Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன(எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாள…

  2. கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை

  3. பூண்டுப்பொடி.. செய்வது எப்படி? Posted By: ShanthiniPosted date: January 09, 2016in: தேவையானவை பூண்டு – 250 கிராம் காய்ந்த மிளகாய் – 10 உளுத்தம்பருப்பு – ஒரு கப் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குறிப்பு:- பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. http://onlineuthayan.com/lifestyle/?p=…

  4. குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இதுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம். தயாரிக்க தேவையானவை: அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின் லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1 வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3 காய்கறி எண்ணெய் - 1 தே.க சிக்கன் ஸ்டொக் - 4கப் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் 1 கோழிய…

  5. Started by தூயா,

    தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு

  6. [size=4]வீட்டில் மதிய வேளையில் சமைத்து சாப்பிடும் போது, எப்போதும் சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது சில்லி போன்று காலிஃப்ளவரை வறுவல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மேலும் இந்த டிஷ்ஷை மாலை வேளையில் கூட ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காலிஃப்ளவர் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]காலிஃப்ளவர் - 1 கடலை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/4 கப் கார்ன் ப்ளார் - 1/4 கப் அரிசி மாவு - 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால…

  7. சுவையான தேனீர்.... தேனீர் பிரியர்களுக்கு தேனீர் போடும் பொழுது கேத்தலில் முதன்முதலில் கொதிக்கும் தண்ணீரில் தேனீர் போட்டால் ரொம்ப் சுவையாக இருக்கும். திரும்ப திரும்ப, அதாவது முதலில் கொதித்து ஆறிய தண்ணீரை திரும்பவும் கொதிக்க வைத்து தேனீர் போட்டால் அதன் சுவை குறைந்துகொண்டே போகும். காரணம் திரும்ப திரும்ப கொதிக்கவைக்கும் போது நீரிலிருந்து ஒக்சிஜன் அகற்றப்படுவதினால் தேனீரின் சுவை குறைந்துகொண்டே பொகும். பின் குறிப்பு: கேத்திலில் தண்ணீர் கொதிதவுடன் தேனீர் போடாமல் சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும். மேலும் 2...3 நிமிடங்களுக்கு மேல் தேயிலை பையை கொதி நீருக்குள் விடவேண்டாம். இளங்கவி

  8. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…

  9. Started by தமிழரசு,

    பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி - 3 கப் துவரம் பருப்பு - 1 கப் வர மிளகாய் - 10 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு - 10 பல் உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர…

  10. Started by தமிழ் சிறி,

    பல, முகம் காட்டும்.. புட்டு. புட்டிற்கு மற்றய எந்த உணவையும் விட சில விசேட தன்மையுண்டு. அரிசிமா புட்டு, கோதுமை மா புட்டு, புடிப் புட்டு, பால் புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, இறால் புட்டு, மரவள்ளி மா புட்டு என்று காலை, மாலை உணவாக இடையில் சாப்பிடும் சிற்றுண்டியாக சாப்பாட்டிற்கு மேல் சாப்பிடும் இனிப்பு பண்டமாக சோற்றுடன் கலந்து சுவை சேர்க்கும் சேர்ந்தியங்கும் தோழனாக. இடையிடையே அரிதாக சாப்பிடும் உணவாக என்ற பல முகம் புட்டிற்கு உண்டு. புட்டில் மாவையும் தேங்காய் பூவையும் காதலன் காதலி போல் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக கலந்த இடையிடையே இணைந்தும் தனித்துவம் காட்டும் இயல்புகள் கலந்தே இருக்கும். நீத்துப் பெட்டி, புட்டு குழல் என்று இய…

    • 1 reply
    • 1.1k views
  11. வாங்க இண்டைக்கு நாம இலகுவா முட்டை வச்சு செய்ய கூடிய ஒரு வறை, ஒரு பொரியல், அதோட மரக்கறி எல்லாம் போட்டு செய்யிற ஒரு குண்டு தோசை மூன்றும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 744 views
  12. இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் இலகுவா செய்ய கூடிய 3 வகை வெங்காய சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம்.இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். அதுவும் மரக்கறி உணவுகளோடையும் பிரியாணியோடையும் சேர்த்து சாப்பிடேக்க மிகவும் ருசியா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.

  13. வாங்க இண்டைக்கு நாம சக்கரை வியாதி இருக்க ஆக்களுக்கு மிகவும் நல்ல சுவையான ஒடியல் மா புட்டு செய்வம், நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.

  14. கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’! இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ், இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு. இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில் மிகப்பெரிய குழப்பமாகி விடும். பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், ச…

  15. சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ எண்ணெய் - தேவையான அளவு தேங்காய் பால் - 2 டம்ளர் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் கொத்தமல்லிதழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் அரைக்க : தேங்காய…

  16. வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ 1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கிய பின்பு ஒரு டீஸ்பூன் மல்…

    • 1 reply
    • 706 views
  17. ஆட்டு கால் சூப்பு (எ) எலும்பு ரசம் செய்யத்தேவையானவை: ஆட்டு எலும்பு: 1/4 கிலோ,கொழுப்பு விருப்பபட்டால் சேர்த்துக்கொள்ளாம். இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி இஞ்சி-சிறு துண்டு(தட்டிக்கொள்ளவும்) சாம்பார் வெங்காயம்- 10(சிறிதாக தட்டிக்கொள்ளவும்) பூண்டு- 8 பல் (சிறிதாக தட்டிக்கொள்ளவும்) சோம்பு-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) சிரகம்-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மிளகு-2 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மஞ்சள் தூள்-2 தேக்கரண்டி மிளகாய் தூள்-காரத்துக்கு மல்லி தூள்-1 மேசைக்கரண்டி மல்லி இலை- 1 பிடி கறிவேப்பிலை- 1 கொத்து புதினா இலை- 1 கொத்து(விரும்பினால்) தக்காளி -3 நறுக…

    • 1 reply
    • 1.6k views
  18. தேவையான பொருட்கள் ------------------------------ முட்டை - 6 பெரிய கேரட் - 1 பொட்டுகடலைமாவு - அரை கப் தேங்காய் - 1 முடி பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 மிளகாய் - 6 இஞ்சி - சிறிதளவு சோம்பு - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கசகசா - 2 ஸ்பூன் பூண்டு - 8 சீரகம் - 2 ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை செய்முறை: ---------------- முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய…

    • 4 replies
    • 2.8k views
  19. Started by உடையார்,

    தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி) சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 1/2 போத்தல் உப்பு அளவாக செய்முறை: மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவ…

  20. புழுங்கல் அரிசி - 2 டம்ளர், பச்சரிசி - 2 டம்ளர், உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி, சின்ன ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1/4 கிலோ, தேங்காய் துருவல் - 1/4 மூடி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும். வெல்லத்தைப் பொடியாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். துருவிய தேங்காய் மாவில் கொட்டி நன்கு …

    • 0 replies
    • 1.2k views
  21. உள்ளிச் சட்ணி . இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ? தேவையான பொருட்கள் : உள்ளி 10 - 12 பல்லு . செத்தல் மிளகாய் 6 - 7 . **** தக்காளிப்பழம் 2 . கறிவேப்பமிலை 4 - 5 இலை. கல்லு உப்பு ( தேவையான அளவு ) . எண்ணை 5 தேக்கறண்டி . கடுகு கால் தேக்கறண்டி . பக்குவம் : தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்…

  22. முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …

  23. நெல்லிக்காயின் சாறு ! நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும். உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோசை உங்களுக்குப் ப…

  24. மரவள்ளிக் கிழங்கு புட்டு இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ தேங்காய் - 1 1/2 கப் (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.