Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by குமாரசாமி,

    ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவி…

  2. முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…

    • 34 replies
    • 13.6k views
  3. சுவையான செத்தல் மிளகாய் சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 செத்தல் மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி சிறிதளவு கொத்தமல்லி தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பழப்புளி சிறிதளவு இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். மேலும் , பழப்புளியை 1/4 கப் அளவு கொதி தண்ணீரில் ஊறப்போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு பிறகு புழிந்து அந்தப் புளியையும் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் மிக்சியில் விடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றை…

  4. சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி....... சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 பச்சை மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி இஞ்சி துண்டு சிறிதளவு புதினா இலை 3- 5 தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பாதி எலும்பிச்சம் பழம் இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்சியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது திருவியோ போடவும். எலும்பிச்சம் பாதியையும் பிழிந்து மிக்சிக்குள் புளியையும் விடவும் அத்து…

  5. பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…

  6. அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை. இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம். இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு…

  7. நெத்திலி மீன் குருமா தேவையானவை : நெத்திலி : அரை கிலோ எண்ணெய் : 4 மே.கரண்டி கடுகு : அரை தே.கரண்டி வெந்தயம் : அரை தே.கரண்டி கறிவேப்பிலை : 2 கொத்து ப.மிளகாய் கீறியது : 2 பெ.வெங்காயம் : 2 சி.வெங்காயம் : 2 தக்காளி : 3 மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி மி.தூள் : 1 தே.கரண்டி தேங்காய் துருவல் : 1 கப் சோம்பு : 1 தே.கரண்டி அரைக்க : தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் த…

  8. நெல்லிக்காயின் சாறு ! நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும். உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோசை உங்களுக்குப் ப…

  9. சுவையான தேனீர்.... தேனீர் பிரியர்களுக்கு தேனீர் போடும் பொழுது கேத்தலில் முதன்முதலில் கொதிக்கும் தண்ணீரில் தேனீர் போட்டால் ரொம்ப் சுவையாக இருக்கும். திரும்ப திரும்ப, அதாவது முதலில் கொதித்து ஆறிய தண்ணீரை திரும்பவும் கொதிக்க வைத்து தேனீர் போட்டால் அதன் சுவை குறைந்துகொண்டே போகும். காரணம் திரும்ப திரும்ப கொதிக்கவைக்கும் போது நீரிலிருந்து ஒக்சிஜன் அகற்றப்படுவதினால் தேனீரின் சுவை குறைந்துகொண்டே பொகும். பின் குறிப்பு: கேத்திலில் தண்ணீர் கொதிதவுடன் தேனீர் போடாமல் சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும். மேலும் 2...3 நிமிடங்களுக்கு மேல் தேயிலை பையை கொதி நீருக்குள் விடவேண்டாம். இளங்கவி

  10. போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக: 1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா. 2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே! 3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா) 4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார். 5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை) …

    • 40 replies
    • 9.2k views
  11. பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்) என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொ…

    • 28 replies
    • 8.8k views
  12. கோழிப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க

    • 16 replies
    • 14.2k views
  13. வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம். கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும். 1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? 2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? 3. கேக் போன்றவற்றை செய்யும் போ…

    • 13 replies
    • 2.6k views
  14. Started by Rasikai,

    இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …

    • 17 replies
    • 11.5k views
  15. Started by Paranee,

    தக்காளி சாதம் செய்வது எப்படி ? எங்கே எங்கள் சமையல் தேவதை தூயா ?

    • 12 replies
    • 9k views
  16. சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன். 5-6 - சிறிய வெங்காயம் 2 - பச்சை மிளகாய் 1/2- தே. கரண்டி மிளகு சுவைக்கு- உப்பு அலுமினியத் தாள் செய்முறை 1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்ல…

  17. Started by தூயா,

    தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு

  18. யாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், நான் கடந்த இரு வருடங்களாக சமையல் வலைப்பூ ஒன்றை எழுதி வருவது நீங்கள் அறிந்த விடயம். வலைப்பூ உலகில் என்னை போல் பலரும் எழுதி வருகின்றனர். எங்கள் யாழை எடுத்தால் குளக்காட்டான் அண்ணாவும் சமையல் குறிப்புகளை எழுதி வருகின்றார். தமிழ்வலைப்பூக்களில் பல நல்ல சமையல் பதிவுகள் எழுதப்படுகின்றன. இருப்பினும் பலருக்கு பலரை தெரியவில்லை. கருத்தாடல்கள் நடப்பது குறைவாக உள்ளது. இந்த குறையை பற்றி என்னுடைய சமையல்கட்டில் விவாதித்ததின் பலனாக இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றோம். இது ஒரு திரட்டியாகவும், சமையல்கட்டுக்களை இணைக்கும் பாலமாகவும் இருந்து தமிழ் சமையலை வளர்க்கும் என நம்புகின்றோம். நம்மண்ணின் சமையல்குறிப்புகள் அப்படியே மறைந்துவிடாமல் இணையத்தின…

    • 0 replies
    • 2.2k views
  19. அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்.. வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்ட…

  20. சோயா இறைச்சி பொரியல் தேவையான பொருட்கள் 2 பேருக்கு 50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி 2- பெரிய சிவப்பு வெங்காயம் 3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்) சுவைக்கேற்ப - உப்பு 1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள் 5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய் 3 கப் - சுடு நீர் 2 நெட்டு - கறி வேப்பிலை 1- தேசிக்காய் செய்முறை நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும் வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும் வெ…

    • 14 replies
    • 5.8k views
  21. Coconut Sorbet ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர் கற்றுத்தந்த தேங்காய் சோர்பற் நினைவுக்கு வந்தது. தேவையான பொருட்கள்: சீனி 1 கப் தேங்காய் பால் 3/4 கப் தண்ணி 1 கப் துருவி காயவைத்த தேங்காய் பூ 1/2 கப் தேசிக்காய் புளி 1 தே.க மின்ற் இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சீனியையும், நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனி நன்றாக க…

    • 9 replies
    • 3.1k views
  22. ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது. எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

  23. வெந்தயக் குழம்பு - ச‌சிகலா வியாழன், 26 ஜூன் 2008( 11:49 IST ) உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை வெங்காயம் - 2 தக்காளி - 2 புளி - எலு‌மி‌ச்சை அளவு வெந்தயம் - அரை தேக்கரண்டி மிளகாய் தூ‌ள்- 1 தேக்கரண்டி த‌னியா தூ‌ள் - 2 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தே‌ங்கா‌ய் - 2 ப‌த்தைக‌ள் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கடுகு, எண்ணெய் - தாளிக்க …

  24. இங்கு மழையும் நின்றபாடில்லை, நான் சூப் சமைப்பதும் நின்றபாடில்லை என்றாகிவிட்டது. பாவம் வீட்டில் உள்ளவர்கள் நிலமை கவலைக்கிடம் தான். ஆனாலும் எனக்கு கடமைன்னு வந்தால் பாசமெல்லாம் இரண்டாம் பச்சம் தான். சைவ சூப் என்பதால் அனைவயும் முயற்சித்துப்பார்க்கலாம். தேவையானவை: கரட் 1 பீன்ஸ் 5 மிளகு 5 சோளம் 1/2 கப் சோளமா 2 மே.க வினிகர் 1 தே.க சோய்சோஸ் 1 தே.க பச்சைமிளகாய் 2 உப்பு முதலில் செய்ய வேண்டியவை: 1. பச்சை மிளகாயை சின்னதாக அரிந்து எடுங்க. 2. கரட், பீன்ஸை சுத்தம் செய்து சின்னதா அரிந்து எடுங்க. 3. சோள மாவை 1/2 கப் நீரில் கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. 4. மிளகை தூளாக்கி வைக்கவும். செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை சுட வை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.