Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது படையினர் நல்லூர் கோவில் பக்கத்துக்கே செல்லவில்லை. இன்று கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு எதற்காக மடுவிற்குச் செல்ல வேண்டும் என்று சிறிலங்காப் படையினரில் உள்ள கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 858 views
  2. மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு இலங்கையில் மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தைச் சேர்ந்த இதன் நிறை 1404.49 கரட் என்று கொழும்பிலுள்ள அழக்குக்கல் நிறுவகம் உறுதிசெய்துள்ளது. அத்துடன் இதன் பெறுமதி குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த மாணிக்ககல் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக க…

  3. Published By: DIGITAL DESK 3 04 FEB, 2025 | 12:53 PM இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்ச ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட செயலாளரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் இப்பேரணியானது பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்…

  4. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது …

  5. 18ம் திருத்தச் சட்டம் ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டது! [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 12:27.53 AM GMT ] 18ம் திருத்தச் சட்டத்தை கடந்த அரசாங்கம் ஒரே இரவில் நிறைவேற்றியதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் முழு நாடாளுமன்றை தெளிவுபடுத்தி மக்களின் அனுமதியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படாது. கடந்த அராங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக விரோத தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் தொடர்பில் பல்வேறு…

  6. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இ.போ.ச. பேருந்தும், தனியார் பேருந்தும் நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளன. பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபட்டபோதே அந்தப் பேருந்துகள் இரண்டும் விபத்தில் சிக்கியுள்ளன. பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இரண்டு பேருந்துகளையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, மாற்றுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். வடமாகாணத்தில், தொடர்ச்சியாகவே இ.போ.ச. பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பயணிகளை ஏற்றியபடி 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற…

  7. சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…

  8. 'காணாமற்போனது 1997, விசாரணை நடத்தியது 2015இல்' -எம்.றொசாந்த் எனது மகன் 1997ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் கடந்த 2015ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டனர். காணாமற்போனமை உண்மையா என அயலவர்களையும் விசாரித்துச் சென்றனர் என்று காணாமற்போன கணேஷ் கருணாரட்ணம் என்பவரின் தாய் ரேவதி தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆலைக்கு, தனது நண்பனுடன் சென்ற …

  9. கிளிநொச்சிப் பிரதேசத்தை விரைவில் மீட்போம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "சூளுரை"த்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  10. இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு செல்லவுள்ளது: 19 ஜனவரி 2016 இந்தியாவின் மிகவும்சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் இந்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. 44.500 தொன் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் இதன் மூலம் இந்திய இலங்கை உறவுகளில் ஓரு புது அத்தியாயம்ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை துறைமுகத்திற்கு கடந்தஇரண்டுதசாப்த காலபகுதியில் விமானந்தாங்கி கப்பல் எதுவும்வருகைதராததை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அதிகாரிகள்,இந்திய கப்பலிற்கு இலங்கை கடற்படையினர் விசேட வரவேற்பை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.அமெரிக்காவின் விமானத…

    • 4 replies
    • 707 views
  11. இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது? புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பிரதி அமைச்சருக்கு மேலான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாளை அல்லது மறுநாளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமைச்ச…

  12. ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், அரசாங்க புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று கூறினார். “தாக்குதலுக்கு முன்பே நாங்கள் கார்டினலை அணுகி அவருடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தோம். இருப்பினும், அவர…

    • 1 reply
    • 218 views
  13. விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள்! - அதிர்ச்சியில் இலங்கை ராணுவம் ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது. சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம் (யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ பீமீயீமீஸீநீமீ றீவீஸீமீ). அதற்குள் இன்னொரு வ…

    • 4 replies
    • 3.2k views
  14. ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளத…

  15. 07 Mar, 2025 | 04:34 PM திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இதன் போது மீளாய்வு செய்யப்பட்டதோடு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தைச் சந்தித்தால், அதில் முதலீடு செய்தவர்கள் தான் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே…

  16. யாழ் சிறைச்சாலையில் இட நெருக்கடி காரணமாக சரணடைந்தோர் வெளியேறத் தீர்மானித்துள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நானூறினைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு என்றும் இல்லாத அளிவில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்த பொதுமக்களேயென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே சந்தேக நபர்களாகவும், சிறு குற்றங்களிற்கான தண்டனை பெற்றவர்களாகவும் உள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனிடையே யாழ்.நகரில் தனியார் கட்டடமொன்றில் இயங்கிவரும் இச்சிறைச்சாலை சுமார் …

    • 0 replies
    • 737 views
  17. [size=5]நில ஆக்கிரமிக்கு எதிரான தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்! இம்மானுவல் அடிகளார் அழைப்பு![/size] [size=4]தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யூன் 26 ம் திகதி பல்வேறு தமிழ் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் அணிதிரள வேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.[/size] [size=4]இனஅழிப்பின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்காலினைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாக தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கலினை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது, ஆழமான பிரச்சனையாக உருவெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள வண. …

    • 0 replies
    • 534 views
  18. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …

    • 10 replies
    • 1.9k views
  19. பேருந்துகளுக்கு இடையில் போட்டி. உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் இடையில் நடைபெறும் போட்டிகளை கட்டுபடுத்த யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பதவியேற்றதன் பின்னர் யாழில் நடைபெற்று வந்த பல குற்ற செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த காலத்தில் யாழில் அதிகரித்து காணப்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் , குழு மோதல்கள் , கொள்ளை சம்பவங்கள் என்பன வெகுவாக குறைந்தன. அண்மையில் மது போதையில் வாகனம் ஓடுபவர்களை கட்டுப்படுத்த மதுபான சாலைக்கு …

  20. தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும் உணர்த்தியவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் நிகழ்வு அரங்கிலிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உணர்ச்சிவப்பட்ட நிலையில் 'கசிந்துருகி கண்ணீர் மல்கியதாக' ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன. இலங்கையின் முதலாவது சுதந்திர தினம், கொழும்பில் (தற்போதைய சுதந்திர சதுக்கம் பகுதியில்) 1949, பெப்ரவரி 04ஆம் திகதி அப்போதைய…

  21. மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை! யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை ச…

  22. [size=6]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தமிழ்த்தேசியத் தணலை தக்கவைப்பதாக இருக்கவேண்டும்![/size] முத்துக்குமார் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் கூத்துகளுக்காகவே உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டது. சாதாரண நிலைகளிலேயே மக்கள் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவரங்களை கூட்டமைப்பு எட்டிப் பார்ப்பதில்லை. போராட்டங்களை வேறு யாராவது நடாத்தினால்தான் அது பற்றி அது யோசிக்கும். இல்லையேல் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. தேர்தல் வந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? நிலப்பறிப்பு போராட்டம், கைதிகள் விடுதலைக்கான போராட்டம் எல்லாம் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலின்படி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது அதன் முழுக்கவனம…

    • 1 reply
    • 608 views
  23. யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனரெனவும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் தம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், யாழில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக…

    • 3 replies
    • 1.1k views
  24. 13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965

  25. சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக்கருவறுப்புக்கும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக ‘கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்’ இன்று (21.07.2012) டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், ‘கறுப்பு யூலை’ இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப்பிரசுரங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கி கவனயீர்ப்பு செய்யப்பட்டது. அத்துடன், அடித்துப் படுகொலை செய்யப்பட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட…

    • 0 replies
    • 437 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.