Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார் : அலிஷாஹிர் மௌலானா By Sayanolipavan 7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார், எனக்கு துரோகமிழைத்தார். இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவ…

    • 5 replies
    • 528 views
  2. ஈழ விடுதலைக்கு இந்தியா உதவாது என்பது தான் என்னுடைய கருத்து என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு: கேள்வி: இலங்கையில் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் உறவுகளுக்காக உங்களால் என்ன செய்ய முடியும்? பதில்: சொல்லமுடியாத துயரத்தை, வேதனையை, இந்த நிகழ்வு எமக்குக் கணித்திருக்கிறது. நடந்து முடிந்துள்ள அவலங்களை எல்லாம் விட இப்போது, முட்கம்பி வேலிகளுக்குள், வதை முகாங்களுக்குள் சிக்கி அவலப்பட்டுக்கொண்டிருக்கிற எமது தமிழ்ச் சொந்தங்கள் எல்லாம் படும் அவலம் தான் எம்மை வேதனைப்பட வைத்திருக்கிறது. இதுதொடர்பில் அ…

    • 5 replies
    • 1.1k views
  3. மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட பாரிய நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு November 15, 2021 மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை(15) காலை 10.30 மணியளவில் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. -சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. …

  4. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: "போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANANDA KUMAR படக்குறிப்பு, கங்காராமை விஹாரையில் ரணில். போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை …

  5. பிரித்தானியாவின் பாராளுமன்ற முன்றலில் கரோ கவுன்ஸிலர் திரு தயா இடைக்காடர் ஆரம்பித்துள்ள 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாகவும், எம்மக்களின் அவலங்களை உலகிற்கு உணர்த்தவும் 5 பிள்ளைகளுக்கு தாயாரான ஓர் ஈழத்து பெண்மணியொருவரும் நீர், ஆகாரம் எதுவுமின்றி தனது சுயவிருப்பின் பேரில் போராட்டத்தில் குதித்துள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது லண்டனை தற்காலிக வதிவிடவுமாகம் கொண்ட திருமதி வடிவேலு தவராணி என அறிய முடிகிறது. இது தொடர்பான மேலதிக தவவல்கள் விரைவில் யாழில் .... பி.கு: லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் திரு தயா இடைக்காடர் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பிக்கும் செய்தியை உலகிற்கு எடுத்து வந்ததும், செயலாக்கியதும் யாழ் இணையமே!!

  6. நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினர் ஐந்தாவது குழந்தையான சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காக ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 5 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடா…

  7. சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்…

    • 5 replies
    • 1.4k views
  8. சிலாபத்தில் குண்டு வெடிப்பு…! நுழைந்தது “ISIS” ஆ…. …. August 06, 201510:04 pm சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த புகையிரதத்தில் இன்று இரவு 7.10 மணியளவில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் ஒருவர் காயமடைந்ததுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவர் புகையிரதத்தை துப்புரவு செய்பவர் என தெரிய வருகிறது. குறிப்பிட்ட நபர் புகையிரதத்ததில் நுழைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட வேளை, ஆசனத்திற்கு அடியில் ISIS என்று எழுதபட்ட பை ஒன்றை எடுக்க முயற்சித்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக குறிப்பிட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இது மிகவும் குறைந்த அளவிலான சக்தியை கொண்ட வெடிகுண்டு என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை இன்று முன்னா…

  9. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றன. நேற்று நண்பகல் கொழும்பு ஊடகம் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் பங்கேற்காது என்ற விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த தகவல் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயம் தொடர்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றார். ஜெனீவா செல்வது தொடர…

  10. போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை! December 28, 2024 3:53 pm அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, வாஜ்பாயும் நானும் அதிகாரத்தில் இருக்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. நாங்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உலகளவில் எத…

      • Like
    • 5 replies
    • 652 views
  11. தமிழீழம் ஒன்றை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றிய யோசனை அடங்கிய மகஜரை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக மு. கருணாநிதி தெரிவித்துள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலினால் குறித்த யோசனைத் திட்டம் கையளிக்கவுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற டெசோ கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 9 ஆலோசனைகள் அடங்கிய தீர்மானத்தில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்பட்டுள்ளது. http://www.paristami...jIyODAyNTYw.htm

    • 5 replies
    • 1.2k views
  12. வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு.. நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது. இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..! நேரமிருந்தால்… அவர் 2008 ல் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் ஒரு தடவை ஓடவிட்டுப்பாருங்கள்… ” இவ்வளவு உலக நாடுகள்.. இந்த சின்னஞ்சிறிய போராட்டத்திற்கு எதிராக இப்படி அணிவகுத்து நிற்கின்றனவே..? ” என்று கேட்டுவிட்டு அவர் மெல்லச் சிரிக்கும் சில நொடிக…

  13. ரிசானா நஃபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று அந்த ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தி…

    • 5 replies
    • 697 views
  14. முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- உலக தமிழர் பேரவை அறிக்கை முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை பாராட்டும் அதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என கருதப்படுபவர்கள் அனைவரினதும் உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்வதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக உலக தமிழர் பேரவை தெரிவ…

    • 5 replies
    • 594 views
  15. காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம். தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீ…

  16. திடீர் அழைப்பையடுத்து கோப்பாய் கலிவியியல் கல்லூரிக்கு மக்கள் விரைவு யாழ் அச்செழு இராணுவமுகாம் முற்றாக மூடப்பட்டு அப்பிரதேசத்தின் காணிகள் மற்றும் குடியிருப்புகளை மக்களிடம் கையளிக்க உள்ளதாக படைத்தரப்பினர் பிரதேச மக்களிடம் அறிவித்துள்ளனர். இதற்கமைய இன்று காலை கோப்பாய் கல்வியியல் கல்லூரிக்கு வருமாறு அச்செழு பிரதேச மக்களுக்கு விடுத்த அழைப்பின் பேரில் பலர் அங்கு சென்றிருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் சற்றுமுன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே முகாம் அமைந்திருந்த சுமார் 3 கிலோ மீற்றர் பரப்பில் பாதுகாப்பிற்காக எழுப்பப்பட்டு இருந்த மண் அணைகள் மற்றும் தாம் அமைத்த முகாம் கட்டடங்கள் என்பவற்றை அகற்றும் பணியில் படையினர் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் …

    • 5 replies
    • 698 views
  17. 'எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும், சிங்கள ராணுவத்தின் ரத்த தாகம், தணியவே தணியாதா?’ என்று கேவிக் கதறுகிறார்கள், தமிழக மீனவர்கள். மீண்டும் ஒரு மீன​வனின் உயிர் குடித்துள்ளது, சிங்கள ராணுவம்! புதுக்கோட்டை மாவட்டத்​தின் கடைக்கோடி மீனவக் கிராமம், ஜெகதாப்பட்டினம். நாகை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியனும் அவரது தங்கை ரேவதியும் ஜெகதா​பட்டினத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தனர். உறவினர் படகைக் கடன் வாங்கி மீன் பிடித்து வயிற்றைக் கழுவக் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டியன்... சிங்கள ராணுவத்தின் கோரத் தாண்டவத்தால் பிண​மாய்த்தான் கரை ஒதுங்கினார். பாண்டியனோடு படகில் சென்று நூலிழை​யில் உயிர் தப்பிய பாஸ்கர், மணிவேல், மணிகண்டன் ஆகிய மூவரை…

    • 5 replies
    • 1.5k views
  18. Jan 29, 2011 / பகுதி: செய்தி / தமிழகத்தில் வசிக்கும் சிங்களவர்களிடம் பதற்றம் - சென்னையை விட்டு வெளியேறவும் திட்டம் தமிழக மீனவர்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து படுகொலை செய்துவருவதை தொடர்ந்து சென்னையில் உள்ள மாகாபோதி நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தமிழகத்தில் உள்ள சிங்கள சமூகத்தினர் அச்சத்துடன் வாழ்வதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சென்னையில் வாழும் சிங்கள சமூகத்திடம் அச்சமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாகவும், சென்னைக்கு வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அது வீழ்ச்சயடைய வைக்கலாம் எனவும் சென்னையில் வசித்துவரும் சிரேமி என்ற சிங்கள பெண் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் போர் நடைபெற்றபோது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. போரின் பின்னர் அது ந…

  19. 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார். இதன்போது, மீள்கு…

  20. பகல் 12 மணிக்கும் பெண்கள் நடமாட முடியாத நிலமை- விஜயகலா எம்.பி.ஆதங்கம்!! அரசியல்வாதிகளின் வாகனங்களில் தான் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது என்றுநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்ட நீர்தாங்கியினை பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, போதைப்பொருள்களைத் தென்னிலங்கையிலிருந்தே வடக்குக்கு கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பாவணை காரணமாக வடக்கில் வாள்வெட்டு சம…

  21. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மையமாக வைத்தே இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உறுதியற்ற அரசியல் நிலையை கருத்தில் கொண்டே தற்போதைக்கு ஜெனீவா பிரேரணைகள் எதுவும் அவசியமில்லை என்ற முடிவிற்கு அமெரிக்கா வந்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் குற…

  22. இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம். இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன -Pathivu-

  23. 10 JUN, 2024 | 12:16 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை (10) புதுடில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில…

  24. முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமை ரணிலோ ,மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தீர்மானிக்க முடியாது! அதை முஸ்லீம்களே தீர்மானிக்க வேண்டும் என்றார் ஹிஸ்புல்லாஹ்! இன்றிரவு -08- காத்தான்குடி பள்ளிவாசலில் மக்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் மேலும் கூறிய விடயங்கள் #உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது! #இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்! #பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000கோடி வழங்கும் நாடு சவூதி! #கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு! #ஒபேக் அமைப்பின் அற…

    • 5 replies
    • 1.4k views
  25. கிளிநொச்சியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் கிளிநொச்சி இரணைமடு கிழக்கு கலாமக்குளம் பகுதியில் இன்று முற்பகல் ஸ்ரீலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைபுலிகளின் முக்கிய முகாமொன்றின் மீது இன்ரு முற்பகல் 11.15 மணியளவில் விமானபடையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் இலக்கு குறித்த பகுதியில் காட்டுப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இராணுவ இலக்கு மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. -வீரகேசரி இணையம் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.