ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மட்டக்களப்பு தாண்டியடி காட்டுப்பகுதியில் இன்று மாலை மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அங்கு வந்த அதிரடிப்படையினர் மக்களை தடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். இச்சம்பவத்தில் படையினர் ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் என தன்னிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். மூண்டாளம்மடு, நடராசானந்தாபுரம், தாண்டியடி கிராம மக்கள் திரண்டு மறைந்திருந்த நபர்களை முற்றுகையிட்ட போது அங்கு வந்த படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கல…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ காவல்துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ நியமனம் [Friday December 28 2007 03:35:18 PM GMT] [saravanan] தமிழீழ காவல் துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ இன்று தமிழீழ தேசியத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசியத்தலைவரால் 16 வருடங்களுக்கு முன்பு தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கபட்டது. கடந்த 16 வருடங்களாக பா.நடேசன் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். கடந்த காலங்களில் தமிழீழ காவல் துறை தனது சேவையை நேர்மையாகயும் பெறுமதியாகவும் சட்டம் வழியில் பேணி வந்துள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=55657 இந்த தலைப்பில் ஒரு கேள்வியை கேட்டு இருந்தேன்... பதில் அழித்த எல்லாரும் இலங்கையின் கட்டுக்குள் தமிழ் மக்கள் படைக்குழுக்களின் கொலை அசுறுத்தலுக்குள் தமிழ் மக்கள் வாழ்வதாக சொன்னார்கள்... அங்கு அரச கட்டுக்குள் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாது தங்களின் கருத்துரிமைகள் மறுக்க பட்டு திறந்த வெளியில் நடமாடும் கைதிகளை போலவே வாழ்வது இங்கே எல்லாரும் தெரிந்து கொண்டும் , தெரிந்தும் தெரியாமலும் வாழ்கின்றோம்.. இண்று அதே சிறைச்சாலையில் இன்னும் ஒரு முகாம் எனும் சிறையை உருவாக்கி அந்த மக்களை அடைக்க என கங்கணம் கட்டி நிக்கிறது இலங்கை அரசு... அதை நேரடியாக இந்தியாவும் அங்கு கலைஞரும் (48 மணிநேரம் இலங்கை போர் நிறுத்தம் செய்ததை …
-
- 7 replies
- 1.3k views
-
-
இழப்புக்கள் தமிழர்களுக்குப் புதிதல்லத் தான், ஆனாலும் இவை மனதைப் வருடுகின்றன! http://uk.news.yahoo.com/09012007/46/photo...s-vavuniya.html http://news.yahoo.com/photo/070109/ids_pho...r3474478506.jpg
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனிக்குளம் மற்றும் துணுக்காய் ஒட்டங்குளம் பகுதிகளில் மொத்தம் 33 போராளிகள் வீரச்சாவடைந்த தாக்குதல்களில் 14 படையினர் பலியாகி 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு இன்று அறிவித்துள்ளது. இதில் துணுக்காயில் நேற்று 8 படையினரும் வவுனிக்குளத்தில் நேற்று முந்தினம் 6 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு இடத்திலும் தலா 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு 120 மிமி எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்தி, 2 ஆர் பி ஜி மற்றும் 50 வரையான ரி 56 துப்பாக்கிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் பிற ஆயுத தளபாடங்களையும் படைத்தரப்பு மீட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 3 போராளிகள் வெவ்வேறு கள முனைகளில் படையினரிடம் சரணடைந…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் இயங்கும் ஆயுதக் குழுவொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆயுதக்குழுவை அரசியல் சக்தியொன்று இயக்கி வருவதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சிலருக்கு எதிராக மாத்திரம் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த அரசாங்க அமைச்சர், ஆயுததாரிகளைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு பல்வேற…
-
- 1 reply
- 1.3k views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில், இன்று (19) நண்பகல் 12 மணியளவில், விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர் இதன் போது சமகால நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர், மா…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது குற்றம் சுமத்தும் வகையிலான குற்றப்பத்திரம் ஒன்றை, அமெரிக்காவின் புதிய ஒபாமா அரசின் நீதித் திணக்களத்திடம் அடுத்த மாதம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்டடிருக்கின்றன. என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதி இணை சட்ட மா அதிபர் புரூஸ் பெய்ன் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற கோட்டாபயவுக்கும், அமெரிக்கவில் நிரந்தரமாக வசிப்பதற்கான 'கீறின் கார்ட்' அனுமதி பெற்ற சரத் பொன்சேகாவிற்கும் எதிராக இது விடயத்தில் நானூறு பக்க குற்றப்பத்திரம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். தமி…
-
- 1 reply
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 8/3/2011 12:18:56 PM யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புனருத்தாரனம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார். பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச்சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்;கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமய…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார். நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்கு சென்ற வேளையில் குறித்த மாணவனைக் கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஐர்செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன் பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டானில், வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அபிவிருத்திகள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு…
-
- 6 replies
- 1.3k views
-
-
- 2009 மே19ற்குப் பிற்பாட்ட காலத்து ஈழதமிழர் பயணத்தின் அணுகுமுறை பற்றிய பார்வை - 2009 மே-19ற்குப் பிற்பட்ட ஈழத்தமிழர் அரசியலும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் பெரும் குழப்பத்திற்குள்ளும், மயக்கத்திற்குள்ளும் அகப்பட்டுள்ளது. சிங்கள – தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாட்டின் பரிணமத்தில் தோன்றிய ஆயதம்தரித்த விடுதலைப் போர் சிங்கள – பிராந்திய – சர்வதேச நெருக்குவாரங்களிற்குள் அகப்பட்டு தோற்கடிக்கப்பட்ட அல்லது பின்னடைவுக்குட்படுத்தப்பட்டதொரு பின்னணியில் இந்தக்குழப்பத்தினை புரிந்துகொள்ளலாம். இந்தக் குழப்பங்கள் - மயக்கங்களினால் எங்கள் தேசம் பலவீனமானதொரு வரலாற்றுச் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாங்கள் பயணிக்கப் போகின்ற வழி எது? - இந…
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளால் மீண்டும் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவரான ரோஹன் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலவேறு நாடுகளில் இருந்தவாறு ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு ஏற்படும் அச்சு…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திமுகவின் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மூலம் விரைவில் ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு அனுப்பி வைப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழ் ஈழம் என்று குரல் கொடுத்தவர்கள் இன்று எதிர்ப்பு குரல் தெரிவித்தால் என்ன பொருள்? நாதஸ்வர இசை முழங்கும்போது பக்கத்தில் உள்ள இன்னொரு வித்வானும் அதற்கு ஏற்றார் போல் நாதஸ்வரம் வாசித்தால் தான் கச்சேரி களைகட்டும். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொடுக்க நானும், சில தமிழக தலைவர்களும் சேர்ந்து டெசோ மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அந்த மாநா…
-
- 8 replies
- 1.3k views
-
-
சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து த.மனோகரன் இலங்கையின் இனமுறுகல் இன்று பூதாகரமாகத் திகழ்ந்து பல அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்து, தமிழ்மொழி உரிமைக்கு மறுப்புத் தெரிவித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தமை என்பது வரலாறு. 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை எதிர்க்கத் தலைப்பட்ட தமிழினம் இன்று தனிநாடு என்ற கோட்பாடு வரை வந்து விட்டது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஓர் இனத்தின் இருப்புக்கு, வாழ்வின் உறுதிக்கு, மொழியுரிமை கட்டாயமானது, அவசியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஓர் இனத்தின் மொழியுரிமை பறிக்கப்படும் போது அவ்வினம் வாழும் நாட்டின் இரண்டாம் தரப்பிரஜைகளாக, நாட்டிற்கு …
-
- 0 replies
- 1.3k views
-
-
15.12.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் Helvitia Platz இல் இருந்து சுவிஸ்சில் உள்ள இந்தியத்தூதரகம் நோக்கி இந்தக் கவனயீர்ப்போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசே உனக்குக் கண்ணில்லையா உன்தாய் வயிற்றுப்பிள்ளை நாமல்லவா! என்ற வேண்டுகோலுடன் பதாதைகளும், மெழுகுவர்த்திகளையும் ஏந்தியவாறு ஊர்வலமாக மக்கள் சென்றனர். தூதரகத்தின் முன்பாக ஊர்வலமாக சென்றடைந்த மக்கள் ஒன்று கூடி உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆங்கு ஈகைச்சுடரை சுவிஸ் சமுக சேவைகள் அமைப்பை சேர்ந்த திருமதி.Anor Anna ஏற்றினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்தமுர்த்தி, திருமதி.பவானி, செல்வி.கீர்த்தனா ஆகியோர் உரைநிகழ்த்தினர். இந்தியத்…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கும் UKக்கும் இடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட உள்ளது:- 26 பெப்ரவரி 2011 இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிhன விமான போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரு நாட்டு விமான சேவை உயரதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 14 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விமான சேவைகளை கனடா வரையில் நீடிப்பதற்கும் பிரித்தானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வாரத்தில் ஏழு விமானங்கள் கனடா நோக்கிப் பயணிக்கும் என விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார். பிரித்…
-
- 7 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் பிளெக் சந்திக்காமைக்கு கண்டனம் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் முஸ்லிம் பிரதிநிகளை சந்திக்காமை தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருந்தால் முஸ்லிம்கள் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கட்டாயம் சந்தித்திருக்க வேண்டும் என அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர் …
-
- 5 replies
- 1.3k views
-
-
புங்குடுதீவு தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு Written by Sankiliyan Tuesday, 10 January 2006 புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நில…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 30 வருடங்களில் விடுதலைப்புலிகளின் 22 அயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாவீரர்கள் குடும்பங்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் சர்வதேசமும், இந்தியாவும், சர்வதேச நிறுவனங்களும் இவர்களையே சிவிலியன்கள் என அடையாளப்படுத்துவதாகவும் இவர்கள் பிரபாகரனைக் காப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா…
-
- 8 replies
- 1.3k views
-
-
படையினரின் களமுனை வெற்றிகளும் புலிகளின் இராஜதந்திர வெற்றிகளும் -குரு- நாம் வாழ்கின்ற உலகம் தோற்றம் பெற்றநாள் முதல் இன்றுவரை எத்தனையோ வகையான போர்களை அது கண்டுவந்திருக்கின்றது. போர்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது வரலாற்றுக் கதைகளில் காவியமாகச் சொல்லப்படும் பாரதப்போர். மத்திய காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்ற சிலுவைப்போர் மற்றும் கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஈருடகப் போர்களும், அதனைத் தொடர்ந்து நடந்த அரபு - இஸ்ரவேல் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களும் வளைகுடாவில் நடந்த ஈரான் - ஈராக் போர்களும், தற்போது உலகாளும் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களே, இவையே சர்வதேச அளவில் பேசப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிப் பிரதேசத்துக்கு வருகை தருமாறு பௌத்த பிக்குகளுக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
Published on May 28, 2011-11:45 am · No Comments புத்த பிக்கு ஒருவர் பன்னிப்பிட்டியாவில் வைத்து ஹிரோயின் போதைப் பொருள் பொதிகளுடன் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ஹிரோயின் பொதி செய்யப்பட்ட பல பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இந்த புத்த பிக்கு ஆசிரியராக இருக்கிறார் என்றும் இவர் கிரோயின் போதைப்பொருள் விநியோகஸ்தராக நீண்டகாலம் இருந்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு கிரோயின் விநியோகம் செய்யும் மொத்த விநியோகஸ்தர் ஒருவரையும் மகரகம காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன source:thinakkathir.
-
- 3 replies
- 1.3k views
-
-
"கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தங்களுடன் "பிக்பொக்கட் வசந்தமும்' இடம்பெறுவதாகக்' கூறிய ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐ.தே.க.வின் வாக்குகளை இல்லாமல் செய்த பிரபாகரனை நாமோ கட்சியோ ஒரு போதும் மறக்கப்போவதில்லை'யென்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்து எமது கட்சியை இல்லாமல் செய்ததாலேயே நாடு நாசமடைந்து போனது. தேர்தலின் போது எமக்கான வாக்குகளை பிரபாகரன் இல்லாமல் செய்தார். இதனால் நாம் அவரை சபித்தோம். அவர் எமது பரம எதிரியானார். அவர் இப்போது கொல்ல…
-
- 1 reply
- 1.3k views
-
-
25.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3cb83dacb17b0af
-
- 0 replies
- 1.3k views
-