ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143693 topics in this forum
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…
-
- 4 replies
- 1.5k views
-
-
மஹிந்தவின் பேச்சாளர் கடத்தப்பட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட, சிங்கபூரிலிருந்து நாடுகடத்தப்பட்டார். - See more at: http://www.tamilmirror.lk/173735/மஹ-ந-தவ-ன-ப-ச-ச-ளர-கடத-தப-பட-ட-ர-#sthash.u7cZXMZU.dpuf
-
- 4 replies
- 849 views
-
-
நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்..... - தமிழ்நாட்டிலிருந்து பொன்னிலா - இன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக்கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் வாழ்க்கை தலைவர்களை புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவம…
-
- 4 replies
- 1.3k views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார். இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக…
-
- 4 replies
- 651 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையினை இலங்கைக்கு வழங்குவதற்கான சரியான தருணம் இது இல்லை என அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஹிலாரி கிளிண்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரணடுத் தரப்பினரையும் யுத்தத்தை நிறுத்துவது தொடர்பில் இணக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 மில்லியன் பெறுமதியான கடன் தொகையினை பெற இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்த நிதித் தொகையினை தாமதப்படுத்துவது குறித்து அமரிக்கா தமது கருத்தினை வெளியிட்டிருந்தது. எனினும் இந்த…
-
- 4 replies
- 902 views
-
-
13வது திருத்தச்சட்டத்தில் கைவைப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை. தேவையாயின் 13 பிளஸோ அல்லது 13 டபிள் பிளஸோ தான் இனி சாத்தியம். இந்திய அரசின் தற்போதய நிலைப்பாடு அதுவே என இலங்கைக்கான இந்திய துணைதூதுவராலய கொன்சிலர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வாசு தேவநாணயக்காரவின் செயலாளர் கலாநிதி மோகனினால் எழுதப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான நூலினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. அங்கு கலந்த கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அண்மைய இரு நிகழ்வுகள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார். ஓன்று பஸில் ராஜபக்ஸவினது இந்திய விஜயம். இரண்டாவதுஇந்திய தேசிய பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் மேனனினது இலங்கை விஜயம். இவற்றின் போது 13வது திருத்தச்சட…
-
- 4 replies
- 688 views
-
-
விடுதலைப் புலிகளினால் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படும் க்ளைமோர் குண்டுகளை விநியோகிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வழங்கிய தகவலுக்கமைய கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து அதி சக்திவாய்ந்த 20 க்ளைமோர் குண்டுகளையும் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறினர். கடந்த காலங்களில் கொழும்பின் பல பிரதேசங்களில் வெடிக்கப்பட்ட க்ளைமோர் குண்டுகள், கைதுசெய்யப்பட்டுள்ள நபரினாலேயே விநியோகிக்கப்பட்டவையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதேபோன்ற அதிசக்திவாய்ந்த 21 க்ளைமோர் குண்டுகளை இதற்கு முன்னர் குறித்த நபர் விநியோகித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது. யுத்த வெற்றி ஒன்றின் மூலம் மகிந்த சகோதரர்கள் சிங்கள மக்களை அந்த வெற்றி மாயையினுள் வைத்துத் தமது ஆட்சிக்காலத்தை அடுத்த தேர்தலிலும் நீடித்துச் செல்லலாம் என்பதைத் தவிர, சிங்கள தேசம் பல்வேறு இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. அரசியல் விவேகமற்ற மகிந்த ராஜபக்ஷவை ஆடசியில் அமர்த்திய விடுதலைப் புலிகளின் இராஜதந்திரம் அவர்களுக்கு களமுனைத் தோல்வியை ஏற்படுத்தினாலும், அவர்களது …
-
- 4 replies
- 1.1k views
-
-
'மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா' என்ற பதாதைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்! By Shana மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரச அதிகாரிகளே கணிய வளத்தை சுரண்டுவதற்கு துணை போவது ஏன்? ராஜபக்சக்களின் பெயர்களால் மண் சுரண்டல்,எமது வளத்தை சூரையாடாதே.பிரதேச செயலாளரே விவசாய …
-
- 4 replies
- 388 views
-
-
சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்! அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒ…
-
- 4 replies
- 526 views
-
-
யாழ். ஆரியகுள உரித்தை உறுதிப்படுத்துமாறு கோரும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா… யாழ்.ஆரியகுளத்தில் பொதுமக்களுடைய சமய உரிமையை மீறி செயற்படும் அதிகாரம் உள்ளமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்.மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது. ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின்போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதி…
-
- 4 replies
- 464 views
- 1 follower
-
-
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த வெள்ளிக்கிழமை விசேட சிகிச்சைக்காக கொழும்புக்கு வந்து சென்றதாக இசிரா (ஐ.எஸ்.ஆர்.ஐ.ஏ.) செய்திச் சேவை தெரிவித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் எலியந்த லின்ட்சே வைட்டிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர் வருகை தந்திருந்தார். ஐ.பி.எல். அரையிறுதி ஆட்டத்தின் போது விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையில் பேரில் சச்சின் டெண்டுல்கருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து டாக்டர் வைட் சிகிச்சையளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இடம்பெற்ற ஐ.பி.எல். இல் சென்னை சுப்ப கிங்ஸுக…
-
- 4 replies
- 817 views
-
-
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார். “கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெர…
-
- 4 replies
- 602 views
-
-
மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர் ஊடகவியலாளர் கேள்வி – முதலமைச்சர் பதில் கேள்வி – நேற்றைய மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன? பதில் – மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன். நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார்கள் எம் மக்கள். நல்லாட்சி கொண்டுவந்த அர…
-
- 4 replies
- 645 views
-
-
ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துநெட்டி மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்திய கூலிப்படையினரின் படங்களை ஜே.வி.பி வெளியிட்டுள்ளது. இவர்கள் இராணுவத்தினரின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகவும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இப்படங்களை ஜே.வி.பி யின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. www.tamilcnn.com
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கை…
-
- 4 replies
- 588 views
-
-
சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm
-
- 4 replies
- 2.7k views
-
-
மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகரை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இங்குள்ள இளைஞர்களை அடித்து துன்புறுத்தி வற்புறுத்தி சேர்த்துக்கொண்டு யுத்தம் செய்வதற்கு தூண்டியவர்கள் கருணா,பிள்ளையான் போன்றவர்களே. அவர்கள் குறித்த இளைஞர்களை கொன்றுகுவித்துவிட்டு எஞ்சியிருந்த இளைஞர்களை சிறைகளில் அடைத்துவிட்டு இவர்கள் இரஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிர…
-
- 4 replies
- 635 views
-
-
அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் – மிரட்டுகிறார் மகிந்த FEB 04, 2015 | 0:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது. அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனும…
-
- 4 replies
- 934 views
-
-
யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணை விண்ணப்பம் செய்தனர். எனினும், மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,…
-
- 4 replies
- 909 views
-
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்? எதிர்வரும் 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும், மாவட்டத்தில் இருந்து மொத்தம் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேட்புமனுத் தாள் ஒன்றுக்கு தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையையும் ஆணைக்குழு விவரித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/உங்கள்-மாவட்டத்த…
-
- 4 replies
- 411 views
-
-
அழுகிய காளான் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு புதிய நச்சுக் காளான் உருவாகித் துர்நாற்றம் வீசுகிறது. எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்து விட்டான் என்று ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் எழுதினார். வீரன் முளைக்கும் போதே துரோகியும் பிறந்து விடுகிறான். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன்பே துரோகியின் தோல்வி அறிவிக்கப்படுகிறது. இது வரலாற்றுச் செய்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கம் இன்று துரோகிகளின் வரவால் மந்தநிலை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடம் பிரண்டு தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றனர். இருக்கையில் அமர மறுத்தபடி ஒரு தேர்தல் தொகுதி ஆசனத்திற்காக மன்றாடிய இரா.…
-
- 4 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் இரண்டு தரப்பும் அருகருகே நெருக்கமாக நின்று மோதவிருப்பதாக இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக மோதல்களில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள், பாரிய சக்திவாய்ந்த இராணுவத்தினருடன் அண்மையிலிருந்து மோதி, இழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் சற்றுப் பின்வாங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டும் அவர், அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் முன்நகர்வுகளை தாமதப்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் தமது பலம்வாய்ந்த போராளி குழுக்களை இரண்…
-
- 4 replies
- 3.1k views
-
-
27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது. எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 4 replies
- 474 views
-
-
-
- 4 replies
- 896 views
-