Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…

  2. ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது. எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சிய…

    • 2 replies
    • 1.4k views
  3. April 23rd, 2011 நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று உரிமைகோரரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்…

    • 60 replies
    • 6.4k views
  4. Started by Innumoruvan,

    வசந்தத்திற்கும் கோடைக்கிற்கும் இடைப்பட்ட குழப்பகரமான காலநிலை. கருக்கற் பொழுதின் குறைந்த ஒளி, இரைச்சல்கள் இல்லை, புத்துணர்ச்சி நிறைந்த மனநிலை. ஆங்காங்கே சில பனித்துளிகளும் விழுந்தவண்ணம் காத்து நின்ற இரயில் நிலையத்தில் இரயில் வந்து நின்றது. வழக்கமான இருக்கை, வழக்கமான முகபாவங்கள், பழகிப்போன செயற்கைத் தனம். மூடிக்கொண்ட கதவுகளைத் தொடர்ந்து அடுத்த நிலையம் நோக்கிய இரயிலின் நகர்வு. கண்கள் இரயில் பெட்டிக்குள் உலாவிக்கொண்டிருந்தன. பிற கண்களைக் காண்பதைச் சாலைவிபத்துக்கள் போல்த் தவிர்த்;து, தாழ்த்தியும் உயர்த்தியும் முகங்கள் கண்களை உருட்டிக்கொணடிருந்தன. நடனம் தெரியாத முகங்கள் உறங்கின. சில உறங்குவதாய்ப் பாசாங்கு செய்தன. உண்மையில் உறங்கும் முகங்களில் எத்தனை அமைதி. ஓவ்வொரு மனிதனிலும் பி…

    • 34 replies
    • 3.9k views
  5. பயணம் ..................... பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந…

  6. காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை. “காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ இதுவொரு குறுநாவலுக்கான தலைப்பு. இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள். 2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன…

  7. Started by nunavilan,

    உறவு என்பது... படுதலம் சுகுமாரன் ஊருக்குள் நுழைந்தது கார். காருக்குள் இருந்தபடி ஆர்வமாக வெளியில் பார்த்தான் ஆனந்தன். கடந்த வருடங்களில் அவன் வரவை எதிர்பார்த்து... ஊர்மக்கள் பத்து பேராவது சாலை ஓரம் கூடியிருப்பர். இப்போதும் அது போலவே ஊர் மக்கள் திரண்டு வரவேற்க காத்திருப்பர் என நம்பினான். ஆனால், இந்த முறை வரவேற்க ஆளில்லாமல் தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் வருவது யாருக்கும் தெரியாதா, பெரியம்மா யாருக்கும் தகவல் சொல்லவில்லையா? வருடம் தோறும் ஆடித் திருவிழாவுக்கு வந்துவிடுவேன் என்பது எல்லாரும் அறிந்ததுதானே... கடந்த நாலு வருடங்களாய் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கிறேன். ஒருவேளை, நான்தான் தேதி மாறி வந்துவிட்டேனோ என்று பலவக…

  8. வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை. பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம். இங்கே ப…

  9. மூத்தவளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திக்கு சிவாவின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பாக ஆயத்தங்கள் செய்ய தொடங்கிவிட்டாள்,இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.சிவாவின் மனைவி சுதா பல வருடங்களுக்கு முதலேசிட்னிக்கு குடிபெயர்ந்தவள்.சிவா அவளை திருமனம் செய்தபடியால் அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை கிடைத்தது.சிவாவைவிட சுதாவுக்கு வெளிநாட்டு அனுபவங்கள் அதிகமாகவே இருந்தது சப்ரைஸ் பார்டிகள்,பிறந்தநாள் பார்டிகள் ஒழுங்கு செய்வதுபோன்றவற்றில் அவளுக்குத்தான் அதிகம் அனுபவமிருந்தது. பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்றால் ஒரு புது சட்டை உடுத்தி,கேக் வெட்டி ,5,6 பலூன் கட்டி கொண்டாடினால் போதும்தானே இதற்கு போய் ஏன் ஒரு மாததிற்கு முதலே பெரிய கலியாணவீடு செய்யிறமாதிரி பில்டப் காட்டுவான் என நினைத்தான். மூத்தவ…

    • 19 replies
    • 3.6k views
  10. இரண்டாவது தலைவர் Friday, March 25th, 2011 -யோ.கர்ணன்- நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிர…

    • 8 replies
    • 2.3k views
  11. நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா? ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம். தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். அவரிடம், ''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார். அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி. வாழ்நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்க…

  12. சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர். …

  13. இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வ…

    • 1 reply
    • 1.6k views
  14. கபடி கபடி...... இனக்கலவரத்தால் சிங்களவனால் பந்தாடப்பட்டு, பந்து போல் எதுவுமில்லாது ஊருக்கு வந்து பாதை தெரியாது, பயணம் புரியாது கால்கள் போன வழியில் திரிந்த காலம். நண்பர் வட்டம் பாடசாலைகளுக்கு சென்றுவிடும். என்னைப்போல் அகதியல்லவே அவர்கள். தனிமை. வெறுமை. சரி கிடைப்பதை தெரிவு செய்யலாம் என்றால் நண்பனாக கிடைத்தார் ஒரு அண்ணன் முறையானவர். 3 வயது வித்தியாசம். அவர் சொந்தமாக யாழில் தொழில் வைத்திருந்ததுடன், ஊரிலிருந்து யாழுக்கு வாகனசேவையும் செய்து வந்தார். பொழுதுபட என்னைச்சந்திக்க வந்துவிடுவார். ஒரு நீரோடையைக்கடந்து தான் எனது வீட்டுக்கு அவர் வரவேண்டும். வழமையான சந்திப்பு என்பதால் பொழுதுபடமுன் எங்கிருந்தாலும் அந்த இருபகுதியையும் பிரிக்கும்…

  15. எழுதியவர் உமா வரதராஜன் இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்தில் (பிரேமதாசா காலம்) நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வந்த கதை. இக்கதை வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது. மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நட…

  16. இடைவெளி.......................... நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்குது வாழ்க்கை. 25 வயதில் திருமணம். 2 வருடங்கள் சந்தோசமான திருமணவாழ்க்கை. அதைத்தொடர்ந்து 2 பிள்ளைகள் ஒருவருட இடைவெளியில். பின்னர் 4 வருடத்தால் இன்னொரு ஆண் பிள்ளை. இப்படியே நன்றாகத்தான் போகுது வாழ்க்கை. மூத்த பெண் பிள்ளை கேட்டாள் அவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள் நான் தனியே ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு துணையாக ஒரு தங்கச்சி வேண்டும். ஒருவாறு பெத்தாச்சு. அதுவும் பெண்ணாக. சரி பிரச்சினை முடிந்தது. அந்த பிள்ளைக்கு 3 வருடமாகும் வரை நிம்மதியாக இருந்தது. அதன் பின் தான் சிக்கல் வரத்தொடங்கியது. தங்கச்சி தங்கச்சி என தோழிலும் மார்பிலும் போட்டு தாலா…

  17. ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்க…

  18. நாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன் வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்.... சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளைத்த மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டு…

  19. எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா? வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தி…

  20. காலம் உனக்கொரு பாட்டெழுதும் : ஈழத்து எழுத்தாளர் ரஞ்சகுமார் 80 களின் ஈழத்தில் இருந்து வந்த மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பான மோகவாசல் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுகதை --- வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர். இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எ¡¢ந…

  21. ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது மேலை உள்ள புகைப்படம் எனது இரண்டு வயதி…

    • 25 replies
    • 4k views
  22. அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக…… பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது. அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந…

    • 5 replies
    • 1.5k views
  23. ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்? காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது. தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்க…

  24. யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்குக் கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்குக் கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகை மூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒரு சொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத் தான் தெரியும். ஆகவே எ…

  25. Started by arjun,

    லைலா Print this Page - ஷோபாசக்தி இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும். பிரான்ஸின் தற்போதைய அதிபர் நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன் பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்னார். அந்தப் பகுதியில்தான் நான் கடந்த பத்து வருடங்களாக இருக்கிறேன். உண்மையிலேயே …

    • 60 replies
    • 5.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.