ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் தமது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியதாக இராணுவத் தளபதி லொப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற கடற்படை மற்றும் கடல்சார் நிறுவனத்தின் புதிய அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் போது முன்னேற்றங்ளும், பின்னடைவுகளும் இருந்தன. எதிரிகளுக்கு ஏற்ப தாக்குதல் வியூங்களை கையாண்டோம். நாம் ஒரு வட்டத்திற்குள் இருந்து சிந்தித்து, எமது முறைகளை கண்டுப்பிடித்து அதன் அடிப்படையில் வெற்றி பெற்றோம். போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன் பின்னர் பல ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்ப…
-
- 5 replies
- 748 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது – மகிந்த வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் தான் இணைக்க உள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் மற்றும் வீரகேசரி ஆசிரியர் தேவராஜ் ஆகியோரிடமே இந்த நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் வாழும் முஸ்லிம் மக்கள் இணைப்பை விரும்பவில்லையென்றும் இதுவே தன்னுடைய இந்த முடிவுக்குக் காரணம் என்று மகிந்த கூறியதாகக் கூறப்படுகிறது. Source: http://www.tamilstar.org
-
- 5 replies
- 1.1k views
-
-
மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க சர்வதேசமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் வவுனியா "மனிக்பாம்"முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை, தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்…
-
- 5 replies
- 692 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது? -எரிமலை- சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவ…
-
- 5 replies
- 2.5k views
-
-
தமிழனியை பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு 23 ஜூன் 2012 நீதி அமைச்சரும், புனவாழ்வு அமைச்சரும் பதில் கூற வேண்டும் - மனோ கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.…
-
- 5 replies
- 1.5k views
-
-
பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.! புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் அரசியல்தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். தேவை ஏற்படின் கூட்டம…
-
- 5 replies
- 552 views
-
-
கொழும்பு - கல்கிசையில் இரயில் பாதைக்கு அருகில் சிறிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. - அத தெரண.
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கும் கோட்டாபய அரசு பட மூலாதாரம்,NURPHOTO இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (பிப்ரவரி 4) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. இந்த நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தும் விதம் தொடர்பான ஊடக சந்திப்பை பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் நடத்தியிருந்தார். அப்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை இல்லாது செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இலங்கை அரசியலமைப்பின்படி, தமிழ் மொழி…
-
- 5 replies
- 1k views
-
-
அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்ற கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.அத்துடன் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தங்கள்…
-
- 5 replies
- 477 views
-
-
யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறவுள்ளது. கலந்துரையாடலை யாழ்ப்பாணம் கல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Interim-Plan-Constitution-Open-Discussion-Jaffna
-
- 5 replies
- 979 views
-
-
படகில் தமிழகத்துக்கு தப்பிய மோசடி தம்பதியை இன்ரபோல் மூலம் பிடிக்க நடவடிக்கை! [Monday, 2014-05-12 23:46:54] கடந்த வாரம் மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியரை சர்வதேச பொலிஸ் (இன்ரபோல்) உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நீதி அமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வாரம் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினரையே கைது செய்து இங்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியிலிருந்து படையினரின் அச்ச…
-
- 5 replies
- 743 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அதிகாரமிக்க சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொது பல சேனவின் செயலகத்திற்கு இரண்டு தடவைகள் இரு வேறு நிகழ்வுகளுக்காகச் சென்றிருந்தனர். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேடு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டுமொரு தடவை சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தென்சிறிலங்காக் கரையோரத்தில் காணப்படும் சுற்றுலா மையங்கள் உள்ள இடங்களில் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த வன்முறைச…
-
- 5 replies
- 810 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசி வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கு ஹக்கீம், ஜனாதிபதியின் வாக்குறுதியை எழுத்து வடிவில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அது தொ…
-
- 5 replies
- 950 views
-
-
வன்னிக் கள முன்னரங்கில் பணியளாற்றும் இராணுவத்தினரில் பல நூற்றுக்கணக்கானோர் 'சிக்குன்குனியா' நோயினால்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்
-
- 5 replies
- 2.7k views
-
-
'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை' இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அளவுக்குத்தான் புதிய அரசியமைப்பு மாற்றம் இருக்கவேண்டும். அதனைத் தாண்டி அரசியலமைப்பு முழுமையாக மாற்றப்படக்கூடாது என்று ம…
-
- 5 replies
- 596 views
-
-
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியாத சூழ்நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 5 replies
- 792 views
-
-
யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நின்று, அங்கு நின்றிருந்த பெண்களின் அங்கங்களை தனது அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள், சந்தேகநபரை பிடித்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உபபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சந்தேகநபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்த போது, சந்தேகநபரது அலைபேசியில் பெண்களின் அங்கங்களின் புகைப்படங்கள் பல இருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகந…
-
- 5 replies
- 707 views
-
-
'பிரபாகரன் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று ஒரு பிரிவினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘இல்லை அவர் மீனவர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசினார் தொல்.திருமாவளவன்.‘பிரபாகரனை சாதி அடையாளத்தோடு ஒரு வட்டத்தில் சிக்க வைக்கலாமா?’எனக் கொந்தளிக்கின்றன தமிழ் அமைப்புகள். திருமாவளவனுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக திருமாவின் விளக்கத்தைக் கேட்டோம். ‘‘2002-ம் ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ எனும் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஈழத்திலிருந்து அழைப்பு வந்தது.எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில் நடந்த அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்ப…
-
- 5 replies
- 8.2k views
-
-
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர் என்றும், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர். தீவிரவாதிகளின் ஆதரவாளர். பிரிவினைவாத தீவிரவாதிகள் விடயத்தில் மென்போக்கை கடைப்பிடித்த அவர் எப்போது சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கு உயர்வலுத் தொடர்புசாதனங்களை கொண்டு செல்வதற்கும், விடுதலைப் புலிகள் குரும்பட்டி என்ற மேம…
-
- 5 replies
- 798 views
-
-
புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை [30 - March - 2007] * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர் பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தூரமானதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நாரஹேன்பிட்ட அபயாராமவில் நடைபெற்றது. இதில் மௌலவிமார், உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இதன்போது கடந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தன…
-
- 5 replies
- 894 views
-
-
த.வி.கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பதமநாபா பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீதரனும் நேற்று முன்தினமிரவு சிரிலங்ககா ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அலரிமாளிகையில் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான அந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அங்கு இருந்துள்ளார். மட்டக்களப்பிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் த.வி.கூட்ட…
-
- 5 replies
- 1.7k views
-
-
பரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார். இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர…
-
- 5 replies
- 1.9k views
-
-
'இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் மத்திய அரசு கண்டிப்பு காட்டாவிட்டால், தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வது' என்ற முடிவை முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்ததற்கு மூலக் காரணமே மூன்று முக்கியப் புள்ளிகள்தான். மேலும், கூட்டம் முடிந்ததிலிருந்தே இவர்கள் தி.மு.க-வுக்கு எதிரான காய் நகர்த்தல்களையும் அதிவேகப்படுத்தி விட்டார்கள்! இந்தத் தகவல்தான் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த இரவிலிருந்தே பத்திரிகையாளர்களிடம் பரபரக்கப்பட்ட விஷயம். யார் அந்த மூவர் என நாம் விசாரித்தபோது, ''வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன்தான் அந்த மும்மூர்த்திகள். இந்த மூவரில் தா.பாண்டியன் மட்டும்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர். கூட்ட அரங்கத்திலிரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=4][/size] [size=4]By General 2012-11-20 10:54:51[/size] [size=4]கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன. இவ் ஆலயத்தில் அம்பாள் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இலட்சம் ரூபா செலவில் நடைபெறும் திருப்பணி வேலைகளை முன்னிட்டு மண்டபத்திலிருந்த ஐம்பொன்னினாலான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய மூன்று விக்கிரகங்களும் மற்றும் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களும் பாதுகாப்பாக ஓர் அறையில் ப…
-
- 5 replies
- 717 views
-