Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வரும் நிலையில், கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுக்கான தீர்வு என்னவாக இருக்கும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி தெரிவித்துள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியிட்ட கருத்திற்கு முஸ்லிம் சமூகம் வெறுமனே உடன்படாது என்ற நிலைப்பாடு இருக்கிறது. அது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் என்றும் எனினும், கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் கோரிக்கைகள் இருப்பதாகவும் அவர்களுக்கான தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை முன்மொழிகிறது என்பது தெளிவாகக் கூற வேண்டும் எனவும் அசன் அலி மேலும்…

    • 4 replies
    • 1.3k views
  2. மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று BharatiDecember 26, 2020 மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று2020-12-26T05:39:05+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனே…

  3. பொத்துவில், அறுகம்பை ‐ உடும்பிகுளம் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த மோதல்களை அடுத்து, குறித்த பிரதேசத்தில் இருந்து புலிகளின் இரண்டு சடலங்களை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....10364&cat=1

    • 0 replies
    • 1.3k views
  4. டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா Dec 06, 2014 | 2:25 by கார்வண்ணன் சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “வரும் 8ம் நாள் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. பல்வேறு மட்டங்களிலும் உள்ள எமது பிரதிநிதிகளைக் கலந்துரையாடி வருகிறோம். இந்தக் கூட்டங்கள் இன்னமும் முடிவடையவில்லை. இந்தக் கலந்துரையா…

    • 21 replies
    • 1.3k views
  5. (3ம் இணைப்பு)எனது அறிக்கையால்தான் வைகோ கைது- திருமா, பாரதிராஜா- சீமானையும் கைது செய்க: ஜெயலலிதா [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:39 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தான் வெளியிட்ட அறிக்கையால்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோரை கைது செய்த தமிழக முதல்வர் கருணாநிதி, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாளவன், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எந்தப் பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கைத் தமிழர் படுக…

  6. கொழும்பில் உள்ள நோர்வே தூதராலயத்தை தாக்கியழிப்பதற்கான திட்டமிடல் சிறீலங்கா அரசதலைவரின் சகோதரர் கோத்பாயவினால் முடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பாதாள உலகம், ஜே.வி.பி, இராணுவ புலனாய்வு உறுப்பினர்களை பயன்படுத்தவும் கோத்தபாயமுடிவெடுத்துள்ளதாக

  7. இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது அன்பரசன் எத்திராஜன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MR GAMAGE படக்குறிப்பு, ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் …

  8. விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும்10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீட்டுக் கட்டில் இருந்து உதிரும் சீட்டுக்களைப் போன்று விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். எனவே அவர்களை மேலும் முறியடிப்பதற்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10 ஆயிரம் பேர் மீண்டும் திரும்ப வேண்டும். கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களுக்குள் தப்பியோடியவர்கள் இராணுவத்திற்கு அவசரமாக தேவைப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் தப்பியோடியிருக்கலாம். எனினும், அவர்கள் மீ…

  9. மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது -பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர். எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்ப…

    • 4 replies
    • 1.3k views
  10. 75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…

    • 14 replies
    • 1.3k views
  11. ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த? பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தன…

    • 20 replies
    • 1.3k views
  12. இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (29) வவுனியாவில் நடந்தது. சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சசி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் …

  13. வற்றாப்பளையில் லெப்.கேணல் இமையவனின் வீரவணக்கக் கூட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:16 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவிய லெப்டினன்ட் கேணல் இமையவனின் வீரவணக்கக்கூட்டம் இன்று வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. வற்றாப்பளை பிரதேசப்பொறுப்பாளர் போசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை மணலாறு கட்டளையக தளபதிகளில் ஒருவரான ரம்போ ஏற்றினார். ஈகச்சுடரை மாவீரரின் தாயார் ஏற்றினார். வித்துடலுக்கு மாவீரரின் சகோதரியான போராளி மாலைசூட்டினார். பிரதேச உள்ளகப் பாதுகாப்புப் பணிப்பொறுப்பாளர் காளித், மங்களேஸ்வர விளையாட்டுக்கழக தலைவர் அரசரட்ணம் ஆகியோர் வீர வணக்க உரைகளை நிகழ்த்தினர். அதன…

  14. மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 4 காவலரண்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிலிருந்த படைக்கலங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  15. மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் சிறிலங்காவுக்கு எதிரான எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் பணியகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை இந்தியா ஆதரித்தது. மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும். மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனைப் ப…

  16. தமிழக மீனவர்களை சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்கா கடற்பரப்பில்தான் படுகொலை செய்கிறது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த கருத்தை தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ நிராகரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  17. சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் …

  18. இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. (எம்.நியுட்டன்) கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராசா தெரிவித்தார். புத்தாண்டு தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தழையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள். அறு…

  20. எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை * சம்பூர் விடயத்தில் இலங்கை, இந்திய அரசுடன் பேச்சு * விக்கியுடன் முரண்பாடு இல்லை நேர்காணல் : ஆர். யசி படப்பிடிப்பு : உதேஷ் இந்திக * நிராகரிக்கப்பட்ட கூட்டணியைக் கண்டு அஞ்சவில்லை * சமஷ்டியை சிங்களவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் * அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை போர்க்­குற்றம் தொடர்பில் அர­சாங்கம் மேற்­கொள்ளும் உள்­ள­கப்­பொ­றி­மு­றையில் அர­சாங்­கத்தின் பக்கம் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் உள்­ள­தென்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் முயற்­சி­யிலும் வடக்கின் சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­திலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்­களை அர­சாங்கம் கையாண்…

    • 13 replies
    • 1.3k views
  21. தரம் 5 புலமைப்பரி சில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமாலை வெளியாகின.ஒகஸ்ட் 22ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடை பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பரீட்சை நடை பெற்று 30 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்கள அதி காரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் பெற்ற புள்ளிகளும், மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் நேற்று மாலை வெளியிடப்பட்ட வுடனேயே,அனைத்துப் பாடசாலைகளுக் கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்றும் எனினும் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை இன்று வியாழக்கிழமையே பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அநுரஎதிரிசிங்க தெரிவித்தார். இப்பெறுபேறுகளின் அடிப்படையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய…

  22. தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் பங்குச் சந்தையில் சரிவு [சனிக்கிழமை, 07 யூன் 2008, 07:17 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது. கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எதிர்வரும் வாரமும் எதிரொலிக்கலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த சில ந…

    • 1 reply
    • 1.3k views
  23. 12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் 12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள் யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திர…

    • 4 replies
    • 1.3k views
  24. செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அரச ஆதரவுடன் கருணா குழுவே படுகொலை செய்தது: கொழும்பு ஊடகம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வழிநடத்தலில் இராணுவ ஆதரவுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சந்திரமோகன், சண்முகலிங்கம் ஆகிய இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்வதற்காக தமது நான்கு நண்பர்களுடன் கடந்த மே மாதம் 30 ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பயிற்சி பட்டறை முடிந்ததும் மீண்டும் மட்டக்களப்பு …

  25. நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம் மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜனநாயக நா…

    • 8 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.