கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
வெந்த புண்ணில்... பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக…
-
- 11 replies
- 1.5k views
-
-
"டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன். ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள். நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு . "ஏன்டா...! பள…
-
- 64 replies
- 6.5k views
-
-
அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும். 19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்…
-
- 8 replies
- 2k views
-
-
ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …
-
- 2 replies
- 2.1k views
-
-
அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்! மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. “கொட்டி (புலி)” என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது. இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் …
-
- 7 replies
- 1.3k views
-
-
மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன் அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட் விற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். “சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவ…
-
- 18 replies
- 2.6k views
-
-
தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…
-
- 1 reply
- 991 views
-
-
ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்…
-
- 13 replies
- 2.2k views
-
-
தட்டான்பூச்சிகளின் வீடு..(மாரிசெல்வராஜ்) கோவில் கொடை கொடுத்தாயிற்று இன்னும் பலி மட்டும் கொடுத்துவிட்டால் சாமி திருப்தி ஆகிவிடும் அதோடு கொடையையும் முடித்து விடலாம். ஆனால் பலி ஆடுகளுக்கு நாம் எங்கே போவது அதையும் சாமிதான் கொடுக்க வேண்டும் . இதோ என்னிடம் மூன்று பலி ஆடுகள் இருக்கின்றன உனக்கு வேண்டுமானால் ஒன்றை கடனாக தருகிறேன் ஆனால் அடுத்தக்கொடையில் அதை நீ எனக்கு திருப்பித்தர வேண்டும். “ஐயோ ச் சீ பாவம் தட்டான்பூச்சிகளை எப்படி ஆடுகளாய் கொல்வது ?” “சாமிதான் சொல்லிச்சு எனக்கு இந்த கொடைக்கு தட்டான் பூச்சிகளை பலி கொடு என்று “ “இல்ல நீ பொய் சொல்லுற சாமி அப்படி சொல்லிருக்காது நான் விளையாட்டுக்கே வரல போ” “பலி கொடுக்காமல் நீ கொடையை முடிக்காமல் போனால…
-
- 3 replies
- 1.8k views
-
-
இலவ(ஈழ)ம் காத்தவர்கள் சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என…
-
- 148 replies
- 17.1k views
-
-
http://tinyurl.com/7ra25wl ரஞ்சகுமார் -ஒரு முக்கிய எழுத்தாளர். அதிகம் எழுதியதில்லை. மேலேயுள்ளதுதான் நான் அறிந்த ஒரே தொகுப்பு. கதைகளைக் copy/paste செய்ய முடியவில்லை காரணம்: கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். ----------------------------- முழுக்க வாசிக்க நேரம் இல்லாவிடின் வாசிக்கவும் "கோசலை"
-
- 5 replies
- 2k views
-
-
பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு க்ருஷாங்கினி நூல் வரலாறு உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது. இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது கி.பி. முன்றாவது நூற்றாண்டில் நூல் வடிவத்தில் இந்தியாவில் இருந்தது என்கிறார். என்றாலும்…
-
- 72 replies
- 19.7k views
-
-
அவசரம் அவசரமாக கதவை திறந்தான் .அறையில் யாரும் இல்லை .நேரத்தோடை சுரேஸ்க்கு சொல்லியிருந்தும் இன்றும் அலட்சியபடுத்தியது என்னவோ போல் இருந்தது அவனுக்கு ,வழமையாக எங்கும் போகாமல் இதுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சுரேஸின் மைத்துனனை கூட காண கிடைக்கவில்லை . .இன்றைக்கென்று எங்கு போய் தொலைஞ்சாங்கள் சனியன்கள் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். இந்த எட்டாவது மாடிக்கு ஏறி வந்த மூச்சு அடங்காத நிலையில் அதே வேகத்திலையே கதவை சாத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான். ,படி இறங்கின்ற இடத்தில் எந்த நேரம் சென்றாலும் அழுக்கு உடை அணிந்த கறுத்த இனத்தவன் ஒருவன் குந்தி இருப்பது வழக்கம் .அவனையும் சிறிது இடித்து தள்ளிக் கொண்டு வேகமாக போக , அவன் முதலில் டச்சு மொழியில் ஏதோ இவனை நோக்கி சத்தம் போட்டான் ,பிறகு த…
-
- 77 replies
- 15.2k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவு. அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை. அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன். அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில…
-
- 12 replies
- 3.2k views
-
-
கமக்காரன் நட்சத்திரன் செவ்விந்தியன் தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான். வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான். நெல்லு வெட்டிய வெற்று வயல்…
-
- 47 replies
- 10.1k views
-
-
நான் அவனில்லை... (நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... ) இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன். சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும…
-
- 33 replies
- 3.8k views
-
-
சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…
-
- 1 reply
- 1.2k views
-
-
குண்டுமழைக்குள்ளிருந்து... (நினைவேட்டின் அழிக்கமுடியாத பக்கங்கள்) வழங்கியவர் - எஸ்.பி.ஜெ.கேதரன் சொந்தங்களே... இறுதி யுத்தகாலப்பகுதியில் என்னைச்சூழ நடந்தவற்றை அப்படியே மற்றவர்களும் அறியும்படி எழுதவேண்டுமென்று எனக்கிருந்த நோக்கத்தின் பயனாக நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேனல்லவா.அப்படி எழுதியதுவும்,எழுதப்போவதுவும் உங்களால் பொறுமையாகப் படிக்க முடிகிறதா? அல்லது உங்களது நிதானத்தை சோதிக்கிறதா? தொடர்ந்து எழுதலாமா? எழுதியதை அப்படியே நிறுத்திவிடவா? என்ற கேள்விகள் மனதில் எழுந்ததன் விளைவாக... நான் எழுதியவற்றிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இந்தப்பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்து,உங்கள் கருத்தையறியலாமென்று நினைத்தேன்.இந்தப் பகுதி அடுத்த ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
ர்மழைக்குப் பிறகான இளவெயில் மரக்கிளைகளினூடே மஞ்சளாய் பரவிக் கொண்டிருந்தது. வெயிலின் தயைமிகுந்த சிறுகதிர்கள் சன்னல்வழியே படுக்கையின்மீது ஒளிர்கின்றன. விரைவிலேயே இன்னொரு மழையைக் கிளப்பி கொண்டுவருகிற உக்கிரம் கூடுகிறது வெயிலுக்குள். மறுபடி மழை பிடித்துக் கொள்ளுமானால் மீண்டும் வெயிலின் முகம் பார்ப்பதெப்போ என்று பதறுகிறது மனம். போர்த்திக் கொண்டிருந்த கனத்தக் கம்பளியை உதறியெறிந்துவிட்டு ஓடிப்போய் வெயில் காயவேண்டும் என்று பரபரக்கிறது கால்கள். இன்னொருவர் துணையில்லாமல் எழுந்து உட்காரவும் ஏலாத ஒரு முதியவளுக்கு அது சாத்தியமல்லவே... சுருக்கம் பாய்ந்தத் தன் நடுங்கும் கைகளை மெதுவே ஒரு கொடி போலசைத்து படுக்கை மீதிருந்த வெயிலைத் தடவிக்கொடுக்கிறாள். ரஞ்சித்தும் இந்த வெயிலைப் போன்றவன்…
-
- 0 replies
- 2.2k views
-
-
கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்! வணக்கம் உறவுகளே! என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி. தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான். அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன் நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது. சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது! "முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே. அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே" இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள். அட ஒருவர் செய்…
-
- 2 replies
- 999 views
-
-
உலகச் சந்தியில்… விமானம் யேர்மனியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனது மனைவி தலையை என்மேல் சாய்த்தபடி நித்திரையாகி இருந்தாள். எனக்குமட்டும் நித்திரை வரவில்லை. விமானம் எமது நாட்டை விட்டு வெகுதூரம் விலகி, வேகமாக வரவர, என் நினைவு மட்டும், எதிர் திசையில் அதைவிட வேகமாகத் தாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் நித்திரைப் பாயில் எதை எதையோ யோசித்தபடியே கிடப்பன். "அம்மா, வெய்யில் குண்டியில படும்வரைக்கும் படுத்துக்கிட, என்ன பொறுப்பிருக்கு… பகல் பகலா ஊர் சுற்றுறது… இரவிரவாக காவாலியள் கடப்புளியள் மாதிரி சந்தியில நிண்டு வம்பளக்கிறது,,," என்று பேசியபடி என்னைக் கடந்து சென்றுவிடுவார். சிறிது நேரம் செல்ல… "டே... தேத்தண்ணி வைக்கவா…." "ஓமணையம்மா வை…" என்றபடி…
-
- 5 replies
- 1.4k views
-
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்ச…
-
- 21 replies
- 2.5k views
-