ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது. மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்…
-
- 32 replies
- 3.7k views
-
-
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பதையே கடந்த வாரம் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. அண்மைக்காலமாக மேற்குலகம் வரைந்து கொண்ட எழுந்தமானமான வரைவிலக்கணங்களுக்கு எல்லாம் இது ஆச்சரியக்குறி வைத்துள்ளது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமான போது, கருங்கடலுக்கு அண்மையாக அமைந்துள்ள ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் களும் ஆரம்பமாகியிருந்தன. ஜோர்ஜியா வின் பிடியில் இருந்த போதும் சுதந்திர பிரகடனம் செய்த தென் ஒசேஷிய மற்றும் அப்காசியா (South Ossetia and Abkhazia) ஆகிய மாநிலங்கள் ஜோர்ஜிய படைகளின் தாக்குதல்களுக்கு தொடர்ச் சியாக உட்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் கடந்த வாரம் மோதல்கள் மூண்டிருந்தன. …
-
- 6 replies
- 3.7k views
-
-
லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார். புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர்…
-
- 29 replies
- 3.7k views
-
-
தப்பி பிழைத்த கலங்களை தகர்க்க காத்திருக்கும் கடற்ப்புலிகள்..... அன்மையில் தாளையடியில் நடந்த கடற் சமரின் போது புலிகள் நினைத்த இலக்கு சரியான முறையில் நிறைவேறவில்லை என்றே தெரிகிறது. . 5 கடற் கரும்புலிகள் அந்த சமரின் போது வீர காவியமானர்கள் இத்தனை தொகையில் அவர்கள் இறந்தார்கள என்றால் அது பாரிய கல அழிப்பு நடவடிக்கையாத் தான் இருந்திருக்கும் ஆனால் இங்கோ நிலமை சற்று திசை மாறி இருக்கிறதை ஊகிக்க முடிகிறது . எந்த கலத்தின் மீது குறி வைத்தார்களோ அந்த கலம் அங்கு தப்பியாயிற்று இல்லை எனின் அந்த கலங்கள் அந்த நேரத்தில் அங்கு இல்லை என்பதாகிறது . சிறிலங்கா கடற்ப்படையின் வளங்களை தொடராய் தாக்கி அழித்து அதன் பலத்தை குறைப்பது . யாழ் குடாவிற்க்கான விந…
-
- 10 replies
- 3.7k views
-
-
இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது. ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தக…
-
- 8 replies
- 3.7k views
-
-
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
Canada puts Tamil group on terrorist list 16 Jun 2008 18:41:38 GMT Source: Reuters (Adds comments, details) TORONTO, June 16 (Reuters) - The Canadian government added the World Tamil Movement to its list of terrorist groups on Monday, describing it as a front organization which raised funds for the Tamil Tigers in Sri Lanka. The group's assets will be frozen and Canada's banking regulator said that Canadian financial institutions must review their records and immediately report to the federal police any transactions made by the World Tamil Movement. The directive covers Canadian banks, insurance companies and credit unions and is part of Canada's effo…
-
- 15 replies
- 3.7k views
-
-
முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “…
-
- 37 replies
- 3.7k views
- 1 follower
-
-
முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறத…
-
- 9 replies
- 3.7k views
-
-
யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளால் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிளிநொச்சி மத்திய …
-
- 61 replies
- 3.7k views
-
-
பூமி பிளந்து அதனுள் செல்வது போன்று கனவு: 28 ஜனவரி 2016 கனவின் பின்னர் தூக்கமே இல்லாமல் இரவுகளை கழித்து வருகின்றது ஒரு குடும்பம்: குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்:- கனவின் பின்னர் தூக்கமே இல்லாமல் இரவுகளை கழித்து வருகின்றது ஒரு குடும்பம். அச்சுவேலி மேற்கு நவக்கிரி பகுதியில் J/ 287 கிராம சேவையாளர் பிரிவில் சுப்பிரமணியம் தர்மசேகரம் அவரது மனைவி லலிதா தர்மசேகரம் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இருவரும் தோட்டம் செய்து வருகின்றனர். இருவரும் கடும் உழைப்பாளிகள், கடந்த 30 வருடகாலமாக கடுமையாக உழைத்து , சிறுக சிறுக சேமித்த பணத்தை கொண்டு கடந்த ஐந்…
-
- 0 replies
- 3.7k views
-
-
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம் கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், (31) செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும். ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைம…
-
- 29 replies
- 3.7k views
- 1 follower
-
-
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து, இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினர். அப்போது தன்னை சந்திக்க வருமாறு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனிடையே, பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள விக்னேஸ்வரன், மோடியுடன் வடக்கு மாகாண சபை மற்றம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1056840
-
- 89 replies
- 3.7k views
-
-
இலங்கை ராணுவத்திடம் கிளிநொச்சியை விட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து பின்வாங்கிய புலிகளும் தமிழர்களும் முல்லைத்தீவு மாவட்டத் திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த மாவட்டத்தைச் சுற்றி மிக உக்கிரமான தாக்குதலை மேற்கொண்ட சிங்கள ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, முல்லைத் தீவு நகரத்திற்குள் புகுந்தது. முல்லைத்தீவு நகரத்தை ராணுவம் ஆக்ரமித்த சூழலில், மாவட்டத்தின் பிற பகுதிகளையும் கைப்பற்ற முப்படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகள் (கொத்தணி குண்டுகள்) பாஸ்பரஸ் எரிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது ராணுவம். இந்த சூழலில்தான், பிரபாகரன் இரண்டு வித வியூகங்களை மேற்கொண்டிருப்பதா…
-
- 20 replies
- 3.7k views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோர…
-
- 25 replies
- 3.7k views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார். கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்…
-
- 53 replies
- 3.7k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். வடமத்திய மாகாண சபை தேர்தலில்போட்டியிடும் முகமாக பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் பதவியேற்பு நிகழும் சமயம் எதிர்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் விமல் வீரவன்ச ஆகியோரே சபையில் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி , ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ் பதவியேற்பு நிகழ்வினை பகிஷ்கரிப்பு செய்…
-
- 28 replies
- 3.7k views
-
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோ…
-
-
- 53 replies
- 3.7k views
- 2 followers
-
-
ஜெயந்தன் படையணி ஒன்றுகூடல் [புதன்கிழமை, 02 சனவரி 2008, 04:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் ஒன்றுகூடல் நேற்று செவ்வாய்க்கிழமை வன்னியில் பிரத்தியேகமான இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு போராளி குபேரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி உரையாற்றினார். போராளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
- 3 replies
- 3.7k views
-
-
‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உண…
-
- 22 replies
- 3.7k views
-
-
தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை "வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது. தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அரு…
-
- 11 replies
- 3.7k views
-
-
அரசிலிருந்து சில தவளைகள் பாய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை. எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன், அவள்களும் உயிர் அச்சுறுத்தல் என்றே சொல்கிறார்கள். நன்றாக சொல்லிக் கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒருகாலத்தில் என்னை ஹிருனிகா தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி, உயிர் அச்சுறுத்தல் என கூறிவருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூறமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறியவர்கள் பற்றி தாம் பேச போவ…
-
- 6 replies
- 3.7k views
-
-
NDTV Opinion Poll NDTV Opinion Poll States Seats NDA UPA Third Front Fourth Front Other Andhra Pradesh 42 22-26 14-18 1-3 Bihar 40 28-32 8-12 Gujarat 26 16-20 6-8 Haryana 10 2-4 5-7 1-2 Karnataka 28 14-16 10-12 1-2 Kerala 20 12-14 6-8 Madhya Pradesh 29 18-20 9-11 Maharashtra 48 17-19 28-32 Orissa 21 2-4 7-9 9-11 Punjab 13 4-6 7-9 Rajasthan 25 7-9 15-17 1-2 Tamil Nadu 39 20-22 19-21 Uttar Pradesh 80 9-11 7-9 38-42 18-22 1-2 West Bengal 42 13-15 26-30 Delhi 7 1-2 5-7 Others 73 33-37 26-30 2-4 1-2 5-7 A…
-
- 2 replies
- 3.7k views
-
-
படத்தை பெரிதாக்கிப் பார்க்க இப்படத்தின்மீது அழுத்தவும்.
-
- 1 reply
- 3.7k views
-
-
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், பெப்ரவரி மாதத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வருமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்திற்குப் பின்னர் புலிகள் இயக்கத்திற்குச் சாதமான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும்,ராவய பத்திரிகையின் செய்திகள் தெரிவிக்கின்றன இதை அரசாங்க அமைச்சர் 2009 இல் வரப்போகும் பொருளாதாரச்சீர்ரளிவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார் அதனால் அரசாங்கம் யுத்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. உலக அரசியல் களம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை போன்றவை அரசாங்கத்…
-
- 1 reply
- 3.7k views
-