ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு 'நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு" என்ற புனைபெயரில், வன்முறையைக் கட்டிக் காக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விடுத்துள்ள பகிரங்க கொலை மிரட்டலானது ஒட்டாவா தமிழ் மாணவ சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் 270 தமிழ் மாணவர்களிற்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றது என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அறிவித்தலை ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் (Academic Soceity of Tamil Students - ACTS) வன்மையாகக் கண்டிப்பதோடு உலகளாவிய கல்விச் சமூகத்தின…
-
- 4 replies
- 1.6k views
-
-
Published By: VISHNU 16 JAN, 2024 | 05:14 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மத கோட்பாடுகளை திரிபுபடுத்தி, பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுக…
-
- 4 replies
- 395 views
- 1 follower
-
-
26 APR, 2024 | 03:16 PM மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
-
-
- 4 replies
- 463 views
- 1 follower
-
-
தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி இன்று (15-12-2011) சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! இன்று பிரித்தானியாவில் இருந்து 50 இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக கீத்துறூ விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த வேளையிலேயே ACT NOW அமைப்பினரால் அச்சிறைச்சாலையின் முன் திடீர் வீதிமறிப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. 9 பேர் மட்டும் துணிச்சலாக மேற்கொண்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி கைத்தொலைபேசி ஊடாக குறும் தகவல் செய்திகள் அனுப்பப்பட்ட போதும் போதிய மக்கள் அவ்விடத்திற்க்கு செல்லாத காரணத்தால் மக்கள் பலமின்றிய போராட்டத்தை இலகுவாக பிரித்தா…
-
- 4 replies
- 814 views
-
-
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகர்த்தாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஒகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது. அத்துடன், 26ஆவது நாள் திருக்கல்யாண உற்சவமும் 27ஆம் நாள் வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60715
-
- 4 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 25 SEP, 2024 | 08:49 PM (நா.தனுஜா) தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது. குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்தும், எதிர்வரவுள்ள பொதுத்தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. …
-
-
- 4 replies
- 445 views
- 2 followers
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அவர் மனைவி காயமடைந்தார். ஆதாரம்: Daily mirror Shooting near Kotahena church A man was shot dead opposite St. Lucia’s church in Kotahena a short while ago. His wife was injured in the incident.
-
- 4 replies
- 2.5k views
-
-
சட்டமும், ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதே உண்மை! சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரப் பிரிவினால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண…
-
- 4 replies
- 352 views
-
-
எட்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும். அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் நாளை நள்ளிரவு பாராளுமன்றைக் கலைக்கும் உத்தியோக ப+ர்வமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இதேவேளை,…
-
- 4 replies
- 1.2k views
-
-
இமய மலை ஏறிய இலங்கையின் முதலாவது வீரர் இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கையராக ஜெயன்தி குரு உதும்பல சாதனை படைத்துள்ளார். இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79983
-
- 4 replies
- 1.7k views
-
-
ஐந்து ராஜபக்ஷர்களுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது- வீ.ஆனந்தசங்கரி ஐந்து ராஜபக்ஷர்களும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம். 2007ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி காலி முகத்…
-
- 4 replies
- 505 views
-
-
படங்கள் டெயிலிமிரர். சிறீலங்கா பர்மாவில் அரசாலும் முஸ்லீம்களாலும் புத்த பிக்குகள் கொல்லப்பட்ட போது... (பர்மிய அரசு தமிழர்களை அழிக்க சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு உதவி நின்றது..!) அப்ப எல்லாம் உவை எங்க போனவை. தமிழர்களைக் கொன்ற களிப்பில் விழா நடத்திக் கொண்டிருந்தவை போல. தமிழர்கள் சாகச் சாக கொழும்பில.. தெற்கில.. வெடிகொழுத்தேக்க இப்படி ஆகும் என்று தெரியல்லைப் போல...! http://www.reuters.com/article/2012/06/04/us-myanmar-violence-idUSBRE8530CW20120604 http://www.france24.com/en/20120903-buddhist-monks-march-back-rohingya-deportation-plan-muslim-myanmar-sectarian-conflict http://www.standard.co.uk/news/burma-thousands-dead-in-massacre-of-the-monks-dumped-in-th…
-
- 4 replies
- 733 views
-
-
LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதென அமைச்சரவையில் தீர்மானம் 04 ஏப்ரல் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 22 அமைச்சர்களும் சில நிறுவனங்களும் கால வரையறைகளை நிர்ணயித்து பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், சர்வதேச சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை சமாளிக்கும் ராஜதந்திர முனைப்பாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் உண்மையை…
-
- 4 replies
- 885 views
-
-
தமிழ் நாடு இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினர் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழீழத்தில் இம்முறை மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும், அதற்கீடாக தமிழர் வாழுமிடமெங்கும் நிகழ்த்தப்பெற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகின் பல மூலைகளிலும் பரந்து வாழும் தமிழர்களும் தக்க பதிலை தெரிவித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரர்நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதுடன், தமிழர்களுக்கு போராடும் ஆத்மபலத்தையும் இம்முறை மாவீரர் நாள் கொடுத்துள்ளது என தமிழகத்தின் ப…
-
- 4 replies
- 777 views
-
-
"விக்னேஸ்வரன் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றார் – ஆனந்தி சசிதரன்" என தலைப்பிட்டு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார் என சிலோன் ருடே வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறு என அனந்தி சசிதரன் எழிலன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு காலை தெரிவித்தார். தமிழ் தெரியாத சிங்களப் பெண்மணி செவ்வியை எடுத்ததாகவும் தான் குறிப்பிடாத விடயங்களை கூறியிருப்பதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்த போதிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும், சேவைகளை பெற்றுக்கொ…
-
- 4 replies
- 869 views
-
-
அவுஸ்ரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று இலங்கைக்கு குறுகிய நெரப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று முற்பகல் 11.47 அளவில் இலங்கை வந்த அவர் மீண்டும் 2.00 மணியளவில் அவுஸ்ரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிசர்லாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டொனி அபோட் சென்று கொண்டிருந்போது, அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரியவருகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவுஸ்ரேலிய பிரதமரை வரவேற்க, இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்ன அங்கு சென்றிருந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் முட் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்…
-
- 4 replies
- 470 views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கு அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவும் என்று நினைப்பது மடமைத்தனம் ரோஹிங்யா நல்ல படிப்பினை என்கிறார் – அமைச்சர் ரிஷாத் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும் பிரச்சினைகளும் ஏற்படும் போது அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடமைத்தனமானதெனவும் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக் கிழமை திஹாரியில் நடை பெற்ற போது பிரதம அதிதிய…
-
- 4 replies
- 562 views
-
-
புலிகளின் 50 ஆயிரம் கோடி பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம்! லங்கா நியூஸ் வெப் இணையம் தகவல்! [saturday 2014-08-23 18:00] விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகை பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் மட்டுமே ஆயிரக்கணக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியைக் கொண்டிருந்தன. இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யின் கைது மூலம் சர்வதேச ரீதியாகவும் பெருந்தொகைப் …
-
- 4 replies
- 573 views
-
-
வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று…
-
- 4 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !! இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத …
-
- 4 replies
- 902 views
-
-
புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…
-
- 4 replies
- 2.2k views
-
-
நீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு : January 23, 2019 முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற குறித்த பகுதியில், அமைக்கப்பட்டு வந்த விகாரை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பினை மக்கள் எதிர்பார்திருந்…
-
- 4 replies
- 565 views
-
-
ஆயுதங்களுடன் கருணா குழு தேர்தலில் போட்டியிடலாம்: சிறிலங்கா அழைப்பு [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கருணா குழுவினரைப் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த உள்ளது. தற்போதைய நிலையில் ஆயுதங்களுடன் இருக்கும் கருணா குழுவினரும் இந்த தேர்தலில் போட்டியிடுவர். அவர்களது ஆயுதங்களைக் களைவது அவர்களது பாதுகாப்பிற்கு சிறந்ததல்ல. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆயுத…
-
- 4 replies
- 1.7k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறைப் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க…
-
- 4 replies
- 767 views
- 1 follower
-
-
இலங்கை அரச படைகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம் வன்னியின் முல்லைதீவு பகுதியில் அரங்கேறியுள்ளது. வன்னியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலுமில்லமான முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் கனரக வாகனங்கள் சகிதம் நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தமிழ் மக்களிடையெ மீண்டுமொரு முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வன்னி இராணுவ நடவடிக்கைகளையடுத்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதி படைத்தரப்பினால் இடித்தழிககப்பட்டிருந்ததுடன் கல்லறைகள்உள்ளிட்ட அனைத்தும் அப்பறுபபடுததப்பட்டுமிருந்தது…
-
- 4 replies
- 1k views
-