Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. இறைச்சி வாங்க வழக்கமாக போகும் தமிழ் கடைக்கு போனேன்.கல்லாவில் நின்ற முதலாளி என்னை சிரித்து வரவேற்றதுடன் அப்போது கடையால் வெளியேறிக்கொண்டிருக்கும் வயது போன ஒரு மனுசியை பார்க்குமாறு கண்ணால் ஜாடை காட்டினார்.கையில் ஒரு பையுடன் போய்கொண்டிருந்த ஒரு அம்மாவை .இடைக்கிடை இதே கடையில் பார்த்ததாக ஞ்பகம். "என்ன விடயம் என்று" முதலாளியைக் கேட்டேன் . "மீனோ இறைச்சியோ போய் சொல்லிப்போட்டுவாரும் ஒரு அலுவல் காட்டுகின்றேன் " என்றார். திரும்பி வர செக்குரிட்டி கமரா எடுத்த படத்தை ரீவைன் பண்ணி போட்டுக்காட்டினார். அந்த மனுசி வந்து ஆறு இராசவள்ளிக் கிழங்குகளை மேசையில் வைக்க முதலாளி எடுத்து நிறுத்து பின்னர் இரண்டு கிழங்கை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்து காசையும் வாங்கிக்கொண்டு விட,மனுசி…

  2. கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…

    • 2 replies
    • 943 views
  3. சங்கடம் யோ.கர்ணன் அண்மையில் எனது முகப் புத்தகத்திற்கு ஒரு நட்பு வேண்டுகோள் வந்திருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். அவரது பிறப்பிடமாக கிளிநொச்சியை குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அனாமதேய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன்தான் அவரை நண்பராக எற்றுக் கொண்டேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஓரிரண்டு கிளிநொச்சி ‘பொடியள்’ இப்படி பல அனாமதேய கணக்கில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள் (ஆண்,பெண் பெயர்களில்). நான் நினைத்தது சரியாகவேயிருந்தது. அவர் மிக நாகரிகமாக ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதனை ஒரு வரியில் சொன்னால் ‘நீயெல்லாம் உருப்படுவியா’ என்று வரும். உண்மைதான். எனக்கு கூட இந்த சந்தேகம் பல காலமாக இருந்து வருவதுதான். அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரண்டு வருடமாக அதி…

  4. இவன் அப்ப சின்னப் பொடியன். முக்கால் சைக்கிள் ஒன்றில பள்ளிக்கூடம், ரியூசன் போய் வந்து கொண்டிருந்தான். கூடப் படிச்ச தர்சினியில கொஞ்சம் விருப்பமிருந்தது. பள்ளிக்கூடம் போனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அந்த நேரம் சாமான் எல்லாம் ஆனை விலை குதிரை விலை. அரசாங்கம் கன சாமானுக்கு தடை போட்டிருந்தது. பற்றி, சோப் கண்ணுக்குத் தெரியாது. இவன் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டான் என்றால் அப்பு வளர்க்கிற மாடு மூசி மூசி மோப்பம் பிடிச்சுவந்து நக்கும்.. சோப் தட்டுப்பாடென்பதால பனங்காயிலதான் அப்ப உடுப்புத் தோய்க்கிறது. கலியாணவீடு, திருவிழாக்களுக்கு போடுறதெண்டு ஆசை ஆசையாக ஒரு நல்ல மஞ்சள் சேட் வைத்திருந்தான். ஒருநாள் தோய்த்துக் காயப் போட அதை மாடு சப்பிப் போட்டுது. அந்த சேட்டில்லாமல் போனத…

  5. என்னைக் கவர்ந்த எளுத்தாளர்களில் ந . பிச்சமூர்த்தியும் ஒருவர் . நான் சிறுவயதில் கலைமகளில் அவரின் கதை ஒன்று வாசித்தேன் . பல வருடங்கள் கடந்து மீண்டும் அதே கதையை இணையத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் மீண்டும் எனக்குக் கிடைத்தது . அவரின் இந்தக்கதை 60 களில் வெளிவந்தாலும் , குறிப்பாக எம்மிடையே இப்பொழுது நடக்கின்ற சம்பவங்கழுக்கு ஒரு செய்தியை இந்தக் கதைமூலம் 60 களிலேயே சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது . உங்களுக்காக இதைப் பகிர்கின்றேன்..................................... ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற …

  6. புலத்தில் மட்டும் அகதியாக இடம் பெயர்ந்து அதன் வலியை உணர்ந்த நான் , என் தாய் மண்ணில் அகதியாக இடம்பெயர்ந்த வலியை உணரத்தவறி விட்டேன் .அவை எனக்கு வெறும் செவிவழிச்செய்திகளே . நெருடியநெருஞ்சியில் , எனது பால்ய சினேகிதி பாமினி மூலம் இடப்பெயர்வின் வலியைத் தொடமுயற்சித்தாலும், அதுவும் எனக்கு ஓர் அனுபவப் பகிர்வில் வந்த வலியே . அண்மையில் என்னை மிகவும் பாதித்த ஓர் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன்.................................... அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும் கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் ச…

  7. புதுச்சப்பாத்து... (இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது) தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெ…

  8. இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன். முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்” என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற …

  9. ஆமிக்காறருக்கு நாங்களோ உதவி…? சொல்லட்டோ ? சுரேன் கேட்டான். ஓம்...! சொந்த இடம்…..3பிள்ளைகள் ..மூத்த பிள்ளை 19வயது , 2வது பிள்ளை 17வயது….3வது பிள்ளை 11வயது….எழுதிக்கொண்டு வர சுரேன் அவர்களது பெயர்களை வாசித்தான். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடுறதெண்டு சொல்றவையெல்லோ அந்த நிலமைலதான் நானும். அண்ணை நீங்களெனக்கு ஆக்களிட்டை அடிவாங்கித்தரத்தான் நிக்கிறியளென்ன…? எங்களுக்கு உதவாட்டிலும் பறவாயில்லை இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுங்கோ….நாங்கல்லாம் நாட்டை நேசிச்சுத்தான் வெளிக்கிட்டனாங்கள். எங்களுக்கு கொள்கை லட்சியமெண்டு எல்லாமிருந்தது…நாங்க உள்ளையிருக்கிறதிலயும் ஞாயமிருக்கு…! ஆனா இந்த 50வயது மனிசன் எங்கடையாக்களுக்கு உதவப்போய்த்தான் இண்டைக்கு இந்தச் சிறையில காய…

  10. அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…

    • 26 replies
    • 2.8k views
  11. கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 11) எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று த…

  12. அரசனும் குதிரைவீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் ஜெகன் அபூர்வன் பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும் ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன. ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் …

  13. அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…

  14. கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10) நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்பட…

  15. ஊர் கோவில் விரதம் என்று ஐக்கிய இராச்சியத்தில் சின்னத்துரை வீட்டில் பறக்கும், நீந்தும், நாலு காலில் ஓடும் உயிர் இனங்களை பொரித்து, வறுத்து, அவித்து உண்ண தடை. வேலையால் திரும்பிய சின்னத்துரையரை சவர்மா கடை வாசலடியில் வந்த வாசம் நிறுத்தி, அவரது வயிற்றிற்கும் மூளைக்கும் போரை தொடக்கி வைத்தது. அந்த போரில் அவரது தொந்தி வயிறு உடன் வெற்றி பெற்றது. சின்னா: ஒரு கோழி சவர்மா. நல்ல உறைப்பா போடுங்கோ. சவர்மா: நல்ல உறைப்பாவாகவா? சின்னா: ஓம். நாங்கள் நல்ல உறைப்பு சாப்பிடுவம். சவர்மா: நீ ஸ்ரீ லங்கனா? சின்னா: இல்லை, ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வந்த ஒரு ஈழ தமிழன். நீ எந்த நாடு? சவர்மா: லெபனான். ஸ்ரீ லங்கா பிரச்சினையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் உங்களை கொல்…

    • 12 replies
    • 2k views
  16. இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு, சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப் போதல் என்றிருந்தன அவை. முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது. வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக. இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னா…

  17. Started by sayanthan,

    சாகீரை நித்திரையில் வைத்து அமத்திய போதே முதற்காரியமாக அவனது கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. இடுப்பில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை.எப்படியாவது செத்து விட வேண்டும். எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ தெரியவில்லை. அருள் அகன்றிருப்பான். அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது” அவன் அலவாங்கு அல்லது கோடாலியொன்றைத் தேட…

  18. தீபச்செல்வன் கிரிஸ் மனிதர்கள் என்கிற இரத்த பூதங்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் கிரிஸ் மனிதர்கள் எனப்படும் அரச பூதங்கள் நடமாடி மக்களின் இயல்பு வாழ்வைத் தின்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் இந்த பூதங்கள் இரத்தம் குடிக்கும் நோக்குடன் அப்பாவி மக்களை இலக்கு வைத்துள்ளன. யுத்தம் மூலம் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கடித்துக் குதறி சனங்களின் இரத்தத்தை இந்தப் பூதங்கள்தான் குடித்தன என்பதை நிரூபிக்கும் விதமாகத் தொடர்ந்து இரத்தப்பசியுடன் அலைகின்றன. உலகம் மிக நவீன கண்டுபிடிப்புகளால் வளர்ந்துள்ள நிலையில் அதன் செல்வாக்குடன் ஈடுகொடுக்கத்தக்க நிலையில் நகரும் இலங்கை நாட்டில் மனிதர்களைக…

  19. சர்வதேச ராணுவ ரகசியங்கள், உள் நாட்டு அரசியல் ரகசியங்கள் என்பவை 30 ஆண்டுகளின் பின் காலாவதியானவை என அறிவிக்கப்பட்டு அந்த ரகசியங்கள் வெளிவருவது போலத் தான் இந்தக் கதையும். ஏறக்குறைய 33-34 வருடங்களுக்கு முன்னான ரகசியம் இது. இன்று வரை பகிரப்படாத கதை. இனி இது ரகசியமில்லை. கதைக்குப் போவோம் வாருங்கள்..... காலம்: 1977ம் அல்லது 1978ம் ஆண்டு. இடம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான மட்டக்களப்பு நகரமும், என் பாடசாலையும், அங்கிருந்த விடுதியும், ஆனைப்பந்தி கோயிலும், ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியும். பாத்திரங்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நானும், அந்த வெள்ளைச்சட்டை, வெள்ளைப்பாவாடைத் தேவதையும். எனது பால்யக் காலங்கங்களில் பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கை என்று…

  20. கடிதத்தை பிரித்தேன், தோழர் ---------------க்கு , உம்முடன் லண்டனில் இருந்து வந்த தோழர் ----------, சில விசம பிரசாரங்களிலும்,இயக்க கட்டுப்பாடிற்கு விரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டதற்காக விசாரணைக்காக முகாம் B யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீர் உடன் உரத்தநாடு சென்று அவரை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வேண்டுகின்றேன். இப்படிக்கு செயலதிபர் முகுந்தன் குறிப்பு - உரத்தநாடு போகுமுன் மாதவனை சந்திக்கவும். கடிதத்தை மடித்து பொக்கெற்ருக்குள் வைத்துவிட்டு மாதவனை சந்திக்க போகின்றேன்.உரத்தநாடு போய் வருவதற்கு செலவு காசும்,அதைவிட ஒரு பாசலும் தந்தார்.இதில் ஒன்பது லட்சம் ருபா இருக்கின்றது அனைத்துமுகாம் பொறுப்பாளர் கருணாவிடம் கொடுத்துவிடவும் என்றார்.மாலை திருவள்ளுவர் போ…

    • 2 replies
    • 1.3k views
  21. சத்தியமாக இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லையை தாங்கமுடியவில்லை. மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கு மட்டும் என்னை விடாது போலிருக்கிறது . விதி வலியது இவ் விடயத்திலும். முதலில் பிரச்சனையை விளக்குகிறேன். கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடி மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆனால் அடுத்தமுறை உடுப்புகளுவும் போது முதல் முறை காணாமல் போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்ல கண்டா நாய கணோம் நாய கண்டா கல்ல கணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள்போன கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது. வாஷிங் மெசீன் என்ற …

  22. அரிபாபு நினைவுகளை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது! அவரைப் போல் சிவராசன் என்னை அழைத்திருந்தாலும், அன்றைக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு நானும் போயிருப்பேன். அங்கே அரிபாபு உடன் நானும் சிதறித் செத்திருந்தாலும், தினம் தினம் இன்றைக்கு இவ்வளவு உளைச்சலுக்கு ஆளாகிச் சாக வேண்டிய நிலை வந்திருக்காது. சம்பவ இடத்துக்குப் போயும் உயிர் தப்பியவள் என் மனைவி நளினி. ‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பது நளினிக்குத் தெரியாது. சுபாவும் தாணுவும் இலங்கைத் தமிழில் பேசினால் சந்தேகம் வரும் என்பதால்தான், தமிழ்ப் பெண்ணான நளினி அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்’ என அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை நிறைவேற்றும் கடைசிக் கணத்தில் கூட தனது திட்…

  23. மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை. மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது. ஒன்றாய் உலா வருகிறார்கள்.. பச்சை எரிச்சலாய் இருக்கிறது. உடுப்புக் கடை, சப்பாத்துக்கடை, கோப்பி சொப், சினிமா என்று சுற்றித் திரிகிறாகள்... என்னோடு கார் ஓடியதையும், மலை ஏறியதையும், பந்தடித்ததையும், எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும், யானை மே…

    • 8 replies
    • 1.6k views
  24. ரெயில் நிலையம் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த தருணத்தில் இருந்து மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்களாகவே அவனிற்குப் பட்டனர். பிரேதப் பெட்டிகளில் இருந்து மக்கள் வெளிக்கிளம்பி நடந்து திரிவதாக அவனிற்குத் தோன்றியது. தன்னைப் பற்றிய சிந்தனைகள் அறவே அவன் மனதில் இறந்துபோயிருந்தன. எவரது அங்கீகாரமும் எந்த விதத்திலும் அவனிற்குத் தேவைப்படவில்லை. கடிகாரம் நேரம் முதலிய கோட்பாடுகள் அவனுள் மறக்கப்பட்டிருந்தன. அவனது மனம் திட்டமிடுவதை அறவே கை விட்டிருந்தது. வேலை, வருமானம், செலவுகள் போன்ற சின்ன விடயங்கள் மிகச் சின்ன விடயங்களாகிப் பின் அறவே தொலைந்து போயிருந்தன. புகையிர நிலையத்திற்குள் பேய்களாகத் தெரிந்தவர்களோடு முட்டிமோதி விலகி தண்டவாளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். …

  25. லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி தமிழில்: சுகுமாரன் டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.