விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
நம்பவே முடியாமல் chelsea ஐரோப்பிய கிளப்புகளுக்கைடையிலான உதைபந்தாட்டத்தில் bayern munich ஐ பனால்ட்டியில் தோற்கடித்தது . முதல் 90 ஆவது நிமிடமாகும் நேரம் ஒரு கோல்,பின்னர் கடைசி பனால்டியும் அடித்த drogba வின் அதிரடி ஆட்டம் கலங்க வைத்தது .
-
- 22 replies
- 2.6k views
-
-
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள். இவர்களிடமிருந்து 25 மொபைல…
-
- 0 replies
- 686 views
-
-
வணக்கம் உறவுகளே எதிர்வரும் 8.6.2012 அன்று ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. யாழ்களத்திலும் பல நாட்டு உறவுகள் உள்ளதால் ஒரு போட்டி நிகழ்வாக இதை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளேன். பங்குபற்ற விரும்பும் உறவுகள் இந்த திரியில் அறியத்தரவும்.
-
- 147 replies
- 11.6k views
-
-
மதுபோதையில் வாகனம் ஓடியதற்காக 1996ம் ஆண்டு ஒலிம்பிகில் நூறு மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், 9.84 வினாடிகளில் நூறு மீற்றரை ஓடி அப்போது உலக சாதனை படைத்தவருமான கனடாவை சேர்ந்த Donovan Bailey இன்று Torontoஇல் கைது செய்யப்பட்டார். தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி சம்மந்தமான செயற்பாடுகளில் கனடா நாட்டுக்காக அவர் ஈடுபட்டுள்ளதால் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளார். முன்பும் கடுகதி பாதையில் வாகனத்தை மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் ஓடியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓடியதற்காகவும் காவல்துறையினால் Donovan Bailey இரண்டு தடவைகள் குற்றம் சாட்டப்பட்டார். தகவல்: http://www.theglobea...content=2433037
-
- 3 replies
- 2.6k views
-
-
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ம் தேதியன்று லண்டனில் துவங்க உள்ளதை அடுத்து கிரீசின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவாக ஒலிம்பிக் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டனை வந்தடையும். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 666 views
-
-
பிரித்தானியாவில் ஆண்டு தோறும் நடந்து வரும் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் Blackburn-Wigan அணிகளுக்கிடையேயான போட்டியின் போது.. கோழி (சேவல்) ஒன்று மைதானத்துக்குள் புகுந்து தனது ஆதரவை வெளிக்காட்ட.. கோலி.. கோலைப் பிடிக்காம.. கோழியை அமுக்கும் காட்சி.. இந்த இணைப்பில் உள்ளது. மக்கள் நீங்களும் இதனை கண்டு களிக்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.......! http://youtu.be/6WC1Oa-A12c http://www.bbc.co.uk...otball/17990595
-
- 1 reply
- 934 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jPVKIyYtAKE
-
- 4 replies
- 1.2k views
-
-
வர்மங்களில் மறைந்திருக்கும் மர்மங்கள் வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு “அடவு வர்மம்” என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த …
-
- 1 reply
- 5.7k views
-
-
இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட…
-
- 4 replies
- 1.4k views
-
-
கிரிக்கெட் என்றில்லாமல் வேறு ஒரு கோணத்தில் நினைக்க முடியாத அளவு சந்தோசத்தை தருகின்றது. கடைசி ஓவரில் இன்று ஏபி வில்லியர்ஸ் அடித்ததை பார்த்துதான் இந்த கருத்து
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை கடந்த 11ம் நாள் மார்ச் மாதம் Stade Chemin du Marais du Souci மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள் அ பரிவில் ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ ந…
-
- 8 replies
- 1.1k views
-
-
ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி சந்திரசேகரன் கிருஷ்ணன் உலகமே ராஹுல் திராவிடிலிருந்து சச்சினுக்குத் தாவிய பின்னர் திராவிடைப் பற்றி மீண்டும் பேசுகிறோம். அவசரகதியில் பல்லாயிரக்கணக்கான மைல் நீளமுள்ள சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் 5 அடிக்கு 5 அடி கேண்வாஸில் அரைமணி நேரமாய் ஒரே ஒரு கோடு வரைந்துக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்றுதான் சொல்லவேண்டும், வெள்ளையடிப்பதற்கும் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால். அப்படிப் பலரின் விமர்சனங்களையும் வாங்கிக்கொண்டு பொறுமையாக வரைந்து முடித்து, ஓவியத்தை ஒரு அழியாச்சின்னமாக விட்டுச் சென்று இருக்கிறார் திராவிட். கிரிக்கெட்டே வண்ணமயமான ஒரு கோலாகலமாக ம…
-
- 8 replies
- 979 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி, ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இங்கிலாந்து பாதுகாப்புப் படையினர், போலீசார், கமாண்டோக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது- சயனைடு ம…
-
- 0 replies
- 720 views
-
-
உலன்பாடர்: ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர். மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்…
-
- 0 replies
- 577 views
-
-
-
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள லியோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் கிளப் அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, கிராணடா அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியின் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல்(17, 68, 88வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 28 போட்டியில் 20 வெற்றி, 6 டிரா, இரண்டு தோல்வி உட்பட 66 புள்ளிகள் பெற்று இரண்டாவது…
-
- 2 replies
- 776 views
-
-
இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா டெல்லி: சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக்…
-
- 10 replies
- 4.6k views
-
-
Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup Bangladesh stormed into the finals of the Asian Cup when they beat the struggling Sri Lankan side comprehensively in a rain-hit match at Shere Bangla National Stadium, Mirpur, yesterday. Even though the home side won a crucial match against the Indians, yesterday's game against the Lankans was a must win for them in order to get into the finals with the Pakistanis who are still unbeaten in the series. Electing to field first the Bangladeshis managed to get the best out of their decision as they went through the Lankan top order quickly, Lankans were three down for 32 with all their top guns,…
-
- 2 replies
- 993 views
-
-
கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல் இந்தியன் பிறிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவருகின்றபோதிலும், தேசிய அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 629 views
-
-
காற்பந்து போட்டியின் இடைநடுவே மாரடைப்பினால் நிலைகுலைந்து வீழ்ந்த பிரபல இங்கிலாந்து காற்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்டன் வாண்டேர்ஸ் காற்பந்து அணியின் மிட்ஃபீல்டராக களமிறங்கும் 23 வயது இளம் வீரர்... பாப்ரிஸ் மும்பா (Fabrice Mumba). நேற்று FA Cup ற்கான காலிறுதி போட்டியில் டொடென்ஹாமுடன் மோதியது போல்டன் வாண்டர்ஸ். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடை நடுவே மைதானத்தில் திடீரென சுருண்டுவீழ்ந்தார் மும்பா. உடனடியாக களத்தில் நுழைந்த மருத்துவர்கள் மும்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்தனர். முதலுதவியாக மைதானத்தில் வைத்து அவருக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை பலனின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…
-
- 11 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானை வென்றது இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ளபோதிலும் அவ்வணிகள் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளன. மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நஸீர் ஜம்ஷெட் 104 பந்துகளில் 112 ஓட…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 871 views
-
-
சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு. இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி அடிச்சிட்டாரு. வாழ்க சச்சினின் கெட்டித்…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர்முலா 1 - 2012 இவ் வருடத்திற்கான போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன. முதலாவது போட்டி மார்ச் 16-18 தினங்களில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. வெள்ளி - சனி ஆகிய நாட்களில் பரீட்சார்த்தப் போட்டிகளும் சனி பிற்பகல் 5 மணிக்கு தெரிவுப் போட்டியும் ஞாயிறு பிற்பகல் 5 மணிக்கு போட்டியும் ஆரம்பமாகும். இப் போட்டி Melbourne இல் அமைந்துள்ள Albert Park ஓடுபாதையில் நடைபெறும். என்றுமில்லாதவாறு இப் போட்டியில் முந்நாள் உலக சம்பியன்கள் 6 பேர் பங்குகொள்கின்றனர். 12 கார் நிறுவனங்களிலிருந்து 2 ஓட்டுனர்கள் வீதம் 24 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். கார் நிறுவனங்கள் சென்ற வருடம் தமது வாகனங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் போர்முலா 1 சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடுகளையும் உள்ள…
-
- 17 replies
- 2k views
-
-
பிரித்தானிய இலங்கைக்கு விளையாட்டு பிரயாணம் மேற்கொள்ளவேண்டுமா? - சனல் நாலு ஊழல் நிறைந்த சிங்கள அணியுடன் இங்கிலாந்து துடுப்பாட்ட நிகழ்வுக்கு செல்லவேண்டுமா என சனல் நாலு கேள்வி எழுப்பியுள்ளது. கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் மூலம் உலகெல்லாம் தமிழின படுகொலையை உலகறியச்செய்த சனல் நாலு பாகம் இரண்டு வெளியிட உள்ள நிலையில் இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. Should England's cricket team tour Sri Lanka?? As England's cricket team sets off for Sri Lanka, Channel 4 News Foreign Editor Ben De Pear asks whether the tour should be going ahead given the country's human rights record? With the upcoming broadcast of "Sri Lanka's Killing Fields; War Crimes Unpunis…
-
- 1 reply
- 671 views
-