Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “உங்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், “சந்திப்பு எனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் தான் நடக்கவிருந்ததே தவிர, எனக்கும் எனது மாணவனுக்கும் (சுமந்திரன்) அல்ல. சம்பந்தன் வெளிநாடு செல்லவுள்ளதால், சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது” …

  2. பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை! “நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் புதிய கட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். சமய மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவர்…

  3. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 எதிர்த்தும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க சிறிலங்கா…

    • 4 replies
    • 1.9k views
  4. இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. அகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'! [ ஜூனியர் விகடன் ] - [ Jul 24, 2008 04:00 GMT ] இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவது, கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தேதியில் அகதி முகாம்களில் சுமார் 78 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேரும் தமிழகத்தில் அகதி களாகத் தங்கியிருக்கிறார்கள். இங்கேயும் அவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இலங்கைத் தமிழ் அகதி களுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்யப் போவதா கத் தமிழக அரசு தீடீரென சமீபத்தில் அறி வித்திருப்பது லேட்டஸ்ட் அடி! தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக் கும் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையரிடமிருந்து அண்ம…

    • 4 replies
    • 1.6k views
  6.  'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?' அழகன் கனகராஜ் பொலிஸாரின் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடாநாட்டின் குற்றச்செயல்கள் அதிகரித்து இருப்பதன் பின்னணி என்ன என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். இவ்வாறு, குடாநாட்டைப் பதற்றமான நிலையில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வினவினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே…

    • 4 replies
    • 702 views
  7. எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி முக்கிய அதிதியாக கலந்து கொள்ளவிருந்தார். அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா, தேசிய பொங்கல் விழாவில் பங்கு பற்றுவதற்கும் எதிர்வரும் 15ம், 16ம் திகதிகளில் யாழ்.வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துத் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள காலநிலை சீரின்மையினாலேயே குறித்த பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலகம் உறுதி செய்துள்ளதுடன், அவர் அ…

  8. கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்! கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41. தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ''ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்'' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். சைவம் படத்தில் ''அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே'' என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். 2005ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்பட …

  9. விடுதலைப்புலிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களைப் பார்வையிட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது சரணடைந்த 11 ஆயிரம் விடுதலைப்புலிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு கூறிவந்தது. அவர்களில் வெகு சிலர் மட்டுமே இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முகாம்களைப் பார்வையிட சர்வதேச அமைப்பு எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை அரசு சமீபத்தில் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, மறந்தமடு பகுதியில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான மறுவாழ்வு முகாமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடந்த 22ஆம் தேதி பார்வையிட்டனர். இத்தகவல…

    • 4 replies
    • 774 views
  10. (3ம் இணைப்பு, ஆடியோ செய்தி )சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்தியும், தற்பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலண்டன் நேரம் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. வன்னியில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரை தொடர்ந்து இப்பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பாதைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக, கலந்து கொண்டுள்ள பொது மக்கள் கூறியுள்ளனர். எனினும் பிரித்தானிய காவற்துறையினரால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 6 மணி வரையே இவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத…

    • 4 replies
    • 1.4k views
  11. உனது கணவர் காட்டில் இருக்கின்றார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடந்தால் உன்னையும் உனது பிள்ளைகளையும் சுட்டுக்கொல்லுவோம் என அவுஸ்திரேலியாவில் அகதித்தஞ்சமடைந்துள்ள ஒருவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தஏஜ் என்ற பத்திரிகை கூறுகின்றது. தனது இருபிள்ளைகளைகளையும் மனைவியையும் மட்டக்களப்பில் விட்டு 2006 ஆம் ஆண்டு அடைக்கலம் தேடி வெளிநாடு புறப்பட்ட இந்நபர் 2009 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்தார். விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் விடுதலைப்போராட்ட காலப்பகுதியில் மரணமடைந்த போராளிகளை தனது வாகனத்தில் ஏற்றி பின்தளத்திற்கு கொண்டுசெல்வதில் உதவி செய்ததாகவும் அந்த உதவியைக்கூட செய்யாமல் இருந்திந்தால் அதில் அர்த்தம் இல்லை எனவும் கூறுகின்றார். பாதுகாப்பு காரணங்களு…

  12. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தநிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய, உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதற்கு அப்பாற்பட்ட தீர்வை வழங…

  13. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம்? தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவத தொடர்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பிலான தகவல்களை உடனடியாக வெளியிடுவதில்லை என்று இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தே…

  14. கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள் இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார் அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும் இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

  15. சுற்றுலாத்துறை, வெளிவிவகாரம் உட்பட ஐ.தே.கவுக்கு 14 அமைச்சுகளை அள்ளி வழங்குகிறார் ஜனாதிபதி கொழும்பு, ஒக்.20 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதை அடுத்து, ஏழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் உட்பட பதினான்கு அமைச்சுப் பதவிகளையும், அந்த அமைச்சுகளின் பிரதி அமைச்சுப் பதவி களையும் ஐ.தே.கட்சிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகாரம், சுற்றுலாத்துறை போன்ற அமைச்சுகளும் பிரதிநிதி அமைச்சும் ஐ. தே.கட்சிக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அமைச்சுகளில் அடங்குகின்றன என்றும் தெரிகின்றது. ஆளும் ஸ்ரீல.சு.க. ஐ…

    • 4 replies
    • 2k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது அவசியம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான நீதியான - நியாயமான விடயங்களை ஆராய்ந்து அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக தடையை நீக்கியுள்ளது. தமிழரசுக் கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்காது விட்டால் திட்டமிட்டபடி தொடரப்படும் அறவழிப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர் சமூகம் ஜனநாயக ரீதியில் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கான வி…

    • 4 replies
    • 764 views
  17. சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதி…

  18. இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறுகோர, MY3யின் மூவரடங்கிய குழு ஜனீவா பயணம்…. March 6, 2019 தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர், இதற்கமைவாக, கலாநிதி சரத் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடம் மு…

  19. இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது? - February 29, 2020 யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கான கேள்விகள் கேள்வி:- முன்னைய அரசுகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிய போன்றவை பேசுகிறதே? பதில்:- தேர்தல் வருகின்றது அல்லவா? அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்! கூட்டமைப்பு என்னதான் நாடகம் ஆடினாலும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள். சர்வதேச விசாரணைகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு கூட்டமைப்பு எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எவ்வாறு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்பட்…

    • 4 replies
    • 520 views
  20. சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமது கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சிறிலங்கா அரசு புறக்கணிப்பதனால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் கூறியதாவது: இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தொரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசு செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது. எ…

    • 4 replies
    • 1.5k views
  21. "இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32ஆவது கூட்டத்தொடர் கடந்த 13ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பில் 29 ஆவது கூட்டத்தொடரில் (கடந்த மார்ச் மாதம்) தீர்மானம் …

    • 4 replies
    • 324 views
  22. பாராளுமன்றம் நேற்றுக் (18) கூடியபோது குழுநிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறித்த உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறைவடைந்தது தெரிந்த விடயமே. இவ்வாறான ஒரு நிலை ஏற்பட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே காரணமெனத் தெரிய வருகிறது. குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்படி சபாநாயகரால் பெயர் குறிப்பிட்டு சம்பந்தப்படட் பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்ட போதும் அவர் அங்கிருக்கவில்லை. ஆனால் அவர் எங்கு இருந்தார் தெரியுமா? பாராளுமன்றத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் மசாஜ் கிளினிக்கில்…. காட்டூனை வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க........... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

    • 4 replies
    • 1.1k views
  23. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வேட்பாளரான முன்னாள் ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவும் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சியின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இவருடன் இதுவரை சஜித் அணியின் மூன்று வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலயகியுள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் பக்கம் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/சஜித்-கட்சியின்-அடுத்த/

  24. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து வீதியில் இறங்கி போராட சகல மக்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூராவுள்ள விகாரைகளில் விசேட பூஜைகளை நடத்தி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பிரபாகரனால் தற்போது எமக்கு தொல்லையில்லை. ஆனால், மீண்டுமொரு புதிய பிரபாகரனுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார். நேற்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இ…

  25. வடகிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் முஸ்லிம் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு (தலை­மன்னார் நிருபர்) தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மையை தொடர்ந்தும் பேண வேண்டும். தமிழ் மக்­களின் ஆத­ரவு கார­ண­மா­கவே எம்மை சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனவே அந்த நிலைமை பாது­காக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு விட­யத்தில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­மு டன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். இணைந்த வடக்கு,கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.