Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு! லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார். நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பிலும், 4பேர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் விடுதலை குறித்து இந்த சந்திப…

    • 4 replies
    • 470 views
  2. யாழ்ப்பாணத்தில் 7 வருடங்களின் பின்பு உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பரீட்சை நடைபெற்றுள்ளது. கடந்த வியாழன் தொடங்கி சனி வரையுமான 3 நாட்கள் நடைபெற்ற இப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் பரீட்சார்திகளாகக் கலந்து கொண்டார்கள் . செய்முறைப் பரீட்சை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலும், எழுத்துப் பரீட்சை யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி முன் மண்டபத்திலும் நடைபெற்றன. இந்தப் பரீட்சைக்கு வடமாகாணத்தில் 103 பேர் விண்ணப்பித்ததுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 86 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.xx thx http://www.newjaffna.com/ இப் பரீட்சை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்…

    • 4 replies
    • 1.1k views
  3. காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!! ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு முன் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபாய்களையும், 25 பவுண் நகைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். எனவே இதனை அபகரிக்கும் திட்டத்துடன் காதலனும், பிளாஸ்ரிக் படக…

  4. பொதுசன உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பிலான விடயங்கள் முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார். அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ள களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலராலும் அண்மையில் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. களனி தொகுதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கப்பம் கோரல் அச்சுறுத்தல் உள்ளிட்ட தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து அந்த முறைப்பாட்டின் மூலம் பிரதேச சபை உறுப்பினர்கள…

    • 4 replies
    • 746 views
  5. தேநீர் விற்ற மோடி பிரதமராக முடியுமானால் வடை விற்ற எனக்கு ஏன் முடியாது : ஊவா முதலமைச்சர் தேநீர் விற்ற மோடி இந்தியாவின் பிரதமராகியிருக்கின்ராரென்றால் ரயிலில் வடை விற்ற என்னால் ஏன் அவ்வாறானதோர் உயர் பதவிக்கு வர முடியாது இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு அப்படியான சிறப்பான பதவிக்கு ஏன் வர முடியாது என்று ஊவா மாகாண புதிய முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதற்கு பாடுபட்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரை நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு கௌரவத்தை அளித்து நன்றியும் தெரிவிக்கிறேன் என்றும் கூறினார். பதுளை நகர் மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் …

  6. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு சிங்களவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலுமே இவ்விருவரும் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே தயானந்த என்பவர் 1,468 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே நந்தசிறி என்பவர் 722 விருப்பு வாக்குகளைப் பெற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மங்களகம என்ற சிங்களக் குடியேற்றத்திட்டத்தை சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட…

  7. மடு தேவாலயத்தில் மாதா திருச்சொரூபம் திரும்பவும் கொலுவேற்றப்பட்டுள்ளது. [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 04:11.38 PM GMT +05:30 ] இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காகக் கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்க…

    • 4 replies
    • 1.2k views
  8. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சட்டத்தரணிகள், நொத்தாரிசுகள், சட்ட மாணவர்கள், சட்ட கலாநிதிகள் என 37 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்டத்தின் சுயாதீன தன்மையை…

  9. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் புதன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அனுசரணையுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஒரு போர்-சார் செயற்பாட்டாளர் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்பு இருந்தே, ஏற்கெனவே - அந்த இயக்கத்தின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்த ஒரு இராஜதந்திர - அரசியல் செயற்பாட்டாளர். அந்தப் பொறுப்பு நிலையில் அமர்த்தப்பட்ட பின்பு - அனைத்துலக இராஜதந்திர வட…

  10. இலங்கையின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதையை நிலைமைகளைக் கருத்திற்கொண்டே தான் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தனக்கு பதிலாக கனடாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இலங்கை 2013ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதனை தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்காகவும் இலங்கை பயன்படுத்தும் என்று நம்பியதாக தெரிவித்துள்ள கனடாவின் பிரத…

  11. சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற…

  12. -எஸ்.கே.பிரசாத் யாழ். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரென்சில் கொப்பேக்கடுவவின் நினைவு தூபியைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர். ஊர்காவற்துறை வீதியில் இருந்து அராலிக்கு செல்லும் காட்டுப் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபி உள்ளது.இதனை நாள்தோறும் அதிகளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். 1992ஆம் ஆண்டு அராலி வீதியின் ஊடாக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது விடுதலை புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார். குறித்த இடத்தில் அவர் பயணித்த வாகனத்தின் எஞ்சிய பாகங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் நினைவுத்தூபியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.da…

  13. தென்னிந்திய நடிகை அசின் இன்று சிங்கள இராணுவத்தின் பொங்கல் விழாவை சிறப்பித்தார் ஜன 17, 2014 இராணுவத்தின் ஏற்பாட்டில் ஆனையிறவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகையான அசினின் புகைப்படங்களை இராணுவத்தினர் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக நுழைவாயிலின் இருபுறங்களும் தென்னிந்திய நடிகையின் படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. இதேபோல் மேடையையும் அசினின் புகைப்படங்கள் அலங்கரித்திருந்தன. கடந்த காலங்களில் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரின் குடும்பத்தின் விருந்தினராக இலங்கைக்கு வந்திருந்த அசின், ஆளும்கட்சியின் அரசியல்வாதிகளுடன் உறவுகளை வைத்துக் கொண்டதாகக் கிசுகிசு வெளியாகியிருந்தது. இதனால் அசினுக்கு தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்புக்க…

  14. ஐக்கிய தேசிய முன்னிணியின் பட்டியலில் போட்டியிட்டுத் தெரிவான ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பீ.திகாம்பரம் ஆகியோர் நேற்று அரசுடன் இணைந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஏற்கனவே 144 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இப்போது 146 ஆக உயர்ந்துள்ளது. அரசின் உத்தேச அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை தேவை. அதாவது நாடாளுமன்றில் 150 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இன்றைய நிலையில் இன்னும் நான்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவில் பெற்றுவிடும். அதன் பின்னர் ஜனாதிபதி தான் நினைக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் இலகுவில் நிறைவேற்றி…

  15. சன் சீ கப்பல் தொடர்பிலான கட்டுரை மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை. சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது. சன் சீ கப்பலும் அதன்…

    • 4 replies
    • 2.3k views
  16. ஜும்ஆத்தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று தொழுவதை இயன்றளவு தவிர்த்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் சகல முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். இதனால், பாதுகாப்பு தரப்பில் மட்டுமல்ல முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என்றும் கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே தொழும் சகல முஸ்லிம்களும் உள்ளே சென்று தமக்குரிய இடங்கள…

  17. தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடிக் கொண்டடு இருக்கின்றார்கள். முஸ்லிம் இனம் அழிந்துகொண்டு இருக்கின்றது. தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டக் குணம் எங்களிடம் இல்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.14) தெரிவித்தார். வலுவான ஐக்கியத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளின் கீழ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாடு சனிக்கிழமை (19.07.14) முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநா…

    • 4 replies
    • 860 views
  18. கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை சர்வதேச ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அற்ற அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்காவும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் ஸ்ரீலங்காவில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில் ஐ.நா பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் கவனிப்பில் தங்கியிருந்த ரோஹ…

  19. இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அவர் நேற்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அத்துடன், மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அளித்த இராப்போசன விருந்திலும் சிறிலங்கா அதி…

  20. வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கையில் எங்களை உள்வாங்குவது போன்ற கருத்துப்பட கூறியிருந்தால், அதனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசி…

    • 4 replies
    • 1.6k views
  21. 3 மணி நேர 'நெஞ்சறை' சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் - மன்னார் வைத்தியசாலையில் சம்பவம் ! kugenOctober 11, 2023 'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் உயிர் இவ்வாறு காப்பாற்றப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தி…

  22. ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொண்டால் நான் இலங்கை அதிபரை சந்திப்பேன். இல்லையென்றால் நான் செய்த பிறகு இவர்கள் செய்ததாக கூறுவார்கள். ஏற்கனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி நீர்மட்டத்தை உயர்த்த செய்தேன். ஆனால் இவர்கள் செய்ததாக சொல்லிக்கொண்டார்கள். எனவே இவர்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டால் நான் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்’’ என்று http://www.nakkheera...ws.asp…

  23. இன்று பகல் 11:30 மணியளவில் புத்தள கதர்காமம் வீதியில் தம்பகோட்டே என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று படையினர் இறந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஜானா

    • 4 replies
    • 1.6k views
  24. மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்…

    • 4 replies
    • 819 views
  25. எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்… September 14, 2019 எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை 14.09.2019 தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், 16 201செப்டம்பர் 2019 அன்று நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது ஆதரவை வழங்குகின்றது. எழுக தமிழ் பேரணி இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் தொடர்பில் எமது எதிர்ப்பை காட்டுவதற்கும் நீதிக்கான அவாவை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாலும் அரசியலில் வ…

    • 4 replies
    • 775 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.