வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020 கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல…
-
- 1 reply
- 1.8k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! தாயகத்தில் பிறந்து தற்போது புலத்தில் - நோர்வேயில் வாழ்ந்துவரும் சகோதரர்கள் மே 18, 2008 அன்று கனடாவில் நடைபெறும் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ் ரப் உலகில் புதிய ஒரு அத்தியாயத்தை எழுதும் இவர்களின் பாடல்கள் பலரது அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அதேசமயம் கனடாவில் நடைபெறும் இவர்களின் இசை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களிற்கு நல்லதொரு இசைவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களது பாடல்களை நீங்கள் கீழே பார்த்து மகிழலாம்!
-
- 0 replies
- 1.8k views
-
-
ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது * மே 2012 தொறான்ரோ பயணத்தையொட்டி கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் செயல்பாட்டாளரான ரதன் என்னுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் பதிவு * கடந்த பல வருடங்களாக ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஒரு சக தமிழன் என்பதற்கு அப்பால் உங்களைத் தூண்டியவை என்ன? குழந்தைப் பருவத்திலிருந்தே எனது வாழ்க்கைப் பின்னணி என்பது பல்கலாச்சார-பல்மத-பல்சாதியச் சூழலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. எனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். எனது தாய் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. எனது தாய்தான் எமது குடும்பத்தின் ஆதாரம். ஒரு குடும்பமாக நாங்கள் தெருவுக்கு வராமல் இருந்ததற்கு அவரது கடுமையான உழைப்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்! - த.சிவசுப்பிரமணியம் - ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன் தீபச்செல்வன் ‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போ…
-
- 3 replies
- 1.8k views
-
-
புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது. Saturday, 01 October 2011 08:54 அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சட்ட வல்லுனர்கள் அமைப்பும் பெண் சட்ட வல்லுநர்கள் சங்கமும் இணைந்து வழங்கும் வருடத்தின் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியன் என்ற தமிழர்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இவர் 2009 ஆம் ஆண்டில் சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருது வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையையும் பெற்றமை குறிப்பி…
-
- 6 replies
- 1.8k views
-
-
mz;ikapy; ntspte;j ~fhjy; nkhop| ,Wtl;bd; ghly; gjpT fhl;rpfs; Hi friends Watch out....this... Making of kadhal mozhi album http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24
-
- 0 replies
- 1.7k views
-
-
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்…
-
- 4 replies
- 1.7k views
-
-
உதாரண புருஷர் அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது. அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம். அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சமாதானபல்கலைகழகம் கருத்தாக்கத்தின் தந்தையான சுவாமி பரால் கதை ஆங்கிலத்தில் படமாகிறது. இயக்குனர் ரூண சோகைம் இப்படத்தில் பராலாக நடிக்கிறேன். அதன் சில காட்ச்சிகள் இணைத்துள்ளேன். நோர்வே நாட்டுக்கு 1914 வந்து 1945 இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற 1945 மே 8ல் மரணமான பரால் எனப்படும் சுவாமி ஆனந்தாசாரியார் (Swami Sri Ananda Acharya 1881 - 1945) வங்க தேசத்தைச் சேர்ந்தவர்.
-
- 1 reply
- 1.7k views
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
க.வாசுதேவன். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், என பன்முக ஆளுமைகளோடு இயங்கிக்கொண்டு இருப்பவர். தமிழ் மொழியில் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியை எழுதிய ஈழப் புலம்பெயரி. எதையும் தர்க்கித்துப் பார்க்கும் மொழியாடல் கொண்ட ஒருவர். இவைகளைக் கடந்து தமிழ் சமூகத்தின் ஒடுங்குதல் அல்லது உறைநிலை மீது பெரும் கோபம் கொண்ட ஒரு படைப்பாளி. தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதி இருக்கிறார். 2007 ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக “தொலைவில்” கவிதைத் தொகுதி கனடா தமிழ் தொட்டத்தினரால் தேர்வு செய்யப்பட்டதும் கு…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆத்தாதவன் செயல் July 10, 2019 ஷோபாசக்தி ‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம். அறிமுகக் காட்சியில் ‘ஈழமாமணி நாடு ஆளும் மன்னவ…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_11.html
-
- 0 replies
- 1.7k views
-
-
செ.யோகநாதன் செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர். கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திர…
-
- 0 replies
- 1.7k views
-
-
அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள் 2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநா…
-
- 3 replies
- 1.7k views
-
-
தீபச்செல்வன் அவர்கள் தமிழ்கவி அவர்கள் சோபா சக்திக்கு வழங்கிய நேர்காணலுக்கு எழுதிய கருத்து அல்லது எதிர்வினை. இது தீபனின் முகநூலில் இருந்து இங்கு பதிவிடுகிறேன். தமிழ்க்கவி அம்மாவை சிறிய வயதில் வரிச்சீருடையுடன் தெருக்களிலும் கூடட்டங்களிலும் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும்எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும…
-
- 7 replies
- 1.7k views
-
-
வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது …
-
- 5 replies
- 1.7k views
-
-
கனடாவில் 1998ல் வெளியான "உயிரே உயிரே" திரைப்படத்தில், தகப்பன் (கே. எஸ். பாலச்சந்திரன்) மகன் ( ரமேஷ் புரட்சிதாசன்) இருவரும் எங்கள் சாகித்யகர்த்தா இணுவில் வீரமணி ஐயாவைப் பற்றியும், லயஞான குபேர பூபதி தவில் தட்சணாமூர்த்தி பற்றியும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி. திரைக்கதை வசனம்: கே. எஸ். பாலச்சந்திரன் இயக்கம்: ரவி அச்சுதன் தயாரிப்பு: ஸ்ரீமுருகன்
-
- 0 replies
- 1.7k views
-
-
எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின்றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கு நிரந்தரமாகிவிடுகின்றது. அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புரூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புரூஸ் லீயின் பங்கு அளப்பரியது. குங்பூ, கரத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புரூஸ் லீ. எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புரூஸ் …
-
- 1 reply
- 1.6k views
-
-
கொழும்பிலிருந்து கோடம்பாக்கம்: ஒரு பாடகரின் பயணம் குண்டுவெடிப்பு சப்தங்களால் கோமா நிலைக்கும்போகும் செவிகளை தனது இன்னிசை மழையில் உயிர்ப்பிக்க செய்யும் உன்னத காரியத்தை செய்து வருபவர் பாடகர் சிவக்குமார். இவரது பூர்வீகம் கொழும்பு. அக்னி சிவக்குமார் என்றால் இலங்கையில் தெரியாத ஆட்களே இல்லையாம். இவர் நடிக்கும் இசைக்குழுவின் பெயர்தான் அக்னி. பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்த பாட்டு ஆர்வம் இன்று சினிமா பாடகர்வரை வளர்த்துவிட்டுள்ளது. இலங்கை வானொலிகள், தொலைக்காட்சி தொடர்கள் என இவரது பாட்டு பயணம் நெடுந்தொலைவு. 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாடகர் மனோதான் சிவாகுமாரின் இன்ஸ்பிரேஷனாம். இவர் நடத்தி வரும் இசைகுழுவில் தமிழ் பின்னணி பாடகர்-பாடகிகள் பலர் பாடியுள்ளனராம். '…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா “இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நா…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஓவியர் விஜிதன் நேர்காணல் கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம். இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன? பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
Sir Arthur Charles Clarke, CBE, FRAS, Sri Lankabhimanya, (16 December 1917 – 19 March 2008) was a British science fiction author, inventor, and futurist http://en.wikipedia.org/wiki/Arthur_C._Clarke
-
- 2 replies
- 1.6k views
-
-
என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன். “டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம…
-
- 2 replies
- 1.6k views
-