நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம் கொக்கிஸ் தேவையான பொருட்கள் : பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg சீனி - 100 - 200 g தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர் ஏலக்காய் / கறுவா - அளவானது உப்பு - அரை மேசைக் கரண்டி எண்ணெய் - பொரிக்க அளவானது நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள் அச்சு செய்முறை : அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவ…
-
- 753 replies
- 89.2k views
- 1 follower
-
-
சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…
-
- 17 replies
- 2.1k views
-
-
லாக்டவுன் ரெசிபி: மீதமிருக்கும் சாதத்தில் அற்புதமான சிற்றுண்டி செய்யலாம்! மும்பையைச் சேர்ந்த பதிவர் ஆல்பா எம் எழுதிய இந்த ‘ரைஸ் பால் ஸ்னாக்’ செய்முறை உங்கள் மீதமுள்ள சாதத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வழியாகும் கொரோனா வைரஸ் லாக்டவுன் சவால்களுடன் தேசம் இருக்கும்போது, அன்றாட விஷயங்களின் மதிப்பை அதிகமான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். வெளியே செல்வதைக் குறைக்கும் முயற்சியில், பலர் வீட்டிலேயே எதை வேண்டுமானாலும் உணவாகத் தயாரிக்கிறார்கள், சிலர் வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு சில அத்தியாவசியங்களை கூட சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நீங்கள் காணக்கூடிய பொதுவான சமையலறை மூலப்பொருள் அரிசி. ஒவ்வொரு முறையும் நாம் சமைக்க வேண்டிய அரிசியின் அளவை…
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கையில் மிகவும் பிரபலமானது கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டி தான். இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும். அந்தவகையில் தற்போது இந்த ரொட்டியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள் மைதா மாவு – அரை கப் கோதுமை மாவு – அரை கப் பச்சை மிளகாய் – ஒன்று தேங்காய்த் துருவல் – அரை கப் தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிச…
-
- 9 replies
- 2.7k views
-
-
இதுவரை செய்து பார்த்ததில்லை, இதுவும் அவ்வளவு கடினமானது இருக்கவில்லை, எமது தோசை வார்க்கும் கல்லிலேயே செய்து விடலாம் என்று போட்டிருந்தார்கள், எனவே இறங்கி விட்டேன். சுவை சரியாக வந்தது, இன்னும் கொஞ்சம் மாவை பொங்க விட்டிருக்கலாம் என்று மனைவி சொன்னார். 4 மணி நேரம் விட்டேன், அப்பச்சோடா அல்லது தயிர் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறன். இங்கு யாரவது முன்னமே விலாவரியாக செய்து போட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பொழுது அநேகமான நேரம் சும்மா இருப்பதால், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாமாளித்து போக வேண்டி இருக்கும். ரெசிபி கீழே உள்ள வீடியோக்களில் உள்ளது. இரண்டாவது வீடியோவில் உள்ள ரெசிப்பியில் பாலும் சேர்த்திருந்தார்கள், நான் சேர்க்கவில்லை
-
- 2 replies
- 569 views
- 1 follower
-
-
-
ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்) இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது சொய்முறை
-
- 8 replies
- 1.2k views
-
-
இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது இது ஞாபகத்துக்கு வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது.
-
- 150 replies
- 20.7k views
- 1 follower
-
-
இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை…
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: 1 ½ கப் பாசுமதி அரிசியை கழுவி தண்ணியில் அரை மணித்தியாலம் விடவும். 1 மேசைக்கரண்டி ஏதாவது சமையல் எண்ணை , 1 மேசை கரண்டி நெய், 1 றாத்தல் அல்லது ½ கிலோ பழுத்த தக்காளி பழம் , 10 பல்லு உள்ளி நீட்டாக பெரிய துண்டுகளாக வெட்டியது, 2 மேசை கரண்டி இஞ்சி உள்ளி அரைத்தது . 5 பச்சை மிளகாய் நீட்டாக வெட்டியது ½ றாத்தல் சிவப்பு வெங்காயம் மெல்லிய நீட்டு துண்டுகள், கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை விருப்பிய அளவு. 1 ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தனி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் , 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், உப்பு , 3 கராம்பு , சின்னத்துண்டு கறுவா, கொஞ்ச பெருஞ்சீரகம். செய்முறை: எண்ணை , நெய் இரண்டுயும் தாச்சியில் விட்டு கராம்பு, கறுவா, பெருஞ்சீரகம் …
-
- 2 replies
- 569 views
-
-
சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி. சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா. இங்கே, சற்று கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மி…
-
- 7 replies
- 1k views
-
-
இலைகளை காயவிட்டிருக்கு, செய்தபின் சுவையை அறியத்தருகின்றேன் - வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல உணவு 👌👌
-
- 10 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 410 views
-
-
நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல். மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம். …
-
- 44 replies
- 3.7k views
- 1 follower
-
-
ஒடியல் புட்டு செய்முறை தேவையான பொருட்கள் : ஒடியல் மா தேங்காய்ப் பூ தண்ணீர் உப்பு (சிறிதளவு ) விரும்பினால் கத்தரிக்காய் கீரை பச்சை மிளகாய் நெத்தலி செய்முறை ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும். பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அ…
-
- 15 replies
- 2.2k views
-
-
-
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
லெமன் இல் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)
-
- 34 replies
- 3.6k views
-
-
-
- 1 reply
- 404 views
-
-
-
- 3 replies
- 858 views
-
-
மரக்கறி/மீன் ரொட்டி 500 கிராம் வெள்ளை கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய் 4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின் நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பி…
-
- 20 replies
- 4.7k views
-
-
உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒ…
-
- 18 replies
- 3.1k views
- 1 follower
-
-
கம கமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்.!! யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடா நாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது. உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.! தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் க…
-
- 4 replies
- 1.3k views
-