ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், இந்திய அதிபர் மன்மோகன்சிங்கை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர். இலங்கையில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து சென்றோர், மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தனர். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் எழுந்த குரல்களினால், இலங்கை அரசும் நடு நடுங்கியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இல்லாது, இந்திய மத்திய அரசு ஆட்சி நடத்தும் வாய்ப்பு இல்லை. அவர்களுக்கும் தமிழக கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதேபோல், இந்தியாவும் இலங்கையு…
-
- 4 replies
- 2k views
-
-
TNA புலிகளின் வழியைப் பின்பற்றுகின்றது – டக்ளஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றி செயற்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களை புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, பொய்யான பிரச்சாரங்களை செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும், அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பா…
-
- 4 replies
- 778 views
-
-
இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்கின்றோம் : ஜாதிக ஹெல உறுமய இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்து…
-
- 4 replies
- 786 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் எதிர்வுகூறினார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார். அவர் பாராளுமன்றத்திற்கு வரும் நிலையில் எதிர்க்கட்சியில் இருந்து 15 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற க…
-
- 4 replies
- 722 views
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்கான அதிஉயர் கௌரவ விருது 'உதயன்' நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றபோது 'உதயன்' நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான 10 ஆவது விழா கொழும்பு மவுண்ட்லவேனியா ஹோட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருண் றோய் கலந்துகொண்டார். இந்த விருது வழங…
-
- 4 replies
- 558 views
-
-
http://www.youtube.com/watch?v=Tl0tCivlhrs&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ha1DNWgvzkQ&feature=related courtesy : rakasija:YouTube
-
- 4 replies
- 710 views
-
-
இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன என நேற்று வெளியான ஈழமுரசு செய்தி தெரிவித்துள்ளது. மேலும் அவ்விதழ் தெரிவிக்கையில்: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்திருக்கின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து, யாழ்குடாவில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்…
-
- 4 replies
- 676 views
-
-
தமிழ்த் தலைவர்கள் தனி இராஜ்ஜிய கனவில் தொடர்ந்தும் இருக்கக்கூடாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தனி இராஜ்ஜியம் என்ற கனவில் இருக்காமல் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு நாட்டுக்கும் அவர்களின் மக்களுக்கும் சேவைசெய்ய முன்வரவேண்டும் என பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மாகாண சபை முறைமை பொருத்தமான ஒன்று என நாங்கள் நின…
-
- 4 replies
- 1.1k views
-
-
[Monday, 2011-06-06 06:51:26] யாழ். மாவட்டத்தில் அரச நிகழ்வுகளில் இனிமேல் போசணை மிகுந்த பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களை ருசித்து அருந்தி மகிழ முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாகவே இவை வழங்கப்படவுள்ளன.மாவட்டத்தில் நிலவும் போசணையின்மையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தின் முன்னோடிச் செயற்பாடாகவே இந்தப் புதிய நடைமுறை வருகிறது.யாழ். செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போசாக்குக் கருத்தரங்கு நிகழ்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போசாக்கு குறைவாகவுள்ள பிரதேசங்கள் எவை என இனங்காணுதல். * அவ்வாறு இனங்கா…
-
- 4 replies
- 1.3k views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / தலைக்கு மேல் கடன் – காணிகளை விற்பனை செய்யும் சிறீலங்கா சிறீலங்கா அரசின் கடன்சுமை எல்லை தாண்டி அதிகரித்துச் செல்வதால் அதனை சமாளிப்பதற்காக அது காணிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருட முடிவுக்கு முன்னர் ஒரு பில்லியன் டொலர்களை கடன்களுக்கான தவணைப் பணமாக செலுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா உள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட 16 பில்லியன் டொலர்களுக்கான கட்டுப் பணமே இந்த தொகையாகும். இதில் யப்பானுக்கு இந்த வருடம் 310 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 320 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 325 மில்லியன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
20 AUG, 2023 | 08:24 PM 1976 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 விதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (18) தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் கச்சதீவை மீட்போம் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்கள் வரும்…
-
- 4 replies
- 691 views
- 1 follower
-
-
அம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். “வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
மன்னாரில் நடைபாதை நாள் சந்தை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தான் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என அறிமுகப்படுத்தி குறித்த நபர் அடாடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையினால் ஆண்டு தோறும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமையான செயற்பாடாகும். அந்த வகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது. இதன் போது குத்தகைக்கு வ…
-
- 4 replies
- 481 views
-
-
தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – சுகாதார அமைச்சு Digital News Team 2021-01-12T18:01:21 தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் Thinakkural.lk
-
- 4 replies
- 546 views
-
-
ஒருபுறத்தே, தமிழர் தாயகம் பவுத்த பூமியாக மாற்றப்பட்டு வருகிறது ... Colombo intensifies spread of Buddhism in North [TamilNet, Tuesday, 22 June 2010, 17:51 GMT] Buses carrying around two thousand Buddhist priests under heavy escort carrying a sacred statue of Buddha on a pilgrimage to Jaffna had passed Vavuniyaa Monday and entered Vanni main land through A9 road, sources in Vavuniyaa said. The buses, however, have not reached Jaffna until Tuesday evening and it is assumed that the Buddhist priests, on an urgent mission to spread Buddhism in the North, are engaged in some unannounced opening ceremonies of newly erected Buddhist Viharas in Vanni by the occupying Sri…
-
- 4 replies
- 1.8k views
-
-
மூன்றாவது தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடும் உரிமை மகிந்தவுக்கு இல்லை! - என்கிறது கொழும்பு டெலிகிராப். [Tuesday, 2014-04-22 08:06:02] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக போட்டியிடுதற்கு உரிமை இல்லை என்று கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற இரண்டு தவணை என்ற வரைமுறையை நீக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை முன்னைய ஜனாதிபதிகள் போல, கட்சிகளை தடை செய்யவும், அரசாங்கத்தை மாற்றவும் பயன்படுத்தப் போவதில்லை என்றும், இதனை மக்களை வழிப்படுத்தவே பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே மக்கள் அவருக்கு…
-
- 4 replies
- 838 views
-
-
நாட்டை... பொறுப்பேற்கத் தயார் – சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்: சஜித். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை …
-
- 4 replies
- 283 views
-
-
அன்பிற்குரியவர்களுக்கு, சிறிலங்கா அரசு வலிந்து முன்னெடுத்துள்ள போரிற்கு முகம்கொடுப்பதற்காக இங்கே மண்ணும் மக்களும் தயாராகிவருகின்றனர். இந்த வேளையிலே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எமது உறவுகள் சிரமேற்கொண்டு செய்யவேண்டிய தலையாய பணி ஒன்று மட்டுமே. அதாவது எமது போராட்டத்தினது தார்மீக நிலை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புலத்திலே மிகவும் முனைப்போடு முன்னெடுக்கப் படவேண்டும். குறிப்பாக தற்போதைய நிலவரங்களின் உண்மைத்தன்மை அவற்றிற்கான மூலகாரணியான சிங்களத்தின் உண்மை முகம் என்பன சர்வதேசத்திலே அம்பலப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக இன்று (11-05-2006) எமது கடற்பரப்பிலே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் பக்கச்சார…
-
- 4 replies
- 2.2k views
-
-
நள்ளிரவு வேளையில் அலரி மாளிகையை தக்க வைப்பதற்காக பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடிய முன்னால் ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிர்பாராத விளைவுகளே பதில்கள் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் நள்ளிரவில் நடந்த திடக்கிடும் சம்பவங்கள் வெளிவராத நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இந்தியப் பிரதமர் மோடியின் பங்குகளும் உண்டு. இன்னும் பல அதிரடி மாற்றகள் இலங்கையில் இடம் பெறலாம் என லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtyBTdKbhr6.html
-
- 4 replies
- 1.3k views
-
-
கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது. கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர். ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழர்க்கெதிரான இனவழிப்பை முற்றாக நிராகரித்துச் சிங்களவர்களுக்கு நிகராகச் செயற்படும் வடமாகாண ஆளுநர், சுரேன் ராகவன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சில்க் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் குழுவில், ஜனாதிபதி மைத்திரியினால் நியமிக்கப்பட்ட தமிழரான சுரேன் ராகவனும் கலந்துகொண்டிருந்தார். இவ்வமர்வுகளின்பொழுது, இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை இவருடன் அங்கு சமூகமளித்திருந்த சிங்களவர்களுக்கு நிகராக இவரும் மறுதலித்திருந்தார் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. இவர் தனது ஜெனீவாப் பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், தான் மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர், மிச்செல் பாக்லெட்டுடன் பேசும்போது, அவர் தயாரித்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
"புலிகளுடைய போராட்டம் முடிந்து விட்டது. அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனீவா சென்ற போது அறிய முடிந்தது" என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிசாட் பதுயுதீன் தெரிவ்த்தார். கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்…
-
- 4 replies
- 893 views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக வடக்கு மாகாணசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக்…
-
- 4 replies
- 730 views
-
-
'த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்' சண்முகம் தவசீலன் ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இறுதியாக 17.02.2016 அன்று நடைபெற்றிருந்த…
-
- 4 replies
- 474 views
-
-
மீண்டும் மன்னாரில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அதேநேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக இனம் தெரியாத சந்தேகநபர்களால் சேதப்படுத்தப்பட்டு…
-
- 4 replies
- 750 views
-