சிறீலங்கா தனது கோர முகத்தைக் காட்டி இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அழித்தபோதும் தமிழ் மனங்களில் இருந்தும் வரலாற்றின் பதிவுகளில் இருந்தும் மாவீரச் செல்வங்களை என்றுமே அழித்துவிடமுடியாது. அழித்துவிட முடியாத அந்த மாவீரர்களின் வரலாறுகளை, நினைவுகளை ஒரு பெரும் வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில் சங்கதி இணையத்தளம் இறங்கியுள்ளது. அந்தப் பெரும் பணிக்கும் வாசகர்களிடம் இருந்து உதவியைக் கோருகின்றோம். மாவீரர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆக்கங்கள், அவர்களின் நிழற்படங்கள், தரவுகள் எதுவாக இருந்தாலும் (முக்கியமாக அவர்களின…

    • 1 reply
    • 1.3k views
  2. "மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன். இன்று யாழப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார். 26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று …

    • 10 replies
    • 1.3k views
  3. எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே. இராசவர்மனின் குரலிலிருந்து சில துளிகள் ஒலிவடிவில் கேட்க… இராசவர்மன் ! 5வருடங்களாக சிறையிருக்கிறான். இவன் மீது 2குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எப்படியும் 27வருடத்தண்டனைதான் முடிவென்று சட்டவல்லுனர்கள் ஆரூடம் கூறியிருந்தனர். சிறை போனதோடு வர்மன் வீட்டுக்கு விளங்காதவானாகிப் போனான். அம்மாவைத் தவிர யாருமே அவனைப் பார்ப்பதுமில்லை நினைப்பதுமில்லை. அக்கா அண்ணா தம்பியென்ற உடன்பிறப்புகள் அவனோடு பிறந்திருந்தும் அவன் அவர்களால் மதிக்கப்படவில்லை. யார் போனாலென்ன நாடு தன்னைக் காக்குமென்ற நம்பிக்கையில் 27வருடங்களையல்ல ஆயுளையும் சிறையில் கழிக்கத் தயாராகியிருந்தான். ஒவ்வொரு தவணையும் கூண்டில் ஏறியிறங்கிய…

    • 4 replies
    • 1.3k views
  4. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது. வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து 6.9.2011 (செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் அறிவித்திருந்தார். அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100…

  5. கொழும்பு நகரில் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதென்ற செய்தி தவறானது - 03 ஜனவரி 2013 புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய கொழும்பில் 36. 8 வீதமான சிங்களவர்களும், 31.8 வீதமான தமிழர்களும் (இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள்), 29 வீதமான இலங்கை சோனகர்களும் வசித்து வருகின்றனர் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம், கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்டதாகவும் இந்த நகரில் 24 வீதமான சிங்களவர…

    • 5 replies
    • 1.3k views
  6. புதன்கிழமை, 16, பிப்ரவரி 2011 (23:20 IST) ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தமிழக மீனவர்கள் மீது கடல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, அவர்களை சிறைபிடித்தும் செல்கிறது. இதற்காக, இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க., சார்பில், மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, தி.மு.க.,வினர் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். nakkheeran

  7. வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டனர். வளாக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்தது. இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். …

  8. இந்த கட்டுரையை படியுங்கள் ... http://transcurrents.com/tamiliana/archives/291

  9. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்றம்: அச்சுறுத்துகின்றதா இராணுவம்? யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தன் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்த…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன்ஈ தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

    • 4 replies
    • 1.3k views
  11. இலங்கைக்கு... இந்தியா, மேலும் "2 பில்லியன் அமெரிக்க டொலர்" நிதி உதவி. இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலரை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடனான சந்திப்பையடுத்து, முன்னாள் நிதியமைச்சரினால் மேலும் ஒரு பில்லியன் டொலருக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. htt…

    • 25 replies
    • 1.3k views
  12. சிறீலங்காவுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 6 வருட காலங்கள் கடந்துவிடப்போகின்றன. இந்த 6 வருட காலங்களில் சிங்கள பேரினவாத தேசம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் எந்த நியாயபூர்வமான கோரிக்கையையும் அரசியல் ரீதியா பரிசீலிக்க முன்வரவில்லை. மாறாக அது சாதித்தது என்ன..???! தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் சர்வதேச அரங்குக்கு வருவதை தடுப்பதிலேயே அது தன்னை முழுமூச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதற்காக தெளிவான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை தொடர்சியாக அரங்கேற்றி வருகிறது. அவற்றுள் முதன்மையானவை.. 1. தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டமை. 2. சர்வதேச அரங்கில் தமிழர்களின் அரசியல் மற்றும் இராணுவ பலமான தமிழீழ விடுத…

    • 2 replies
    • 1.3k views
  13. செலவு கூடிய இடம் இலங்கை ; சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி உலகிலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளுக்கான செலவு அதிகரித்த நாடாக இலங்கை காணப்படுகின்றது என மதிப்பீட்டு அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி ஏனைய நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான செலவு 45 வீதம் அதி…

  14. பாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன்…

  15. இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது. UN deliberately downplaying civilian death toll in order to stay in SL

  16. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான அழைப்பாணையை அவரிடம் கையளிப்பதற்காக அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர். இந்த அழைப்பாணையை அவர் தங்கி இருந்த நியூயோர்க் நகர்ப்பகுதியில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வளாகமான டிஸ்ரிக்ற் 42, 47 இற்குள் அடங்கியுள்ளது.. ஆகௌயால் மஹிந்தர் நியூயோர்க்கிற்கு புறத்தே ஒரு புத்த கோயிலுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கே அழைப்பாணையை வழங்க அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர் ஆனால் மஹிந்தர் அங்கே வரவில்லை.. இந்த அழைப்பாணை 140 மணித்தியாலங்களுக்குள் வழங்கபப்டவேண்டும். இல்லாவிடினும் நீதிமன்ற அனுமதியுடன் சர்வதேச பொறி முறைகளை பயன்படுத்தி அழைப்பாணையை வழங்க முடியும் என்றார் வழக்கறிஞர் உருத்திரகுமாரன். மூலம்

  17. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு என்ன நடந்தது ?- சிறீதரன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களுக்கும் ஆயர் ஒருவரின் உதவியுடன் சரணடைந்த 100க்கு மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது என்ற தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். அத்துடன் அப்பா வருவார் என்று கண்ணீருடனும், ஏக்கத்துடனும் பல பிள்ளைகள் காத்திருக்கும் நிலைமையே வன்னியில் ஏற்பட்டுள்ளதா…

  18. Published By: VISHNU 14 SEP, 2024 | 02:12 AM யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.vir…

  19. ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது தான். -குற்றம் சாட்டுகிறார் கலாநிதி விக்கிரமபாகு- இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைத்து, `குள்ளநரி' என்ற சான்றிதழை பிரபாகரனிடம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமே தற்போது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் இடதுசாரி முன்னணி மேற்கத்தைய நாடுகளுக்கு சார்பான ரணிலின் மீள் எழுச்சி பெறும் இலங்கையே, இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகும் இதற்கு தேசியவாதிகளென மார்தட்டும் ஜே.வி.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளதென்றும் தெரிவித்…

  20. புங்குடுதீவு சம்பவம் - பொலிஸ்மா அதிபரிடம் விரிவான அறிக்கை கோரினார் அமைச்சர் ஜோன் அமரதுங்க! [Monday 2015-05-25 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸாரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபரிடம் இந்த அறிக்கையை கோரியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த நபர்களை தடுக்காத காரணத்தினால் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்…

  21. இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, விமான-தலைப்படைத் தக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்கையை, இலங்கை அரசுக்கு, இந்திய மக்களின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்துமாறு கோரி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இயக்கம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே! தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக ஏற்று அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவது நீடிக்கிறது. இந்திய அரசு போர் நிறுத்தம் குறித்து இலங்கையுடன் பேசவே இல்லை என இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதன் தொடர்பா…

  22. யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம். சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார். …

  23. தென்மராட்சி கரையோரத்தில் நேற்றிரவு "மர்ம உலங்குவானூர்தி" [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 03:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். குடாநாட்டில் தென்மராட்சி கரையோரங்களில் நேற்று நள்ளிரவு மர்ம உலங்குவானூர்தி ஒன்று சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிகவும் தாழ்வாக வட்டமடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமை இரவு 10:30 மணிமுதல் 11:00 மணிவரை இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பாரிய இரைச்சலுடன் மிகவும் தாழ்வாகப் பறந்த இந்த உலங்குவானூர்தி கரையோரப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்க நிலைகளை நோக்கி படையினர் எற…

    • 0 replies
    • 1.3k views
  24. மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தப்பிக் கொண்டது எப்படி? [07 - October - 2007] -டிட்டோ குகன்- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. இந்தத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டதானது தங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அரசாங்கம் இப்போது மார்தட்டிக் கொள்கிறது. எனினும் இதன் மறுபக்கத்தைப் பார்த்தால் அரசுக்கு எதிரான தரப்பு தீர்மானத்தைப் பேரவையில் கொண்டு வரும் விடயத்தில் துளியளவும் முயற்சிகளை எடுக்க…

  25. இலங்கை படையினர் பணத்திற்காக கொலை செயவதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்............................... இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, பணம் கோரப்படுவதாகவும் பணத்தை கொடுக்க மறுத்தல் அவர்களை கொலை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்............... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2466.html

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.